Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இது பேய்கள் ஆட்சி செலுத்தும் தேசம். இங்கு பிணங்களுக்குத் தான் கொண்டாட்டம். இங்கு சந்தோஷமாக வாழ வேண்டுமாயின், நாமும் பிணங்கள் ஆனால் தான் அது சாத்தியமாகும். மூன்று  தசாப்தம் புலிகளோடு வாழ்ந்த மக்கள்,  இன்று பேய்கள் மத்தியில் வாழ்க்கையினை நகர்த்த வேண்டியுள்ளது. இன்று  தமிழ் மக்களின் வாழ்க்கையில் சகல வழிகளிலும் சந்தோஷங்கள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புலிகள் என்ற பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், நாட்டில் பயங்கரவாதமே இல்லை என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மகிந்தாவும், மகிந்தாவின் வால்பிடி அரசியல்வாதிகளும் நாடு முழுவதும் குறிப்பாக வடபகுதியில் இராணுவ பயங்கரவாதத்தினை கட்டவிழ்த்து விட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல்… இப்படியே வன்முறைகள் நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது.

 

 

வெட்டவந்தவனுக்கு வாள் எடுத்து கொடுத்தவன் கதை போன்று, ஒரு சில தமிழ் காடையர்களும், இன்று அதிகாரத்தினை கையில் வைத்திருக்கும் தமிழ் அரசியற் காடையர்களும் இந்த காட்டுமிராண்டி இராணுவத்தோடு சேர்ந்தே செயற்படுகின்றார்கள். அன்று புலிகள் செய்த கொலைகள் கண்ணுக்கு தெரிந்த டக்கிளஸ் கும்பலுக்கு இந்த குற்ற செயல்கள் மட்டும் கண்ணுக்கு தெரியவில்லையா? புலிகளோடிருந்த அதே கருத்து சுதந்திர மறுப்பு, கொலைகள், மிரட்டல்கள்,

பணம் பறிப்பு, கடத்தல்கள்… வன்முறைகள் எந்தவித மாறுதலுமின்றி தொடர்கின்றது.


ஜனநாயகம் என்ற பெயரில் ஆபாசமான படங்கள், கஸட்டுக்கள் என்ற இளம் சமூகத்தினரின் பாலியல் உணர்வினை தூண்டும் வகையில் பாலியல் சம்பந்தமான பொருட்கள் தாராளமாக புளக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. விபச்சாரம், தவறான பாலியற் தொடர்புகள் என்று தமிழ் சிறு பெண்பிள்ளைகளின் வாழ்வில் என்றுமில்லாத அளவிற்கு திணிக்கப்பட்டு வருகின்றது.


17 வயது பெண்பிள்ளை ஒருவர், தான் 14 வயதிலிருந்து பாலியலில் ஈடுபட்டு வருவதாகவும் 76 பேர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டிருப்பதுடன், இதில் பெரும்பாலானோர் இராணுவத்தினர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பாலியல் தொடர்பிற்காக பல இளம் பெண்கள் பலாலி இராணுவ முகாமிற்கு சென்று வருவதாக விசாரனையின் போது தெரியவந்துள்ளது. எயிட்ஸ் நோயினால் தாக்கப்பட்டிருக்கும் இந்த 17வயது சிறுமியின் எதிர்காலம் என்ன ஆவது…? போர் குற்றத்திற்கு எதிராக மகிந்த கும்பல் தகவல் வெளியிடும் போது, எங்கள் இராணுவத்தினர் கண்ணியமானவர்கள், எந்த சட்ட விரோதமான செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள் என்று உளறியவர்கள்,  வடபகுதியில் நடைபெற்று வரும் இந்த சம்பவங்களிற்கு என்ன சொல்லப் போகிறார்கள். புலிகள் புலிகள் என்று வாய்க்குவாய் திட்டித் தீர்த்த தமிழ் பொறுக்கி அரசியல்வாதிகளும் அதன் வால்பிடிகளும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிராக என்ன செய்யப் போகின்றார்கள்?


இந்த கும்பல்கள் எதுவுமே செய்யப்  போவதில்லை. அவர்களுக்கு தேவையானது இப்படியொரு சமூகமே. சமுதாயத்தில் மதுப்பழக்கம், போதை பொருள் பழக்கங்களை தூண்டி விடுவதும், பாலியல் உணர்வுக்கு இளைஞர்களின் சிந்தனையினை மாற்றி இளம் சமூகத்தினரை அறிவு பூர்வமான சிந்தனையினை மழுங்கடிப்பதும் இந்த கும்பல்களிலின் இன்றைய தேவையாகிறது. அறிவு பூர்வமான அரசியற் கருத்துக்களை மக்கள்,  குறிப்பாக இளம் சமூகத்தினர் உள்வாங்கி கொண்டால் தங்கள் சுரண்டல் ஒடுக்குமுறை அதிகாரத்திற்கு எதிராக அமைந்துவிடும் என்பது முதலாளித்துவ மேலாதீக்க சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளோடு எப்போதுமுள்ள பயமாகும். நவீனத்துவம், நாகரீகம் என்ற பெயரில் இந்த மேலத்தேய சீரளிவு சிந்தனையினை எங்கள் மண்ணிலும் பரவவிட்டு மக்களுடைய கலாச்சார பண்பாடுகளை சிதறடித்து எதிர்கால சமூகத்தினரின் சிந்தனையினை மட்டுப்படுத்தி,  தங்கள் நலன்களை பேணிக் கொள்வதே இந்த மேலாதிக்க சிந்தனையாளர்களின் நோக்கமாகும். முதலாளித்துவ சிந்தனை கொண்ட சகல உலக அரசியல்வாதிகளுக்குமே இது பொதுவான உணர்வு.


நாடு கடந்த தமிழீழ அரசில்வாதிகளாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பு அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, மகிந்த கும்பல்களாக இருந்தாலும் சரி அல்லது வால்பிடிகள் டக்கிளஸ், கருணா, பிள்ளையான் ஆனாலும் எல்லாருடைய சிந்தனையின் மையப்புள்ளி ஒன்று தான். “சுரண்டல்…”.  இந்த சிந்தனைக்குள் மூழ்கிப் போனதால் புலிகளும்,  புலித்தலைமைகளும் புலிகளை காரணம் காட்டி சேர்த்த மக்கள் பணத்திலே கொழுத்துப் போயிருந்த கேபி போன்ற கும்பல்களால் இலகுவாக அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள்.


புலிகள் தங்கள் ஆதரவாளர்களுக்கு விட்டு சென்ற அரசியல் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”என்ற வாசகம் மட்டும் தான். இதை தவிர சமூதாய அடக்கு முறைக்கு எதிராக சிந்தித்து செயற்படக் கூடிய போராட்ட உணர்வினையும் சிந்தனையினையும் மக்கள் மனதில் எள்ளளவு கூட வளர்த்தது கிடையாது. புலம் பெயர்நாடுகளில் வாழும் புலியாதரவாளர்களும் மேடை கிடைத்து விட்டால், அது எந்த மேடை என்றில்லாமல் மாவீரர் உரையினை ஆரம்பித்து விடுகிறார்கள். வெறும் வாசகத்தினை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி, இத்தனை அழிவினை ஏற்படுத்தியது போதாதென்று,  இன்றும் தொடர்ந்து சிலர் ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல தந்திர உபாயங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். நாங்களும் எந்திரனுக்கும், மன்மதன் அம்பிற்கும் கை தட்டி விசிலடிப்பது போல் இதற்கும் ஒரு விசிலடி. பயனற்ற, சாத்தியமற்ற, அவசியமற்ற இந்த அரசியற் கோஷங்களால் எத்தனை யுகம் ஆனாலும்  எதையும் சாதிக்கப் போவதில்லை. சாத்தியமற்ற அரசியற் கோஷங்களாலை சாத்தியமாக்க கூடிய உங்களுடைய உரிமைகளைக் கூட எதிரி இலகுவாக தட்டிக் கழித்து விடுகிறான். எங்கள் அறியாமை எதிரிக்குத் தான் சாதகமாகிறது.

இதனை புரிந்து கொண்டு இந்த புதிய வருடத்தில் நாங்களும் புதிய சிந்தனைகளை உள்வாங்கி, அறிவுபூர்வமான சகல சிந்தனைகளையும் எங்களோடு வளர்த்தெடுத்து எங்களுக்கும், மக்களுக்கும் பயனுள்ள மனிதர்களாக எங்களை ஆக்கி கொள்வோம்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது