Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காலாகாலமாக மக்களை கூறுபோட்டு மக்களைப் பிரித்து வைத்து, எமது தமிழ் சமூகத்தினை சீரழித்து வருகிறது சாதி என்ற பேய். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல வழிகளில் சுரண்டப்பட்டு, ஓடுக்கப்பட்டு சித்திரவதையினை அனுபவிக்கும் அப்பாவி மக்களின் வாழ்க்கையினை துன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறது

 

 

 இந்த சாதிப் பிளவு. கூடுதலாக கிராமப் புறங்களில் வாழும் மக்களே சாதி ஒடுக்கு முறையினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஊர்களுக்கிடையிலே பிரச்சனைகள், குழுமோதல்கள் என்று பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அந்த மக்களின் வாழ்க்கையுள்ளது.

அன்று கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்த சாதி எதிர்ப்புப் போராட்டம் போன்ற சில நடவடிக்கையினால் ஒருசில கிராமத்திலே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அவர்களுடைய போராட்டம் தொடரமுடியாது போனதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரியதொரு இழப்பாகும். அந்த காலகட்டத்தில் தான் தமிழ் இயக்கங்கள் ஆரம்பித்தன. சிங்கள இனவாத அரசினை மட்டும் எதிரியாக மையப்படுத்தி அரசியலினை முன்னெடுத்த, இவர்கள் வேறு எந்தப் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ளவில்லை. தமிழ் தேசியத்தினை முன்னெடுத்த இயக்கங்களில் போராளிகள், உறுப்பினர்களுக்கிடையில் சாதி முரண்பாடுகள் பல வழிகளில் மேலோங்கியிருந்தது. பரந்தளவில் மக்கள் ஆதரவினை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. இயக்கங்களிற்குள்ளும் பல போராளிகள் சில முக்கிய பொறுப்புக்களில் இருந்து ஓரந்தள்ளப்பட்டதும், சிலர் மீது பொய்யான குற்றங்களை சுமத்தி தண்டனை வழங்கிய நிகழ்வுகளும் பல கட்டங்களில் நடந்துள்ளது. பலருடைய கருத்துக்கள், அவன் தாழ்ந்த சாதி என்ற காரணத்தினால் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் போராளிகளுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் அங்கிருந்த மற்றைய உறுப்பினர்களால் தற்காலிகமாக தீர்த்து வைக்கப்பட்டு மேல் மட்டத்திற்கு மறைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பல நடத்திருக்கின்றன.

புலிகள் சாதிப் பிரச்சனையினை பேசவே பயப்பிட்டார்கள். தமிழீழம் சாதிப் பிரச்சனையினை தீர்த்துவிடும் என்ற தவறான சிந்தனையினையும் போராளிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வளர்த்திருந்தார்கள். கலப்புத் திருமணங்கள் செய்து வைத்தும், மக்களுக்கிடையல் ஏற்பட்ட சிலசாதி முரண்பாடுகளை துப்பாக்கியினால் தீர்த்து வைத்தும் திரைப்படப் பாணியிலே மக்களை கவர முற்பட்டார்கள். அரசியல் ரீதியாகவோ, கருத்து ரீதியாகவோ அவர்கள் மக்களை அணுகியது கிடையாது.

எங்கள் போராட்டத்திற்கான தேவைகளை அதற்கான முன்னெடுப்புக்களை கருத்து ரீதியாக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தால் எந்த முயற்சிகளும் பயனற்றுத்தான் போகும். புலிகள் நாங்கள் தமிழர்கள் என்ற தமிழ் தேசியத்திற்குள் சாதிப் பிரச்சனை மறைத்து வைத்தே தங்கள் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். புலியை ஆதரித்த தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தனையில் தமிழீழம் சாதிப் பிரச்சனையினை தீர்ந்துவிடும் என்ற தவறான எதிர்பார்ப்புத் தான், அந்த அப்பாவி மக்கள் மனதினில் வேறூன்றியிருந்தது.
போராட்ட காலகட்டத்தின் இடம் பெயர்வுகளின் போது தங்கள் உயிரினைப் பாதுகாக்க வேண்டிய தேவை எல்லா மக்களோடும் இருந்தது. பசிக்கு உணவும், தாகத்திற்கு தண்ணீரும் அவசியமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் சாதி முரண்பாட்டினை மறக்க வேண்டியிருந்தது. இந்த சூழ்நிலை மாற்றப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடும் போது அந்த முரண்பாடு மீண்டும் தலையெடுக்கும்.


சாதி என்பது மக்கள் மனதோடு வேறூண்றிப் போன ஆளமான உணர்வு. இது சிந்தனை ரீதியாக, கருத்தியல் ரீதியாக மாற்றப்பட வேண்டியதொரு பிரச்சனை. தனிப்பட்ட ஓவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையினை நோக்கும் போது, இளம் பருவத்தில் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவார்கள் கூட காலப்போக்கில் பிள்ளைகள் வளர்ந்து வந்ததும் அவர்களின் திருமணத்தினை தன்ரை சாதியில் செய்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமெடுக்கிறார்கள். குறைந்தசாதி உயர்ந்தசாதி என்ற மனநிலை இவர்களிடம் வந்துவிடுகிறது. இதற்காக தனிமனிதனை குற்றம் கூறுவதிலோ, ஆத்திரப்படுவதிலோ பயனில்லை. சாதி ஆளமாக மனதோடு பதிந்து போனதென்று. அடி மனதோடு வேறூண்றி இருக்கும் இந்த உணர்வு மாற்றப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து சமூக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தனித் தேசியவாதத்தால் இதனை மாற்றிவிட முடியாது.


ஒரு கட்சியோ அல்லது அமைப்போ ஒரு சமூகத்தின் சகல கூறுகளையும் அதன் தளத்திலே ஆராய்ந்து அதற்கான வேலைத் திட்டத்தினை அமைக்க வேண்டும். சாதியத்தினை ஒதுக்கி வைத்துவிட்டு,

நாங்கள் எல்லாம் தமிழர்கள்…

நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்…

இப்படி வசனங்களைப் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் அழிவையும், இழப்பையும் தான் ஏற்படுத்தும்.


இதனை இனம்கண்டு செயற்பட வேண்டியது மக்களாகி எங்களுடை கடமை. நாங்கள் இன்னும் தலையாட்டிகளாக இருந்து கொண்டு தவறான அரசியலுக்கு துணை போவோமாயின் நாம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டியதுதான். இன்னொரு முதளாளித்துவ நாட்டையோ, ஏகாதிபத்திய நாட்டையோ சார்ந்து நிற்கும் தமிழ் தேசியவாத அமைப்புக்கள் எப்போதும் பிற்போக்குத் தன்மை கொண்டதாகவே இருக்க முடியும். இன்னொரு சுரண்டல் முறை கொண்டதாகவே இருக்கும். கடந்தகால தமிழ்த்தேசிய இயக்கங்களை பார்க்கும் போது, தனித்து புலிகளை மட்டும் இதில் அடக்கிவிட முடியாது. உயர்சாதிக் கருத்தியல் கொண்ட பிளொட் இயக்கம், ஏனைய பல இயக்கங்கள், தமிழ் கட்சிகள் எல்லாம் இதே நிலைப்பாட்டினைக் கொண்டவை தான்.


சமூகத்தின் சகல நிலைகளிலும் ஒடுக்கப்படும் மக்களாகிய நாங்கள் தான் எங்கள் விடிவிற்கான சரியான அரசியலினை தெரிந்து அதனை முன்னெடுக்க வேண்டும். வெறும் உணர்ச்சி பூர்வமாக அரசியலைப் பார்க்காது, அறிவு ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை இன்று எங்களோடு உள்ளது.


http://www.psminaiyam.com/?p=5760

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது