Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“நான் கொண்டுவந்த அற்புதம் இந்த குரான் தான்” உங்களால் ஏன் எந்த அற்புதத்தையும் செய்து காட்ட முடியவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முகம்மது அளித்த பதில்தான் இது. ஏசு தொழு நோயாளிகளை சீராக்கியிருக்கிறார், மோஸஸ் யூதர்களை செங்கடலை பிளந்து அழைத்துச் சென்றிருக்கிறார்,

அதற்கு ஈடாக முகம்மதுவின் அற்புதம் குரான். அது எப்படி அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்கும் வேதமாக நம்பப்படும் ஒரு நூல் எப்படி அற்புதமாக முடியும்? அற்புதம் தான். ஏனென்றால் இதில் யாரும் எப்பொழுதும் ஒரு முரண்பாட்டையேனும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் முஸ்லீம்களின் நிலைப்பாடு. மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,

 

“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.

 

“இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது” 41:42.

 

தன்னால் முகம்மதுக்கு வழங்கப்பட்டது தான் குரான், தன்னையன்றி வேறு யாராலும் குரானை வழங்கியிருக்க முடியாது அதில் முரண்பாடோ, தவறுகளோ இல்லாதிருப்பதே அதற்கு சாட்சி என்பது தான் அல்லாவின் கூற்று. இஸ்லாத்தின் மொத்த நம்பிக்கைகளின் இருத்தலுக்கு குரான் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை மிக இன்றியமையாதது. குரானின் மீது கொஞ்சம் ஐயம் வந்துவிட்டாலும் அது இஸ்லாத்தையே இற்றுப்போகச்செய்துவிடும் அதனால் தான் குரான் தன்னால் வழங்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்துவது அல்லாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா? அது கூறும் பொருள் போலவா? அதன் ஓசை நயம் போலவா? அதன் வடிவமைப்பைப் போலவா? அல்லது இவை அனைத்தையும் போலவா? ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு அத்தியாயத்தையோ வசனத்தையோ கொண்டுவர முடியுமா என்று சவால்விடும் அல்லாதான், அப்படி யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக பயங்காட்டி எச்சரிக்கவும் செய்கிறான்.

 

“நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்” 22:51

 

ஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா? என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா? என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?

 

சாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்க்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,

 

“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”

 

இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,

 

“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”

 

அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.

 

குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”

 

இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,

 

“படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா? அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்”

 

முதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா? எது முதலில் படைக்கப்பட்டது(!) பூமியா? வானமா?

 

முகம்மதுவின் காலத்திய அரபிகள் இலக்கிய நயத்துடன் கவிதை புனைவதில் வல்லவர்கள். அவர்களின் கவிதைக்கு பதில் சொல்லும் முகமாக சில வசனங்களும் குரானில் இடம் பெற்றுள்ளன. அல்லாவின் வார்த்தைகள் வானவர்கள் (அல்லாவின் சிறப்பு பணியாளர்கள்) மூலம் முகம்மதுவுக்கு இறங்குகின்றன என பரவிய செய்தியை கேட்டு ‘எழுத்தறிவற்ற முகம்மதுவின் மூலமா அல்லா தன் வசனங்களை இறக்குகிறான், அவர் பொய் சொல்கிறார். தானே சொல்லிக்கொண்டு அல்லாவிடமிருந்து என்று கதையளக்கிறார்’ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து தான் குரான் கேட்கிறது ‘நாம் அனுப்பாமல் முகம்மது தானே இட்டுக்கட்டிக்கொண்டார் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால் இதேபோல் ஒன்றை உருவாக்கிக்காட்டுங்கள்’ என்று (2:23; 10:38; 17:88; 28:49; 52:34; 11:13). புனை செய்யுளில் கரை கண்டிருந்த அன்றைய குரைஷி குல அரபிகள் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது ஐயத்திற்கிடமானதாகவே இருக்கிறது. குரானுக்கு பகரமாக யாரேனும் கவிதை புனைந்தார்களா? இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா? என்பது குறித்த தகவல் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. (இது குறித்த தகவல் யரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்) ஆனால் இன்றுவரை (கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக) எதிர்கொள்ளப்படாத சவால் இது என்று மதவாதிகள் முழங்கிவருகிறார்கள்.

 

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

 

இது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள்? எந்த விதத்தில் மறுப்பீர்கள்? இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்?


 

கடவுள் என்ற ஒன்று, குரான் கூறும் தகுதிகளோடு இருக்கமுடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது. நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடிந்த கருத்து. கருத்து என்பதற்கும் இயங்கியலில் வரையரைகள் உண்டு. அனால் அது மெய்யாக இருப்பதாக, பிரபஞ்சத்தை ஆக்கி ஆள்வதாக எல்லாவற்றையும் விட அதிகமான ஏற்பை வழங்கி, அதன்படி முடிந்தவரை ஒழுகிக்கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களே மேலே கூறப்பட்ட முரண்பாட்டுக்கும், மாற்று வசனத்திற்கும் அறிவு நேர்மையுடன் பதிலை சிந்திப்பீர். இதில் முரண்பாடு இல்லை என்பது அனைத்தும் அறிந்த அல்லாவின் கூற்றுதான் என்றால் இந்த முரண்பாடு எப்படி வந்தது? அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும்? மேலே கூறப்பட்ட குறள் குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன்? எப்படி? நீங்கள் விளங்கவேண்டும் அல்லது விளக்கவேண்டும். உங்களுக்குள் இதற்கு நீங்கள் பதில் தேடியாக வேண்டும். பதிலையும் தேடமாட்டேன் அதே நேரம் இவைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று நீங்கள் கூறத்துணிந்தால் உங்களிடம் இருப்பது மூட நம்பிக்கை என்றாகும் அல்லது அசைக்கமுடியாத உங்கள் நம்பிக்கை அசையத்தொடங்கியிருக்கிறது என்றாகும். இரண்டில் எது சரி?

http://senkodi.wordpress.com/2009/10/07/குரானின்-சவாலுக்கு-பதில்/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது