Language Selection

மு.மயூரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 இன்றைக்குச சாந்தி சச்சிதானந்தம் தவிசாளராக இருக்கும் விழுது நிறுவனத்தின் வெளியீடான இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அச்சு ஊடகங்களும் வலைப்பதிவாளர்களும் சந்திப்பதற்கென ஒழுங்குசெய்யப்பட்டிருந்த "அச்சுவலைச்சந்திப்பு"க்கு போகக்கிடைத்தது.

எந்தவிதமான நிகழ்ச்சிநிரலும் அழைப்பிதழோடு எமக்கு அறியத்தரப்பட்டிருக்கவில்லை.

இதற்குமுன் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்துமுடிந்த பதிவர் சந்திப்புத் தந்த உற்சாகத்தில் தான் உண்மையிலேயே இந்தச்சந்திப்புக்கு ஆர்வத்துடன் நான் போனேன். பலரும் அப்படித்தான் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அச்சூடகங்களும் ஒலி ஒளி ஊடகங்களும் வலைப்பதிவர்களும் சந்தித்து உரையாடுவதற்கான ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றினை நிகழ்த்தி அதனூடாகப் புரிந்துணர்வையும் நட்புறவுகளையும் உருவாக்கிக்கொள்வதற்கான கூட்டம் ஒன்று தேவை என்பது மறுக்க முடியாதது.


அது மிகச்சிறப்பான எண்ணக்கருவும் கூட.

(நேர்மையீனங்கள் எப்போதும் மிகச்சிறப்பான எண்ணக்கருக்களையே தமது 'போஸ்டர்களில்' எழுதிக்கொள்கின்றன.)

பொதுவாக எல்லாரும் அறிவதும் பொதுவாக அங்கீகாரம் பெற்றிருப்பதும் அச்சு ஊடகக்காரர்களும், அதன் எழுத்தாளர்களும் ஒலி ஒளி ஊடகக்காரர்களும் தான்.

இப்போது புதிய தலைமுறையாய் வேகத்தோடு எழுந்துவரும் இணைய எழுத்தாளர்கள் இந்த அங்கீகாரத்தை வெகுமக்களிடம் இன்னும் பெறவில்லை.

இங்கே மரபான ஊடகங்களுக்கும் மரபான எழுத்தாளர்களுக்கும் இணைய ஊடகங்களையும் எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி இணைய எழுத்தாளர்களுக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக்கொடுப்பதே இந்தச்சந்திப்பின் நோக்கமாக இந்த "போஸ்டரை" பார்த்ததும் விளங்கிக்கொள்ளப்படமுடியும்.

ஆனால் நடந்தது தலைகீழானதே.

அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் நேரிலும் இணையம் மூலமும் உரையாற்ற, பாவப்பட்ட வலைப்பதிவர்கள் தமது பெருமை அறியாது அங்குமிங்கும் நின்றுகொண்டு உரைகேட்டுக்கொண்டிருந்தார்கள்.

தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்ச்சிக்கு நேரமாகி நான் வெளியேறிப்போகும் வரை நடந்தது இதுதான்.

அதற்குப்பிறகும் இதுதான் நடந்ததென்று கேள்விப்பட்டேன்.

மொத்தத்தில் இந்தச்சந்திப்பின் வெளிப்படையாய்த்தெரிந்த தன்மையும் நோக்கமும் என்ன என்றால், வலைப்பதிவர்களைக்கூப்பிட்டு "தண்ணி" கொடுத்துக் குளிர்வித்து ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற மீடியாக்காரர்களும் எழுத்தாளர்களும் விழுது அமைப்பும் தம்மை வலைப்பதிவர்கள் அறியாமலிருந்துவிடும் அபாயத்தை அஞ்சித் தம்மைத்தாமே அறிமுகம் செய்து இணைய எழுத்து உலகத்திலும் தமக்கான அங்கீகாரத்தை கோரிக்கொண்டனர் என்பதுதான்.

மீடியாவிலும் வலைப்பதிவிலுமாக இருக்கும் நண்பர்கள் இதற்காக நன்றாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டனர்.


இந்தச்சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டதன் மற்றுமொரு வெளிப்படையாய்த் தெரியும் முக்கிய நோக்கம் "இருக்கிறம்" சஞ்சிகை தன்னை "இணையப்பிரபலம் பெற்ற" இதழாக மாற்றிக்கொள்ளும் சந்தைப்படுத்தல் தேவை.

அரசியல்வாதிகளும் பெரியபெரிய நிறுவனங்களும் இதே பாணியிலான சந்திப்புக்களை ஒழுங்குசெய்து நிறையத் "தண்ணி" பாய்ச்சி மீடியாக்காரர்களை குளிர்வித்து தமது "மீடியா நலன்களைக்" காப்பாற்றிக்கொள்ளும் உத்தியின் இன்னொருவடிவம்தான் இது.

முன்னே சொன்ன பாணியை நன்கு கற்றறிந்துவைத்திருக்கும் Corporate NGO வும் மீடியாக்காரர்களும் புது வேகத்தோடு சுதந்திரமாக எழுதத்தலைப்படும் வலைப்பதிவர்களைக் குளிர்வித்திருக்கிறார்கள்.

இங்கே வலைப்பதிவர்கள் ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். காலம் வெகு வேகமாக மாறிக்கொண்டு வந்துவிட்டது. இன்றைக்கு இணைய எழுத்தாளர்களுக்கு ஊடக அங்கீகாரம் கிடைப்பதை விட ஊடகக்காரர்களுக்கு இணைய அங்கீகாரம் கிடைப்பதே அவசியமாக ஆகிக்கொண்டு வருகிறது.

இணைய வலையமைப்புக்களில் தம் பெயரைப்பேணிக்கொள்ளாமல் இன்று ஊடகங்கள் நகரங்களில் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவருகிறது. முக்கியமாக அச்சு ஊடகங்கள்.

இதே இருக்கிறம் சஞ்சிகை தன்னை மிகவும் சீரிய வழியில் இணையப்பிரபலம் பெற்ற சஞ்சிகையாக மாற்றிக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருந்தது. இருக்கிறது. அச்சஞ்சிகை மீதான் அந்த நம்பிக்கயே அதன் வளர்ச்சி குறித்த என் இது வரை கால அக்கறைக்குக் காரணமாக அமைந்தது. இந்த விமர்சனம் கூட அந்த நம்பிக்கையைத் தகர்ப்பதற்கானதல்ல.

தன்னை மலினமான வழிகளில் சந்தைப்படுத்தும் உத்திகளிலிருந்து இனியாகிலும் அது காத்துக்கொள்ள வேண்டும்.


இலங்கை வலைப்பதிவர்களான எங்களுக்குப் பெரிய "சந்திப்பு வறுமை" இருக்கிறது. சந்திக்கவும் கலந்துரையாடவும் வாய்ப்பில்லாத வறுமை.

வலைப்பதிவர் சந்திப்பு என்ற மந்திர வார்த்தையால் இலகுவாக எமது கூட்டத்தைச்சேர்த்துவிட முடிகிறது.

விழுது என்கிற பணக்கார NGO இந்தச் சந்திப்பு வறுமையை நன்கு பயன்படுத்திக்கொண்டுள்ளது. தனது அமைப்புக்குணமான "எல்லாவற்றையும் தனக்குள் இழுக்கும்" உத்தியை வலைப்பதிவர்களிடமும் காண்பிக்க முயன்றிருக்கிறது.

ஏதோ தாம் வலைப்பதிவர்களுக்கு நன்மைசெய்து விட்டதாக அவர்கள் பிரசாரம் செய்யலாம். ஆனால் அங்கு நடந்த அனைத்தும் எமக்கு உண்மை சொல்லும்.

அத்தனை வலைப்பதிவாளர்களையும் வைத்துக்கொண்டு சாந்தியும், ஊடக, அச்சு ஜாம்பவான்களும் அரைத்த அரைப்பில் யார் யாரைப் பயன்படுத்தியது என்பது தெளிவாகவே தெரியும்.

இருக்கிறம் பதாகைகள் தொங்கின என்பதற்காக மிக இலகுவாக இருக்கிறம் சஞ்சிகைமீது எல்லாக்குற்றத்தையும் போட்டுவிட்டுப்போவோமானால், அடிப்படையான தவற்றை நாம் தவறவிடும் அபாயம் நேரும்.

வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிவராக சஞ்சித் சிக்கவைக்கப்பட்டுள்ளார். விழுது இங்கே பதில் சொல்லப்போவதில்லை. சொன்னாலும் இந்தச்சந்திப்பு முழுக்க முழுக்க இருக்கிறம் Team ஒழுங்குபடுத்தியது. இதற்கும் விழுதுக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை என்பார்கள்.

இருக்கிறம் மீதான காழ்ப்புணர்வினால் பொறாமையினால் இப்படியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக யாரும் சொல்லவெளிக்கிடலாம். அப்படி ஒரு பொறாமையும் காழ்ப்புணர்வும் இருக்குமென்றால், இந்தக்கூட்டத்துக்கு அவ்வளவு ஆர்வத்தோடு போய் நான் கலந்துகொண்டும் இருக்கத்தேவையில்லை; இருக்கிறத்தில் எழுதுவதை தேவையானதாகக் கருதவும் வேண்டியதில்லை.

அடிப்படைப்பிரச்சினை "விழுது" அமைப்பில் இருக்கிறது. அதன் NGO தன்மையும் Corporate தன்மையும் இயற்கையாய் இணையும் புள்ளியில் இருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டாமல் இன்றைய சந்திப்பினை விமர்சிக்க என்னால் முடியாது.


கூட்டத்தில் இணையம் வழியாக தயானந்தா பேசினார். "என் பேச்சு முடியும் போது அதைக்கேட்கும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோ தெரியாது, அதற்கான ஆயத்தங்களை செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்"

எனக்கிது தசாவதாரம் படத்தில் வின்சென்ட் பூவாரகனைக் கூட்டிக்கொண்டுபோய் பீ. வாசு "உன் தோழர்கள் என்ன செய்கிறார்கள் பார்" என்று தொலைக்காட்சித்திரையில் காட்டும் காட்சியை நினைவுபடுத்தியது.

ஆட்கள் குடித்துவிட்டு சத்தம் போடத்தொடங்கியபோது அது பேசிக்கொண்டிருந்த சுடரொளி வித்தியாதரனுக்கு இடைஞ்சலாய்ப்போய்விட்டது. உடனே சாந்தி வந்து குடித்துவிட்டுச்சத்தம் போடுபவர்களை நோக்கி டீச்சர் கணக்கில் வாயில் சுட்டு விரல் வைத்து உஷ்... எல்லாம் சொன்னபோது படு கேவலமாய் இருந்தது.

நிகழ்ச்சி சீரியசாய் இருக்க வேண்டுமானால் யாராவது மூளையை போதையிலாழ்த்தும் பானங்கள் குடிக்கக்கொடுப்பார்களா? கொடுத்துவிட்டு என்ன உஷ்? உங்கள் கூட்டத்தின் ஒரு பிரதிநிதி பேசும்போது இடைஞ்சல் வந்ததாலா?

இன்றைக்கு ஒரு முழுமதி நாள். பவுத்தத்தின் அடிப்படையில் வந்த ஒரு ஒழுங்காக இன்று மதுபானம் விற்பது தடைசெய்யப்பட்ட நாள். நாட்டின் சட்டம் அது. இன்றைக்கு மதுபானம் வழங்கிக் கொண்டாடும் உங்கள் சட்டமறுப்புப் புரட்சியையோ, மதுபானம் என்றாலே கேவலமாகக்கருதும் மரபுச்சிந்தனைகளைத்தகர்த்தெறியும் உங்கள் கட்டுடைப்பையோ நான் இங்கே பிழை என்று சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.

இந்த மதுபான விருந்தில் நீங்கள் காட்டியுள்ள உங்கள் முகம் எப்படியானது என்பதை மட்டும் சொல்கிறேன்.

இலங்கையில் பெரும்பாலான மின்னியல் ஊடகக்காரர்கள் "பிரபல" மனிதர்கள். பொதுவாகத் தம்மைச்சுற்றி தாமே ஒளிவட்டங்கள் கட்டிக்கொண்டு உலா வருபவர்கள். பெருவணிக நிறுவனங்களுக்கும் காசுக்காரர்களுக்கும் மிகவும் வேண்டியவர்கள். அதனால் இவர்களைப்பிரபலமாயே வைத்திருக்க காசுக்காரர்களும் விரும்புகிறார்கள். இந்தக்கூட்டத்தின் சடங்குகளில் ஒன்றுதான் இந்த மதுவிருந்து. Corporate NGO க்களினது சடங்கும்தான் இது.

இந்தக்கூட்டத்துக்குள் இப்போது புதிதாக வேகத்தோடு எழும் இணையத்தலைமுறையை கூட்டிக்கொண்டு வந்து உங்கள் ஒளிவட்டங்களைக் காட்டி இருக்கிறீர்கள். உங்கள் ஒளிவட்டங்களுக்குப்பின்னால் எடுபட்டு இழுபடுத்திரியும் சில வலைப்பதிவர்களை இதற்கு நன்கு பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

என்ன, மழை வந்து உங்கள் ஆர்ப்பாட்டங்களுக்குக் கொஞ்சமாவது ஆப்பு வைத்துவிட்டது.

இலங்கை வலைப்பதிவர்களே,

உங்களை நசித்து அப்படியே வைத்துக்கொண்டு இந்த பகட்டுக் கலாசாரத்துக்குள் மூழ்கவைத்து நன்கு பயன்படுத்திக்கொள்ளும் போக்கு தொடங்கிவிட்டது.

வலைபதியும் பலருக்கு இது உவப்பானதே. அவர்கள் அவர்கள் விருப்பப்படியே இருக்கட்டும்.
ஏனையவகள், சந்திப்பு வறுமை தொடக்கம், என்னைப்போன்ற ஆர்வக்கோளாறு பிரச்சினை வரையான காரணங்களால் இனியும் ஏமாற்றப்படக்கூடாது.

இன்று உங்களுக்குப்பின்னால், உங்களைத்தேடி வர வேண்டிய நிலையில் ஊடகங்கள் இருக்கின்றன. உங்கள் பெருமையை மறுதலையாக விளங்கிக்கொள்ள வேண்டாம்.


நீங்கள் ஒழுங்குபடுத்திய முதல் பதிவர்சந்திப்பு ஒரு சாதனை. பெருவெற்றி. இப்போது அந்த வெற்றி அடிவாங்கி விழுது அலுவலக முன்றலில் அவமானப்பட்டுக்கிடக்கிறது.

இணையத்தமிழ் சூழலில் இணைந்திருக்கிற நாங்கள், பயனுள்ள வழிகளில் அடுத்தடுத்து என்ன செய்ய முடியும் என்பது பற்றி, எப்படி உழைப்பைச்செலுத்த முடியும் என்பதுபற்றி சிந்திக்க வேண்டும்.

மற்றவருக்குப்பயன்படும்படி ஏதாவது கூடிச்செய்ய வெளிக்கிட வேண்டும். அவ்வாறு கூடிச்செய்யும்போது ஆயிரம் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்குமான அவசியம் வரும்.

மறுபடி மறுபடி இப்படிக்கூடிச் 'சில' மீடியாப் பன்னாடைகளின் ஒளிவட்டங்களுக்கு ஆலவட்டம் பிடித்து அண்ணாந்து பார்த்துக்கொண்டு பம்பலடித்து தண்ணியடிப்பதை மட்டும்தான் நாம் செய்து உய்யப்போகிறோம் என்பவர்கள் இருக்க, பயனுள்ள வழியில் கூட்டுழைப்பினைச்செலுத்தி பயனுள்ள வேலைகளை இணையத்தில் செய்கிற தேவைக்காக கூடிக்கலந்துரையாடும் ஆரோக்கியமான வலைப்பதிவர் குழுவொன்று மேலெழுந்து வரத்தான் போகிறது.

அந்தச் சமூக அக்கறை கொண்ட வலைப்பதிவர்களை வாழ்த்தி நிற்கிறேன்.



==வேறு==

(கொஞ்சம் திறந்த மனத்தோடு யோசிப்போமே என்று NGO க்களின் நல்ல பக்கங்கள் பற்றி சிந்திக்கத்தலைப்படும் போதெல்லாம் ஏதாவதொரு NGO என்னை அழைத்து, அப்படியல்ல மகனே சும்மா ஏமாறாதே, நாங்கள் இப்படித்தான் இருப்போம்; எம்மால் இப்படித்தான் இருக்கமுடியும் என்று போதித்து அனுப்புகிறது)

நேற்றிரவு போட்ட என்னுடைய மூன்று tweets:

இருக்கிறம் சஞ்சிகையும் சாந்தி சச்சிதானந்தமும் நடத்திய இன்றைய #அச்சுவலைச்சந்திப்பு குறித்து எழுதும் நோக்கம் இதுவரை இல்லை

 

#அச்சுவலைச்சந்திப்பு பற்றி எழுதத்தயங்குவதற்கு தனிப்பட்ட நட்புக்களும், அதற்கான சுயதணிக்கைகளும் காரணமாக அமைகின்றதை நினைத்து வெட்கப்படுகிறேன்

 

எப்படி இவ்வளவு பலவீனனாய் ஆகிப்போனேன்? சரியெனப்பட்டதை எந்த உறவையும் கணக்கெடுக்காமல் துணிந்து உரக்கச்சொல்லும் நேர்மை நாளை காலை கிட்டுமா?

http://mauran.blogspot.com/2009/11/ngo.html

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது