Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“யர்ரு சொன்னதை சொல்வார், சொல்வதை செய்வார் வேறொன்றும் புரியாது!” விடிய விடிய ராமர் கதை விடிந்தால் ராமருக்கு சீதை என்ன முறை என்பதுபோல் உள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய புலிப் புரட்சியாளர்களின் தொடர் கேள்விகள். எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக எஸ்.பொ. பாடிய பல்லவியை இப்போ சபாநாவலன் பாடுகின்றார். இதைச் சொன்னால் சொல்பவர்களை அரச ஆதரவாளர்கள் ஆக்கி காட்டுகின்றார்.

நாம் திட்டவட்டமாக சொல்கின்றோம். இந்த மாநாட்டுக்கான எதிரான எதிர்ப்பு அரசியல் புலி பாசிசத்தினால் கட்டமைக்கப்பட்டது. அதன் சாதக பாதக அம்சங்கள் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இதற்கு முன்னாள், இந்நாள் புலம்பெயர் புலிப்பினாமி எழுத்தாளர் கூட்டமும் தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டமும் சேர்ந்து வில்லுப்பாட்டு பாடுகின்றார்கள்!

இவை எல்லாவற்றையும் விட இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து எதிர்ப்புக்கள் எழவில்லை என்பதையும், சாதக-பாதக அம்சங்களை நடுநிலை நின்று எடுத்து சொல்பவர்களையும் தான் காணமுடிகின்றது!. இதை பெரிதுபடுத்துபவர்கள் மேலே சொல்லப்பட்டவர்களே. இவர்களில் வெறுமனமே கேள்விகள் கேட்கும் போர்க்குண மரபில் வந்துநிற்கும் சபாநாவலன், புலிச் சங்கத்தின் நக்கீரனாகி – நீங்கள் எது சொல்லிடினும் பொருள் குற்றம் குற்றமே என நெற்றிக் கண்ணைத் திறக்கின்றார் மாநாட்டாளர்களை நோக்கி!……

“ஊடகவியாளர்களை அனாதைப் பிணங்களாக தெருவோரத்தில்  பேரினவாதிகளின்  பசிக்குப் புசிக்கக் கொடுக்கும்,  இலங்கை அரச பாசிசத்தின் எல்லைக்குள்ளேயே எழுத்தாளர் மாநாடு நடத்தி கேள்வி கேட்கப் போகிறார்களோ என ஒரு கணம் சிந்திக்கத் தோன்றியது. தமிழ்ச் சங்கம் அமைத்து மன்னர்களிடமே வினாவெழுப்பிய  போர்குணத்தின் மரபில் பிறந்ததல்லவோ “சர்வதேச” தமிழ் எழுத்து மரபு!. ஆக ராஜபக்சவின் காலடியில் நடைபெறும், இந்த சர்வதேச விழா முன்னோடி முருகபூபதியிடம் தொடர்பு கொண்டு இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி அறிக்கைவிட்டால் சிக்கல்கள் தெளிவாகும் எனக் கோரியிருந்தேன்.”

1. இலங்கை அரசின் இனப்படுகொலையை “சவதேச” எழுத்தாளர் மாநாட்டு    ஏற்பாட்டாளர்கள் கண்டிக்க வேண்டும்.

2. மாநாடு நடப்பதால் இலங்கை அரசின் இனப் படுகொலையையோ போர்க் குற்றங்களையோ ஏற்றுக் கொள்வதாகாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

புல்லரிக்கின்றது சபாநாவலனின் கேள்வி கேட்கும் போர்க்குண மரபு, போராட்டப் பாரம்பரியம் வைக்கும் கோரிக்கைகள்!.

இங்கிருந்து கொண்டு அங்கே போராடு என்கின்ற புரட்சிகரப் போராட்ட அறைகூவல்!. தாய் -தந்தையர் இறந்தால் போவதற்கான சகலதும் இருந்தும், போகப் பயப்படும் ஜீவன்கள் எல்லாம், இங்கிருந்து மாநாட்டுக்காரர்களுக்கு ஓடர்கள் போடுகின்றார்கள்! நாலு சுவருக்குள் இருந்து முணுமுணுக்காமல் வீதியில் இறங்கிப் போராடினால் என்னவென்று, இவர்களை அங்கிருந்து சொந்த-பந்த-உறவுகள் எல்லாம் கேட்கின்றார்கள். உன் தாயின் இறுதிக்கிரிகைக்காவது வந்தால் என்னவென்று, கேள்விகளை மாற்றிப் போட்டால் தங்களுக்கான விடைதான் மற்றவர்களுக்கும்….இதுதான் மாநாட்டுக்காரர்களுக்கும்!

புலிப் போதகர்கள் இம்மாநாட்டை சர்வதேச புரட்சிகர அகிலத்தின் மாநாடாக கணித்து கோசங்கள் போடச் சொல்கின்றார்கள். அதை அறிக்கைகள் ஆக்கச் சொல்கின்றார்கள்.  இனியொருவில் நாவலனின் கட்டுரைக்கு சில பின்னோட்டக்காரர்கள் கடந்தகால அரசியல்-போராட்டங்களின் கணிப்பீடுகள்-மதிப்பீடுகள் பற்றிய தவறுகளை  சுட்டிக் காட்டுகின்றார்கள்.  உண்மை தான் எங்கும் எதிலும்  புரிதல் பற்றியதும், அதை கேள்விக்குள்ளாக்குவதுமே முக்கியம். இம் மாநாடு பற்றி ஒவ்வொருவரும் தம் புரிதலிருந்து எதிர்ப்பு-ஆதரவு-நடுநிலை பற்றியெல்லாம் பேசுகின்றார்கள்!

எதிர்ப்பவர்கள் எல்லாம் இம் மாநாடு இப்படித் தான் நடை பெறவேண்டுமென வேண்டுகோள்கள் விடுக்கின்றார்கள். இது கடந்த காலங்களில் புலிப் பாஸிசம் தலித் மக்களையும், முஸ்லிம் மக்களையும் நடாத்திய விதம் போன்றதே!. இதில் மாநாட்டுக்காரர்களுக்கு சுயம்-சுயநிர்ணயம் என்பது இல்லையோ?. ஓர் நிகழ்வை நோக்கி அபிப்பிராயம் சொல்வது வேறு, கட்டப்பஞ்சாயத்துப் பாங்கிலான் ஓடர்கள் வேறு!. கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை. அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை என்கின்றார்கள் மாநாட்டாளர்கள்.  இல்லை இனப்படுகொலைகளை கண்டிக்க வேண்டுமென ஓடர்கள் போடுதுகள் கட்டப்பஞ்சாயத்தின் பண்ணாடைகள்.

இதில் எம் ஆதங்கம் இது தான், இம்மாநாட்டில் அரசு இதுவரையில் தன் தலையை நுழைக்கவில்லை.  எதிர்ப்பாளர்கள் வைப்பது போனற் நிபந்தனைகளை வைக்கவில்லை. மாநாட்டாளர்களின் சுயத்தில் தலையிடவில்லை!  இந் நிலையில் அரசு அது செய்யும், இது செய்யும் என்ற கேள்வி ஞானத்தில் இருந்து புலம்பத் தேவையில்லை. அரசு அப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் நீங்களும் அரசும் சுயம்-சுயநிர்ணய மறுப்பில் ஓர் நாணயதின் இரு பக்கங்களே. கடந்த காலங்களில் நாம் சகலவற்றின் ஐனநாயக மறுப்பபையும், சுட்டிக் காட்டியிருக்கின்றோம், எதிர்த்திருக்கின்றோம், அம்பலப்படுத்தியிருக்கின்றோம். அது அரச-புலிப் பாசிசம் முதல், குகநாதனிற்கு எதிரான கட்டப்பஞ்சாயத்து சர்வாதிகார அரசியல் ஈறாக. இந்த மாநாடும் சுயத்தை இழந்தால், பேரினவாத பேழைக்குள் புகுந்தால், அல்லது புகுத்தப்பட்டால் கடந்த காலங்களில் செய்ததைத் தான் செய்வோம். இதில் எம்மை விட மக்கள் செய்ய வேண்டியதை சரியாகச் செய்வார்கள்.

மாவோயிஸ்டுக்கள் முரண்பாடுகளைக் கையாள்வது, தேச-கால-வர்த்தமானம், ஸ்தூல நிலைமைகளை கணக்கில் கொண்டே!. நேபாளம் வரை போய் மாவோயிஸ்டுக்களை சந்தித்து விட்டு வந்தவருக்கு, இதைக் கூட சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என கட்டுரை பிரசுரிப்பார். ஆனால் அது அவருக்கு சரியா வராது.  காரணம் அவர் இப்போ கட்டப் பஞ்சாயத்துக்காரர்களிடம் அல்லவோ “சரியானதைப்” படிக்கின்றார்!  படிப்பிப்பவர்களும் புலியிலிருந்து தானே “புரட்சிவரை” சகலதையும் கற்றுக் கொள்கின்றார்கள். அல்லது ம.க.இ.க.காரர்கள் சொல்வார்களா, இம்மாநாட்டை அரசு தான் நடாத்தவுள்ளதென?

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது