Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 செப்டம்பர் 29, 2008 அன்று நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாக்கூர், புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரமேஷ் உபாத்யாய், இராணுவப் பணியிலிருக்கும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித் மற்றும் தீவிர இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

 
 மராட்டியப் போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவின் கையிலிருக்கும் பதிவு செய்யப்பட்ட உரையாடலின்படி அந்தப் பெண் சாமியாரும் இந்த வழக்கில் இன்னமும் தலைமறைவாக இருக்கும் ராம்ஜி கல்சங்க்ராவும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்: "என்னுடைய வண்டி குண்டுவெடிப்புக்குப் பயன்பட்டிருக்குமேயானால், ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் இறந்திருக்கிறார்கள்?'', என்று பிரக்ஞா கேட்டதற்கு கல்சங்க்ரா, "அந்தக் கூட்டத்தின் நடுவில் வண்டியை நிறுத்த என்னால் முடியவில்லை'' என்று பதிலளிக்கிறார்.


 ஒருவேளை அப்படி நிறுத்தியிருந்தால் ஐந்து பேருக்குப் பதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இந்தப் பெண்சாமியாருக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிய இந்து மதவெறியர்கள் இப்போது இவருக்கு ஆதரவு கொடுப்பதில் போட்டி போடுகிறார்கள். காரணம் வர இருக்கும் தேர்தலில் இந்து அலையைக் கிளப்பி வாக்குகளைப் பெறவேண்டும் என்பதுதான். பிரக்ஞா தீவிரமான மதவெறியைக் கக்கும் பிரபலமான பேச்சாளர். சென்ற முறை குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியுடன் ஓரே மேடையில் பேசியிருக்கிறார். இது போக பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், ம.பி பா.ஜ.க. முதல்வர் சவுகான் ஆகியோரின் அருகில் இவர் இருக்கும் புகைப்படமும் வெளியாகிஇருக்கிறது.


 சங்கப்பரிவாரங்களின் எல்லா முக்கியத் தலைவர்களுக்கும் இந்த பெண் சாமியார் அறிமுகமாயிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைமையில் எல்லா வானரங்களும் கூடி இந்த வழக்கில் பிரக்ஞாவுக்கு எப்படி உதவ முடியும், அவருக்கு நியமிக்கப்படவேண்டிய வழக்கறிஞர், அதற்கான கட்டணம் எல்லாம் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். இப்போது அத்வானியே இந்த அம்மாவுக்காக குரல் கொடுக்க, உடனே மன்மோகன் சிங் இந்த வழக்கு சம்பந்தமாக  அத்வானியோடு  போனில் பேசியும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனை நேரில் அனுப்பியும் விளக்கமளிக்கச் செய்திருக்கிறார். மேலும், உண்மையறியும் சோதனையின் போது பதிவு செய்யப்பட்ட குறுந்தகடெல்லாம் அத்வானியிடம் போட்டுக் காண்பிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.


 விசாரணை நடக்கும் போதே அதன் விவரங்கள் ஒன்றுவிடாமல் இந்து மதவெறியருக்குப் போகிறது என்றால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடலாமே? இந்த சலுகை உலகில் வேறெந்தக் குற்றவாளிக்கும் கிடையாதே? தற்போது இந்த பெண் சாமியாரைக் காப்பாற்றுவதற்காக சிவசேனா, உமா பாரதி, பா.ஜ.க மூன்றுக்கும் பெரிய போட்டியே நடக்கிறது. உமா பாரதியோ அந்த சாமியாரிணிக்காக ம.பி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவே கூறியிருக்கிறார்.


 இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வைத்ததும் நாடும், ஊடகங்களும், இந்து மதவெறி அமைப்புக்களும் ஆடிய ஆட்டமென்ன? ஐ.எஸ்.ஐ சதி, ஜிகாதிப் போர், இறந்தவர்களின் துயரக் கதைகள் என்றெல்லாம் கிளப்பி விடுபவர்கள், இப்போது நேர்மாறாக ஏதோ தேச பக்தர்களைப் போல இந்த பயங்கரவாதிகளைக் காப்பாற்றுகிறார்கள். காங்கிரசும் இந்துக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வழக்கில் அடக்கி வாசிக்கிறது. இசுலாமியர்கள் குண்டு வைத்தால், நாடு முழுவதும் அப்பாவிகளைக் கொத்துக் கொத்தாய் கைது செய்யும் அரசாங்கம், இதில் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டிருக்கும் பெண் சாமியாருக்காக அத்வானியுடன் போனில் பேசி விளக்கமளிக்கிறது என்றால், இதன் அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம்.


 அகமதாபாத் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தனது மகன் அப்படிக் குற்றம் செய்திருப்பின் அவனைத் தூக்கில் போடவேண்டும் என்று பேசினார் ஒரு இசுலாமியத் தாய். இங்கோ பெண் சாமியாரின் தந்தை ஆர்.எஸ்.எஸ் இன் உறுப்பினராக இருப்பவர் தான் பெருமைப்படுவதாக பேட்டி கொடுக்கிறார். ஆக நாடு முழுவதும் இத்தகைய பொதுக் கருத்து இருக்கும் பட்சத்தில் இந்து மதவெறியர்கள் குண்டு வெடிப்பதை பெரிய அளவில் செய்தாலும் அது குறித்து யாரும் கவலைப்படப் போவதில்லை. இசுலாமியத் தீவிரவாதிகள் இசுலாமிய மக்களிடமே தனிமைப்பட்டிருக்கும் போது, இந்து பயங்கரவாதிகள் இந்துக்களின் நேரடியான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், இதுதான் இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பெரிய அபாயம்.


 இது வெளிநாட்டிலிருந்து அல்ல, உள்நாட்டிலிருந்தே தூண்டிவிடப்படும் பயங்கரவாதம். மேலும் குண்டு வெடிப்பு என்ற தீவிரமான செயல்பாடுகளுக்கே இந்தத் தீவிரவாதிகள் சமூகத்தாலும், சட்டத்தாலும் தண்டிக்கப்படவில்லை என்றால், இவர்கள் முசுலீம்களுக்கெதிரான கலவரத்தில் என்னவெல்லாம் செய்வார்கள்? அதையும் இனிமேல் செய்யவேண்டுமென்பதில்லை, குஜராத் 2002 கலவரத்திலேயே இதைப் பார்த்திருக்கிறோம்.


 பூனேவில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் மூலம்தான், அவர் பணியில் இருக்கும்போதுதான் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து    இந்து பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்குப் பல சுற்றுக்கள் அபாயங்கள் தாண்டிக் கிடைக்கும் இந்த நவீன வெடி மருந்து இந்து பயங்கரவாதிகளுக்கு சுலபமான வழியில், கைக்கெட்டும் தூரத்தில் இந்திய இராணுவத்திடமிருந்து கிடைக்கும் என்றால், இசுலாமிய மக்களின் கதி என்ன? ஏற்கெனவே பல கலவரங்களில் இசுலாமிய மக்களை இராணுவம் கொன்றதிலிருந்து, அதன் இந்து சார்பு வெளிப்பட்டிருக்கிறது. தற்போது இவர்களே குண்டு வெடிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றால், இந்திய இராணுவம் இந்து மதவெறியர்களின் இராணுவமன்றி வேறென்ன?


 இந்த விசயத்தை மேலோட்டமாகக் கண்டிக்கும் துக்ளக் சோ, ஒருவேளை இராணுவம் மற்றும் உளவுத் துறைகள் பயங்கரவாதத்திற்கு எதிராக இத்தகைய எதிர் நடவடிக்கைகளில் (அதாவது குண்டு வெடிப்புக்கள்) ஈடுபட்டால், அது இரகசியமாக இருக்கவேண்டுமென ஆலோசனை கூறுகிறார். இதன்மூலம் இந்திய உளவுத் துறை அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அங்கீகாரமும் வழங்குகிறார். இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வெடித்தால், அது நிரூபிக்கப் படாமலேயே அவர்களைக் கொன்று அழிக்க வேண்டுமெனச் சாமியாடும் இந்த மொட்டைத் தலையன், இந்து பயங்கரவாதத்திற்கு மட்டும் இனப்பாசத்தோடு வக்காலத்து வாங்குவதை என்னவென்று சொல்ல? மற்ற குண்டுவெடிப்புக்களின் போது மத்திய அரசு தீவிரவாதிகளை மென்மையாக நடத்துகிறது, பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று துள்ளியவர்கள், இப்போது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே?


  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக  நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, சிமி இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதன் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாமல் வதைக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் எல்லா இந்து மதவெறி அமைப்புக்களிலும் இருந்து வருவதற்கு எல்லா வகை ஆதாரங்களும், புகைப்படமும், வீடியோவும் இருந்தாலும்  விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபிநவ பாரத், ஹிந்து ஜாக்கரன் மன்ஞ், துர்கா வாஹினி, ஆர்.எஸ்.எஸ் போன்ற உண்மையான பயங்கரவாத அமைப்புக்கள் எவையும் தடை செய்யப்படவில்லை. அல்லது அப்படி தடைசெய்யவேண்டுமென ஒரு விவாதம் கூட ஊடகங்களிலும், தேசிய அரங்கிலும் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, தடை செய்யப்பட வேண்டிய இந்த இயக்கங்களின் தலைவர்கள் எல்லாம் வெளிப்படையாக பிரக்ஞா சிங்கிற்கு ஆதரவளித்து வருகிறார்கள்.


 நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நாட்டில், பட்டவர்த்தனமாக பயங்கரவாத செயல்களைச் செய்யும் தலைவர்கள் அங்கீகாரத்துடன் உலா வந்தால் என்ன நடக்கும்? நிச்சயமாக பாசிசம்தான் வரும். எப்படி ஹிட்லர் சட்டபூர்வ வழிகளில் தொடங்கி, பின்னர்  ஆட்சியைக் கைப்பற்றி எதிரிகளை சட்டப்படியே வேட்டையாடினானோ அதுதான் இங்கும் நடக்கப்போகிறது என்று கணித்தால் அது மிகை மதிப்பீடல்ல. பாசிசத்திற்கு முன்னோட்டமாக இங்கிருக்கும் எல்லா நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் இந்துத்வத்திற்கு ஆதரவாக இயங்குமாறு மாற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மலேகானில் அப்பாவி இசுலாமிய மக்களின் உயிரைக் குடித்த பயங்கரவாதிகள் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள்.


 இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அந்த மதத்தின் அப்பாவி மக்களையே பல இன்னலுக்குள்ளாக்குகிறது என்றால், தீவிரவாதத்திற்குப் பலியான இளைஞர்களை எப்படி நடத்துமென்று விளக்கத் தேவையில்லை. இதனால் இசுலாமிய தீவிரவாத்திற்கு ஆள் பிடிப்பதற்கும், குண்டு வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கும் மிகுந்த பிரயத்தனங்கள் செய்யவேண்டும். முக்கியமாக, இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரங்களில் தமது உற்றார் உறவினரைப் பலிகொடுத்து, அதற்குப் பழிவாங்கும் முகமாகச் சில இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை மேற்கொள்கிறார்கள். அதுவும் இந்து மதவெறியரை இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தண்டிக்கப் போவதில்லை என்பதை தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து அப்படி மாறுகிறார்கள். இப்போது இந்து பயங்கரவாதத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அந்த எண்ணத்தை வளர்க்கவே உதவி செய்யும்.


 ஆகவே, இந்து பயங்கரவாதத்தின் வருகையும், இருப்பும், அது தண்டிக்கப்படாததும் பல இன்னல்களை இந்நாட்டிற்கு ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம். இந்த அபாயத்தை நாம் சட்டபூர்வமாகப் போராடி ஒழிக்க முடியாது என்பதால், இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து அம்பலப்படுத்தித் தண்டிக்க வேண்டும். அது நிறைவேறாத பட்சத்தில், இந்து மதவெறி பாசிசம் நாட்டை கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் நாட்டிற்கு அளிக்கும் செய்தி.


· இளநம்பி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது