Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சில மாதங்களாக இலங்கையில் உக்கிரமாக நடைபெற்றுவந்த இன அழிப்புப்போரானது, பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் கொன்றொழித்ததன் மூலம் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


புலிகளிடம் சிக்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும்; முகாம் என்று பொதுப்படையாக சொல்லப்படும் வதை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். காயமடைந்து உருக்குலைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். குடியிருந்த இடங்களெல்லாம் மண்மேடாகிக் கிடக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர், புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது, சிங்கள பாசிச அரசு ஊடகங்களை அங்கு அனுமதிக்காத போதிலும் வெளிப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியிருக்கிறோம் என இலங்கை அரசு கூறிக்கொண்டாலும், இலங்கை அதிபர் ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோரை போர்க்குறங்களுக்காக விசாரித்து தண்டிக்கவேண்டும் எனும் கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது.

 

இந்த வகையில் கடந்த இருபத்தைந்தாம் தேதி ஐநா சபையில் மனித உரிமை ஆணையத்தின் இலங்கை பிரச்சனை குறித்த கூட்டத்தில் அதன் தலைவி நவநீதம் பிள்ளை இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். இதை ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்லாவேக்கியா, ஸ்லாவேனியா, அர்ஜன்டைனா, போஸ்னியா, கனடா, சிலி, மெக்ஸிகோ, மொரீசியஸ், தென்கொரியா, உக்ரேன், உருகுவே ஆகிய 17 நாடுகள் ஆதரித்துள்ளன. ஆனால் மனித உரிமை ஆணைய அமர்வில், தமிழர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், ஊடகவியலாளர்களை சுதந்திரமாக போர் நடந்த பகுதிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் குறித்தே பேசப்பட்டிருக்கின்றன. இதற்கு எதிராக இலங்கையின் சார்பில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பது தவறானது. தமிழர்களும் எங்கள் குடிமக்கள் தாம். 2.5 லட்சம் பேரை புலிகள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்தனர். அவர்களை மீட்டு அரசு வேண்டிய உதவிகளை செய்துவருகிறது. இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டு விவகாரம், தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உதவுங்கள் ஆனால் தலையிட வேண்டாம். என்பது தான் அந்த தீர்மானம். இலங்கையின் இந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான், எகிப்து, மலேஷியா, கியூபா, இந்தோனேஷியா, பொலிவியா, நிகரகுவா, பிலிப்பைன்ஸ், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் ஆதரித்து கையொப்பமிட்டுள்ளன. இதில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை ஆதரித்ததில் வியப்பொன்றுமில்லை, ஆனால் கியூபா….! சோசலிச கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் நாடான கியூபா இலங்கையை ஆதரித்திருப்பது வியப்பானது தான். உலகமயமாக்கத்தின் தளமாக இருக்க விரும்பும், மக்கள் போராட்டங்களை நசுக்கிகியும் இனப்படுகொலை செய்தும்வரும் நாடான இலங்கையை ஆதரித்ததன் மூலம் அது தன் சோசலிசக் கடமையிலிருந்து தவறிவிட்டது.
இலங்கையை எதிர்க்கும் தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகள் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடப்பதை ஏற்றுக்கொண்டதனாலோ, தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதனாலோ ஆதரிக்கவில்லை. அதேபோல, இலங்கையின் தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளும் இலங்கை அரசின் கூற்றுகளில் உள்ள நியாயத்தன்மைக்காக அதனை ஆதரிக்கவில்லை. ஆதரவாகவும் எதிராகவும் நிற்பதெல்லாம் அந்தந்த நாடுகளின் வணிக நலனை முன்னிட்டுத்தான் என்பதில் ஐயமொன்றுமில்லை. நனைகின்ற ஆடுகள் தங்களின் வியாபாரக்குடையின் கீழ் வரவேண்டுமென்று ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அழுகின்றன. இவர்களின் துணையுடன் தானா தமிழர்களின் மீட்பு இருக்கிறது?

 

 

 

ஐநாவின் இலங்கை குறித்தான விவாதம் நடப்பதற்கு முன்பு அமெரிக்காவின் பெதஸ்டா ஜியோஸ்பேசியல் புலனாய்வு அமைப்பு இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை செயற்கைக்கோள் படங்களை திரட்டி வைத்திருப்பதாகவும், அவைகளை மறுக்க முடியாத ஆதாரங்களென்றும், இலங்கை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படப்போவது நிச்சயம் என்றெல்லாம் பலர் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அவ்வாறெல்லாம் நடக்கவில்லை. அமெரிக்கா அந்த ஆதாரங்களை பதுக்கிக்கொண்டது. ஒருவேளை இலங்கையில் சீனா மேலாதிக்கம் பெற்று, அமெரிக்காவிற்கு சங்கடங்கள் நேர்ந்தால் அப்போது அந்தப்படங்கள் வெளிவரக்கூடும்.

முதலில் சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நீதி மன்றத்தில் நேரடியாக இலங்கையை விசாரிக்க முடியாது. ஏனென்றால் அந்த நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பு நாடல்ல. ஐநாவில் சிறப்புத்தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து, அது ஏற்கப்பட்டால் மட்டுமே விசாரிக்கமுடியும். அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை தனது ரத்து அதிகாரத்தின் (வீட்டோ) மூலம் நீக்குவதற்கு ரஷ்யாவும் சீனாவும் தயாராக இருக்கின்றன, அதை முறியடிக்கத்தேவையான ஆதரவைத்திரட்ட இந்தியாவும் இப்போதே தயார் எனும் போது இலங்கை விசாரிக்கப்படும் தண்டிக்கப்படும் என்பதெல்லாம் கானல் நீராகக்கூட இருக்கமுடியாது.

ஈழத்தமிழர்களின் ரணம் சாதாரணமானது அல்ல, அதேநேரம் அவர்களின் வலி அவர்களின் போராட்ட உணர்வை மருந்தாக சீரணித்து விடக்கூடாது. அவர்களின் ரணங்களுக்கு வலிகளுக்கும் ஆறுதலாகவும், அவர்களின் அடுத்தகட்ட  மக்கள்திரள் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் நிற்கவேண்டிய பெரும் கடமை தமிழகத்தமிழர்களுக்கு இருக்கிறது. அதை நாம் மறந்துவிடலாகாது.

http://senkodi.wordpress.com/2009/05/29/ஐ-நா-விலா-ஆத்தாங்கரையிலா/

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது