Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதுவரை வெளிவந்த ஊழல்களிலேயே தொகையில் மிகப்பெரிய ஊழலாக வெளிவந்திருக்கிறது அலைக்கற்றை ஊழல். ஒரு வாரமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி, கூச்சலிட்டு, நெருக்கடி கொடுத்து ஒரு வழியாக ராஜா பதவி விலகிவிட்டார். 2008 லிருந்து ஸ்பெக்ட்ரம் எனும் இந்த அலைக்கற்றை ஊழல் பேசப்பட்டு வந்தாலும் ஒரு எல்லையைத்தாண்டி இதில் மக்கள் கவனம் பதிந்துவிடாதபடி தேசிய அளவில் காங்கிரசும், தமிழக அளவில் திமுகவும் பார்த்துக்கொண்டன. இடையில் திமுகவில் ஏற்பட்ட குடும்பச்சண்டையில் இந்த ஊழல் பரவலாக பேசப்பட்டாலும் சமாதானத்தின் பின் ஈரத்துணியில் மூடப்பட்டது. இதனிடையே நீதிமன்றம் இந்த ஊழல் தொடர்பாக புலனாய்வு அமைப்புக்கு விடுத்த கண்டனங்களைத் தொடர்ந்து பரபரப்பாகி ராஜா விலகல்வரை வந்திருக்கிறது.

 


1990 நரசிம்மராவ் காலத்தில் தொலைத்தொடர்புத்துறையில் தனியாருக்கு அனுமதியளிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் பணங்காய்ச்சி மரமாகவே அந்தத்துறை இருந்து வந்திருக்கிறது. கம்பிகளில் கடந்து கொண்டிருந்த தொலைபேசி சேவை மின்காந்த அலைகளுக்கு தாவிய போது; அரசிடம் மட்டுமே இருந்த இதில் தனியாரை அனுமதிக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் வந்தபோது, அலைக்கற்றையை தனியாருக்கு ஒதுக்கிக்கொடுக்க கட்டணம் நிர்ணயிக்கபட்டதில் அன்றிலிருந்து இன்றுவரை இருந்த அத்தனை அரசுகளுமே அடிமாட்டுவிலைக்கு தனியாரிடம் தள்ளிவிட்டு பணத்தில் குளித்துள்ளன. அந்த வகையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையான 2ஜி ஒதுக்கீட்டில் அந்தத் துறையின் அமைச்சரான‌ ராஜா தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நினைத்துப்பார்க்கவே மலைப்பை ஏற்படுத்தும் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு சட்டபூர்வமாகத்தான் நான் செய்தேன், நான் குற்றமற்றவன் என கடைசி நிமிடம்வரை கூறிக்கொண்டிருக்க முடிகிறதே, இதில்தான் மக்கள் குறித்து இந்த ஓட்டுப்பொறுக்கிகள் கொண்டிருக்கும் கருத்து குறியீடாக வெளிப்படுகிறது.


இந்த ஊழல் வெளியானதிலிருந்து நான் முன்னர் இருந்த அமைச்சர்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் நானும் பின்பற்றியிருக்கிறேன் என்றும் பிரதமருக்கு தெரிவித்துவிட்டே ஒவ்வொன்றையும் செய்திருக்கிறேன் என்றும் கூறி வருகிறார் ராஜா. 2008ல் ஒதுக்கீடு தொடங்கியதிலிருந்தே அதன் வழிமுறைகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. தணிக்கைச் செயலர் கூட என்னுடைய யோசனைகள் புறந்தள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். என்றால் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்தே தான் எல்லாம் நடந்திருக்கிறது. அதையும் அவர் ஆமோதிக்கிறார், இல்லையென்றால் பிரதம‌ரிடம் தெரிவித்துவிட்டே செய்திருக்கிறேன் என கூறியதை மன்மோகன் சிங் மறுக்கவில்லையே.


தலித் என்பதால் என்னைக் குறிவைக்கிறார்கள், தணிக்கை அறிக்கையில் அரசுக்கு இழப்பு என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது கையாடல் செய்ததாக கூறப்படவில்லை, தணிக்கை அறிக்கையை கணக்கிலெடுத்தால் எந்த அமைச்சரும் பணி செய்யமுடியாது, குற்றச்சாட்டுதான் கூறப்படுகிறதே ஒழிய நிருபணமாகவில்லை என ஆயிரம் சப்பைக்கட்டுகள் கூறினாலும் ராஜாவின் கைவரிசை வெளிப்படவே செய்திருக்கிறது. இதில் ராஜாவின் பங்கு என்ன? ௧) 2001ல் விற்க்கப்பட்டபோதே குறைவான மதிப்பீடு என விமர்சனம் எழுந்த அதே விலையை 2008லும் எந்த மாற்றமும் செய்யாமல் தீர்மானித்தது, ௨) வெளிப்படியான ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௩) தொலைத்தொடர்புத்துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத டப்பா நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௪) அலைக்கற்றை பெற்ற நிறுவனங்களை உடனேயே வேறு நிறுவனங்களுக்கு விற்றுக்கொள்ள அனுமதித்தது. இந்த‌ குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலும் கூறப்படவில்லை.


அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதில் நிபுணர்கள் என்று பெயரெடுத்த திமுகவினரின் முத்திரை இந்த ஊழலிலும் பதியப்பட்டிருக்கிறது. தொலைத்தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்படுகின்றன. ஸ்வான் நிறுவனத்தை 2006ல் ராஜாவின் ஆலோசனையின் பெயரில் அம்பானியின் கிளை நிறுவனம் ஒன்றிடமிருந்து ஷாகித் பால்வா என்பவர் வாங்கியிருக்கிறார். இதன் பங்குதாரர்களாக மொரீஷியஷில் உள்ள பாரத் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் உரிமையாளர்கள் டைகர் டிரஸ்டீஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியப் பெருங்கடல் தீவு ஒன்றில் உள்ள ஸீப்ரா இன்வெஸ்ட்மெண்ட்ஸையும் நடத்துகிறார்கள். இப்படி இந்த நிறுவனங்கள் உரிமையாளர்கள் ஒன்றைத்தொட்டு ஒன்று என நீண்டுகொண்டே போகிறது, பல்வேறு நிறுவனங்கள், பலப்பல ஆட்கள் மூலமாக இந்நிறுவனங்கள் ராஜாவுக்கு வேண்டியவர்கள் வழியாக கருணாநிதி குடும்பத்தினர்களுக்கு உரிமையானதாக இருக்கும் என நாம் நம்பலாம். சரி, இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வாங்கிய நிறுவனம் அதை துபாயிலுள்ள எடிசலாத் எனும் நிறுவனத்திற்கு விற்கிறது. இந்த எடிசலாத்தின் பங்குதாரர்கள் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள், இவர்கள் ஈடிஏ எனும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். இந்த ஈடிஏ நிறுவனத்திற்கு தமிழகத்தில் நடக்கும் கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அரசியலில் இவர்கள் வகிக்கும் கூட்டணி நிர்பந்தங்களை தாண்டி இவைகளை முனைப்புடன் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்து தண்டிக்கவேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட இவர்கள் மட்டுமல்ல இவர்களின் பேரன்களின் தலைமுறையும் கடந்திருக்கும்.



இந்த ஊழலின் மொத்தக் கனத்தையும் ராஜாவோ, திமுகவோ மட்டும்தான் சுமக்கிறதா? நிச்சயம் இல்லை. காங்கிரசுக்கு இதில் பங்கு இல்லாவிட்டால் இதுவரை இவர்களைக் காத்து காப்பாற்றியிருக்க வேண்டியதில்லை. பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தொலைத்தொடர்புத்துறையின் மடுவில் வேண்டியமட்டும் கறந்திருக்கின்றன. இந்த ஊழல் மட்டுமல்ல எந்த‌ ஊழலிலும் கட்சி பேதம் கடந்த பிணைப்பு இல்லாமலில்லை. இந்தவகையில் குவிக்கும் பணத்தில் ஒருபகுதியை தேர்தலின் போது மக்களிடம் விட்டெறிவதன் மூலம் வாக்காளர்களையும் இதுபோன்ற ஊழல்களுக்குள் இணைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன? நான்கு கோடியா? ஐந்து கோடியா? ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்தாலும் ஐந்தாயிரம் கோடிதான் ஆனால் ஊழலோ லட்சக்கணக்கான கோடிகள். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், கறி பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் தந்து ஓட்டு வாங்குவது அவர்களுக்கு மலிவானதுதான். திமுகவை தவிர்த்து அதிமுகவை தேர்ந்தெடுத்தால்; இரண்டையும் ஒதுக்கி மூன்றாம் அணியை தேர்ந்தெடுத்தால்; காங்கிரஸை விடுத்து பாஜகவை தேர்ந்தெடுத்தால்; இருவரையும் தள்ளிவிட்டு போலி கம்யூனிஸ்ட்களையே தேர்ந்தெடுத்தால், யாரைத் தேர்ந்தெடுத்தாலும் கட்சிப் பெயர்களைத் தவிர வேறேதும் மாற்ற‌ம் இருக்குமா?


ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளே இப்படியென்றால் அவர்களை ஆட்டிவைக்கும் பெருமுதலாளிகளை இந்த அமைப்பில் என்ன செய்துவிடமுடியும்? சிந்திக்க வேண்டிய நேரம் இது. புரட்சிகர இயக்கங்களின் கீழ் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் தனியார்மய தாரளமய உலகமய அமைப்புகளை தூக்கி எறிவதைத்தவிர வேறு வழியேதும் இருக்கிறதா?

 

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது