Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை.  அவர்கள் மட்டுமல்ல,  பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.


 போலீசின் தேடுதல் வேட்டைக்குப் பயந்து தாழ்த்தப்பட்ட ஆண்கள் அனைவரும் காடுகளில் ஒளிந்து வாழும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ள நிலையில் பெண்களே பாடைகட்டி எடுத்துச் சென்று சித்ராவை அடக்கம் செய்துள்ளனர்.


 உத்தப்புரத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர், கொடிக்கால் பிள்ளைமார் குடியிருப்பிற்குள் வரக்கூடாதென்பதற்காக, 300 அடி நீளச் சுவர் ஒன்றை எழுப்பி 18 ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர், அச்சாதியினர்.  இந்த ஆண்டு  ஏப்ரல்மே மாதங்களில் "மார்க்சிஸ்ட்' கட்சி இச்சுவரை இடிக்கக் கோரிப் போராடியது.  "மார்க்சிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் அங்கு வரப்போவதாய் அறிவித்தார். உடனே, வெறும் 15 அடி நீளச்சுவரை மட்டும்  அவசரமாய்  தமிழக அரசே இடித்துப் பொதுப்பாதை ஒன்றை உருவாக்கியது.


 சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஆதிக்கசாதியினர் மலையில் குடியேறப் போவதாய் நாடகம் ஆடினர். ரேசன் கார்டுகளைத் திருப்பித்தரப் போவதாக அரசை மிரட்டினர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் அவர்களை உள்ளே தள்ளாமல் அரசு அவர்களிடம் சமரசம் காணப் பேச்சுவார்த்தை நடத்தியது. எண்ணிக்கையில் சிறுபான்மையினரான கொடிக்கால் பிள்ளைமாருக்கு தேவர் சாதி உள்ளிட்ட இதர ஆதிக்க சாதிகள் கொம்பு சீவி விடும் வேலையைச்  செய்தன. ஊரைவிட்டு வெளியேறி மலைப் பகுதியில் சென்று தங்கிய அவர்களுக்கு உணவும் மருந்தும் தந்து டாக்டர் சேதுராமன் என்ற தேவர் சாதித் தலைவர் அன்புக்கரம் நீட்டினார்.  பத்திரிக்கைகளோ "மலையில் குடியேறிய மக்கள் வாடிவதங்குவதாக'க் குடம் குடமாய்க் கண்ணீர் வடித்தன. 


 உத்தப்புரத்தில் சுவர் இடிபட்டதும்  தமது சாதியின் ஆதிக்கத்தையும்  எங்கே அசைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அப்பகுதியிலுள்ள குமணன் தொழு என்ற ஊரில் தேவர்சிலையைத் தேவர் சாதி வெறியர்களே அவமரியாதை செய்து விட்டு, தாழ்த்தப்பட்டோர் மீது குற்றம் சாட்டி சாலைமறியல் செய்தனர். சமரசம் பேசவந்த அதிகாரிகளிடம் அவர்கள், ""தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டு விசேசங்களில் வெடிவெடிக்கக்கூடாது'' போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.


 செப்டம்பர் மாதம் உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்டோர் வீட்டுத் திருமணம் ஒன்றில் வெடிவெடித்தபோது, உத்தப்புரத்தின் ஆதிக்கசாதியினர் தகராறு செய்துள்ளனர். தகராறு செய்தவர்களைக் கைது செய்திருக்க வேண்டிய போலீசுதுறையோ, ¬தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த வைரம், மகாலிங்கம் ஆகியோரைக் கைது செய்தது.


 இடிக்கப்பட்ட சுவரை ஒட்டிய பகுதியில் நிலத்தகராறு உருவாகி, செப்டம்பர் இறுதியில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இருதரப்பிலும் 15 பேர்கள் வீதம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.


 அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் பிள்ளைமார்கள் முத்தாலம்மன் கோவிலுக்கு ரூ.12 இலட்சம் செலவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து, கோவில் சுற்றுச் சுவருக்கு வெள்ளை அடிக்கத் தொடங்கினர். முத்தாலம்மன் கோவில் பிள்ளைமார்களுக்குச் சொந்தமானது என்றாலும், அக்கோவிலுக்கு அருகில் இருக்கும் அரசமரம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமானது. அம்மரத்தை வழிபட அவர்கள் கோவிலுக்கு அருகில் வரக்கூடாது என்று பிள்ளைமார் கட்டுப்பாடு விதித்ததால் ஏற்பட்ட தகராறு இன்னும் தீராமல் இருந்து வருகிறது.


 இந்நிலையில் பொதுச்சுவர் என்று கூறப்படும் கோவில் சுவருக்கு வெள்ளை அடிப்பதனை தாழ்த்தப்பட்டோர் எதிர்க்கவே, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கற்களாலும் நாட்டுவெடிகுண்டுகளாலும் தாக்கிக் கொண்டனர். போலீசார் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுக் கூட்டத்தைக் கலைத்தனர். 


 கிராம நிர்வாக அதிகாரி சீனியப்பன், தெற்குத்தெருவில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டும் குறிப்பாகப் புகார் கொடுத்தார். இதனை அடுத்து,தெற்குத்தெருவில் இருக்கும் ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்தனர்.  போலீசாரோ சாதிவெறியுடன் தாழ்த்தப்பட்டோர் வீடுகளை அடித்து நொறுக்கினர். சுமார் 76 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்விசிறிகள், குழல் விளக்குகள், ஜன்னல் கதவுகள் அனைத்தும் சிதைக்கப்பட்டன. சுவிட்சுகளையும் பம்புசெட்டுகளையும் கூட போலீசார்  விட்டுவைக்கவில்லை.


 ஓடிஒளிந்து கொண்ட ஆண்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தெற்குத்தெருப் பெண்கள் யாருக்குமே தெரியாது. சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் வரை மாவட்ட ஆட்சியர் அங்கு வரவில்லை. போலீசாரின் தாக்குதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மருத்துவ வசதிகளைக்கூட அரசு செய்து தரவில்லை. "மார்க்சிஸ்ட்' கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மோகன், மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தார். அரசு கொடுத்த அழுத்தத்தால் அதுவும் மறுநாளே நிறுத்தப்பட்டு விட்டது.


 இந்நிலையில்தான் சித்ரா இறந்துபோனார். அவரின் இறுதிச் சடங்குக்குக் கூட ஆண்களை வரவிடாமல் போலீசு குவிக்கப்பட்டது. வேறுவழியின்றிப் பெண்களே சவ ஊர்வலமும், இறுதிச்சடங்கும் செய்தனர்.

 கோவில் தகராறில் இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், பெண்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே வழக்குகள் போட்டு சாதிக்கறை படிந்த போலீசு  அவர்களைப் பழிவாங்கியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் உட்பட தலைமறைவாய் இருந்த சுமார் 116 பேர்கள் மீது 520 வழக்குகளைப் போட்டுள்ளது.


 இத்தனை துயரங்களையும் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்துக் கொண்டிருக்கையில், பிள்ளைமார்களோ கும்பாபிசேகம் நடத்தியே தீர்வது என்று அடம் பிடித்தனர்.


 பெற்ற தந்தையைக்கூட  சித்ரா இறந்தபோது வரவிட முடியாமல் தடுத்த போலீசும் அரசும், கொடிக்கால்பிள்ளைமார்களுடன் சமமாக உட்கார்ந்து கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தன. பேச்சுவார்த்தை பலனளிக்காமல் போகவே  அரசு, உத்தப்புரத்தில் 144 தடையுத்தரவு போட்டுள்ளது. இதனால் குடமுழுக்கு தடைபட்டுப் போகும் எனக் கூறி, இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆதிக்கசாதி வெறியர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.


 உத்தப்புரத்தில் பிள்ளைமார்களை உசுப்பேற்றி விட்டு அவர்களுடன் கூட்டணி கட்டி தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குவது என்னும் நோக்கில் அவ்வட்டாரத்தில் இருக்கும் அனைத்து இடைநிலை ஆதிக்க சாதியினரும் ஒன்றாய் அணிதிரண்டுள்ளனர். அரசும் அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்கிறது. போலீசோ, சாதிக்கூட்டணியின் ஏவல்நாயாகச் செயல்பட்டு, இன்னொரு கொடியங்குளத்தை நடத்தி இருக்கிறது.


 சி.பி.எம். கட்சி, தாழ்த்தப்பட்டோர் மீதான போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு நீதிவிசாரணை கோரியும் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடு கோரியும் போராடியது. அரசோ இவ்விரண்டையும் செய்யாமல் இருதரப்பையும் சேர்த்து "அமைதிக் குழு' வை மட்டும் அமைத்துள்ளது.


 கடந்த 5 மாதங்களில், எங்கெல்லாம் சம உரிமைக் கோரிக்கைகளை தாழ்த்தப்பட்டோர் எழுப்புகிறார்களோ, அங்கெல்லாம் உத்தப்புரம் பிள்ளைமாரின் மிரட்டல் நாடகத்தை அப்படியே பின்பற்றி ஆதிக்கசாதியினர் மலைக்குக் குடியேறுதல், குடும்ப அட்டையை ஒப்படைத்தல் என அரசை மிரட்டிப் பணிய வைக்கின்றனர். தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த காக்கிவாடன்பட்டி, பெருமாள்பட்டி (சின்னாளபட்டி) முதலான ஊர்களில் இதே பாணியைப் பின்பற்றுகின்றனர்.


 இந்நிலையில், உத்தப்புரத்தில் சி.பி.எம்.மின்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கைகள்  என்ன?  மே மாதம் சுவரினை இடித்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? திறக்கப்பட்ட பாதையில் தாழ்த்தப்பட்டோர் சென்றுவர இன்னமும்  பயந்து கொண்டுதானே உள்ளார்கள்? இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமனம் வரை வேரோடிக்கிடக்கும் சாதிவெறியை ஒரு கடப்பாரை தகர்த்துவிடுமா?


 சுவரினை இடித்ததும் வெற்றிக்களிப்பில் மிதந்த சி.பி.எம். கட்சி, அடுத்தகட்டமாக ஆதிக்க சாதியினர் மத்தியில் இருக்கும் நடுநிலை சக்திகளை வென்றெடுத்து, சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் அரசையோ, சாதிவெறியர்களுடன் கள்ளக் கூட்டுச் சேர்ந்துள்ள ஓட்டுக் கட்சிகளையோ அம்பலப்படுத்தவும் முன்வரவில்லை.


 இவற்றில் எதையுமே செய்யாமல் சாதி ஆதிக்க அடையாளச் சின்னத்தை இடிப்பதால் மட்டும் சாதி ஆதிக்கத்தை முறியடித்துவிட முடியாது. சாதி ஆதிக்க வெறியர்களுடன் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் கூட்டணி கட்டியுள்ள பிழைப்புவாத ஓட்டுக் கட்சிகளையும் அரசையும் அம்பலப்படுத்தி வீழ்த்தாமல், தீண்டாமைக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவே முடியாது என்பதை மீண்டுமொரு முறை உணர்த்தியிருக்கிறது, உத்தரப்புரம்.


· சம்புகன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது