Language Selection

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நம் மக்களிடையே பேசுவதற்காக நான் லூதியானாவிற்கு தற்பொழுதுதான் முதல் முறையாக வந்திருக்கிறேன். நீங்கள் திரளாகக் கூடியிருப்பது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில், நடைபெற இருக்கும் தேர்தலில் பல்வேறு கட்சிகள் பங்கேற்க விருக்கின்றன. இத்தேர்தலில் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் (scheduled castes federation) தமது வேட்பாளர்களை முன்னிறுத்துகிறது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களில் மட்டுமல்லாது, நம்முடைய வாக்குகள் கணிசமாக உள்ள சில பொதுத் தொகுதிகளிலும் நமது உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள். நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றே நான் நம்புகிறேன்.

 

நம்முடைய வேட்பாளர்களின் வெற்றி, நம் மக்களையே பெருமளவில் சார்ந்திருக்கிறது. நம்முடைய மக்கள் அனைவரும் நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், வெற்றி உறுதியாகக் கிடைக்கும். எனவே, அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமான ஒரே அமைப்பான “பட்டியலினக் கூட்டமைப்பு’ உறுப்பினர்களுக்கு, நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்…

 

பல்லாண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகுதான், நாம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில முக்கிய அரசியல் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். இருபது ஆண்டுகளாக நான் ‘மகாத்மா’ காந்திக்கு எதிராகப் போரிட்டேன். அவர், நமக்கு தனித்துவமான சிறப்பு உரிமைகளை வழங்கும் திட்டத்திற்கு எதிராக இருந்தார். தீண்டத்தகாத மக்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டால், அவர்கள் ஒருபோதும் இந்து அமைப்புக்குள் வர மாட்டார்கள் என்று அவர் வாதிட்டார். அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இந்துக்களிடமிருந்து விலகி, தனித்தே நின்றுவிடுவார்கள் என்றார். வட்டமேசை மாநாட்டிலும்கூட, நம்டைய இரட்டை வாக்குரிமை கோரிக்கையை அவர் எதிர்த்தார். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு நாம் ஓரளவு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளோம். தற்பொழுது, சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி இடங்களுக்கு, நாம் நமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்.

 

இத்தகைய நம் உரிமைகளை எல்லாம், பல அரசியல் கட்சிகளும் பறித்துவிட முனைப்பாக இருக்கின்றன. அவர்கள் நம்முடைய வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ஆதரவாளர்களை, நமக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புகின்றனர். அவர்களுடைய நோக்கங்களை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்ட மக்கள் தற்பொழுது இருக்கும் நிலையிலேயே நீடித்திருக்க வேண்டும்; அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது; நம் மக்கள் காலங்காலமாக செய்து வரும் இழிவான தொழில்களையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, வரும் தேர்தலில் நீங்கள் வாக்களிப்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்டைய வாக்குகள் மூலம் உண்மையான பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சட்டத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும்.

 

சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் நம்டைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், நாம் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாகவே இருக்கும். இது, ஆதிக்க சாதியினருக்கான சுதந்திரமாகவே இருக்கும்; நமக்கானதாக இருக்காது. ஆனால், நம்டைய உண்மையான பிரதிநிதிகள், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இருந்தால்தான், நம்முடைய பிரச்சினைகளும், கோரிக்கைகளும் தீர்க்கப்படும், அப்பொழுதுதான் நமது குழந்தைகள் போதிய கல்வியைப் பெற முடியும்; நம்முடைய வறுமை ஒழியும், அப்போதுதான் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நமக்கு சமமான பங்கு அளிக்கப்படும்.

 

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பினும், பிற கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதில் தேவையின்றி தலையிடுகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில், தங்களுடைய ஆதரவாளர்களையே நிறுத்துகின்றனர். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள், தங்களுடைய கட்சித் தலைவர்களின் நலன்களுக்கு எதிராக, நம்டைய நலன்களைப் பாதுகாப்பார்களா? அவர்கள் நமக்காக என்ன செய்வார்கள்?

 

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் பற்றி, நான் சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். அந்த முப்பது உறுப்பினர்களும், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர்கூட, நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி கேள்வி எழுப்பியதில்லை. அப்படியானதொரு கேள்வி எழுப்பப்பட்ட போதும், அவைத் தலைவர் இதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அத்துடன் இப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.

 

- தொடரும்
28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை

http://ambedkarr.wordpress.com/category/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது