Language Selection

மு.மயூரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

Facebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.


ஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வேறு தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக் கிடைக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், மற்றவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் சிறு சிறு சுவாரசியங்களை ஏற்படுத்தல், பலரோடும் எம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளல், எமது இரசனைகளைத் திறமைகளை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் போன்றவற்றுக்கான இடமாகச் சமூக வலையமைப்புத்தளங்கள் காணப்படுகின்றமை இவை மீதான தீராத ஆர்வத்துக்கு காரணமாகின்றன.

வலைப்பதிவுகளில், Facebook இல் எல்லாம் இந்த "சமூக வலையமைப்பு அனுபவ"மும் எம்மை ஈர்த்து வைத்திருக்கும் முதன்மைக்காரணி.

மனமகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பயன்மிக்க "சமூக வலையமைப்பு அனுபவம்" விக்கிபீடியாவிலும் கிடைக்கிறது.

இதனை அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு அது புரியும்.


விக்கிபீடியாவின் செயற்பாடுகளின் அடிப்படையாக இழையோடும் சனநாயகத்தன்மையும், மற்றவரை மதிக்கும் பண்பும் இந்த விக்கிபீடியாச் சமூக வலையமைப்புக்கு மனமகிழ்ச்சிதரும் தன்மையை வழங்குகிறது.

விக்கிபீடியாவின் பயனர் பேச்சுப்பக்கங்களிலும் ஒவ்வொரு கட்டுரைகளின் உரையாடற்பக்கங்களிலும் ஆலமரத்தடியிலும் விக்கிபீடியர் சமூகம் உரையாடுகிறது.

வெறும் உரையாடல் அல்ல, கூடித்தொழில் செய்துகொண்டு செய்யும் ஆரோக்கியமான பணியொன்றைச்சார்ந்த உரையாடல் அது.

முதற் பயனர் பெயரை உருவாக்கி முதற்கட்டுரை போட்ட உடனே பலகாரத்தட்டுடன் உங்களை வரவேற்பதில் அந்த "சமூக வலையமைப்பு அனுபவம்" தொடங்குகிறது.

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் உங்கள் ஆர்வத்துக்குரிய பரப்பை கட்டாயம் இனம் காட்டும். அந்தப்பரப்பில் ஆர்வமுள்ள மற்றய விக்கிபீடியர்கள் உங்களுடன் தொடர்பாடத்தொடங்குவர். படிப்படியாக அது ஏனைய விக்கிபீடியர்களுடனான தொடர்பாடலாய் விரிந்து புதிய நண்பர்களும் பயன்மிக்க தொடர்புகளுமாய் வியாபகம் கொள்ளும்.

உங்கள் பயனர் பக்கம் உங்கள் ரசனைப்படி நீங்களே வடிவமைத்துக்கொள்ளத்தக்க ஓர் அருமையான profile page. அதன் உரையாடற்பக்கம் நீங்கள் அன்றாடம் ஆர்வத்துடன் பார்க்கத்தூண்டும் மற்றவர்கள் உங்களோடு உரையாடும் "Wall".


அண்மைய மாற்றங்கள் பக்கம் ஒவ்வொரு மணித்தியாலமும் உங்களைத்தன்பக்கம் ஈர்த்துப் பார்க்கத்தூண்டும் சுவாரசியமான Social News Feed.

பங்களிக்கப் பங்களிக்கத்தான் நீங்கள் அந்த அனுபவத்தின் ஆழத்தை நோக்கிச் செல்வீர்கள்.

ஏனைய சமூக வலையமைப்புத் தளங்களில் உங்கள் சொந்த விபரங்களை, ரசனைகளை காட்சிப்படுத்தி உரையாடுவீர்கள்; விக்கிபீடியாவில் உங்களால் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியக் கட்டுரை ஒன்றை முன்னிறுத்தி உரையாடுவீர்கள்.

இந்த விக்கிப்பீடியா இணையச்சமூக வலையமைப்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் நண்பர்கள் இணையத்தில் உறுதியான பணிகளைச் செய்யும் ஆர்வத்துடன் வந்தவர்களாக இருப்பர். 

நண்பர்களுடனான அரட்டை, பொழுதுபோக்கினூடு நீங்கள் நின்று நிலைக்கக்கூடிய சமூகப்பணி ஒன்றையும் செய்துகொண்டு செல்வதே இங்கே இருக்கும் முதன்மை வேறுபாடு.

உங்கள் கட்டுரை மற்றவர்களால் திருத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுச் செல்வதையும், மற்றவர்களுடைய கட்டுரைகளை நீங்கள் திருத்தி, மேலதிக தகவல்களைத் தேடிச்சேர்த்து அக்கட்டுரை வளர்ந்து செல்வதையும் பார்ப்பது இனிய அனுபவம். இதனை Facebook Farming இற்கு ஒப்பிடலாம்.

இணையத்தில் மட்டுமல்லாது இந்தச்ச்மூக வலையமைப்பு தரையிலும் விரியும் இயல்புள்ளது.

விக்கிபீடியா அறிமுகக்கூட்டங்களை, நிகழ்ச்சிகளைச் சிறியளவில் நடத்துவது.
விக்கிப் பட்டறைகளைச் சேர்ந்து நடத்துவது,

விக்கிபீடியர் சந்திப்புக்களைச் சிறு தேனீர் விருந்துடன் ஒழுங்கமைப்பது,
மற்றவர்களுக்கு விக்கிக்கு பங்களிக்கும் வாய்ப்புக்களை விளக்குவது என்று தரையிலும் மகிழ்ச்சியுடன், மதிப்புடன் சமூகத்தின் வலையமைப்பில் இணையும் வாய்ப்பினையும் விக்கிபீடியா வழங்குகிறது.

பல்வேறு சமூக வலையமைப்புத்தளங்களிலும் மற்றவர்களோடு கலந்து இன்புறுபவர்கள், மாறுபட்ட, வேறான அனுபத்தைத்தரக்கூடிய விக்கிபீடியா எனும் சமூக வலையமைப்பிலும் இணைந்து பாருங்கள்.

 

http://tamilwikipedia.blogspot.com/2009/10/blog-post_1539.html

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது