Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்?


இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதிகூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே!
எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும்,மனைவியையும் சிறைக்கைதிகளாக்கி, அவர் சுதந்திரமாக சொன்ன எல்லாவற்றையும் பொய்யாக்கி,நான் இப்போது சொல்வதே மெய்யென சொல்லவைத்த “கணனி மாயாஜால மன்னராகிய” நீங்கள்இலங்கை வரலாற்றில் ஓர் அதிஸ்டசாலியான ஜனாதிபதிதான்.


சுதந்திரதினத்திற்கு ஓர் வாரத்திற்கு முன்பாக, தோதல் ஆணையாளர் சுதந்திரமாக பலவற்றைசொன்னார். நடைபெற்ற தேர்தல் சுதந்திரதான தேர்தலல்ல. மக்கள் வாக்காளிக்காத பெட்டிகளையேஎண்ணினோம், வெற்றியாக்கினோம். இவ்வெற்றிக்கனி இலங்கை வரலாறில் யாருக்குமேகிடைக்காத அதிஸ்ட வெற்றிதான். இவ்வகையில் மகிந்தா ஓர் பாக்கியசாலியும் கூட. ஆனால் இந்தமாயாஜால வெற்றிக்குப் பின்னால், கறைபடிந்த பல துரதிஸ்டவசமான பல சம்பவங்களும் உள்ளன.


இம்முறை மகிந்தா 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளால் வெல்லவைத்தால், போதுமென்றேமகிந்த சகோதரர்கள் திட்டமிட்டார்களாம். “மாயாஜால கணனி கணக்கீட்டுச் சிக்கலால்“, அது18-லட்சத்திற்கு மேலாகியுள்ளது என தேர்தல் திணைக்கள கணனி அதிகாரிகள் நகைச்சுவையாக -சொல்கின்றார்கள்!


வாக்கு எண்ணச்சென்ற ஓர் அரச ஊழியர் ஒருவர் இப்படிச் சொன்னார், தங்களில் பத்துப்பேர்வாக்குகள் எண்ணச்சென்றபோது, உங்களின் வேலைகள் கணனிக்கூடாக (கர்ச்சிதமாக)செய்யப்படுகின்றது, நீங்கள் கடமையில் இருந்தாக கருதப்படுவீர்கள், பதிவிலும் இடப்படும்சந்தோஷமாக் போய்வாருங்கள் என மாலை 7-மணிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்களாம். இதுவேபெரும்பாலான இடங்களின் நிலையென்றார்.
90வீதமான மக்களுக்கு தேர்தல் முடிவுகளில் நம்பிக்கையில்வை. இதை தேர்தலை சுதந்திரமாகவும்,நேர்மையாகவும் நடாத்தும் கண்காணிப்பகத்தின் நிர்வாகி ரஜீத்கீர்த்தி தென்னக்கோன்தெரிவித்துள்ளார். நிலையவாரியான வாக்கு எண்ணிக்கை விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்காகவெளியிட வேண்டுமென இவ்வமைப்பு பலமுறை கேட்டும், தேர்தல் ஆணையம் அதைப்பொருட்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் முகவர்கள் பல வாக்கு எண்ணிக்கை நிலையங்களில்இருந்து விரட்டி அடக்கப்பட்டனராம்.


பொன்சேகாவிற்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் குப்பைத்தொட்டிக்குள் இருந்துஎடுக்கப்படுகின்றன. குப்பைத் தொட்டிக்குள் எதிர்க்கட்சி வாக்குகளை வீசிவிட்டு, எனது அரசியல்பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, எச்சந்தர்ப்பத்திலும் எத்தகைய தகாதவற்றையும்மேற்கொண்டதில்லையென்கின்றார். தண்டனை – இம்சை – இராணுவ சட்டதிட்டங்கள் மூலம்நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனறு, நாட்டின் 62-வது சுதந்திரதின வைபவத்தில் மகிந்த மன்னன்வேறு மதியுரையாற்றியுள்ளார்


தோதல் முடிந்தபின், தேர்தல் ஆணையாளர் மாத்திரமல்ல, அவரது மனைவியும் பலவந்தமாகஅலரிமாளிகை;கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இம்சையை, தேர்தல்ஆணையாளர் எதிர்காலத்தில் என்னவென்று சொல்லவே மாட்டார். அலரிமாளிகையா? இராணுவமுகாமா? என அங்கலாய்ததாராம். அவர் மனைவி!


1-2-2010-ல் தேர்தல் ஆணையாளரும் மனைவியும் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு, பதவிவிலகலை மறுபரிசீலனை செய்யும்படியும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலநடைபெற்றதாக பொது அறிக்கை விடும்படியும், கேட்டுக்கொள்ளப்பட்டதாம். சுமார் 6-மணி நேரமாகதன்முடிவிலிருந்து மாறாதிருந்த தேர்தல் ஆணையாளரை நள்ளிரவு அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டு,மனைவி அலரிமாளிகையில் இரவிரவாக சிறைக்கைதியாகவே இருந்தார். இப்பேர்ப்பட்டஇம்சைகளுக்கு ஊடாகவே, தேர்தல் ஆணையாளரால், தற்போது சொல்லப்படும், அத்தனையும்சொல்ல வைக்கப்பட்டுள்ளது.


கணவன்-மனைவியைப் பிரித்த ஜனாதிபதி, தனிமையில் இருந்த தேர்தல் ஆணையாளரிடம்என்னதான் சொல்லயிருப்பார். எதைத்தான் சொல்லி மிரட்டயிருப்பார். என் அன்பிற்குரியஉடன்பிறப்புக்கள் கணித்த 3 லட்சம் வெற்றி வாக்குகள் எப்படி 18-லட்சமாகியது. இதை யார்தான்நம்புகின்றார்கள். ஊர் உலகம் கைகொட்டிச் சிரிக்கின்றது. என்னை அவமானப்படுத்த எடுக்கப்பட்டமுடிவோ? nhபன்சேகாவிற்கு புள்ளடியிட்ட வாக்குகள் எப்படி குப்பைத்தொட்டிக்குள் போனது? யார்தந்த துணிவில் இவையெல்லாம்? 30 வருட பயங்கரப் புலியை, 3 வருடத்தில் என் மகிந்தசிநதனையால் இல்லாதாக்கிய மீசை வைத்த ஜனாதிபதி நான்! உங்களையும் மனைவியையும்(கேடுகெட்ட) இச்சிந்தனைக்கூடாகவே கைது செய்துள்ளேன். அமெரிக்க-மேற்குலகமே என்னைக்கண்டு அஞ்சுகின்றது. ஓபாமாவின் அறிக்கையை பார்க்கவில்லையோ? இப்படி இன்னும் பற்பல……..நான் உங்களைக் கேட்கின்றேன் இவர் இப்படி…. மிரட்டல் செய்ய மாட்டாரோ!?


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது –சம்பந்தன்


தேர்தல் ஆணையாளரைத்தான் வெருட்டி, மகிந்தா பலவற்றை சொல்ல வைத்தார்! இவரை யார்வெருட்டியதில், இவர் இப்படிச் சொல்கின்றார்!


சண்முகதாசனின் நினைவலைகள்……


இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் சண்முகதாசனிற்கும் ஓர் அளப்பரிய பங்குண்டுபல்கலைக்கழக படிப்பை முடித்து மாணவனாக இடதுசாரி இயக்கத்திற்கு வந்தவர். அமிர்hதலிங்கம்சிவசிதம்பரம் கூட இவர் காலத்து பட்டதாரி மாணவர்கள்தான். சிவசிதம்பரம் கூடபல்கலைக்கழகத்தில் சண்ணோடு போஸ்ரல் ஒட்டியவர்தான். அன்றைய யாழ்ப்பாண சூழலில் சண்கந்தையா கார்த்திகேசன் வைத்திலிங்கம் போன்றவர்கள் இடதுசாரி இயக்கம் நோக்கி சென்றது,வித்தியாசமான போக்குத்தான்.


தன் இளமைக்கால அரசியல் வாழ்வை தொழிறசங்க இயக்கத்திற்கு ஊடாக ஆரம்பித்த சண்,படிப்படியாக கட்சித் தலைமைக்கு வருகின்றார். 60-ல் சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்டபபிளவில் திரிபுவாதப் போக்கை நிராகரித்து, சரியான புரட்சிகரப் பாதையின் உடாக கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமையையும் செயலாளர் பொறுப்பையும் ஏற்கின்றார்.


சண் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, தன் முதல் பத்தாண்டு காலத்தில், இலங்கையில் பலபுரட்சிகர வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்தது. அது சாதி தீண்டாமைக்கெதிரானபோராட்டங்களாக, தொழிறசங்கப் போராட்டங்களாக, ஏனைய சட்ட-சட்டவிரோதப் போராட்டங்களாகபரிணாமித்தன. இவற்றிற்கு ஊடாக வடபகுதியில் பல கிராமங்களும், மலையகம் கொழும்பிலும்பலமான ஓர் தொழிற்சங்க அமைப்பு கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரண்டிருந்தன.


71-ஏப்ரல் கிளர்ச்சி ஏற்பட்டபோது, சண் சிறை செல்கின்றார். சிறையால் வெளியில் வரும்போது,கட்சியில் பிளவும் ஏற்படுகின்றது. பிளவு வடபகுதியில் பெரும் தளர்வை ஏற்படுத்தாத போதும்,தேசிய ரீதியில் பெரும் பாதிப்பும், பின்னடைவும் எற்பட்டது. இப்பின்னடைவை இன்று வரை நிவர்த்திசெய்யப்படவில்லை.


ஏப்பிரல் கிளர்ச்சிய அடுத்த பத்தாண்டுகள் சண் தலைமையிலான கட்சி, புரட்சிகர நடைமுறையைக்கைவிட்டு மிதவாத கட்சிகளுக்குரிய பண்புகளுடனேயே பயணம் செய்தது. அதே காலத்தில்வடபகுதியில் இளைஞர் இயக்கங்களின் தோற்றமும், தேசிய இனப்பிரச்சினையில் ஏற்பட்ட தேசியஎருச்சி போக்குகள் பற்றிய புரிதலை, சண் மார்க்சியமல்லாத கண்ணோட்டத்திலேயே அனுகினார்,சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை எனக் கணித்தவர்கள் போல். தமிழர் ஓரு தேசிய இனமல்லஎன்றார். அதற்கு அவர் கூறிய காரணம் தமிழ்மக்களுக்கு ஓர் பொதுப் பொருளாதாரம்இல்லையென்றார். தமிழினதத்தை தேசிய இனமே இல்லையென்ற வாதத்தை முன்வைத்தார்.தமிழ்மக்கள் தேசிய ஓர் இனமென ஏற்கவைக்க, கட்சிக்குள் ஓர் பெரும் தத்துவப்போரே நடந்தது.


60ம் ஆண்டுகளில் திரிபுவாதத்திற்கு எதிரான தத்துவப் போரை முன்னெடுத்தவர் சண். அடுத்தபத்தாண்டுகளில் அவருக்கெதிராகவே கட்சிக்குள தத்துவப்போர் ஏற்பட்டது. தேசியஇனப்பிரச்சினையில் தெளிவற்ற போக்கு முதல் மூன்று உலகக் கோட்பாடு வரை இது நீண்டுசென்றது. இது கட்சிக்குள் மேலும் ஓர் பிளவை ஏற்படுத்தியது. இதன் பின் சண்ணாலும் அவரோடுசென்றவர்களாலும் கூட, இயலாமை, போதாமை போன்றவைகளால், ஒரு புரட்சிகர கட்சியாக மாற்றமுடியாமல் போயிற்று. இப்பிளவு நாளடைவில் சண்ணின் அரசியல் இருப்பையே இல்லாதாக்கியது.


மறுபுறத்தில் பிளவுண்ட மறுபகுதியினரே புதிய ஜனநாயக கட்சியாக உள்ளனர். இக்கட்சியின்அரசியல் தத்துவார்த்தப் புரிதல்கள், தவறுகள் பற்றிய விமர்சனங்கள் பல. சண்ணின் பிளவிற்குபின்பும் இக்கட்சியும் ஓர் மிதவாதக் கட்சியாகவே காட்சியளிக்கின்றது. அதன் வெளிப்பாடே,ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான பகிஷ்கரிப்பு அறிக்கையும், வாக்களித்தவர்கள் தங்கள் நிராகரிப்புவேண்டுகோளை ஏற்றதான கணிப்பும். இந்தக் கற்பனாவாத அரசியலும், புரட்சிகர வெகுஜனஅரசியலையும், புதிய ஜனநாயகப் புரட்சியையும் ஏற்படுத்தாது


தேர்தலில் தோற்றாலும் இராணுவ ஆட்சி!


மகிந்தா தேர்தலில் தோற்றிருந்தாலும் இராணுவத்தின் துணையுடன் ஆட்சிக்கு வந்திருப்பார் என பலஊடகங்கள் ஆச்சரியப்படுகின்றன. இதில் என்ன ஆச்சரியம்! ஏன் முடியாது மகிந்தாவால்? அவரின்கடந்தகால ஆட்சி என்ன ஜனநாயகம் பூத்த சமதர்மப் பூங்காவோ? கடந்த நான்காண்டுகளில் 400-ற்குமேற்பட்ட குடும்ப உறவினர்கள் அரச மேல்மட்டங்களில் இருக்கின்றார்கள். முக்கால் பங்கு அரச –முப்படை – நிதி – நிர்வாகம் ஜனாதிபதி கையில். எனைய கால்ப் பங்கு ஏனைய சகோதரர்கள கையில்.அத்தடன் உலகின் பாசிச –சர்வாதிகாரிகளின துனை. அவர்களின் ராணுவ ஆலோசனை. நிதிஉதவிகள். தேர்தலை உலகில் யார் மோசடிகள் மூலம் வெல்கின்றனரோ, அவர்கள் இன்று பக்கத்துணை. ஏகாதிபத்திய முரண்படுகளின் யார் உலக ஆதிக்கத்தை தேர்தல் மோசடிகன் மூலம்ஆட்டிப்படைகின்றனரோ, அவாகள் மகிந்தாவின் ஆட்சியை தக்கவைக்க உதவுகின்றனர்.போதாததற்கு டாக்டர் பட்டம்!


கடந்த நான்கு ஆண்டுகளின் ஆட்சி, சர்வாதிகார ஆட்சியே! இது பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிநகர்கின்றது.


அரசியல் அதிகாரம் துப்பாக்க்pக் குழலில் இருந்துதான் பிறக்கின்றது!

மகிந்தாவிற்கும் டாக்டர் பட்டமும் தான்!


கருணாவின் சகாவான இளையபாரதி சிறுவர்களை படையில் இணைக்கின்றராம்! –ஐ.நா.சபை


தலைவரிடம் கற்ற பாடத்தை எப்படி மறப்பது! எல்லாம் பழக்கதோஷம்தான்!


தமிழ் இனக்காவலரின் காவல்;துறை “தொப்புள்கொடி உறவுகளை” சாகடிக்கின்றது!

“ஓசிச்சோறு திங்கிற உங்களுக்கு என்னடா விடுதலை?, நாடு இல்லாத நாய்களுக்கு பாவம் என்றுஇடம் கொடுத்தர், விடுதலையாட வேணும்” இப்படிச் சொல்லி ஈழத்தமிழ் அகதிகளைதுரத்தியடிக்கின்றது தமிழ் இனக் காவலர் கலைஞரின் காவல்துறை.


செங்கல்பட்டு அகதிகள் முகாம் ஒன்றில் கடந்த சில வருடங்களாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்களைஇன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்ககாமல், பொது முகாம்களுக்கு மாற்றவேண்டுமென கோரிஉண்ணாவிரதம் இருந்தார்கள்.


இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு முடியும்வரை பொது முகாம்களுக்குமாற்றமுடயாது எனவும், உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, இப்போராட்டத்தை கைவிடும்படிபோலிஸ் தரப்பால் கேட்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் இருந்தவர்கள் தங்களின் கோரிக்கைக்குகியூ பிரிவு போலீசாரால் உத்தரவாதம் அளிக்கும்வரை தங்கள் போராட்டம் தொடரும் எனஅறிவித்தார்கள்.


இந்தத் தகவலை அறிவித்த அன்று மாலை 6-மணியளவில் போலீஸ்துறையைச் சேர்ந்த 200 பேர்முகாமிற்குள் புகுந்து அகதிகளை “ஓசிச்சோறு திங்கிற உங்களுக்கு என்னடா விடுதலை” “நாடுஇல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்” இப்படிச்சொல்லி உண்ணாவிரதிகளை நையப்புடைத்துள்ளார்கள். இவர்களில் 12-ற்கு மேற்பட்டவர்கள்உயிராபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள.;


செம்மொழியாம்! தமிழ்மொழியாம்! அதன் காவலனாம்!, உலகத்தமிழர்களின் காவலனாம்!என்கின்றார் கiலைஞர். இவரால் இவரின் தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ்மக்களுக்கேபாதுகாப்பில்லையென பலரும் கண்டனம்!


இதற்கு பதிலாக முரசொலியில் உடன்பிறப்புpற்கு ஓர் கடிதம். உடன்பிறப்பே, நான் காவல்துறைகூடாது என்பவன் அல்ல, அது கொடியவர்களின் கூடாரம் ஆகக்கூடாது என்கின்றேன். காவல்துறைதன் கடமையை, (உண்ணாவிரதிகளை அடித்து நொருக்கியதை) கண்ணியம் கட்டுப்பாட்டுடன்செய்யத்தவறி விட்டது. இதை மத்திய – மாநில மந்திரிகளுக்கும் சட்ட – காவல்துறைமந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். உண்ணா நோண்பாளர்களின் வலியை நான் அறியாதவன்அல்ல. அவ்வலியால் கோபாலபுர இல்லத்தில் நானும் சில மணிநேர உண்ணா நோன்பாளியானேன்;.இதை உலகத் தமிழ்மக்கள் அறிவர். ஏன் எதிரிகள் அறிந்தும் அறியாதவர் போல் தூற்றுகின்றனர்.தூற்றுவோர் தூற்றட்டும். உடன்பிறப்பே! நீ என்னை என்றும் அறிவாய். என்றும் நான் தமிழர்காவலனே!


இப்படிக் கூறி தமிழினத்தை அடித்து துவைக்கின்றார்.

 

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது