Language Selection

சமர் - 16 : 08 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகர் 73ல் “உலர்ந்த நம்பிக்கை”  எனத் தலையிட்டு ஓர் ஆசிரியர் தலையங்கத்தை எழுதி, தனது போலி முற்போக்குக்கு ஒரேயாடியாக விடைகொடுத்து விட்டனர்.

இவ் ஆசிரியர் தலையங்கத்தில் “உலர்ந்து போன நம்பிக்கை” என ஒப்பாரி வைக்க முற்பட்டவர்கள், அது ஏற்பட்டது ஏதோ இலங்கையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே எனக் கனவு கண்டவர்களாக கம்யூனிசக் கருத்துக்கள் மீது ஏறிப் பாய்ந்துள்ளனர் சரிநிகர் ஆசிரியர்களுக்கு “உலர்ந்து போன நம்பிக்கையின்“ விளக்கத்தில் கூறும் வார்த்தைகளைப் பார்ப்போம்.

 

“யுத்தத்தின் நோக்கம் யுத்தத்தை ஒழிப்பது தான் என்பது மாஒ முதல் , பாரிஸ் நகரத்துச் சோபோர்ன் பல்கலைக்கழகத்தில் புத்திஜீவத்துவம் பெற்ற பொல்பொட் வரை ஒரு தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கின்றது. ஜனாதிபதி சந்திரிக்கா சுற்றி வளைத்து அந்த முடிவுக்கத் தான் வந்திருக்கிறார். … எவ்வகையான குரூரமான யுத்தமும் கூடப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தான் முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வரலாற்று யதார்த்தம் மறுக்கப்பட்டு யுத்தமே சாத்தியம்….”

 

எனச் சரிநிகர் ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது. ஈழப்பேராட்ட வரலாற்றில் தத்துவார்த்த ரீதியில் தங்களை முற்போக்கு என அழைக்கும் போலிகளில் , இது மிகவும் மோசமான ஒரு மக்கள் விரோதக் கருத்தே ஆகும். இதில் சரிநிகர் ஆசிரியர் குழு பொய்யர்களாக , திரிபுவாதிகளாக , குத்துக்கரணம் அடிப்பவர்களாக , இன்றைய உலக ஒழுங்கின் சிறந்த பிரதிநிதிகளாக உள்ளனர். இதை பாரிஸ் பல்கலைக்கழகத்துடன் முடிச்சுப் போட்டு. நையாண்டி ஊடாக கேலி செய்தும் தமது போலித்தனத்தைத் தோலுரித்துள்ளதுள்ளனர். இக்கருத்துரையின் நோக்கங்களைப் பார்ப்போம்.

 

1. சிங்கள பெரும் தேசிய இனவெறியை பாதுகாத்தல்


2. 1935 ல் அமெரிக்காவில் பிரௌடர் 1950 களில் குருசேவ் முன்னயதை “ சமாதான வாழ்வு” என்று மீண்டும் சரிநிகர் திணிக்க முயற்சிக்கின்றனர்.

 
3. பொல்பொட்டை நக்கலடித்து கேலி செய்து கூட்டி வருவதன் மூலம் பொல்பொட் விட்ட சில தவறுகளை சாதகமாகப் பயன்படுத்தி மாஓ, பொல் பொட்டுக்கும் சேறடிக்க முயல்வதாகும்.


4. 1950 களுக்குப் பிந்திய உலகில் மாஓவின் சீனாவும் அதன் புரட்சிகர அரசியலையும் சேரடிக்க முயல்வதாகும்.


5. டெங் திரிபு அரங்கு ஏறிய பின்பு உலகில் மா ஓவின் வழியே புரட்சிகர வழியாக உள்ளதால் இதைக் கொச்சைப்படுத்துதல்.


6. இன்றைய உலக ஒழுங்கை அதாவது அமெரிக்காவின் தலைமையை அங்கீகரிக்கக் கோருதல்.


7. மக்கள் எல்லாவித உரிமைகளையும் போராடியே பெற முடியும் என்ற கூற்றை மறுதலித்தல்.

 

இது போன்ற அநேக விடயத்தை இக் கூற்று பிரதிபலிக்கின்றது. இதைச் செய்ய முதல் யுத்தத்தின் நோக்கம் யுத்தத்தை மட்டுமே உள்ளடக்கியது. அதாவது யுத்தத்திற்கு நோக்கம் யுத்தத்தை ஒழிப்பது என்ற கூற்றை திரித்துள்ளனர். உண்மையில் இதன் சர்வவியலான உண்மை புரட்சிகர யுத்தத்தை மட்டுமே உள்ளடக்கியது. அதாவது யுத்தத்திற்குக் காரணங்கள் எல்லாம் வர்க்க முரண்பாட்டில் தான் உருவாகின்றன. வர்க்கம் இல்லாத போது யுத்தம் இல்லாமற் போய் விடும். இது தான் புரட்சிகர யுத்தத்தின் நோக்கம் , யுத்தத்தை இல்லாமல் ஒழிப்பதாகும்.

 

இத்துடன் இக் கூற்றை மா ஓவின் பெயரால் இனம் காட்டியதில் மாபெரும் மோசடி, இக்கூற்றை மார்க்ஸ், எங்கல்ஸ் மிகச் சிறந்த முறையில் ஆய்வு செய்து முன்வைத்தனர். இதை லெனின், ஸ்டாலின் வளர்தெடுத்தனர். பின் மாஓ தொடர்ந்தார். இன்று புரட்சிகர கட்சிகள் அதனை வளர்த்தெடுக்கின்றனர். இக் கூற்று மார்க்சிய விஞ்ஞானமாக உருவான அன்றே உருவானது. இதைச் சரிநிகர் ஆசிரியர் பீடம் மறுப்பின் நாம் ஆதாரமாக வைக்க முடியும். சரிநிகர் ஆசிரியர் குழுவுக்;கு சுயவிமர்சனம் செய்யும் பழக்கமில்லை. மாற்றுக் கருத்தைப் பிரசுரிக்கும் பண்பும் கிடையாது.

 

எல்லா யுத்தமும் பேச்சுவார்த்தை ஊடாகத் தான் முடிந்தது என்று இன்னுமொரு மோடி. 1917 சோவியத் புரட்சி நடந்த போதும், 1945 ல் கிட்லரை சோவியத் தோற்கடித்த போதும் இவை வெல்லப்பட்டன. இது சாதாரண முறையில் பல ஆதாரங்களை எம்மால் முன்வைக்க முடியும். சரிநிகர் ஆசிரியர் குழுவின் நோக்கம் என்ன என்பதை விபரிக்கும் போது சில உதாரணத்தைப் பார்ப்போம்.


1. ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் போராடக் கூடாது என்கின்றனர்.


2. ஒரு பெண்ணை ஆணாதிக்க வெறியன் கற்பழிக்கும் போது கூட பெண் அந்த ஆணிடம் இருந்து பேசி தீர்க்க வேண்டுமாம். அதாவது எதிர்த்துப் போராடக் கூடாது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அசிரியர் குழு பெண் போட்டு வந்த சட்டை பிழை , தலை நிமிர்ந்து நடந்தது பிழை, பொட்டு வைக்காதது பிழை , தனியாக வந்ததும் பிழை… இது போன்று விளக்குவார்களா?


3. ஒரு தொழிலாளி முதலாளிக்கு எதிராக போராடக் கூடாது. இது யுத்தத்தை வழிநடத்தும் என்பர்.


4. இன்று தமிழ்த் தேசிய இனத்தின் மீது பெரும் தேசிய இனவெறியர்கள் எல்லாத் துறையிலும் துவசம் செய்யும் போது தமிழ்த்தேசிய இனம் பேசித் தீர்க்க வேண்டுமாம். அதாவது பழையபடி அமீர் வழியில் , 1950 முதல் 1980 வரையான காலத்துக்கள் வெல்ல வேண்டுமா? அதாவது இன்றைய துரோகக் குழுக்களின் நிலைக்குச் செல்ல வேண்டுமாம்!

 

இவ்வளவும் போதும் போதும் என நினைக்கின்றோம். சரிநிகர் ஆசிரியர் குழுவுக்கு நேர்மை ஏதாவது இருப்பின் விவாதியுங்கள். மௌனம் பெரும் தேசிய இனத்துக்கு காலடியெழுப்புவதாகும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது