Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் வடகொரியாவின் சொந்தத்தயாரிப்பான ‘உன் ஹா 2′ என்ற ராக்கெட் மூலம் ‘குவாங் மியோங் சாங்’ எனும் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளை வடகிழக்குப்பகுதியிலுள்ள ‘முஸ்டான்டி’ ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவியது. ஏற்கனவே வடகொரியா ‘டோபோடாங் 2′ போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக

விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதை முன்கூட்ட்யே தெரிந்து கொண்ட அமெரிக்காவும், தென்கொரியா, ஜப்பானும் செயற்கைக்கோள் ஏவுதல் என்ற பெயரில் நீண்ட தூர இலக்கு கொண்ட ஏவுகளையை சோதித்துப்பார்பதாக குற்றம் சாட்டின. அப்படி சோதனை செய்யும் பட்சத்தில் இடையிலேயே அதை சுட்டு வீழ்த்தப்போவதாக மிரட்டின. அப்படி ஏதும் நடந்தால் அதுவே போரை தொடங்குவதற்கான காரணமாக இருக்கும் என வடகொரியா எச்சரித்தது. தொடர்ந்து அமெரிக்காவும் ஜப்பானும் தங்கள் போர்க்கப்பல்களை வடகொரிய கடல் பகுதியில் நிலைநிறுத்தின. வடகொரியாவும் போருக்கு தயாராகுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் தற்போது, தங்கள் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு சுற்றிவருவதாக வடகொரியாவும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எந்தப்போருளும் நுழையவில்லை அது பசிபிக் பெருங்கடலில் விழுந்துவிட்டது, திட்டம் தோல்வி என்று அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

 

north_korea_missile_143254f1

           மலைப்பாங்கான பிரதேசமும், மொத்தப்பரப்பில் வெறும் 18விழுக்காட்டையே விளைநிலமாவும்; அடிக்கடி வறட்சியும், வெள்ளமும் தாக்கும் நாடாகவும், சொந்த நாட்டு மக்களின் உணவுத்தேவையில் தன்னிறைவை எட்டாத நிலையில் இருக்கும் வடகொரியா தன் நாட்டு மக்களின் பட்டினியை போக்கும் திசையில் தன்னுடைய அறிவியல் ஆய்வுகளை செயல் படுத்தாமல் அணுஆயுத தயாரிப்புக்கும் விண்வெளி போட்டிக்கும் தன்னை உட்படுத்திவருவது சொந்த நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்பது ஒருபுறமிருந்தாலும், ஆயுதங்களை நோக்கி தன் ஆய்வுகளை திருப்பியதன் பின்னணியில் தொழிற்படும் அரசியலே முக்கியமான பொருளாக இருக்கிறது. அதைப்பற்றி அறிந்து கொள்ள காலத்தே சற்று நாம் பின்னோக்கி செல்லவேண்டும்.

 

        
 இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை கொரிய தீபகற்பம் ஜப்பானின் கீழ் இருந்தது. அச்சு நாடுகளின் தோல்வியையும், ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான அதிர்ச்சியையும் தொடர்ந்து நேசநாடான அமெரிக்காவின் கீழ் வந்தது கொரியா பின்னர் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு உரிமை கோரியதால் ஒரு உடன்பாடு ஏற்பட்டு 38வது அட்ச ரேகையின்வடபகுதியை ரஷ்யாவும், தென்பகுதியை அமெரிக்காவும் ஆளுமைப்படுத்த அதுவே வடகொரியா, தென்கொரியா என்று தனித்தனி நாடாகியது. அதுவரை உறவினர்களாக கொரியர்களாக இருந்தவர்களிடம் பகைமை திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இதில் 1950ல் வடகொரியா தென்கொரியாமீது தொடுத்த போரும் சேர்ந்து கொள்ள வெற்றிகரமாக தொடங்கியது ஆயுதப்போட்டி. வடகொரியாவுடன் ஒப்பிடுகையில் 20மடங்கு அதிக வளங்களைக்கொண்ட தென்கொரியா அமெரிக்க முதலாளித்துவ பாணியில் முன்னேறியது(!) போதிய விளை நிலமில்லாத வடகொரியாவில் விவசாயத்தில் கொண்டுவரப்பட்ட கூட்டு கம்யூன் முறையும், ரேசன் பகிர்வுத்திட்டங்களும் ஓரளவுக்கு நிலமையை சமாளித்தாலும் போதுமான அளவுக்கு இல்லை. பனிப்போரின், பதிலிப்போரின் இறுதியில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதறிப்போய்விட , வடகொரியாவின் உணவுத்தேவையை பயன்படுத்தி ஏராளமான அமெரிக்கக்குழுக்கள் உதவி என்ற பெயரில் உள்நுழைந்து பெயரளவுக்கு இருந்த சோசலிசத்தையும் துடைக்கும் திட்டத்துடன் களமிறங்கின.

 

          தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த தென்கொரியாவிலும், தன்னுடைய மேலாதிக்கத்தை ஒரு வழியில் ஏற்றுக்கொண்ட ஜப்பானிலும் ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் குவித்தது அமெரிக்கா. இதன் காரணமாக வடகொரியாவும் அணுஆயுத ஏவுகணை ஆராய்ச்சியில் இறங்கியது. தன்னைத்தவிர வேற் யாரும் ராணுவ மேலாதிக்கம் பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் அமெரிக்கா எந்த ஒரு நாடு ஏவுகணை தொழில்நுட்பத்தையோ, அணு ஆயுத பரிசோதனையோ நடத்தினால் கடுமையாக எதிர்ப்பதுடன் ஐநா சபை மூலம் பொருளாதாரத்தடை உட்பட பல்வேறு தடைகளை ஏற்படுத்தும். இந்த அடிப்படையில் உருவானது தான் அணுஆயுத பரவல் தடைச்சட்ட ஒப்பந்தம். உலகின் வல்லசுகளான ஐந்து நாடுகளைத்தவிர ஏனைய நாடுகள் அணுத்தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் இந்த ஒப்பந்தம். பல‌ நாடுகளை அதன் பொருளாதார நலைமைகளைக்கொண்டும், உதவி என்ற பெயரில் மிரட்டியும் இந்த ஒப்பந்தத்தை பிற நாடுகள் மீது திணித்து வருகின்றனர். வடகொரியாவும் இதில் 1985ல் ஒப்பமிட்டது. அதற்கு முக்கியமான நிபந்தனையே தென்கொரியாவிலும் ஜப்பானிலும் அமெரிக்க நிறுவி வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் என்பது தான். ஆனால் இன்று வரை உலக சட்டாம்பிள்ளை அமெரிக்க இதை நிறைவேற்றவில்லை. அதோடுமட்டுமல்லாது, வடகொரியாவின் அணுவுடன் தொடர்பில்லாத பிற தொழில்நுட்பங்களையும் சோதனை செய்யவேண்டும் என நிர்ப்பந்தித்தது. இதனால் 2003ல் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்த்தத்திலிருந்து வடகொரியா விலகியது. அன்றிலிருந்து ஐநா சபை பொருளாதாரத்தடை உட்பட பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இவை எல்லாவற்றையும் மீறி தன்னுடைய அணுத்தொழில் நுட்பத்தை மேம்படுத்தி வருவதுடன் தன்னிடம் அணுஆயுதங்கள் இருக்கிறது என்று வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறது. அதன் தொடற்சியாகத்தான் ஏவுகணை பரிசோதனைகளும்.

          

north-korea-missle

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தமும் அதை மீறினால் ஐநா சபை விதிக்கும் தடைகளும் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல. மாறாக அமெரிக்காவின் மேலாதிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ளச்செய்வதை நோக்கமாக கொண்டவை. அமெரிக்காவிடம் மட்டும் சற்றேறக்குறைய 15000க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, இது போன்று ஏனைய வல்லரசுகளிடமும். அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற வல்லரசுகள் மட்டுமல்லாமல் இஸ்ரேல், இந்தியா, பாக்கிஸ்தான், வடகொரியா ஆகிய ஒன்பது நாடுகள் அணு தொழில்நுட்ப நாடுகளாக அறியப்பட்டிருக்கின்றன. இந்நாடுகளால் வைத்திருக்கும் குண்டுகளை தவிர தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் உருவாக்கிக்கொள்ளமுடியும். இவை தவிர இன்னும் நாற்பது நாடுகளிடம் அணுகுண்டுகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுத பரவல் தடைச்சட்டத்தின் மூலம் அமெரிக்க மேலாண்மையை ஏற்றுக்கொள்வது ஆயுதப்போட்டிக்கும் அணு ஆயுதப்பரவலுக்கும் தான் வழிவகுக்குமேயல்லாது அதை அழிப்பதற்கு ஒருபோதும் பயன்படப்போவதில்லை.

 

 

        
 கோடிக்கணக்கான ஆண்டுகளாய் பூமியில் வசித்துவரும் உயிரினங்கள் அனைத்தையும் ஓரிரு மணித்துளிகளில் அழித்துவிடும் வல்லமை கொண்ட அழிவுசக்தியை கட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான் ஏகாதிபத்தியங்கள் தங்களின் வணிக நலன்களுக்காக உலகை மறுபங்கீடு செய்யும் தருணத்திற்காக காத்திருக்கின்றன. தனிமனித உரிமை என்ற பெயரில் உலகின் மொத்தவளத்தையும் ஒருவனிடம் குவிக்கும் திசைவழியில் சென்றுகொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் தலைமையில் இந்த அழிவு சக்திகளை கண்காணிப்பதோ அழிப்பதோ சாத்தியமற்றவை. சமூக நலனை முன்னிலைப்படுத்தும் பொதுஉட‌மைக்கொள்கையை அடிப்படையாகக்கொண்ட சோசலிச நாடுகளின் கூட்டுத்தலைமையில்தான் மனித குலத்தை காப்பது சாத்தியப்படும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது