Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 "எதைத் தின்றால் பித்துத் தெளியும்?'' இந்தக் கேள்விதான் இப்பொழுத் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் குடைந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் இருந்து 2,60,000 கோடி ரூபாய் சந்தையில் கொட்டி விட்டோம்; முதலாளிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியையும் இயன்றவரைக் குறைத்து விட்டோம். ஆனாலும், பங்குச் சந்தை சரிந்து கொண்டே போகிறதே எனத் திகைத்துப் போய் நிற்கிறார்கள், அவர்கள்.


 பங்குச் சந்தைக் சரியச் சரிய, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் (நவ. 22 நிலவரப்படி  ரூ. 50.20) சரிந்து கொண்டே போகிறது. தரகு முதலாளிகளோ சந்தையில் பணத்தை இன்னும் கொட்ட வேண்டும்; வட்டியை இன்னும் குறைக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதற்கு மேலும் பணம் வேண்டும் என்றால், அரசு வங்கிகளின் சாவிகளை அம்பானிடாடாவிடம் ஒப்படைத்துவிடுவது தவிர வேறு வழியில்லை.


 இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில், தரகு முதலாளிகள் இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். "முறை சார்ந்த தொழில்களில் 25 முதல் 30 சதவீதம் வரையும்; மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் 50 சதவீதம் வரையும் வேலையிழப்பு ஏற்படும்'' எனத் தரகு முதலாளிகளின் சங்கமான அசோகாம் அறிக்கை வெளியிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல்மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருப்பதால், காங்கிரசு கும்பல் இந்த அறிக்கையால் ஆடிப்போனது. தரகு முதலாளிகளை அழைத்துச் சமரசம் பேசினார், பிரதமர் மன்மோகன் சிங். அவர்களோ, தொழிலாளர்களைப் பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு, கைமாறாக என்ன தருவீர்கள் எனப் பேரம் நடத்தினார்கள். பகிரங்கமாகவும், பச்சையாகவும் நடந்த இப்பேரத்தையடுத்து, அரசுத் துறை வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக கடனுக்கான வட்டியை மேலும் குறைப்பதாக அறிவித்தன.


 ஆனாலும், இந்தியப் பொருளாதாரம் சண்டிக் குதிரையைப்போல எழுந்து நிற்கவே மறுக்கிறது. அமெரிக்க  ஐரோப்பியச் சந்தைகளை நம்பி இயங்கிவரும் அனைத்துத் துறைகளும் இப்பொழுது கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன.


 · திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழில், 200809 ஆம் ஆண்டில் 20 முதல் 30 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும்; இதனால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் கூறியிருக்கிறார்.


 · குஜராத்திலுள்ள சூரத் நகரை  மையமாகக் கொண்டு இயங்கும் வைரப்பட்டைத் தீட்டும் தொழிலில் ஏறத்தாழ ஏழு இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். "சூரத்தின் வைர உற்பத்தியில் ஏறத்தாழ 50 சதவீதம் அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுவதால், இத்தொழில் 20 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும்; இதனால் 25,000 முதல் 35,000 தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்'' என மதிப்பிடப்பட்டுள்ளது.


 · கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் முந்திரி, மசாலாப் பொருட்கள், தேங்காய் நார் தயாரிப்புகள், கைத்தறி ஆடைகளுக்கு அமெரிக்காதான் முக்கியமான ஏற்றுமதி சந்தை என்பதால், இத்துறைகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்படும்  என்கிறார், சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலர் பினரய் விஜயன்.


 · மென்பொருள் ஏற்றுமதி மற்றும் அயல்பணி ஒப்படைப்பு ஆகிய துறைகளில் ஏறத்தாழ 2,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு(ரூ.1,00,000 கோடி ரூபாய்) வியாபார இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்பது மட்டும் ""இரகசியமாக'' வைக்கப்பட்டுள்ளது.


"இந்த நெருக்கடி தங்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து விடும்'' என இத்துறையின் ஜாம்பவான்கள் கூறிக் கொண்டாலும், இன்ஃபோசிஸ், சத்யம், விப்ரோ ஆகிய நிறுவனங்களில் புதிதாக ஊழியர்களை நியமிப்பது 40 சதவீதம் வரை அடிபட்டு போகும் என ""பிஸினஸ் வேர்ல்டு'' என்ற ஆங்கில வர்த்தக இதழ் குறிப்பிடுகிறது. கடந்த பிப்ரவரிக்குப் பிறகு, டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், ஐ.பி.எம்., ஹெச்.பி., யாகூ, பத்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களில் மட்டும் 28,000 ஊழியர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர்.


"எஃகு, சிமெண்ட், தகவல் தொழில் நுட்ப சேவைகள், கட்டுமானத் தொழில்களில் வேலையிழப்பு கடுமையாக இருக்கும்'' என்கிறது அசோகாம் அறிக்கை. "ஜவுளிஆயத்த ஆடைத் தொழிலில் ஏற்கெனவே ஐந்து இலட்சம் வேலையிழப்பு ஏற்பட்டுவிட்டது; அத்துறையில் இன்னும் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்; 2009இல் பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள்  உருவாக்கும் வேலை வாய்ப்புகளில் மூன்று இலட்சம் வாய்ப்புகள் காணாமல் போகும்'' என்கிறது, "இந்தியாடுடே'' சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு. இதுபோக, நாடெங்கும் 10 இலட்சம் தினக்கூலித் தொழிலாளர் வேலையிழப்பார்கள் என்ற குண்டை பல்வேறு கருத்துக் கணிப்புகள்  தூக்கிப் போடுகின்றன.


 ஊழியர்களை வேலையைவிட்டுத் தூக்காத நிறுவனங்கள்; சம்பளமில்லா விடுப்பில் அனுப்புவது; ஊதியத்தையும் மற்ற பிற நலன்களையும் வெட்டுவது எனத் தந்திரமான வழிகளில் இறங்கியுள்ளன.


 வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்ற கிடுக்கிப் பிடிக்குள் மக்கள் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டுள்ளனர். மன்மோகன் சிங் இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களின் தவிப்பைக் கண்டு கொள்ளாமல், முதலாளிகளின் இலாபம் சரிந்து விழுவதைப் பற்றிக் கவலைப்படுகிறார்.


 140 அமெரிக்க டாலருக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, இந்த நெருக்கடிக்குப் பிறகு 60 அமெரிக்க டாலருக்கு கீழாகச் சரிந்துவிட்டது. இப்பொழுது எரிபொருள் விலையைக் குறைத்தால், பொருளாதாரச் சரிவு மட்டுப்படும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் கூட ஆலோசனை கூறிவருகின்றனர். ஆனாலும், மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க மறுத்திருக்கிறார், மன்மோகன் சிங்; அதே சமயம், விமானங்களில்பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலையை ரூ. 71028/லிருந்து ரூ. 39380/ஆகக் குறைத்து, தனியார் முதலாளிகளுக்குக் கருணை காட்டியிருக்கிறார்.


 நிதிச் சந்தையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தனியார் புகுந்து விளையாட அனுமதிக்கப்பட்டதால்தான், அமெரிக்காவில் வீட்டுக் கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் பொருளாதார நிபுணர்கள், இப்பொழுது அரசு நிதிச் சந்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், மன்மோகன் சிங்கோ இப்படிப்பட்ட சமயத்தில், இந்திய காப்பீடு துறையில் அந்நியப் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதற்கு இருந்த வரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தி, பன்னாட்டுச் சூதாட்டக் கும்பலுக்கு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறார்.


 முதலாளிகளுக்குச் சலுகைளை வாரி வழங்கினால், அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் சொட்டுச் சொட்டாகத் தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் வந்தடையும் என்ற தாராளமயக் கொள்கை பெருந்தோல்வியில் முடிந்து விட்டதைத்தான் இந்த நெருக்கடி உணர்த்துகிறது. ஆனால், மன்மோகன் சிங்கோ, அமெரிக்கா சொல்லிக் கொடுத்த அதே செக்குமாட்டுப் பாதையில்தான் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்.


 இந்த நெருக்கடி பற்றியும், மக்களின் சுமை பற்றியும் முதலைக் கண்ணீர் விடாத எதிர்க்கட்சிகளே கிடையாது. ஆனால், அவர்களிடம் மன்மோகன் சிங் நடைமுறைப்படுத்திவரும் தனியார்மயம்  தாராளமயத்திற்கு மாற்றான பொருளாதாரத் திட்டமோ, கொள்கையோ உண்டா? தனியார்மயம் தாராளமயத்தை எதிர்ப்பதாகக் கூறும் போலி கம்யூனிஸ்டுகள் கூட, அவர்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் தனியார்மயத்திற்குத் தான் வால் பிடிக்கிறார்கள் என்றால், மற்ற முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


 பொதுமக்கள், தேர்தல், ஓட்டுக்கட்சிகள், தனியார்மயம்  தாராளமயம் என்ற செக்குமாட்டுத்தனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய தருணமிது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் முன் வைக்கும் அரசியல்பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு போராட வேண்டிய வேளையிது!


· குப்பன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது