Language Selection

சமர் - 2 - 1991
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதழ் ஒன்றில் தூண்டிலின் 3வது நிலை பற்றி நாம்… என் பகுதியில் 3வது நிலைக்கான கோரிக்கைகள் சிலவற்றை முன் வைத்திருந்தோம். அத்துடன் இம்மூன்றாவது நிலையானது எமது மண்ணில் உருவாக முடியாதென்பதால் வெளிநாடுகளில் உள்ள நாம் இம் மூன்றாவது நிலையினை உருவாக்குவதற்கு ஒன்றிணைவது பற்றிக் கேட்டிருந்தோம்.

எமது மண்ணில் இம் மூன்றாவது நிலையானது சாத்தியமற்றதென நாம் குறிப்பிட்டது தவறானதும் L.T.T.E இனதும் அராஜக வன்முறைகளுக்கு மத்தியிலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகவும், எமது தேசத்தின் விடுதலைக்காகவும் இரகசியமான முறைகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு செயற்பட்டுவருகின்றனர். இவர்களின் செயற்பாடுகளை நாம் கவனத்தில் எடுக்கத் தவறியிருந்தோம்.


தாம் மட்டுமே தமிழீழ விடுதலைக்காக போராடும் பலமிக்க ஒரே சக்தியென சொல்லிக்கொள்ளும் L.T.T.E இன் கடந்தகால மாற்று இயக்க அழிப்பு நடவடிக்கைகளும், ஜனநாயக ரீதியில் செயல்பட்ட சிறிய இயக்கக் குழுக்களுக்குக் கூடத் தடை செய்து இயங்கவிடாமல் ஒழித்துக் கட்டிய பின்னரும் கூட சிறு குழுக்களாகவும், தனி நபர்களாகவும் மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் போராடி வரும் நல்ல சக்திகள் தேடியழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கூட தம்மால் இயன்றவரை எமது போராட்டச் சூழலைவிட்டு அந்நியப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டும் தயாரிப்பு வேலைகளைச் செய்துவரும் சக்திகளின் செயற்பாடுகள் மதிப்புக்குரியவை.


இவ்வாறு மக்களின் விடுதலைக்காக செயற்பட்டுவரும் சக்திகளை கடந்தகாலங்களில் மாற்று இயக்கங்களில் இருந்தார்கள் எனும் காரணங்களையும் பொய்க் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தும் புலிகள் கைது செய்கின்றனர்.


இத் தோழர்கள் விரும்பியதெல்லாம் இம் மக்களின் உண்மை விடுதலையையே. இவர்கள் சித்திரவதைகளுக்கும், ரகசிய மரண தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படலாம்.


படுகொலைகளும் சித்திரவதைகளும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது எம் மண்ணில்.. நாம் என்ன செய்யப்போகின்றோம்?
கேள்விக்குறி எம்முன் நிற்கின்றது. இவையே எம் மூன்றாவது நிலை பற்றிய தேவைக்குரிய காரணிகளாகியது.


இன்று இம் மூன்றாவது நிலையானது எமது மண்ணில் நிகழும் பழிவாங்கல் படுகொலைகளுக்கும் ஜனனாயக மறுப்புகளுக்கும் எதிரான அறைகூவலாகும்.


இம் மூன்றாவது நிலையானது எதனைச் சாதிக்கப்போகின்றது? எனக் கேள்வி உங்கள் முன் எழுவது நியாயமானதே.


எமது மண்ணில் ஜனநாயக மறுப்புகளுக்கும் அராஜகங்களுக்கும் மத்தியில் கைதுகளும், காணாமல் போதலும் என மக்கள் அடக்கப்பட்டு வருவது தொடராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவற்றைப் பகிரங்கப்படுத்தவோ அல்லது இவற்றுக்கு எதிராகவோ செயற்படக்கூடிய வகையில் ஜனநாயகச் சூழல் இல்லாமையினால் நிகழும் அனர்த்தங்கள் யாவும் மறைக்கப்பட்டுவிடுகிறது. இம் மறைப்புகளையும், ஜனநாயக மறுப்புகளையும் பார்த்தும் மௌனமாகவே இருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே எம்மை போன்று வெளிநாடுகளில் பலருள்ளனர்.


L.T.T.E இனதும் அரசினதும், அதன் கைக்கூலிகளினதும் யெற்பாடுகள் மக்களினால் காணப்பட்டும் காணப்படாமலும் ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தங்களினால் ஆதரிக்கும் நிலைமைகளும் உள்ளன. இந்நிலைமைகள் யாவும் முறியடிக்கப்படவேண்டியவையே.


3வது நிலையானது குறைந்த பட்சம் கீழ் உள்ள வகைகளில் செயற்படமுடியும்.


1) L.T.T.E இனாலும், அரச பயங்கரவாதினாலும் எமது மண்ணை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் சிதறியுள்ள முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைக்கவும் அவர்களைச் சீரழியாது தடுக்கவும்.


2) எமது தேசவிடுதலை சம்பந்தமான முரண்பாடான தேவையான கருத்தியல் தர்க்கங்களை, விவாதங்களை நிகழ்த்துவதன் மூலம் சரியான கருத்துக்களை உருவாக்கவும்.


3) எமது மண்ணில் தனிநபர்களாகவும் சிறு குழுக்களாகவும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் சக்திகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்களின் ஐக்கியப்படட போராட்டங்களை ஊக்குவிக்கவும்.


4) எமது மண்ணில் மக்கள் விரோத சக்திகளான L.T.T.E, E.P.R.L.F, E.N.D.L.F, P.L.O.T, T.E.L.O, E.P.D.P  கும்பல்களினது அராஜகங்களுக்கு உள்ளாகும் மக்களின் அடிப்படை ஜனனாயக உரிமைகளுக்காக ஒருமித்த குரலில் குரல் கொடுப்பதற்கும்.

மூன்றாவது நிலை அவசியமாகின்றது.

எமது மண்ணில் மக்களின் விடுதலையை விரும்பும் சக்திகளின் போராடடம் பேராட்ட வழிமுறைகள் தந்திரரோபாயங்ள் வேலைத்திட்டங்களும் நடைமுறைகளும் என்பவற்றினூடாகவே போராட்டத் தலைமையானது உருவாகி தேசவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். எமது மண்ணில் இதற்கான தொடங்கு புள்ளிகள், சரியான கருத்தை நோக்கிய நகர்வுகள் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இவர்களுக்கு ஆதரவளிப்போம்!


அராஜகங்களுக்கு எதிராகவும் மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராகவும் ஒருமித்துக் குரல் கொடுப்போம்!!

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது