Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுவாசல், வயல்தோட்டம் அத்தனை சொத்துக்களையும் கூலிப்படைகளின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட்டு பக்கத்தில் ஒரு மூலையில் பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் அகதிகளா…அல்லது அரசியல் கைதிகளா…என்று கூடப் புரியாமல் உயிரையாவதுதக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய வன்னி மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.

வந்தாரை வாழவைக்கும் வன்னி மண் இன்று தன்னை வாழவைக்க பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் மற்றவர்களிடம் கையோந்தி நிற்கின்றது. வந்திருப்பவர்கள் புலிகளா என்ற சந்தேகத்திலே பலர் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டு அடையாளம் தெரியாதவாறு அழித்தொழிக்கப்படுகின்றார்கள். அதுமட்டுமின்றி பல இளம் பெண்கள் துன்புறுத்தப்படுவதுடன் சிறிலங்கா கூலிப்படைகளின் காமவெறிக்கு உள்ளாக்கப்பட்டுகின்றார்கள்.


மக்களை இத்தனை கொடுமைக்குள் வைத்துக் கொண்டு மக்களுக்கு பிஸ்கட் கொடுப்பது போன்ற விளம்பரப் படங்களை வெளியிடுவதன் மூலமாக எல்லாத்தையும் மறைத்து விட முயல்கின்றது பேரினவாத அரசு. ஆனால் உள்ளுக்குள்ளே உறவினர்… ஊடகவியலாளர்கள் யாரும் மக்களை சந்திக்க முடியாதவாறு தடைகளை விதித்து வெளி உலகிற்கு உண்மைகளை இருட்டடிப்பு செய்து வருகின்றது. புலிகளின் மனிதவேட்டைக்கு பயந்து தப்பி ஓடிவந்த அப்பாவி மக்கள் இங்கு சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிவருகின்றார்கள்.


இன்னொரு பக்கம் பசியாலும் பட்டினியாலும், குடிக்க தண்ணீரில்லாமலும் குண்டுத் தாக்குதல்களாலும் பல நூற்றுக் கணக்கான மக்கள் செத்துமடிவதோடு இன்னும் சிலர், பிள்ளைகளை குடும்பங்களை இழந்த வேதனையால் மனநோயாளிகளாக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடுமையான சூழலிலும், விரும்பியோ விரும்பாமலோ….. போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள்..., கணவன் ஒருபுறம் மனைவி இன்னொருபுறம் என்ற ஒருவரை ஒருவர் விட்டு தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வெளியே வரமுடியாமல் பெரும்பாலான மக்கள் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் புலிசார்ந்த ஊடகங்கள் வன்னிமக்களின் அழிவை புலிநலம் சார்ந்த விளம்பரமாக பயன்படுத்தி இளம் சமூகத்தினரை தற்கொலை அரசியலுக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.


மறுபுறம் மகிந்தாவின் பிஸ்கட்டு அரசியலைக் மக்களுக்கு காட்டி மகிந்தாவை மகேசன் ஆக்கி புலியெதிர்ப்பு அரசியலுக்கு ஆள்சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். வன்னிமக்கள் மட்டுமில்லாமல்; புலம்பெயர்ந்து வாழும் தழிழ்மக்களும் இந்த இரண்டு புலிகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள்.


இன்னொரு இளைய மந்தைக் கூட்டத்தை உருவாக்க இந்த இரண்டு கும்பல்களும் வலிந்துகட்டி முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


30வருட போராட்டத்தில் வேதனைகளும் இழப்புக்களும், இதயவலிகளும் தான் புலிகளால் மக்கள் அடைந்த நன்மை… இதையாராலும் மறைக்கவோ மன்னிக்கவோ முடியாது… இந்த வரலாற்றுத் தவறுகளை யாராலும் நியாயப்படுத்திவிடவும் இயலாது.


புலிகளின் இந்த அரசியல் தான் இன்று அவர்களை குறுகிய வன்னிநிலப்பரப்பிற்குள் முடக்கி விட்டுள்ளது. புலிகள் அழிக்கப்பட வேண்டிய சக்தியா… மாற்றப்பட வேண்டிய சக்தியா…?


புலி ஒழிப்பிலே அழியப் போவது யார்… புலித்தலைமை மட்டும் தானா...?


விரும்பியும் விரும்பாமலும் பலாத்காரமாகவும் போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நிலைமை என்ன… வன்னியில் வாழும் குடும்பங்களின் அங்கத்தவர்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று அவர்களின் விருப்பத்திற்கு மாறாக போராட்டத்தில் இணைக்கப்பட்டவர்கள் பலருண்டு. அவர்களை விட்டுப் பிரிந்துவர முடியாமல் பெற்றோர்கள், கணவன்மனைவி என்று பல குடும்பங்கள் மரணத்தின் விளிம்பில் நின்ற வண்ணம் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நிலை சாவுதானா...?


எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்


என்று நினைப்பது தான் மக்கள்நலன் அரசியலா...? எங்களுக்குள் இருக்கும் இந்தக் குட்டிப் புலியை முதலில் நாங்கள் அழிக்கவேண்டும்.


பேரினவாதத்தின் இனஅழிப்பு வன்முறையுத்தம்; புலிகளை ஒரு போதும் அழித்து ஒழித்துவிடப் போவதில்லை. இந்த இன அழிப்புப் யுத்தம்; மகிந்தாவின் சுயஅரசியல் இலாபத்திற்காக முன்னெடுக்கப்படும் யுத்தம். இதில் மகிந்தாவின் தனிப்பட்ட கௌரவமும் அடங்கியுள்ளது. இங்கு புலிகளின் பலத்தை ஒழித்து புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றலாமேயொழிய புலிகளை அழிப்பதோ புலிகளின் போர்க்கருவிகளை ஆயுதங்களை முற்றுமுழுதாக கைப்பற்றுவதோ முடியாத காரியம்.


மக்களின் இழப்புக்களும், அழிவுகளும் வடிவம் மாற்றப்பட்டு தொடரவே செய்யும். இன்னொரு பேரழிவைத் தடுத்;துநிறுத்த வேண்டுமானால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட்டு மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.


இதற்காக என்ன செய்ய முடியுமோ அதற்காக நாங்கள் குரல் கொடுத்தே ஆகவேண்டும். புலியெதிர்ப்பை மட்டுமே வெளிக்காட்டும் நடவடிக்கை இன்னொரு பாரியமக்கள் அழிவைத் தான் கொடுக்கும்.


இன்று எங்கள் ஒவ்வொரு செயற்பாட்டிலும் சிந்தனையிலும் எங்கோ ஒரு மூலையில் குட்டிப் புலியொன்று இருக்கத் தான் செய்கிறது. இதை நாங்கள் இனம் கண்டு மாற்றிக் கொள்ளும் வரை மக்களோடு நாங்:கள் இணையவும் முடியாது...,ஆக்க பூர்வமாக எதையுமோ முன்னெடுக்கவும் முடியாது. எங்களுக்குள் இருக்கும் இந்தக் குட்டிப் புலியை அழித்துவிட்டு மக்கள் நலன்சார்ந்து மட்டும் சிந்திக்க முயற்சிப்போம்….!


07.03.2009
தேவன.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது