Language Selection

சமர் - 2 - 1991
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரஷ்யாவின் அரண்மனைப் புரட்சி தோற்றதும் கம்ய+னிசத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் உலகெங்கும் தலைதூக்கியுள்ளன. முதலாளித்துவ அறிஞர்களும் - அறிவு ஜீவிகளும் - பத்திரிகையாளர்களும் முதுலாளித்துவ ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும், சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் தூக்கிப் பிடித்து ‘சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்@ “அணையா  ஜோதி” என்கிறார்கள். “சோசலிச பொருளாதார கட்டுமானம் தோற்றுவிட்டது@ காலாவதியாகி விட்டது” என ரஷ்யாவையும் “முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம்தான் நிலையானது@ பிரச்சினையில்லாமல் முன்னேறக் கூடியது” பிரச்சினையில்லாமல் முன்னேறக் கூடியது” என மேலை நாடுகளையும் குறிப்பாக அமெரிக்காவையும் கை காட்டி உரத்துக் கூச்சலிடுகிறார்கள்.


ரஷ்யாவில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்தது சோசலிச பொருளாதாரமும்  அல்ல@ சோசலிச விஞ்ஞானம் தோல்வியடையாது என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். இன்று அவர்கள் தூக்கிப் பிடிக்கும் முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம் எப்படிப்பட்டது? நிலையானதா? நீடித்ததா? அமெரிக்காவின் பொரளாதார நிலையைப் பார்த்தாலே இதற்குரிய பதில் கிடைத்து விடுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றிருப்பதற்கு அதன் வங்கித்துறையே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 2200 கோடி டாலர் சொத்துடைய 28 அமெரிக்க வங்கிகள் லாபமின்றி இயங்குகின்றன. 4300 கோடி ‘டாலர்’ சொத்துடைய 45 வங்கிகள் மூலதன விகிதாசாரப்படி 39மூ நட்டத்தில் இயங்குகின்றன. 92,600 கோடி டாலர் சொத்துடைய 150 வங்கிகள் 5மூ வரைநட்டமடைந்து செயல்படுகின்றன. 70,000 கோடி ‘டாலர்’ சொத்துடைய 15 பெரிய வங்கிகளில், 13 வங்கிகள் நடத்திலிருப்பதோடு அதன் சொத்து மதிப்பு குறைந்து கடன் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய குடியரசின் இன்சூரன்ஸ் முதலீட்டு கம்பெனி ((FDIC) மோசமான நிதி நிலையிலேயே இயங்கி வருகிறது. இன்று FDIC 700 கோடி டாலரை செலவு செய்து 221 வங்கிகளை இழுத்து மூடிக் கொண்டுள்ளது.

உலகப் போலீசுக்காரனாக விளங்கும் அமெரிக்காவின் ராணுவச் செலவு, மேலும் மேலும் ப+தாரகராமாகிக் கொண்டிருக்கிறது. ‘நேட்டோ’ ராணுவ ஒப்பந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பிற 15 நாடுகளின் மொத்த ராணுவச் செலவைக் காட்டிலும் 40 சதவிகிதம் அதிகம் செலவழிக்கிறது. இதை பிறநாடுகள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு ராணுவத்தைப் பலப்படுத்;துவது – பாதுகாப்புப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உற்பத்தியில் கவனம் செலுத்தி வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவின் உற்பத்தித் துறையோ மேலும் மேலும் சுருங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவியல் - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருந்த அமெரிக்கா இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதிநவீன தொழில் நுட்ப பொருள் உற்பத்தியே – புதிய கண்டுபிடிப்புகளே இன்றைய அனைத்தையும் தீர்மானிக்கும் காரணியாக மாறி வருகிறது. இதில் ஜப்பான் இன்று ஆதிக்கம் பெற்றுள்ளது. அதி நவீன தொழில்நுட்ப பொருள் உற்பத்திக்கு அடிப்படை தேவையான சிலிகான் துண்டை ஜப்பான்தான் பெருமளவு தயாரிக்கிறது. உலக சந்தையில் சிலிகான் துண்டு வர்த்தகத்தை 48.6 சதவிகிதத்தை ஜப்பான் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்காவோ 38.8 சதவிகிதத்தையே கட்டுப்படுத்துகிறது. இத்துறையில் ஜப்பான் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இருப்பதால் இன்று அமெரிக்கா புதிய வகை விஞ்ஞான முன்னேற்றத்திற்காக ஜப்பானிடம் கையேந்தி நிற்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உற்பத்தி பெருமளவிற்கு அந்நிய நாடுகளையே குறிப்பாக ஜப்பான், ஜெர்மனை சார்ந்திருக்கிறது.

உலகளவில் மூலதனத்தைக் கொட்டி அந்நிய நாடுகளைச் சுரண்டி மேலாதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவின் பொருளாதாரம் படுகுழியில் விழுந்துள்ளதற்கு இன்னொரு காரணம் அமெரிக்காவை அந்நியநாடுகள் குறிப்பாக ஜப்பான், ஜெர்மன் சுரண்டி விடுகின்றன. அமெரிக்காவின் உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை (ரியல் எஸ்டேட்) கருவ+ல கடனீட்டுப் பத்திரங்கள் ஆகியவற்றை அந்நிய மூலதனம் பெருமளவிற்கு தன்வசப்படுத்திக் கொண்டுள்ளன. அந்நிய மூலதனத்தால் அமெரிக்காவின் கடன், வட்டி, பற்றாக்குறை அதிகரிப்பதுடன் லாபம் பெருமளவிற்கு வெளியேறுகின்றது. 1987-ல் அமெரிக்கா அந்நிய நாடுகளில் வைத்திருந்த மூலதனம் 117 கோடி டாலர் 1 ஆனால், அதே ஆண்டில் அமெரிக்காவில் 154 கோடி டாலர் மூலதனம் அந்நிய கம்பெனிகளின் கட்டுப்பாட்டிலிருந்தன. இந்நிலை வருடந்தோறும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது.

அமெரிக்கா பட்ஜெட்டில் பற்றாக்குறை ஆண்டுதோறும் கட்டுங்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை ஈடுகட்ட கருவ+ல கடனீட்டுப் பத்திரங்களை அமெரிக்கா வெளியிடுகிறது. 1980-ன் தொடக்கத்தில் நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட இதுபோன்று கருவ+ல கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட்ட அமெரிக்கா, நாளடைவில் அதாவது 1980-ன் மத்தியில் மூலதனத்திலேயே பற்றாக்குறை ஏற்பட்டு கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட்டது. 1988-ன் கணக்குப்படி 17மூ கடனீட்டுப் பத்திரங்களையும் 12மூ உற்பத்திக்குரிய சொத்தையும் அந்நிய மூலதனம் கைவசப்படுத்தியிருந்தது. இந்த விகிதாசாரம் மேலும் மேலும் வளர்ந்தன் விளைவாக இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் மூலதன சந்தையையும், அந்நிய மூலதனம் கட்டுப்படுத்துகிறது. “அந்நிய மூலதனத்தின் விருப்பப்படி ஆடும் பிணைக் கைதியாகிவிட்டது. அமெரிக்கப் பொளாதாரம்! இந்நிலை தொடரந்தால் பங்கு சந்தையில் கடுமையான மோதலை தூண்டிவிடும் “என்கிறார், அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் இ.பிரட் பெர்ஸ்டன்.

அமெரிக்காவின் வர்த்தகத்திலும் அந்நிய கம்பெனிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. அமெரிக்க கம்பெனிகளைக் காட்டிலும் அமெரிக்காவில் உள்ள அந்நிய கம்பனிகள் கச்சாப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்கின்றன. அந்நிய கம்பெனிகள் கச்சாப் பொருட்கள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. அந்நிய கம்பெனிகள் தமது லாபத்தில் 80 சதவிகிதத்தை அமெரிக்காவிலிருந்து தமது தாய்க் கம்பெனிகளுக்கு கடத்துகின்றன. அமெரிக்காவின் வியாபார – வர்த்தக பற்றாக்குறைக்கு பாதியளவு காரணம், இந்த அந்நியக் கம்பெனிகளின் இறக்குமதியே ஆகும். இதேபோல் அமெரிக்காவின் ஏற்மதியும் படுவீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்நிய நாடுகளைச் சுரண்டுவதன் மூலமே தனது பொருளாதாரத்தின் நாடியை பிடித்து வைத்திருக்கிறது.  1985-ன் கணக்குப்படியே அந்நிய நாடுகளிலுள்ள அமெரிக்க பன்னாட்டு தொழிற் கழகங்களின் எற்றுமதி அளவு 70,400 கோடி டாலர் அதே பொழுதில் அமெரிக்கா, 21,600 கோடி டாலர் அளவே தன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்தது!

அமெரிக்காவின் கச்சாப் பொருள் உற்பத்தியும் சுருங்கிப் போய் அந்நிய நாடுகளை சார்ந்திருக்கிற நிலையை எய்திவிட்டது. இன்று அமெரிக்கா வியாபார சாதனங்கள், மின் மற்றும் மின்னணு சாதனங்கள், அறிவியல் உபகரணங்கள், விவசாயக் கருவிகள் முதலியவற்றை ஏற்றுமதி செய்வதைவிட அதிக அளவு இறக்குமதி செய்கிறது. நாட்டின் தேவை ஒருபுறம் விரிந்து கொண்டே போவதும், மறுபுறம் பொருள் உற்பத்தியளவு சுருங்கிக் கொண்டே போதும் நீண்டு கொண்டே போவதைக் கண்டு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது அமெரிக்கா. 1979-ல் 600 கோடி டாலர் அளவிற்கு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்த அமெரிக்கா. 1987-ல் 200 கோடி டாலர் அளவே தயாரித்தது. அதே சமயம் தேவை எதிர்மறையாக இருந்தது.

இவையின்றி அமெரிக்காவின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்குரிய அரசு ஒதுக்கீட்டையும் குறைத்துக் கொண்டே வருகிறார்கள் ஆட்சியாளர்கள். 1980-லிருந்து 88-க்குள் கல்விக்கென ஒதுக்கிய நிதியை 63மூ குறைத்துவிட்டது.அமெரிக்க அரசு 1981-88-க்குள் வீட்டு வசதி துறைக்கு உரிய தொகையில் 81மூ வெட்டிவிட்டது. சுற்றுப்புறச் சூழலுக்கு செலவழித்த தொகையை பத்தாண்டுகளில் (1978-88) பாதியாக்கிவிட்டது. இதேபோல் தொடர்ந்து உற்பத்தியை குறைப்பதாலும், ஆலைகள் இழுத்து மூடுவதாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் சமூக உறவு, குடும்ப உறவு, தனிமனித ஒழுக்கம் மூதலான அனைத்தும் சீரழிந்து கிடப்பதை உலகமே அறியும்!.

அமெரிக்காவில் முன்னேற்ற பாதையில் இருப்பது ஆயுத உற்பத்தியும் போதைப் பொருள் விற்பனையும்தான்@ அமெரிக்காவில் பொருள் உற்பத்தி – வர்த்தகத்தின் மூலதனத்தைக் காட்டிலும் ஆயுத உற்பத்தியும் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் புரளும் மூலதனம் அதிகரித்து விடுமோ என அவர்களே (?) அஞ்சுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள வங்கிகள் பல போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளப் பணக்கடத்தல் முதலானவற்றிற்கே ரகசியமாக முன்னுரிமை கொடுது;து சேவை புரிகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் பொருளாதாரம் இராணுவ – ஆயதப் பொருளாதாரமாகவும், ய+கப் பொருளாதாரமாகவும் - சூதாட்டப் பொருளாதாரமாகவும் மாறிவிட்டது. முதலாளித்துவ கட்டமைப்புக்கே உட்படாமல் - முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளின் கற்பனைக்கே எட்டாமல் தன்னை அன்னியப்படுத்தி நிற்கின்றது. முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம் இப்படி 1960 வாக்கில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது அமெரிக்கா ஆட்சியாளர்கள் எற்கனவே வகுத்தஅமைப்பை மறு ஒழுங்கு செய்ய வேண்டி நேர்ந்தது. அதாவது ‘ய+கப் பொருளாதாரம்’ திட்டமிடப்பட்ட பொருள் உற்பத்திக்கு நேரெதிரான அராஜகமான சூடாட்ட முறையாகும். அன்று பொருள் உற்பத்தியை பெருமளவில் முடக்கி எண்ணற்ற தொழிலாளர்களை வீதியில் வீசினார்கள். ‘ய+க மூலதனத்திற்கு அகலக் கதவு திறந்துவிட்டார்கள். பங்குச்சந்தை சூதாட்டமும், போதைப் பொருள் வியாபாரமும் ஆயுதக் கடத்தலும் பெருகியது. இன்று இவை அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும்போய்களாக மாறிவிட்டன.

இப்படி மரணப் படுக்கையில் வீழ்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா! அமெரிக்காவின் ஆதிக்க வெறி பிடித்து அலைந்தது. பிற நாட்டின் உள்நாட்டுப் விவகாரங்களிலும் அத்துமீறி தலையிட்டது. தலையாட்டாத ஆட்சியாளர்களின் தலைகளையெல்லாம் பல சதிகளை செய்து வெட்டி வீழ்த்தியது. பல நாடுகளில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியது. இதற்காக யாரையும் பயன்படுத்த தயங்கவில்லை. அனைத்து ஒழுங்கு முறைகளையும் மீறியது. பல நாடுகளின் கிரிமினல் கும்பலுக்கும் பிரிவினை சக்திகளுக்கும் தனது அடிவருடி குழுக்களுக்கும் ரகசியமாக ஆயுதங்களைக் கொடுத்து தூண்டிவிட்டது. தமது ஆதிக்கத்திற்கு எதிராக போராடுபவர்களிடையே போதைப் பொருள் - ஆபாசக் கலாசாரத்தைப் பரப்பி அடிமைகளாக்கியது. உலகையே தனது விரல் நுனியில் நிறுத்தி பார்ப்பதற்காக “புதிய உலக ஒழுங்கமைப்பு” திட்டத்தைப் போட்டுக் கொண்டு ராணுவத்திற்கும், விண்வெளிப் போருக்குமென ரசகியமான பணத்தைக் கொட்டியது.

இன்று இவையெல்லாம் சேர்ந்து அமெரிக்காவையே திருப்பித் தாக்குகின்றன@ அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணிகளாகி விட்டன. இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதி! தானே தனக்கு படுகுழுp தோன்றிக் கொள்வதை முதுலாளித்துவ பிரச்சாரகர்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் தடுக்க முடியாது. ராசு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது