Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வரலாற்று முக்கியத்துவம் இனவழிப்பு யுத்தம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இருவர், இரு துருவங்கள் ஆகியுள்ளனர். மகிந்த ராஐபக்ச தன் அண்மைக்கால அரசியலில் விட்ட மிகப்பெரிய தவறொன்று, சரத் பொன்சேகாவை ஓரம்கட்ட நினைத்தது. இதனால் அந்நிலைமை (எதிர்வரும் தேர்தலில்) தனக்கும் வந்துவிட்டதோ என தத்தளிக்கின்றார்.

இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவை அப்பதவியிலில் இருந்து நீக்கி, கூட்டுப்படைப் பிரதானியாக்கினார்;. ஆனால் பிரதானி என்ற வகையில் முப்படைகளுக்கும் ஆணையிடும் அதிகாரத்தை கொடுக்கவில்லை. அதைக் கேட்டு கொடுக்காததன் விளைவு, ராஐpனாமாவில் போய் முடிந்தது.

ராஐpனாமா செய்த தளபதி பொன்சேகாவை, அவரின் தேசிய-சர்வதேசிய கூட்டாளிகள் குறுகிய காலத்தில் ஓர் அரசியல்வாதியாக்கி, ஐனாதிபதித் தேர்தலில் மகிந்தாவிற்கு சமமான நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

ஐனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் முக்கிய தேர்தல் பிரகடனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையை இல்லாதாக்குதல், மகிந்தாவின் குடும்ப ஆட்சியை – அரசியலை இல்லாதொழித்தல்.

இலங்கை அரசியலின் பெரும்பாலான அரசியல்காலம், குடும்ப ஆட்சிக்கூடாகவே, கடந்து வந்துள்ளது. ஆனால் மகிந்தாவின் குடும்ப ஆட்சி போன்றதொரு – அரசியல் கட்டமைப்பு கடந்த காலங்களில் இருக்கவில்லை.

மகிந்தாவின் ஆட்சியில், நான்கில் மூன்று பங்கு  மகிந்தாவின் நேரடி நிர்வாகத்தின் கீழேயே உள்ளது. இதற்கான ஒருநாள் செலவு ஒரு கோடியே 90லட்சமாகும். எஞ்சியுள்ள ஓர் பங்கு ஏனைய சகோதரர்களின் கீழேயே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் என்பவர்கள் மகிந்தாவின் வெறும் கைப்பொம்மைகளே! பாராளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேள்விகள கேட்கப்பட்டால், மகிந்தாவிடமும் சகோதரர்களிடமும் கேட்டு; (தவணை அடிப்படையில்) பதில் சொல்கின்றார்கள்.

சரத்பொன்சேகா இத்தேர்தலில் கையில் எடுத்துள்ள இந்த நல்ல அங்சதிரத்தை (நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை) சரிவரப் பிரயோகித்தால், அது மக்கள் மத்தியில் எடுபடக்கூடிய ஒன்றுதான்.

மகிந்தாவின் கடந்தகால குடும்ப ஆட்சி, புலிகளை தோற்கடித்த பலவான் என்ற ஓர் பிரமையைத் தவிர, நாட்டு மக்களை அரசியல் பொருளாதார ரீதியில் நலிந்தவர்களாக – நசுங்குண்டுள்ளவர்களாகவே ஆக்கியுள்ளது. இந்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஓர் மாற்றத்தை நோக்கிய அன்னளவான அலையொன்றும் வீசுகின்றது.

இதை யுத்தம் உருவாக்கிவிட்ட “வீரரான” சரத் பிரதிபலிக்கின்றார். ஆனால் அவரின் கையை மக்கள் பலப்படுத்துவார்களா?

ஏதிர்வரும் ஐனவரி 26-ல் நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில், சர்வதேச முகாம்; கடந்த காலங்கள் போலல்லாது, மிகப்  பகிரங்கமாகவே தொழிற்படுகின்றது .அமெரிக்க மேற்குலகம் ஒருபுறமாகவும், ஆசியநாடுகள் சில மறுபுறமாகவும் செயற்படுகின்றன. இதில் இருவருடைய ழூலதனம் அரசியல் ஆதிக்கம்,   போன்றன  (பலப்பரீட்சையாகி) களம் புகுந்து விளையாடுகின்றன.

இலங்கை தென்னாசியாவில் கேந்திர மையத்தில் அமைந்திருப்பது, எதிர்நிலைச் சக்திகளின் இருப்பை அதிதரிப்பதற்கான – முக்கிய காரணியாகும்.

கடந்த 400ஆண்டுகளுக்கு மேலாக, இலங்கை அமெரிக்க – மேற்குலகின் செல்லப்பிள்ளையே! மேற்குலகம் இலங்கையில் ஏகாதிபத்தியமாக, காலனித்துவமாக, நவகாலனித்துவமாகவும் செயற்பட்டது. மகிந்தாவின் அண்மைக்கால அரசியல் செயற்பாடுகளால், சில ஆசிய நாடுகளின் (சீன – இந்திய – பாகிஸ்தான்) கூட்டால் அமெரிக்க மேற்குலகத்தை ஓரம் கட்டிவிட்டது.

இவ்வோரத்தில் இருந்து மையத்திற்கு வரவும், தன் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை செயற்பட வைக்கவும், மேற்குலகம் துடியாத் துடிக்கின்றது. ஆசிய ஆதிக்கத்தை எப்படி தடுப்பது என்பதில், தன் காய்களை நகர்த்துகின்றது. இதற்கு ஐனாதிபதித் தேர்தலும் பொன்சேகாவும் காய்களாகியுளள்னர்.  உலகமயமாதலின் திட்டமிட்ட அரசியல் பொருளியல் நோக்கு, முன்றாம் உலக நாடுகளை நோக்கியே குவிமையம் கொள்ள வைத்துள்ளது. இது அந்நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்து, அந்நாட்டு மக்களை ஏழைகளாக்குகின்றது. இன-மத-மொழி-வாரியாக மக்களை மோதவைத்து, அந்நாடுகளை அமைதியற்ற சூனியப் பிரதேசங்கள் ஆக்குகின்றது. இதுவே இலங்கையிலும் நடைபெற்றுள்ளது. இதுவே தேர்தலின் பின்னாலும் தொடரும்.

இது ஓர் புறமிருக்க மறுபுறத்தில் தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலை எப்படி அணுகுவது என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இவை தேர்தல் பகிஸ்கரிப்பு, வாக்குச் சீட்டுக்களை செல்லுபடி அற்றதாக்குவது, என்பதில் இருந்து ஓர் பொது வேட்பானரை நிறுத்தவது வரை செல்கின்றது.

முன்றாவது ஓர் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ்மக்கள் வாக்குகள் ஒன்றிணைக்கப்பட்டால், முதன்மை வேட்பாளர்கள் 50வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெறுவர்;. இதனால் யாரும் ஐனாதிபதியாகும் வாய்ப்பு ஏற்படாது. இந்நிலை தேர்தலை இரண்டாவது வாக்கெடுப்பிற்கு இட்டுச்செல்லும். இது அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.  இது தமிழ்மக்களின் தனித்தன்மையை அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துணர்த்தும் என்கின்றனர்.

இதை தமிழ்த்தேசியவாதிகள், குறிப்பாக கூட்டமைப்பினர் கணக்கில் கொண்டதாக இல்லை. இவர்கள் வழமைபோல் சந்தர்ப்பவாத அரசியலையே தொடர்கின்றனர். கூட்டமைப்பில் இருந்து ஓர் வேட்பாளரையோ, அல்லது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டையோ, நிராகரித்N;த விட்டனர். பொத்தாம் பொதுவாக தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவிற்கே வந்துள்ளனர்.

இதில் இவர்கள் உள்நோக்குடனேயே (கெட்டித்தன அரசியல்) செயற்படுகின்றனர். இவ் உள்நோக்கம் பொன்சேகாவை வெல்லவைப்பதே. இதை பகிரங்கமாக சொன்னால், தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட வேண்டிய நிலையே வரும்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை, சிங்களப் பேரிpனவாத வெறியில், இன அடக்குமுறையில், சுயநிர்னய உரிமை மறுப்பில், மகிந்தாவும் – பொன்சேகாவும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே. இவ்வருடத்தின் மாபெரும் மனிதப் படுகொலைகளையே செய்தவர்கள், தமிழ்மக்களை பற்பல சித்திரவதை சிறைக் கூடங்களில் அடைத்தவர்;கள். சர்வதேச சட்டங்களை, மனித உரிpமைகளை மீறி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் – யுவதிகளை  (போராளிகள்) கொன்றொழித்தவர்கள். மொத்;தத்தில் இருவரும் பாசிச சர்வாதிகாரிகளே.

இந்நிலையில் கூட்டமைப்பின் தேர்தல் முடிவு இவ்விரு சர்வாதிகாரிகளில் ஒருவரையே வெல்ல வைக்கும். இதில் இவர்கள் பொன்சேகாவின் வெற்றியையே உள்ளுர விரும்புகின்றனர்;. அத்துடன் அவர்களின் சர்வதேச கூட்டாளிகளும்; பொன்சேகாவையே மையப்படுத்துகின்றனர். கடந்த காலங்களிலும் இவர்களின் அரசியல் அமெரிக்க மேற்குலகம் சார்ந்த அடிமை அரசியலே.

தமிழ்த்தேசியம் கடந்த 60வருடங்களுக்கு மேலாக, தேசியம் சர்வதேசியம், தேச-கால-வர்த்தமானம் என்பவகைளை கணக்கில் எடுத்து, அரசியல் – அரசியல் போராட்டங்களை நடாத்தவில்லை. நண்பர்களை எதிரிகளாக்கி, எதிரிகளை நண்பர்களாக்கியதில், தமிழ் மக்கள் இன்று அரசியல் தலைமையற்ற அநாதைகள் ஆகியுள்ளனர். இருந்தும்  கூட்டமைப்பினர் கடந்தகால அடிமை அரசியலையே தொடர்கின்றனர்;

எனவே இவர்களின் உள்ளார்ந்த  கெட்டித்தன அரசியல், சிலவேளை இவர்;கள் உள்ளுர விரும்பும்  பொன்சேகாவை வெல்லவைக்க உதவலாம். ஆனால் பொன்சேகா வென்றால் அது சிங்கள மக்களுகளின் இனவாத நலனுக்கும், முரண்பட்ட எகாதிபத்திய நலனுக்கு எற்ப ஒரு மாற்றாக அமையும். தமிழ்மக்களுக்கு மகிந்தாவின் பேரினவாத ஆட்சியின் தொடராகத் தொடரும்.

அகிலன்

14.12.2009

 

http://www.psminaiyam.com/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது