Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

துப்பாக்கிகள் மௌனித்து ஓராண்டினை நெருங்கியும் தமிழ் மக்களினது மௌனம் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சிறிய கூடாரங்களுக்குள் ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் எந்தவித அடிப்படை வசதியுமின்றி குழந்தைகள், வயோதிபர், கர்ப்பிணிகள் என்று பல தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டுவிட்டது.

பாசிசம் அவர்கள் வாய்களைப் பூட்டுப் போட்டு இறுகப் பூட்டிவிட்டது. வீடுகளை நிலங்களை இழந்து, தொழிலை இழந்து, கணவன்.. மனைவி.. பிள்ளைகளை இழந்து வேதனையோடு வாழுகின்ற இந்த மக்களுடைய வாழ்க்கை தொடர்ந்து கேள்விக் குறியாகவேயுள்ளது. தனிப்பட்ட முறையிலே உதிரிகளாக சிறுசிறு உதவிகள் சிலருக்கு கிடைத்தாலும், நிரந்தர உதவியை, இழந்து போன பழைய வாழ்க்கையோ திருப்பிக் கிடைப்பதாக இல்லை. அதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் செயற்படுத்தாமல் இழுத்தடித்து காலப்போக்கில் முழு நிலத்தையும் அபகரிப்பது தான் அரசின் நோக்கமாகத் தெரிகிறது. தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த விவசாயப் பெருநிலம் அன்று புலிகளாலே பாதி அழிக்கப்பட்டது, மிகுதி பேரினவாத அரசின் குண்டு வீச்சினால் அழிக்கப்பட்டது இப்போது மொத்த நிலப்பரப்பும் அந்த மக்களுக்கு சொந்தமில்லை என்றாகும் நிலைதான் காணப்படுகிறது. தமிழ் கட்சிகளோ அமைப்புக்களோ இதைப் பற்றி சிந்திப்பதாகவில்லை. தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளிலும், பாராளுமன்ற கதிரைப் போட்டியிலும் தான் தங்கள் அரசியலை ஓட்டுகிறார்கள். இந்த சூழ்நிலையில் புலிகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக சில மக்கள்விரோதக் கும்பல்கள் மீண்டும் அந்த அப்பாவி மக்களைக் குழப்பிவிடக் கூடிய அபாயமுண்டு. சரியான அரசியலோ, தலைமைத்துவமோ, வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் மக்கள் அனைவரும்  அனாதைகளாக்கப்பட்டு எதற்குமே நாதி அற்றவர்களாய் துரோகக்கும்பல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஏலம் போட்டு விற்கும் சந்தைப் பொருளாக தமிழ் மக்களின் வாழ்க்கை மாற்றப்பட்டுவிட்டது.

 

 

 

 

 

புலிகளோ தங்களையே தமிழினத்தின் விடிவெள்ளியாக காட்டி அந்த மக்களை சுரண்டி அடக்கியொடுக்கி அந்த மக்களின்  கற்பனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் தவிடு பொடியாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொடுத்து  ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையினை முகாம்களுக்குள் முடக்கிவிட்டு தாங்களும் மௌனமாக அழிந்து போயினர். தமிழினத்திற்கு புலிகள் செய்த மாபெரும் துரோகமிது. ஆனால் மழை விட்டும் தூவானம் நில்லாதது போல, மக்களை தொடர்ந்து மந்தைகளாக வைத்திருக்க வெளிநாடுகளில் மீண்டும் சில அரசியல் முன்னெடுப்புக்களை ஆரம்பித்து இன்று நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தலில் வந்து நிற்கின்றது. இன்னுமொரு இருபது வருசத்திற்கு மக்களைச் சுரண்ட இது போதும்.


வெளிநாடுகளில் தேர்தல் வைத்து வாக்களிப்பதால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடுமா…? ஐரோப்பாவா, அமெரிக்காவா, ரசியாவா…, எந்த நாடு எங்கள் பிரச்சனையினைத் தீர்த்து வைக்கப் போகிறது. எந்த ஏகாதிபத்திய நாடுகளோ, முதலாளித்துவ நாடுகளோ சிறுபான்மையின மக்களின் தேசியஇனப் பிரச்சனையை ஓரு போதும் அங்கீகரிக்கப் போவதுமில்லை தீர்த்துவைக்கப் போவதுமில்லை. தனது இலாபம் கருதி ஒருசில வாக்குறுதிகளைத் தருவார்களே ஒழிய மக்களுக்காக எதையுமே செய்ய மாட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள அந்த நாட்டு அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுடைய வாக்குகள் தங்களுக்கோ, தங்கள் கட்சிக்கோ தேவை என்பதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். நாங்களும் திரைப்படங்களைப் பார்த்து விசில் அடிப்பது போல கைதட்டி விசில் அடித்து திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். இதைக் காரணம் காட்டி விளம்பரப்படுத்தியே எங்கள் தமிழ் அரசியல்வாதிகளும் தங்களுடைய பிழைப்பை ஓட்டிக் கொள்கிறார்கள்.


அன்று கூட்டணியினர் இந்தியாவையும், கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் சொல்லி மேடைக்குமேடை முழங்கியது போல இன்று புலம்பெயர் நாட்டு அரசியல்வாதிகள் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சொல்லி ரீல் விடுகிறார்கள். தமிழ் ஊடகங்களிலே நகைக்கடைக்கு விளம்பரம் செய்தது போல தங்களைத் தாங்களே விளம்பரம் செய்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள். ஊடகங்களும் தங்கள் பிழைப்பிற்காக சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இந்த ஊடகங்கள் தான் அன்று விடுதலைப் புலிகள்… தேசியத் தலைவர் என்று ரீவியிலும், றேடியோவிலும் வாய் ஓய்யாமல் கத்திக் கொண்டிருந்தவர்கள். இன்று அதை மாற்றி தங்கள் நலனுக்காக மீண்டும் மக்கள் மனதைக் குழப்பி இன்னொரு  தவறான அரசியலுக்கு இட்டுச் செல்ல வழி காட்டுகிறார்கள்.  பொதுமக்களாகிய நாங்கள் தான் ஏமாற்றப்படுகிறோம். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத மந்தைகளாகவே காலத்தை ஓட்டுகிறோம். பொறுமையாக சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

உண்மையில் நாங்கள் மக்களை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த தவறான அரசியற் போக்கை, கடந்தகாலத் தவறுகளை விமர்சிப்பவர்களை… ஒருமாற்று  அரசியலை… அதற்கான திட்டத்தை முன் வைப்பவர்களை எதிரிகளாகப் பார்க்காது அவர்களின் கருத்துக்களை அறிய முயற்சி செய்யுங்கள். உங்கள் முரண்பாடுகளை, எதிர் கருத்துக்களை முன்வையுங்கள். மற்றவர் கொள்கையினை கருத்துக்களை உதாசீனம் செய்வதால் நாங்கள் சரியென்றாகிவிடாது.

 

இதே தவறைத் தான் புலிகளும் செய்தார்கள். எந்தமாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை. முற்போக்காளர்கள், சமூக சிந்தனையாளர்கள் ஏதாவது சொன்னால் எதையும் உள்வாங்கிக் கொள்வதில்லை, கருத்துக்களையும், விமர்சனங்களை விஷமாகப் பார்க்கும் போக்குத்தான் புலிகளோடு இருந்தது.

 
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன முடிவு…?


இது எங்கள் எல்லோரோடும் இருக்கும் பொதுவான கேள்வி.

 
வெறும் பிரிவினைவாதத்தால் ஒரு சிறுபான்மை இனத்தின் பிரச்சனை தீர்ந்து விடுமா? எங்களோடு இருப்பது இனப்பிரச்சனை மட்டும் தானா? எங்களோடு இருக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் களையாமல் அதற்கான திட்டமோ தீர்வோ எதையுமோ முன்வைக்காமல்  தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது. இலங்கை அரசோ எந்த முதலாளித்துவ நாடுகளோ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கப் போவதில்லை. ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையினை, சுரண்டல் அதிகாரக் கட்டுமானங்களை அது தகர்த்தெறிந்து விடும். எங்கள் உரிமையினை நாங்கள் தான் போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையின மக்களின் ஆதரவோடு மக்களை ஒன்று திரட்டி வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுப்பதின் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

http://www.psminaiyam.com/?p=5423

 

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது