Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடப்பு ஆண்டில் பருவ மழை சரியாக பெய்யாத்ததால் அரிசி விளைச்சல் ஒரு கோடி டன் வரை குறையும் என வேளாண் அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து எந்த ஒரு நாட்டுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்படாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 தினந்தோரும் நாளிதழ்களில் வாசிக்கையில் கண்ணில் பட்டு கடந்து போகும் இந்த செய்திகளின் வீச்சும் தாக்கமும் மக்களிடம் எந்த ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாத இந்தச்செய்தி சிக்கல் மிகுந்த நூல் கண்டின் ஒரு முனை என்பதும் மறு முனை அவர்களின் கழுத்தில் சுருக்கிடப்பட்டிருப்பதும் அவர்களுக்கு தெரியவில்லை

 

காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். தமிழக அரசு கன்னடம் தண்ணீர் விடவில்லை என்கிறது, கன்னடமோ நடுவர் மன்ற தீர்ப்பின் படி தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம் என்கிறது. இல்லை மழை பெய்யும் போது உபரியாக வெளியேறும் நீரை தீர்ப்பின் படி விட்டதாய் கணக்கிடுகிறார்கள் என்று தமிழக அதிகாரிகள். இப்படியே பாலாறு, முல்லைப்பெரியாறு என்று ஆற்றில் வரவேண்டிய நீர் விவசாயிகளின் கண்களில் வழிந்துகொண்டிருக்கிறது.

காவிரி

பருவமழை பொய்த்துவிட்டது இயற்கையின் பிழை என்கிறார்கள், ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் முப்பது லட்சம் ஏக்கர் பரப்புள்ள காடுகள் மாயமாய மறைந்துவிட்டது யார் பிழை? அதனால் தானே மழை பொய்த்துவிட்டது. ரியல் எஸ்டேட் முதலைகளை சுதந்திரமாய் வாலை சுழற்றவிட்டது யார் பிழை? அதனால் தானே ஆறுகள் ஏரிகள் எல்லாம் மனைகளாக்கப்பட்டு விற்க்கப்பட, பெய்யும் மழை நீர் சேகரமாகாமல் குடியிருப்புகளில் தேங்குவதும் கடலில் கலந்து வீணாவதும் ஏற்படுகிறது. காடுகளை ஏப்பம் விட அனுமதித்த அரசு இயற்கையின் பிழையால் உற்பத்தி குறைவு என்கிறது. அதே அரசு தான் ஊக வணிகம் முதல் அனைத்தையும் சூதாடிகளுக்கு திறந்துவிட்டு பதுக்கல்காரர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது. அரிசி பருப்பு முதலான தானியங்கள் இப்போதே மூச்சை விரட்டும் நிலையில் இருக்க, நடப்பு ஆண்டில் ஒரு கோடி டன் வரை உற்பத்தி குறையும் என்று அறிவித்ததும் பதுக்கல்கள் தொடங்கிவிட்டன. விலையும் காற்றிலேறி விண்ணுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்படி ஏற்படுத்தப்படும் செயற்கையான தட்டுப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் உணவுப்பஞ்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஐநா அவையே அறிவித்திருக்கிறது.

 

கெயிட்டி எனும் நாட்டில் ஒரு வகை களிமண்ணையே ரொட்டியாக சுட்டு சாப்பிடுகிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருங்கலவரங்கள் உணவுக்காக வெடித்திருக்கின்றன. இந்தோனேசியாவில் தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைப்போல் உணவு தானிய வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில்லை என அறிவித்திருக்கிறது (பஞ்சத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில் நைஜீரியாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்த வகையில் 2500 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது வேறு விசயம்) இப்படி செயற்கையாக ஏற்படுத்தப்படும் உணவுப்பபஞ்சத்திற்கு மழை பொய்த்தது மட்டும் தான் காரணமா? மழை பொய்க்கவும் இல்லை மழையளவு குறைந்திருக்கிறது அவ்வளவுதான். இதற்க்கான மெய்யான காரங்களை அறியும் போதுதான் நம் ஒட்டிய வயிறுகளில் அடிப்பதை தாளமாக ரசிக்கும் கூட்டத்தை அடையாளம் காண முடியும்.

இதில் முதலாவது எரி எண்ணெய்க்கு(பெட்ரோல், டீசல்) மாற்றாக உருவாக்கப்படும் உயிரி எண்ணெய் எனப்படும் பயோடீசல். இந்த உயிரி எண்ணெய் தயாரிப்புக்கு உணவு தானியங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் உணவுதானியங்கள் மொத்தமாக உயிரி எண்ணெய்க்காக கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை மூன்றாம் உலக நாடுகளில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளை உயிரி எண்ணெய்க்கான தானியங்களை மட்டுமே பயிர் செய்யுமாறு நிர்ப்பந்திக்கவும் செய்கின்றனர். இதை செயல்படுத்துவதற்கு ஏற்றதான ‘காட்’ போன்ற ஒப்பந்தங்களை அரசு செயல் படுத்துவதைத்தான் முன்னேற்றம், நாடு முன்னேறுகிறது என்ற பெயரில் ஏய்க்கிறார்கள்.

அடுத்தது முன்பேர வணிகம் என்ற பெயரில் நடக்கும் சூதாட்டம். அமெரிக்கச்சூதாடிகளின் மோசடிகள் சீட்டுக்கட்டு கோபுரம்போல் அதன் பொருளாதாரத்தை சரியவைத்து, உலகெங்கும் நிதி நெருக்கடி சுழன்றடித்துக்கொண்டிருக்கிறது. இதில் இழந்தவர்களின் கதைகளைத்தாம் நாம் அவ்வப்போது கேட்டு வருகிறோம் ஊடகங்கள் வாயிலாக, ஆனால் இந்த நிதி நெருக்கடியை பயன்படுத்தி கோடிகோடியாய் லாபமடைந்தவர்களும் உண்டு. அவர்களால் தாங்கள் பண‌த்தை தொட‌ர்ந்து டாலராகவே வைத்திருக்க முடியாது. ஏனென்றால் சரிந்து கொண்டிருக்கும் டாலரின் மதிப்பால் அவர்களும் நிதினெருக்கடியில் சிக்கிக்கொள்வார்கள். அதனால் அவர்கள் அதை பங்குச்சந்தைகளில் முதலிடுகிறார்கள். தொடர்ந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களில் எதில் முதலீடு செய்வது? நிரந்தர மதிப்பைக்கொண்டிருக்கும் தங்கத்தில் முதலீடுகிறார்கள் சிலர் (இதனால் தான் தங்கத்தின் விலை எகிறுகிறது) ஏனையோர் முன்பேர வர்த்தகத்திற்கு தாவுகிறார்கள். இதன்படி நாளைய விலையை இன்றே கணித்து வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஒரு டன் அரிசி ஆறு மாதம் கழித்து இன்னவிலையில் விற்கும் என்று கணித்து ஆயிரம் டன் அரிசி வாங்குவதாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள் என்று கொள்வோம். நடப்பு விலையை விட அதிகம் வைத்து ஒப்பந்தம் செய்ததால் விற்றவருக்கு லாபம். ஆனால் ஆறு மாதம் கழித்து குறித்த விலையை விட குறந்திருந்தால் வாங்கியவருக்கு நட்டமல்லவா? இங்கு தான் அதன் கோரமே வெளிப்படுகிறது. குறித்த விலையை விட சந்தையில் அதிக விலை இருக்கும் படி வாங்கியவர் பார்த்துக்கொள்வார். எப்படி விலையை அதிகம் இருக்கும்படி செய்வது? தட்டுப்பாடு. உணவுதானியங்களை பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம். விற்றவருக்கும் வாங்கியவருக்கும் கொள்ளை லாபம். விளைவித்த விவசாயிக்கும், வாங்கி உண்ணும் மக்களுக்கும் பட்டை நாமம்.

 

மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த முன்பேர வணிகத்தை அனுமதித்திருக்கும் அரசுதான் பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போகிறதாம். உலகெங்கும் அரசுகளுக்கு எதிராய் கலகங்கள் வெடித்துப்பரவுகின்றன. குபேரபுரி(!) அமெரிக்காவில் இலவச ரொட்டி கொடுக்கிறார்கள். இங்கும் வரும் காலங்களில் ஊருக்கு ஊர் கஞ்சித்தொட்டி திறக்கலாம். அது நமக்கு வழக்கமானது தானே, ஆனால் கஞ்சித்தொட்டிகளுக்ளுக்கும் அரிசி கிடைக்காதபோது……

 

http://senkodi.wordpress.com/2009/08/25/பஞ்சத்தின்-வயிற்றை-மழை-வ/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது