Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஓரிரு வாரங்களாகவே சீனா இந்தியப்பகுதிகளை ஆக்கிரமிப்பதாகவும், உள் நுழைந்து சிவப்பு மையில் அடையாளமிட்டதாகவும், காஷ்மீர் மட்டுமின்றி, உத்ராஞ்சல், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

பாதுகாப்புத்துறை இதை கண்டித்து அரசிடம் அறிக்கை கொடுத்திருக்க, வெளியுறவுத்துறையோ இது ஒன்றும் கவலைப்படத்தக்க நடவடிக்கையில்லை, நாலாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரமுள்ள எல்லையில் அங்கும் இங்கும் வந்து போவது பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டிய விசமல்ல என்று தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் இரண்டு பெரும் துறைகளுக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. இதே நேரம் சீனாவும் இந்த ஊடுருவல் செய்திகளை மறுத்திருக்கிறது. ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகளையும், அதிகாரியை அனுப்பி விளக்கம் கேட்டிருப்பதையும், பிரமரின் பேச்சையும் வைத்துப்பார்க்கும் போது ஊடுருவும் வேலை நடந்திருப்பதாகவே அனுமானிக்க முடிகிறது. வழக்கம்போல எந்த வாய்ப்பையும் பயன்படுத்த தயங்காதவர்கள் இந்த வாய்ப்பையும் கம்யூனிசத்தை எதிர்க்க பயன்படுத்தியிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் இந்தியாவைவிட சீனத்தையே நேசிப்பதாக திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். தாங்களால் ஆராதிக்கப்படும் சீனாவின் இச்செயல் குறித்து ஒன்றும் கூற முடியாமல் போலிகள் அமைதிகாக்க; இதைப்பேசும் அவசியம் எழுந்திருக்கிறது.

 

 

தேசபக்தி என்பது ஆளும் வர்க்கங்கள் தங்கள் வசதிக்காக பயன்படுத்தும் செரிமான மாத்திரை என்பதை முதலில் புறிந்து கொள்ளவேண்டும். நாடு முழுவதும் உழைக்கும் மக்களிடம் கடைசியாக ஒட்டிக்கொண்டிருக்கும் துண்டு நிலங்களையும் ஆக்கிரமித்து முதலாளிகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் அரசை எதிர்த்து எந்த விவாதத்தையும் கிளப்ப கவனமாக மறுக்கும் ஊடகங்கள் ஆளில்லாத மலை முகடுகளை அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக பீதி கிளப்பி வருகின்றன. காஷ்மீரிலும் மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்தின் கொடூர அடக்குமுறைகளால் இந்தியப்பகுதிகளாக தக்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் தாங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறார்கள். இதை பிறந்த நாடு என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிப்பவர்களால் எந்த அடிப்படையில் சீனாவை எதிர்க்க முடியும்? நம்முடையா நாடா? எதிரான நாடா என்ற அடிப்படையில் ஆதரிக்கவும் எதிர்க்கவும் செய்வது நேர்மையான செயலாக இருக்க முடியாது. நோக்கத்தையும், காரணங்களையும் ஆய்ந்து சரியானதை ஆதரிப்பதும் தவறானதை எதிர்ப்பதுமே நேர்மையானதாக இருக்கும். அந்த வகையில் சீனாவில் இந்த ஆக்கிரமிப்பிற்கான காரணங்களும் நோக்கமும் என்ன?

 

விவசாய நாடான சீனாவில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு தொழிற்துறை மட்டுமே ஊக்குவிக்கப்பட்டு ஏற்றுமதியை மட்டுமே சார்ந்து நிற்குமாறு பொருளாதாரம் மாற்றப்பட்டது. இந்நிலையில் உலக பொருளாதார நெருக்கடியினால் சந்தையில் போடப்பட்டிருந்த அந்நிய முதலீடு அதிக அளவில் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட மந்த நிலையினாலும் விவசாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதினால் விவசாயத்தொழிலாளர்களின் போராட்டங்களாலும் திணறிவரும் சீன அரசு மக்களை திசை திருப்ப ஆக்கிரமிப்பு போன்ற குறுகிய தேசபக்க்தி வெறியூட்டும் செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது.

 

நெருங்கிவரும் இந்திய அமெரிக்க உறவும், அணு ஆற்றல் ஒப்பந்தமும் ஆசியப்பகுதியில் தனக்கு போட்டியாக இந்தியாவை அமெரிக்க வளர்த்து வருவதாக நினைக்கிறது சீனா. இந்தியாவும் சீனவுடன் ஆசிய ஆதிக்கப்போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்தியவுக்கு எதிராக சீனாவும் சில நிலைபாடுகளை எடுத்துவருகிறது. பாகிஸ்தனின் குவாடர் துரைமுகத்தை நவீனப்படுத்த ஒப்பந்தம் செய்து புதுப்பித்துவருகிறது. பங்களாதேஷில் சிட்டகாங் துரைமுகத்தை நவீனப்படுத்தவும் அணு உலை அமைத்துக்கொடுக்கவும் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுபோல் இலங்கையிலும் அம்பந்தோட்டை துறைமுகத்தை நவீனப்படுத்தி வருகிறது. இவைகளெல்லாம் அமெரிக்காவின் புதிய கைக்கூலியான இந்தியாவை எதிர்கொள்ள சீனா செய்து வருபவைகள். பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரை அண்மையில் தனது புதிய மாநிலமாக அறிவித்திருப்பதையும் இதோடு இணைத்துப்பார்க்கவேண்டும். இந்தியாவும் இலங்கையை தனது கைக்குள் வைத்திருப்பது, திபெத்தை அங்கீகரித்திருப்பது, சீன எல்லையோரங்களில் சாலை கட்டுமானங்களை ஏற்படுத்திவருவது, நேபாளத்தின் ஆட்சியை புரட்டி சீனாவுடன் ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தை தடுத்தது என சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆக இரண்டு நாடுகளும் ஈடுபட்டிருப்பது அதன் மக்களுக்கு எந்தப்பயனையும் ஏற்படுத்தாத ஆதிக்கப்போட்டி.

விவசாயிகளின் தற்கொலைகளும், ஏறிவரும் விலைவாசிகளும் மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்க இவைகளை மீறி நிதிநிலை அறிக்கையில் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிக்கான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் வேறு சில ஐரோப்பிய நடுகளிடமும் ஆயுதம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், அவைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு சீன இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறது, இந்தியாவைச்சுற்றியுள்ள நாடுகளெல்லாம் இந்தியாவுக்கு எதிரி நாடாக இருக்கின்றன என்பன போன்ற கருத்தாக்கங்கள் மக்களிடம் பரவுவது இந்திய அரசுக்கும் தேவையாக இருக்கிறது.

 

சீனா ஒன்றும் கம்யூனிச நாடல்ல, அதுவும் ஒரு முதலாளித்துவத்தை ஆராதிக்கும் நாடுதான். “சீனாவே கம்யூனிசக்கொள்கைகளை விட்டுவிட்டது” என்று மேற்கோள் காட்டுவதன் மூலம் இங்குள்ள அறிவுஜீவிகளும் அதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கம்யூனிசத்தை தாக்க வேண்டுமென்றால் சீனா கம்யூனிச நாடாகிவிடும். எனவே காரணங்களை ஒதுக்கிவிட்டு செயலை மட்டும் வைத்து சீனாவை எதிர்க்கவேண்டும் என்றால் அதற்கு புரட்சிகர இடது சாரி இயக்கங்கள் தயாரில்லை. வீணான ஆதிக்கப்போட்டியில் ஈடு பட்டு மக்களை வதைக்கும் இரு நாடுகளையும் கண்டிக்கிறோம். இந்தியாவைப்போலவே ஊட்டச்சத்தின்றி வாடும் சீனக்குழந்தைகளுக்காகவும், வேலையின்றி வாழ வழியுமின்றி வாடும் மக்களுக்காகவும், மக்களை ஒட்டச்சுரண்டும் நிதிக்கொள்கைகளை எதிர்த்தும் போராடவேண்டிய கடமை இரு நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கும் இருக்கிறது. மாறாக ஆதிக்கப்போட்டிக்கு வால் பிடிப்பது கம்யூனிஸ்டுகளின் வேலையில்லை. அப்படிச்செய்தால் அது நம் விரலைக்கொண்டே நம் கண்களை குத்திக்கொள்வது போலாகும்.

 

http://senkodi.wordpress.com/2009/09/19/சீன-ஆக்கிரமிப்பு-கம்யூன/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது