Language Selection

ஸ்டாலின்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்லா கட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பற்றியும், அரசாங்கம் தரும் ஆதாயத்திற்காக ஆளும் கட்சிகளிடம் வளைந்து குனிந்து அவர் ஒத்து ஊதி வருவதை பற்றியும் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


ஜெயலலிதா 5 லட்சம் ரூபாய் கொடுத்தவுடன் அவரை 'சமூகநீதி காத்த வீராங்கனை' ஆக்கியவரும் அவர்தான். ஜெயலலிதா அவருக்கு ரூ 1 லட்சமும் விருது தருவதாக அறிவித்தவுடன் "எனது ஆயுள் உள்ளவரை உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்" என்று விசுவாசத்துடன் ஜெ.யின் காலைச் சுற்றிவந்தவரும் அவர்தான். இன்று ஆளும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பெரியார் விருது கொடுத்து கெளரவித்துக் கொண்டிருப்பவரும் அவர்தான்.

பெயரை சொல்லிக் கொண்டு இப்படி தொடர்ந்து குரங்காட்டம் ஆடிவந்த வீரமணி கும்பல் பெரியாரின் சொத்துக்களுக்கு மட்டுமல்ல அவரது
எழுத்துக்களூக்கும் பேச்சுக்களுக்கும் கூட நாங்கதான் அத்தாரிட்டி என்று வலம் வந்தது.இன்று காசு வரும் என்றவுடன் பெரியாரையும் தூக்கி கடாசிவிட்டு மேடைதோறும் பெரியாரை கேவலமாக திட்டிவந்த சாதி வெறித் தலைவன் முத்துராமலிங்கத்தின் குருபூஜை விளம்பரத்தை விடுதலையில் வெளியிட்டிருக்கிறது வெட்கம் கெட்ட வீரமணி கும்பல்.




தமது கல்வி நிறுவனங்களிலும் மற்றைய பொறுப்புகளிலும் கள்ளர் சாதியினருக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கள்ளர்களின் கட்சியாக சீரழிந்திருக்கும் திராவிடர் கழகம், முத்துராமலிங்க தேவனின் பிறந்த நாளுக்கு விளம்பரம் வெளியிட்டிருப்பது பொருத்தமானதுதான் என்றாலும், யார் இந்த முத்துராமலிங்கம் என்ற வரலாற்றை நாம் பார்க்க வேண்டும், அப்பொழுதுதான் இந்துத்துவத்தையும், பார்ப்பனீயத்தையும் எதிர்ப்பதாகவும் பெரியாரை உயர்த்தி பிடிப்பதாக பசப்பித் திரியும் திராவிடர் கழகத்தை நாம் இனங்கான முடியும்.

யார் இந்த முத்துராமலிங்கம்..

1. முத்துராமலிங்கம் பெரியாரை "பிரிட்டிஷ்காரனின் கைக்கூலி", "சின்னப்பிள்ளைகளைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வரும் கிழவன்", "சுடுகாட்டுக்குப்போகும் வயதில் சின்னப்பொண்ணைக் கல்யாணம் முடித்தவன்", "வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்" என்றெல்லாம் ஏசியவர்.

2. தி.க. விதந்து போற்றும் அண்ணாதுரையை மதுரையில் பொதுமேடையிலேயே "தேவடியா மகன்" என்று சொன்னவர்

3. காமராசரை "கீரை விற்றவன்லாம் முதலமைச்சர்", "தற்குறி", "ஒரு அணாவுக்குக் கூட பிரயோசனமில்லாதவன்", "கள்ளநோட்டுப் பேர்வழி", "இங்கிலீசு தெரியாமல் நமது மானத்தை வாங்குபவன்" என்றெல்லாம் இழித்துப் பேசி தன் சாதித் திமிரை காட்டியவர்

4. முசுலிம்களுடன் சமரசம் செய்துகொள்ளவும், அகிம்சையை இந்துக்களுக்குப் போதிக்கவும் செய்த காந்திக்கு இழிவான சாவுதான் கிடைக்கும் என்றவர். காந்தியைக் கொன்ற கும்பலின் தலைவர் கோல்வர்க்கருக்கு விழா எடுத்துப் பணமுடிப்பு தந்தவர்.

5. முதுகுளத்தூரில் முசுலிம்களுக்கு எதிராக கலவரத்தை விதைத்தவர்

6. இந்துமகாசபைக்கு கமுதியில் அமைப்பு கட்டி தலைவராக இருந்தவர்

7. தாழ்த்தப்பட்டோர் தலைவர் இம்மானுவேலைக் கொல்லத் தூண்டியவர்

8. திமுக திக வை தேசத்துரோகக் கும்பல் என்று வாழ்நாள் முழுக்க வசைபாடியவர்

9. காமராசர் கல்வியைப் பரவலாக்கியபோது அதற்கு முதுகுளத்தூர் வட்டாரத்தில் முட்டுக்கட்டை போட்டவர். "பள்ளிக்கூடம் எல்லாம் வந்திட்டா எல்லோரும் படிச்சிடுவான். நமக்கு எவனும் பயப்பட மாட்டான்" என்று கருத்து சொன்னவர்.

10. பெரியாரே முத்துராமலிங்கத்தையும் அவரது அரசியலையும் "தேர்தல் வரும்போது மட்டும் கொடியை ஏற்றிக்கொள்ளும் கட்சி" என்றும் "நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது மட்டும் ஒரு கொள்கையா?" என்றும் நக்கல் செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த, இந்துத்துவத்தை வேரூன்றி வளர்த்த, சாதி ஒழிப்பிற்கென பாடுபட்ட பெரியாரையும் மற்ற தலைவர்களையும் தனது விரோதியாய் கருதி செயல்பட்ட முத்துராமலிங்கத்திற்குத்தான் பெரியார் தொடங்கிய பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிட்டு காசு பார்த்திருக்கிறது வீரமணி கும்பல். முத்துராமலிங்கத்தின் குருபூஜை விழாவுக்கு விளம்பரம் வெளியிடுமாறு அரசு கொடுத்தால் அதனை மறுக்கவே முடியாதா? முடியும், அரசு விளம்பரங்களில் சிலவற்றை நிராகரிக்கவும் இயலும். வெளியிட்டே ஆகவேண்டிய கட்டாயமில்லை. நிராகரித்தால் சில ஆயிரங்கள் நஷ்டமாகும். அவ்வளவுதான். ஆனால் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய வீரமணி கும்பல் அதை நிராகரிக்க துணியுமா? ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பெரியார் நினைவு மலரில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, அறந்தாங்கி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.விடமே விளம்பரம் வாங்கி மலரில் சேர்த்திருந்தவர்கள் இந்த விளம்பரத்தை மறுப்பார்கள்என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?


அரசு காசு தருவதால் முத்துராமலிங்கத்துக்கு விளம்பரம் செய்யும் வீரமணி, காசு தந்தால்
குத்தூசி குருசாமி விழாவுக்கு விளம்பரம் செய்வாரா? செய்யமாட்டார்.. துரோகிகளுக்கு இடமில்லை என்பார். பெரியார் கொள்கையைப் பரப்பும் வாலாசா வல்லவனை பெரியார் திடல் நூலகத்துக்குள்ளேயே வரவிடாமல் தடுக்கும் இக்கும்பல் பெரியாரின் எதிரியும், சாதிவெறித்தலைவருமான முத்துராமலிங்கத்தை விடுதலையில் ஏற்றுகிறது. மானமுள்ளவர்கள் வீரமணியை விட்டு விலக வேண்டும். பெரியாரின் சாதி ஒழிப்பு சிந்தனையை ஆதரிப்பவர்கள் வீரமணியின் பித்தலாட்டத்தை முறியடிக்க முன்வரவேண்டும்.

தேவருக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுக்கிறது.. புரிகிறது நமக்கு.

ஓட்டுப் பொறுக்க அனைத்து ஓட்டுக்கட்சிகளும் சமாதிக்கு ஓடுகின்றன..

எதனைப் பொறுக்க இவர்கள் தேவரை 'விடுதலை'யில் தூக்கி வைக்கிறார்கள்?

காசுக்காகச் சோரம் போகும் இவர்களுக்கெல்லாம் 'மானமிகு' பட்டம் எதற்கு?

http://kedayam.blogspot.com/2008/10/blog-post.html