Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அரிசி பருப்பு தொடங்கி சர்க்கரை வரை விலை எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. சாமானிய உழைக்கும் மக்கள் விலை உயர்வினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

 

ந்தக்கவலை நாட்டின் பிரதமருக்கும், முதலமைச்சர்களுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் தான் பிரதமர் முதலமைச்சர்களின் மாநாட்டடைக் கூட்டி விலைவாசி உயர்வு குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். அதுவும் புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பின் முக்கியத்துவம் கூடி விட்டது. கஞ்சியில்லாதவன் சாவதை விட குண்டுவெடித்து சாவது அதிர்ச்சியானது தானே.

ஒரு ரூபாய் அரிசி திட்டம் செயல் படுத்தப்படுவதாலும், பத்து வகையான மளிகைப் பொருட்கள் ஐம்பது ரூபாய்க்கு வழங்கப்படுவதாலும் தமிழக மக்கள் பசிஎனும் சொல்லை அறியாமல் வாழ்கிறார்கள் எனவே காவல்துறையை நவீனப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிக நிதி தாருங்கள் என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார் மாநாட்டில் கலந்து கொண்ட துணைமுதல்வர். பிரதமரோ பருவமழை பொய்த்து உற்பத்தி குறைந்ததால்தான் விலை உயர்ந்ததாக அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் நிஜமோ வேறு மாதிரி இருக்கிறது. ஒருவரோ அல்லது ஒரு நிறுவனமோ 50000 டன் வரை உணவு தானியங்களை சேமித்து வைத்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி இருக்கிறது. சட்டப்படி பதுக்கிவைத்து கொள்ளையடிப்பவர்களை தண்டிப்பது எப்படி என்பதை அவர் சொல்லவில்லை.

விலைவாசி உயர்வு என்றது மழை பொய்த்துவிட்டது உற்பத்தி குறைவு என்று காரணம் கூறுவது வழக்கமாகி இருக்கிறது. ஆனால் விலை உயர்வுக்கு உற்பத்திக்குறைவு காரணமல்ல என்பது தான் உண்மை. எடுத்துக்காட்டாக 2009 காரீப் பருவ பருப்பு சாகுபடியில் பருப்பு உற்பத்திக் குறைவு 7 சதவீதம் மட்டுமே.​ பெரும்பகுதி பருப்பு உற்பத்தி ரபி பருவத்தில் நடக்கிறது.​ ரபி பருவ பருப்பு சாகுபடி குறைவின்றியே இருக்கின்றது. ஆனாலும் பருப்புவிலை மடங்குகளில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பருப்புவிலை உச்சத்தை தொட்டபோது ஊகவணிகத்திற்கு தடை என்று சில நாட்கள் நாடகமாடினார்கள். ஊகவணிகம் தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிந்திருந்தும், அதை தடை செய்வது குறித்து மூச்சுவிடக்கூட மறுக்கும் இவர்களா மக்களைப்பற்றி கவலைப்படுவார்கள்?

உலகில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியாவில்தான் கரும்பு சாகுபடி அதிகம், ஆனால் சர்க்கரைவிலை மட்டும் முதலிடத்தில். இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் அவர்கள் மறந்தும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பதால் தான் சர்க்கரை விலையை இறங்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று விளக்கம் கொடுக்கவேண்டியது தான் மிச்சம். உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்கு பதில் சொல்லவேண்டிய அமைச்சரின் கட்சி இதழ் ‘ராஷ்ட்ரியா’ சர்க்கரை சாப்பிடாவிட்டால் இறந்துவிட மாட்டீர்கள் என்று தலையங்கம் தீட்டுகிறது. விலை உயர்வுக்கு சரத்பவார் தான் காரணம் என காங்கிரஸ் மெதுவாக நழுவப்பார்க்க, பிரதமரின் ஆலோசனைப்படி தான் நான் நடந்துகொள்கிறேன் என்று இவர் பதிலடி கொடுக்கிறார். ஆனால் பொதுவிநியோகத்திற்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த 72,684 டன் சர்க்கரையை தனியாருக்கு விற்றது யாருடைய ஆலோசனையின்படி என்பதை மட்டும் யாரும் சொல்லவில்லை.

கடந்த நவம்பர் மாத கொள்முதல் குறியீட்டின்படி மொத்த கொள்முதல் விலை உயர்வு 4.78 விழுக்காடு, அதாவது கொள்முதல் அளவில் அதிகரித்த விலை உயர்வு 4.78 விழுக்காடு, ஆனால் நுகர்வோர் அளவில் அதிகரித்த விலைஉயர்வு 11முதல் 19விழுக்காடு வரை. இது விலை உயர்வின் காரணி எங்கிருக்கிறது என்பதை காட்டுகிறது. விளைவிக்கும் விவசாயி கடன்தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறான். நுகரும் மக்களோ விலையுயர்வின் பாரம் தாங்காமல் துவழுகிறார்கள். இந்த விலையுயர்வின் காரணிகளை அறிந்துகொண்டே அரசு பருவமழை, உற்பத்திக்குறைவு என்று திசைதிருப்புகிறது.

கொள்முதல் விலையை உயர்த்திக்கேட்டு போராடும் விவசாயிகளை அலட்சியம் செய்யும் அரசு; விவசாயிகளுக்கு கொடுக்கும் கொள்முதல் விலையைவிட ஒன்றரை மடங்கு அதிகமான விலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமன்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்வதிலிருந்து விலகி விவசாயிகளை தனியார் கொள்முதல் நிலையங்களை நோக்கி தள்ளிவிடுகிறது. இன்னொருபக்கம் சில்லறை விற்பனையிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருப்பதன் மூலம், உற்பத்தி விநியோகம் இரண்டையும் தனியாரின் பொறுப்பில் விட்டுள்ளது. இப்படி மக்களை தனியாரை பன்னாட்டு, தரகு முதலாளிகளை சார்ந்திருப்பவர்களாக மாற்றிவிட்ட பிறகும், உணவுதானியங்கள் பதுக்கிவைப்பதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கிவிட்ட பிறகும் விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனும் அரசை எப்படி நம்புவது?

அறிவுத்துறையினர் விலைஉயர்வு குறித்து கூறுகையில் உலக அளவில் விலை உயர்வு இருக்கும் போது இந்திய அளவில் அதை தவிர்க்கமுடியாது என்கின்றனர். எந்தப்பொருட்களின் விலை உயர்கிறது எந்தப்பொருட்களின் விலை குறைகிறது என்பதை கவனித்தாலே இதன் பின்னால் தொழிற்படும் அரசியல் புலப்பட்டுவிடும். உலகின் ஒட்டுமொத்த உற்பத்திப்பொருட்களை எடுத்துக்கொண்டால், எந்த நிலையிலும் மக்கள் வாங்கியே ஆகவேண்டும் எனும் நிலையிலுள்ள அத்தியாவசியப் பொருட்களான உணவு முதலானவற்றின் விலை உயர்ந்துகொண்டே செல்ல, அலங்காரப் பொருட்களான செல்பேசி முதல் வாகனங்கள் மின்னணுவியல் பொருட்கள் வரை விலை குறைந்துகொண்டே செல்கிறது. மக்களை வாங்கவைக்க வேண்டுமென்றால் விலை குறையும். வாங்கியே தீரவேண்டும் என்றால் விலை கூடும். மக்களின் உழைப்பை திருடுவதல்லாத வேறு என்ன காரணம் இதில் இருக்கிறது? இதில் உற்பத்திக்குறைவு எங்கு வருகிறது?

அன்றாடம் உழைத்து களைக்கும் பாட்டாளி உண்ணமுடியாத அளவில் விலை உயர்வு இருக்கையில் செல்பேசியும், காரும் விலைகுறைந்தால் இரவு உணவுக்கு செல்பேசியை கடித்துக்கொண்டு காரையா சாப்பிடமுடியும்?

http://senkodi.wordpress.com/2010/02/16/rising-price/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது