Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகை வெல்லத் துடிக்கும் ''பேரரசுகள்'' தங்கள் கொடி பறக்க இந்தப் பூமிப் பந்தில் இடம் போதாமல் நிலவிலும், செவ்வாயிலும் துண்டு போட்டு இடம் பிடித்து வருகின்றன. இந்த வரிசையில் தன்னையும் ஒரு வல்லரசாகச் சேர்த்துக் கொள்ள இந்திய அரசு துடிக்கின்றது.

 
1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை முதன்முறையாக விண்ணில் செலுத்திய போது, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யர்கள் தங்களைத் தாக்குவர் எனும் வதந்தி அமெரிக்க மக்களிடையே பரப்பப்பட்டது. சோவியத்துக்குத் தாம் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்க அமெரிக்காவும் ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது. இவ்விரு நாடுகளும் தங்களது வலிமையை நிரூபிக்க அடுத்தடுத்து செயற்கைக்கோள்களை அனுப்பி, விண்வெளி யுத்தம் நோக்கிச் சென்றன. பனிப்போர் காலகட்டத்தில் நடந்த இந்தப் போட்டி தற்போது மீண்டும் வேறுதளத்தில் தலைதூக்கியுள்ளது.


சீனா விண்வெளிக்கு மனிதனை அனுப்பியதுடன், 2007இல் பயனற்ற செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா இதனைச் செய்திருந்தாலும், அமெரிக்காவும் தனது பலத்தை நினைவூட்ட மீண்டும் ஒரு செயற்கைக்கோளைத் தனது ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. ஜப்பானும் தன் பங்குக்கு அதிநவீன செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியது.


தனது இராணுவ வலிமையை நிரூபித்துக் கொள்ள நினைக்கும் எல்லா நாடுகளும், அணுஆயுதச் சோதனைக்கு அடுத்து குறி வைத்திருப்பது விண்வெளி ஆராய்ச்சியைத்தான். இந்தியா ஏற்கெனவே இரண்டு முறை அணுகுண்டுச் சோதனை செய்துவிட்டதால், இனி அடுத்தது விண்வெளியில் சாதனை படைப்பதுதான் பாக்கி. விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதெல்லாம் இப்போது யார் வேண்டுமானாலும் செய்துவிடுவதால், ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என யோசித்தவர்களின் மூளையில் உதித்ததுதான் "சந்திராயன்' எனும் நிலவுப் பயணத் திட்டம்.


தனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் அணுகுண்டு வெடித்த பா.ஜ.க. அரசு, பதவிக்கால முடிவில் "இந்தியா ஒளிர்கிறது' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆளனுப்பும் 380 கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் 2020இல் நிலவுக்கு மனிதனை அனுப்புவதை இலக்காகக் கொண்டு, சந்திராயன் 1,2,3 என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாகத்தான் கடந்த நவம்பர் 14ந் தேதி, நேரு பிறந்த நாளன்று, இந்தியா, சில ஆராய்ச்சிக் கருவிகளையும் இந்தியக் கொடியையும் நிலவில் இறக்கியது.


அக்டோபர் 22ஆம் நாள் விண்கலம் புறப்பட்டதிலிருந்து நவம்பர் 14ஆம் நாளன்று நிலவில் தரையிறங்கியது வரை அனைத்துச் செய்திகளையும், துல்லியமான அறிவியல் தகவல்களுடன், தலைப்புச் செய்தியாகப் பதிவு செய்த பத்திரிக்கைகள், இந்தியா ஒரு பேரரசாக மாறிவரும் செய்தியை மிகக் குதூகலத்துடன் பதிவு செய்தன.


நிலவில் தடம் பதித்த ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்துள்ளது என்றும், மற்ற நாடுகள் நிலவில் தடம் பதிப்பதை மட்டுமே நோக்கமாக வைத்திருக்கையில் நாம் தான் அதில் ஆராய்ச்சி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்றும், நிலவின் நிரந்தர இருட்டுப் பகுதியான துருவப் பகுதிகளில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யப்போகிறோம் என்றும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழக அறிவியலாளர்கள் கூறி வருகின்றனர்.

 
சந்திராயன் பற்றிப் பேட்டியளித்த முன்னாள் அரசவைக் கோமாளி கலாமோ "எதிர்காலத்தில் செவ்வாய்க்குச் செல்லும் திட்டத்திற்கு நிலவு சிறந்த தளமாக இருக்கும்' என்று கூறி இருக்கிறார். சந்திராயன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் உலக நாடுகளின் கூட்டு விண்வெளி ஆராய்ச்சியில் இடம் பெற இந்தியா தகுதி பெற்றுள்ளது என்றும், கோள்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகப்படுத்துவதற்கும், புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் இந்த வெற்றி பயன்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் இதன்மூலம் அங்குள்ள கனிமவளங்களை நாம் இங்கு கொண்டுவந்து பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


விண்வெளியிலோ, நிலவிலோ யாரும் இடங்களைக் கைப்பற்றவோ, அங்குள்ள கனிமவளங்களைக் கொள்ளையடிக்கவோ கூடாது என்பதற்கான சர்வதேச விண்வெளி ஒப்பந்தமும் (1967), நிலவு ஒப்பந்தமும்(1979) அனைத்து நாடுகளுக்கிடையே நடைமுறையில் உள்ளது. அதனையெல்லாம் மறந்துவிட்டு, நிலவில் குடியேற்றத்தை உருவாக்கிக் கனிம வளங்களைக் கொண்டு வரப்போவதாகக் கூறுகிறார் அப்துல் கலாம். இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமான கனிமச் சுரங்கங்களை எல்லாம் அந்நியனுக்கு தாரை வார்த்துவிட்டு, நிலவிற்கு சென்று கனிமம் கொண்டு வருவோம் என்கிறார், இந்த அறிவாளி (!).


செவ்வாய்க் கோளுக்குச் செல்வதற்கான தளமாக நிலவைப் பயன்படுத்தும் திட்டம், அமெரிக்காவின் இராணுவதளமாக நிலவைப் பயன்படுத்தும் திட்டத்திற்குச் சிறிதும் குறைந்ததல்ல. பூமியில் நடத்த முடியாத படு பயங்கரமான ஆயுதச் சோதனைகளை நிலவில் நடத்திப் பார்த்துச் சோதிக்கவிருக்கும், அமெரிக்காவின் அடுத்த நிலவுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ள அதே 2020ல் தான், இந்தியாவும் தனது நிலவுப் பயணத்தின் கடைசிக் கட்டத்தை செயல்படுத்தப் போகிறது என்பதனை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.


இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் மாதவன் நாயர் சந்திராயனின் வெற்றி, விண்வெளி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். மற்ற நாட்டு செயற்கைக்கோள்களை நமது ஏவுதளத்திலிருந்து செலுத்துவதையும், விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்வதையும்தான் விண்வெளி வர்த்தகம் என்கின்றனர். இதுவரை நாட்டின் வளர்ச்சிக்காக, விண்வெளித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனக் கூறிவந்த இவர்கள் இப்போது இந்தக் கண்டுபிடிப்புகள் வியாபாரமாக்கப்பட்டு புதிய சந்தையைத் தோற்றுவித்துள்ளதை ஒப்புக் கொள்கின்றனர். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம், ஆன்ட்ரிக்ஸ் என்ற பெயரில் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறது. அதன் வேலையே இது போன்ற விண்வெளிவர்த்தகத்தில் ஈடுபடுவதுதான். இதுவரை இத்தாலி, இஸ்ரேல் போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் இந்திய ஏவுகலன்கள் மூலம் ஏவப்பட்டுள்ளன.


ஏற்கெனவே உள்ள இராணுவ பலத்தைக் கொண்டு தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகவும் ஏகாதிபத்தியத்தின் நம்பத்தக்க அடியாளாகவும் இந்தியா மாறிவருகிறது.


மேலும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும்பங்காளிகளான தரகு முதலாளிகளின் வணிக விரிவாக்கமும், இந்திய துணை வல்லரசுக்கனவும் வேறு வேறல்ல. இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாக்கக் கனவுக்கு இசைவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் விண்வெளி வர்த்தகப் போட்டியில் ரிலையன்சு நிறுவனம் தன்னையும் ஒரு பங்காளியாக ''சந்திராயன் 2''இல் சேர்த்துக் கொள்ள இருக்கிறது . ஆளும் வர்க்கத்தின் பேராசை அத்துடன் முடிந்து விடுவதில்லை. தன்னை மாபெரும் வல்லரசாகக் காட்டிக்கொள்ள அதற்கு அணுகுண்டும் தேவை. விண்வெளி வித்தைகளும் தேவை. ஆனால் அதற்காகக் கொட்டி வீணடிக்கப்படுவதோ உழைக்கும் மக்களின் வரிப்பணம் என்பதுதான் வேதனை.


· அழகு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது