Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பதினைந்தாவது மக்களவைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  உலக நாடுகள் வியந்து பாராட்டுகின்றன இந்திய தேர்தல் முறையை. நூறு கோடிக்கும் மேல் மக்கட்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிகம் வன்முறையின்றி அமைதியாக குறித்த காலத்தில் நடத்திமுடிக்க முடிவதே

 இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் வெற்றிச்சான்றிதழ். என்றெல்லாம் ஏற்றிப்போற்றப்படும் தேர்தல் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.  விரலில் அது ஏற்படுத்தும் அழியாத கரையைப்போலவே மக்கள் வாழ்விலும் அழியாத கரையை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இன்னும் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறது.

 


யாரை தேர்ந்தெடுப்பது எனும் உரிமையை நீங்கள் பெருமிதமாய் கொள்ளலாம், ஆனால் நீங்கள் தேர்ந்தெடுப்பவர் தவறு செய்யும் பட்சத்தில் அவரின் தேர்வை நீக்க உங்களால் முடியாது. தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே உங்களுக்கு உரிமை,  தேர்ந்தெடுத்தபின் கொள்ளையடிப்பது அவர்கள் உரிமை. எந்தத்திருடன் உங்களை திருட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவா இவ்வளவு ஆரவாரம்! இவ்வளவு செலவு!!
உங்கள் தொகுதியில் உங்களின் தேர்ந்தெடுப்புக்காக காத்திருக்கும் பல வேட்பாளர்களில் யாராவது வென்றபிறகு  உங்களின் கோரிக்கைகளை, உங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயல்வார் என்று உங்களால் உறுதி கூற முடியுமா? ஆக தேர்ந்தெடுத்தபின் உங்களால் திருப்பியழைக்கமுடியாத ஒருவரை உங்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முயல்வார் என்று உறுதிசொல்லமுடியாத பலரிலிருந்து தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பது உரிமையா? நிர்ப்பந்தமா?


ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 25 லட்சம் வரை செலவு செய்யலாம், அதற்குமேல் செலவு செய்தல் கூடாது என்று விதி உண்டு. எந்த வேட்பாளராவது இந்த வரம்புக்குள் நின்று செலவு செய்கிறார் என்று நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினராகும் ஒருவருக்கு மாதச்சம்பளம் 12000 ரூபாய், அலுவலகச்செலவு 14000 ரூபாய், தொகுதிச்செலவு 10000 ரூபாய், பயணச்செலவு தோராயமாக 45000 ரூபாய், மக்களவை நடைபெறும் நாட்களில் தினப்படியாக 500 ரூபாய் இன்னும் சலுகைகள் வசதிகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றால் ஐந்து ஆண்டிற்கு அறுபது லட்சம் ரூபாய். இந்த அறுபது லட்சம் ரூபாய் வருமானத்தில் உங்களுக்கு சேவை(!) செய்வதற்காக பல கோடிகளை செலவுசெய்ய இவர்கள் தயாராக இருப்பதன் பொருள் என்ன?  கொள்ளையடிக்கப்போகிறார்கள் என்று இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தபின்பும் உரிமை என்ற பெயரில் அவர்களுக்கு ஓட்டுப்போடுவது அந்தக்கொள்ளைக்கு நீங்கள் உடந்தையாக இருக்கிறீர்கள் என்று பொருளாகாதா?


இப்போதெல்லாம் ஜனநாயகம் மிகவும் முன்னேறிவிட்டது. வாக்குச்சீட்டிற்கு பதிலாக எந்திரம் வந்திருக்கிறது. தங்களை ஜனநாயகத்தின் மீது அக்கரை உள்ளவர்களாக காட்டிக்கொள்வோர் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள், எந்திரத்தின் கடைசியில் யாருக்கும் ஓட்டுப்போட விருப்பமில்லை என்று ஒரு விசையை வைக்கலாம் என்று. பதறிப்போனது தேர்தல் ஆணையம். வெற்றிபெரும் வேட்பாளர்கள் பெறும் ஓட்டு எண்ணிக்கையை விட யாரையும் பிடிக்கவில்லை எனும் எண்ணிக்கை கூடிவிட்டால் என்ன செய்வது? ஜனநாயகத்திற்கே சிக்கல் வந்துவிடாதா? யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுப்பது மட்டும் தான் உங்கள் கடமை என்றால்,  அவர்களை நீங்கள் நிராகரிக்கக்கூடாது என்றால், இது எப்படி உரிமையாகும்?


யார் ஆளவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள் என்பது சரியா? ஒரு கட்சி ஆட்சியெல்லாம் கானல் நீராகிவிட்டது, கூட்டணி ஆட்சி தான். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சிசெய்யும் கூட்டணி பெற்ற வாக்குகளை விட அவர்களை நிராகரித்து அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகம். என்றால் இது எப்படி மக்களாட்சி?


கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க வழியில்லை என்கிறார் தேர்தல் ஆணையர். கிரிமினல்களை தவிர வேறு யாரையும் வேட்பாளர்களாக நிருத்துவதில்லை என்கின்றன ஓட்டுக்கட்சிகள். இன்னும் இதை நீங்கள் ஜனநாயகக்கடமை என்று சொன்னால் உங்களுக்கு என்ன பெயர் வைப்பது?


எல்லா இடங்களிலும் வேலை இழப்பு, ஊதியம் இல்லாததால் பசி பட்டினி. உயிர்வாழத்தேவையான உணவுக்கு வக்கில்லை. எல்லோருக்கும் உணவு என்பது அடிப்படைத்தேவை, ஒவ்வொருவரின் ஜனநாயகக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. குடிநீருக்காக பல கிலோமீட்டர்கள் அலைந்து திரிகிறார்கள் மக்கள். அப்படியே கிடைத்தாலும் அது குடிக்கும் நிலையில் இருப்பதில்லை. சுகாதாரமான குடிநீர் கிடைக்கச்செய்வது ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

கொள்ளையடிப்பதற்கென்றே நகர்ப்புறங்களில் தனியார் கல்விக்கூடங்கள், கிராமப்புறங்களிலோ இடிந்த கூரை, மரத்தடி நிழல். கல்வி எல்லோருக்குமான ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. உயிர்க்கொல்லி நோய்களால் இறப்பவர்களைவிட இந்தியாவில் பூச்சிக்கடிகளாலும், நாய்க்கடிகளாலும்; மகப்பேறின் போதும், சாதாரண நோய்களாலும் தான் அதிகமானோர் இறக்கிறார்கள். மருத்துவ வசதி ஒரு ஜனநாயக உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இந்த ஜனநாயக உரிமைகலையெல்லாம் குழி தோண்டிப்புதைத்துவிட்டு, அது மீண்டும் எழுந்து வந்துவிடக்கூடாது என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ஓட்டுப்போடுவது மட்டும் ஜனநாயக உரிமை என்கிறார்களே, அவர்களை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?


நீங்கள் தேர்ந்தெடுக்கப்ப்போகும் மக்கள் பிரதிநிதிகள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் எந்த விசயத்திலாவது முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்களா? ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி செய்யும் கட்சி மாறினாலும் அவர்களின் கொள்கை அதாவது உங்களை ஒட்டச்சுரண்டும் கொள்கை மட்டும் மாறுவதேயில்லையே எப்படி? ஆட்சியிலிருப்பவர்கள் கொண்டுவரும் எந்தத்திட்டமும் மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அல்லது மக்களின் தேவைக்கு ஏற்ப வருவதில்லை. அதே நேரம் வந்துவிட்ட திட்டங்களை மக்கள் எவ்வளவுதான் எதிர்த்துப் போராடினாலும் மாற்றப்போவதில்லை. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையேனும் உங்களிடம் வந்தே ஆகவேண்டிய ஓட்டுக்கட்சிகளால் எப்படி இப்படி இருக்கமுடியும்? ஏனென்றால் அவர்கள் பொம்மைகள். எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் அற்பங்கள். அவர்களை முந்தள்ளிவிட்டு பின்னாலிருந்து நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது ஒரு கும்பல்.  உங்கள் ஊரின் தாசில்தார் உங்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டவரா? உங்கள் ஊரின் காவல்துறை அதிகாரியை உங்களால் கேள்விக்கு உட்படுத்தமுடியுமா? நீதிபதியின் தீர்ப்பு குறித்து உங்களால் ஐயப்பட முடியுமா? ஒரு வருவாய் கோட்ட அதிகாரியையோ அல்லது வேறு எந்தத்துறை அதிகாரியையோ குறைந்தபட்சம் அவர்கள் பணியினை பார்வையிட முடியுமா உங்களால்? இவர்களையெல்லம் எப்போது ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தீர்கள்? அன்றாடம் உங்களை பாதித்துக்கொண்டிருக்கும் சட்டங்களைச் செய்வதும், ஆழிக்காற்றின் பட்டங்களைப்போல் உங்களை அலையவிடுவதும் இவர்களல்லவா? இவர்களை கேள்விக்கு உட்படுத்தும் எந்த அதிகாரமுமில்லாமல் வாக்காளப்பெருங்குடிமக்களே என்று உங்கள் முன் வருகிறார்களே, அவர்களை என்ன செய்வதாய் உத்தேசம்?


வாயில் உமிழ்நீர் சுரப்பது சீரண வசதிக்காக என்று மட்டுமா நினைக்கிறீர்கள். வேறு பயனும் உண்டு.


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது