Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்ற பெயரில் காட்டு வேட்டைக்கு புறப்பட்டிருக்கும் அரசு அதற்கு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள், அவர்களை ஒழிக்கவேண்டும் என்பது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே போடப்பட்ட திட்டங்களின்படி அந்தப்பகுதிகளில் கொட்டிக்கிடங்கும் கனிம வளங்களை பன்னாட்டு தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக அங்கு காலம் காலமாய் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களை நாயைப் போல் நரியைப் போல் விரட்டிவிட்டு வசதி செய்து கொடுக்கவேண்டும் என்பது.

சுதந்திரமடைந்து விட்டோம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த அறுபத்திச்சொச்சம் ஆண்டுகளில் சாலை வசதிகளை கூட செய்து தரமுடியாத இந்த அரசு, தங்கள் வாழ் தேவைக்காக வில் அம்புகளை வைத்துக்கொண்டிருக்கும் பழங்குடி மக்களை பல்வேறு நவீன ரக துப்பாக்கி, குண்டுகள், எறிகணைகள் மூலம் போர்விமான வசதிகளுடன் விரட்டியடிக்கவிருக்கிறது. இதை வளர்ச்சித்திட்டம் என்று தன்மானமுள்ள அந்த மக்களின் வாழ்வை ஏளனம் செய்கிறது. நிராயுதபாணியான மக்களிடம் நவீன ஆயுதங்களைக் காட்டி மிரட்டுபவன் பயங்கரவாதி என்றால் இந்த அரசை எப்படி அழைப்பது?

 


ஆனால் அப்படியெல்லாம் சுற்றிவளைத்து சிரமப்பட்டு புரிந்து கொள்ளவேண்டிய அவசியமின்றி நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்று ஒரு சட்ட முன்வரைவின் மூலம் வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டுள்ளது இந்த ஆளும் கும்பல். அணுமின் எரிசக்தி பதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிடி பில்) என்பது அந்த சட்ட முன்வரைவின் பெயர்.

பல்வேறு அறிவுத்துறையினரும், அறிவியலாளர்களும் ஜனநாயக நெறிகளின் படி தங்கள் பலத்தை திரட்டி போராடியும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என பிடிவாதம் பிடித்து நிறைவேற்றியது மன்மோகன் அரசு. நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதத்தையும் நடத்தாமல் வாக்கெடுப்புச் செய்யாமல் நிறைவேற்றியது. (அந்த நேரத்தில் நடந்தது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தானே தவிர ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு அல்ல)

எதிர்காலத்தில் நாம் மிகப்பெரிய அளவில் மின்பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறோம் என்று கூறி இந்த ஒப்பந்தம் நியாயப்படுத்தப்பட்டது. அதற்கு யுரேனியம் அவசியமில்லை நம்முடைய நாட்டில் தாராளமாக கிடைக்கும் தோரியம் மூலம் அதை செய்யலாம் என்று அந்த ஆய்வில் முக்கால் பங்கு வெற்றியை பெற்றுவிட்ட அறிவியலாளர்களின் கலகக் குரல் செவிமடுக்கப்படவில்லை. இன்றுவரை ஆண்டுக்கொருவராய் அறிவியலாளர்கள் மர்மமான முறையில் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே நடப்பில் இருக்கும் முறைகளின் மூலமும் வேறு புதிய முறைகளின் மூலமும் மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தினால், சூரியமின் உற்பத்தி போன்ற ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கினால் இந்த ஒப்பந்தத்திற்கு செலவு செய்வதை விட குறைவான செலவில் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் கிடைக்கும் மின்சாரத்தைவிட அதிக மின்சாரம் பெறலாம் என்று அறிவுத்துரையினரால் எடுத்துக்காட்டப்பட்டது. இதற்கு அரசிடமிருந்தோ அந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்களிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. ஆனாலும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவின் இறையாண்மை(!) பறிபோய்விடும் என்று இல்லாத ஒன்றைப்பற்றி கவலைப் பட்டனர் சிலர். அமெரிக்காவின் ஹைட் சட்டம் இந்தியாவை கட்டுப்படுத்தாது என்றார்கள். ஆனால் இந்தியாவின் நீண்ட நாள் நண்பனான ஈரானுடன் இதே அணுசக்தி விசயத்தில் அமெரிக்காவின் நலனுக்காக முரண்பட்டார்கள். ஈரானும் அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தப் போகிறோம் என்று தான் கூறியது. ஆனாலும் குழாய் எரிவாயு திட்டம் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையிலும் அமெரிக்காவை மீறமுடியாமல் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

இவ்வளவு முரண்பாடுகளுக்கிடையிலும், எதிர்ப்புகளுக்கிடையிலும் இந்திய நலனை விட்டுக்கொடுத்து செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி இதுவரை பணிகள் எதுவும் துவங்கிவிடவில்லை. தொழில்நுட்ப இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கி விடவில்லை. ஏன்? அமெரிக்க முதலாளிகள் பயப்படுகிறார்கள். விபத்து என்று ஒன்று நடந்து விட்டால் நட்டஈடு அதிகம் கொடுக்க நேரிடுமோ என்று.

அமெரிக்காவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்நோபில் அணுக்கசிவு விபத்துகள் எவ்வளவு கோரமானவை என்று உலகம் கண்டிருக்கிறது. இந்தியாவில் போபால் விசவாயுக்கசிவு நடந்து பல ஆண்டுகள் ஆனபின்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகூட மறுக்கப்பட்டு இரக்கமற்று அலையவிடப்பட்டிருக்கும் இந்த நாட்டில் அணுமின் உற்பத்தி செய்து லாபம் என்ற பெயரில் இந்திய மக்களை கொள்ளையிட துடிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு விபத்து நடந்தால் இழப்பீடு கொடுக்க நேரிடும் என்பது தயக்கமாக இருக்கிறது. அவர்களின் தயக்கத்தைப் போக்கி, வாட்டத்தை நீக்கத்தான் அணுமின் எரிசக்தி பதிப்புச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டுவரவிருக்கிறது.

என்ன சொல்கிறது இந்தச்சட்டம்? அணுமின் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று, கனரக இயந்திரங்கள் தொழில்நுட்ப பாத்திரம் வகிக்கும் நிறுவனங்கள். இரண்டு, இவைகளைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்து பகிரும் நிறுவனங்கள். இந்த இரண்டு வகை நிறுவனங்களில் விபத்து ஏற்பட்டால் முதல்வகை நிறுவனங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, தொழில்நுட்ப குறைபாடு காரணமாக விபத்து ஏற்பட்டிருந்தாலும் கூட. இரண்டாம் வகை நிறுவனங்கள் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்று அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக 2785 கோடியை செலுத்திவிட வேண்டும். அதிலும் 500 கோடி மட்டும் செலுத்தினால் போதும் மீதியை அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஈடு கட்டிக்கொள்ளும். இது தான் அந்தச்சட்டம். சுருக்கமாக சொன்னால் அமெரிக்க நிறுவனங்கள் இங்கு வந்து மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகித்து (எந்த விதத்திலும் அரசு தலையிடப்போவதில்லை) மக்களிடம் கோடி கோடியாக கொள்ளையடிக்கலாம், விபத்து நடந்தால் பிச்சைக்காசு 500 கோடியை தூக்கி வீசிவிட்டு போய்விடலாம். அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து இழப்பீடு வழங்கிக்கொள்ளும். கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மூத்திரத்தில் ஏரோபிளேன் ஓட்டலாம் என்பது இது தானா?

மக்களுக்கு அரசு கல்வி கொடுக்க முடியாது எனவே தனியார்கள் கல்வியை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அரசு சுகாதார வசதிகளை செய்து கொடுக்க முடியாது எனவே தனியார்கள் மருத்துவமனைகளை அமைத்துக்கொள்ளலாம். மக்களுக்கு குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க அரசால் முடியாது எனவே தனியார்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். மக்களுக்கு அரசு மிசார வசதிகளை செய்து கொடுக்க முடியாது எனவே தனியார்கள் மின் விநியோகம் செய்து கொள்ளலாம். ஆனால் இவைகளில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் முதலாளிகள்  பணம் தரமாட்டார்கள். ஏனென்றால் லாபம் சம்பாதிக்க மட்டுமே ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனவே அதை மட்டும் அரசு கவனித்துக்கொள்ளும் அதையும் அந்த மக்களின் பணத்திலேயே.

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்பதெல்லாம் திரைபோட்டுக் கொண்டு வந்த காலமெல்லாம் கடந்து விட்டது. தன் கோரமுகத்துடன் நேரடியாகவே வந்து நிற்கிறது. இனியும் மக்கள் வலிக்கவில்லை என்று வாளாவிருக்க முடியாது. எதிர்த்து முறியடிக்க களத்தில் நிற்கவேண்டிய காலமிது.

 

http://senkodi.wordpress.com/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது