Language Selection

மு.மயூரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

னடாத்தடைக்கு எங்களவர்கள் அங்கே கருத்தாதரவு தேடாததுதான் காரணம் என்கிறார் சிவத்தம்பி.

குழந்தைகளை கொன்றதை சர்வதேச சமூகத்தின் மத்தியில் கொண்டுசென்று பரப்புரைக்குமாறு வேண்டுகின்றன புதினம், நிதர்சனம் உள்ளிட்ட வலைத்தளங்கள்.

சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்கிறார் தமிழ் செல்வன்.

 

 

அதையே தம்பக்கமிருந்து சொல்கிறார் மகிந்த.

எங்குபார்த்தாலும், யாரைக்கேட்டாலும், ஒருவார்த்தை மிகவும் பிரபலமாகி இருக்கிறது. அதுதான் "சர்வதேச சமூகம்".

சர்வதேச சமூகம் என்றால், உலக நாடுகளில் வாழ்கின்ற மக்களா? அவர்கள் எப்படி எமது பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு தேடித்தருவார்கள்?

பெரும்பாலும், நாட்டை ஆள்வது மக்கள் இல்லை என்பதாலும், இயல்பிலேயே தேர்தலைத்தவிர மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும், ஆளும் சபைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதாலும், இவ்வாறான நெருக்குவாரங்களை பிரயோகிக்கும் வல்லமையுள்ள சர்வதேச சமூகம் அவர்கள் இல்லை என்று ஆகிறது.

அப்படியானால் சர்வதேச சமூகம் என்பது, உலக நாடுகளை ஆளும் அரசாங்கங்களாகத்தான் இருக்கவேண்டும்.

உலக நாட்டு அரசாங்கங்கள் எல்லாமே சர்வதேச சமூகம் தானா?

கியூபாவும், கென்யாவும் சோமாலியாவும் மாலைதீவும் இலங்கை பிரச்சனையில் கருத்துக்கூறினால் அதற்கு ஏதாவது அர்த்தம் இருப்பதாக யாரேனும் கருதுவார்களா?

ஆக சர்வதேச சமூகம் என்பது படைபலம், உலக, பிராந்திய அரசியல் வல்லாதிக்கம் கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள். அதிலும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள்.

 

இந்த நாடுகளின் அரசாங்கங்கள் எல்லாம் என்ன? தம்மளவில் சுயாதீனமான, ஜனநாயகவழியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா? ஒருபோதுமில்லை. அந்தந்த நாடுகளின், உலகின் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள்.

ஆகமொத்தத்தில் சர்வதேச சமூகம் என்பதற்கான சரியான விளக்கம், உலகத்தின் அதிகாரவர்க்கங்கள் என்பதாகத்தான் அமையமுடியும்.

 

இலங்கையை பொறுத்தவரையில்; இந்திய பிராந்திய அதிகார வர்க்கத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த 'அதிகாரவர்க்கம் ஸ்ரீஸ்ரீ சர்வதேச சமூகத்தின்' உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பணிகளை முன்னெடுத்துச்செல்லும்படித்தான் இந்த ஊடகங்களும் ஆய்வாளர்களும் பெரும் கூக்குரலும் கூச்சலும் எழுப்பி வருகிறார்கள்.

இந்த 'அதிகார வர்க்கம் ஸ்ரீஸ்ரீ சர்வதேச சமூகம்' தான் இந்த சமாதான பேச்சுவார்த்தைகளை கண்காணித்து நடத்தி வருகிறதாம்.

இவர்கள் எல்லாம் பரப்புரை செய்து, கூக்குரலிட்டு காலில் விழுந்து போட்டோ காட்டினால்தான் இந்த 'அதிகார வர்க்கம் ஸ்ரீஸ்ரீ சர்வதேச சமூகம்' எமது பிரச்சனைகளை புரிந்துகொண்டு சிங்கள பேரினவாதிகளின் குரல்வளையை நெரித்து தீர்வினை பறித்தெடுத்து வெற்றிலை பாக்கோடு கொண்டுவந்து வைக்குமாம்.

அவர்கள் என்ன அன்றாடம் பேப்பர்கூட படிக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் ஆட்களா?

இந்த அதிகார வர்க்கத்தின் கையில் தான் சீ ஐ ஏ, கே ஜீ பீ, ரோ உள்ளிட்ட அதியுயர் மூளையும், அதி நவீன தொழிநுட்ப வளங்களும் கொண்ட உளவு நிறுவனங்கள் இருக்கின்றன.

அவை எல்லாம் அவர்களது அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே பணியாற்றுகின்றன.

அவர்களிடமே உலகை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய இராணுவ, ஆயுத பலம் இருக்கிறது.

பொருளாதார பலம் இருக்கிறது.

அவர்கள் தான் தமது இருப்புக்காகவும், இலகுவான சுரண்டலுக்காகவும் உலகம் முழுக்க போராட்டங்களை எரியச்செய்தவண்ணமிருக்கின்றனர்.

அவர்களிடத்தில் போட்டோ காட்டி கண்ணீர் சொரிந்து சுலோகம் ஏந்தி "கருத்தாதரவும்" "கருணையும்" வேண்டி எமது தீர்வை வாங்கித்தருமாறு மன்றாடச் சொல்கிறார்கள்.

இந்த வலைத்தளங்களுக்கெல்லாம் வருவதற்கு முதல் செய்திகளும் போட்டோக்களும் அவர்களைத்தான் சென்றடைகின்றன. சிலவேளை சம்பவம் நடக்க முன்னரும் கூட சென்றடைந்துவிடுகின்றன.

எமது பத்திரிகைகளின் அரசியல் ஆய்வாளர்களுக்கும், வியூகம் வகுப்பாளர்களுக்கும், பீஷ்மர்களுக்கும், விதுரர்களுக்கும் தகவல் கிடைக்குமுன்னமே, தலைகளை கொய்தவர்கள் யார் என்பதும், விக்கியை சுட்டது எதற்காக என்பதும் அவர்களுக்கு தெரிந்து விடுகின்றது. சுட்ட துப்பாக்கியே அவர்கள் அனுப்பி வைத்ததாகவும் இருக்கக்கூடும்.

இந்த அதிகார வர்க்கம் தனக்கு தேவையான நேரங்களில் தேவையான போராட்டங்களை கைதூக்கி விடும், தேவையான நேரங்களில் தேவையில்லாத போராட்டங்களை காலடியில் போட்டு நசுக்கும்.

அத்தனையும் தமது இருப்புக்காகவும், சுய நலத்திற்காகவும், அதிகாரத்தக்கவைப்புக்காகவும் செய்யப்படுவது.

இந்த வர்க்கத்திடம் விலைபோன தலைவர்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

சுயநலமும் வஞ்சகமும் கோரமும் வெடித்து ஒழுகும் அதிகாரவர்க்க முகத்தை மறைத்து அழகாக அது அணிந்துகொள்ளும் முகமூடியே, மாய முகமே "சர்வதேச சமூகம்" என்கிற பெயர்.

இது வெற்று மாயை. தொலைகாட்சிகளாலும், அறிக்கைக்காகிதங்களாலும் மேடைப்பேச்சாளர்களாலும் உருவாக்கப்பட்டு பேணிப்பாதுகாக்க்கப்படும் மாய்த்தோற்றம்.

பீ பீ சீ , ரொய்த்தர்ஸ், சீ என் என் போன்ற உலகப்பெரும் உடகங்களை பயன்படுத்தி இந்த மாயத்தோற்றத்தை வெகு நுட்பமாக வளர்த்து வைத்திருக்கிறார்கள். அறிக்கை காகிதங்களால் கட்டப்பட்ட தோரணங்களைக்கொண்டு தமது அதிகார முகத்தை திரை போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த திரையும், மாய முகமும் கூட சுரண்டலுக்கும், அதிகார தக்கவைப்புக்குமே.

இந்த மாய முகத்திற்கு வளைந்துகொடுக்கும் எமது ஒவ்வொரு செயற்பாடும், அதிகாரத்துக்கு வளைந்து கொடுப்பதாகவே அமையும்.

அழகான, நேர்த்தியான கறுப்பு கோர்ட் போட்டு வந்து உயர் ரக ஒலிவாங்கியில், பட்டும் படாமலும் கருத்துக்களை கூறி ஜாலம் காட்டும் சிறந்த பேச்சாளர்களின் திருவாயால் சிங்களதேசம் கண்டிக்கப்பட்டால் நாம் யாரும் புளகாகிதமடைவோமானால், அந்த அதிகாரக்கோரமுகம் வெற்றி பெற்று விட்டது என்பதுதான் அர்த்தம்.

பீ பீ சீ யே எமது பிரச்சனைகளை இனங்கண்டு சரியாக அறிவிக்கிறது என்று நாம் மார்தட்டி பெருமைப்பட்டுக்கொண்டோமானால், அந்த அதிகார வர்க்கத்திடம், அதன் மாயமுகத்திடம் தோற்றுப்போனோம் என்பதுதான் அர்த்தம்.

இந்த சர்வதேச சமூகம் தான் எங்களை எப்போதும் ஆட்டிவைக்கும் சக்தி.

அவர்களுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் ஒன்றும் கருத்தாதரவு தேட வேண்டாம்.

புலிகளை அமெரிக்கா கண்டித்தால் எனது நண்பர் ஒருவருக்கு சரியான சந்தோசம். "நல்ல கப்பல் ஒண்டு புலிக்கு வந்து இறங்கியிருக்கும்" என்று மகிழ்வார்.

யதார்த்தம் இதுதான். இவர்கள் தமது சுயநலன்களுக்கு தேவைப்படும்போது யாரையும் தலையில் வைத்து ஆடவும், காலடியில் போட்டு நசுக்கவும் செய்வார்கள். இரகசிய ஒப்பந்தங்களை செய்துவைத்துக்கொண்டு அறிக்கை வாய்வீச்சு காட்டுவார்கள்.

இவர்களிடம் ஆதரவு தேடுவதையே நோக்காககொண்டு எவரும் உங்கள் காலத்தையும் உழைப்பினையும் செலவளிக்க வேண்டாம். அதனை ஆக்கபூர்வமான வழியில் செலவிடலாம்.

பயங்கரவாதப்பட்டியல், கண்டன அறிக்கை, மன்மோகன் சிங்கின் தொலைபேசி அழைப்பு, யசூசி அகாஷி யின் வருகை இதெல்லாம் ஒன்றுமில்லை. வெறும் பம்மாத்து. இதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொண்டு இருக்கும் மூளையற்ற ஊடகங்களை தள்ளிவிடலாம்.

இந்த ஊடகங்களும் அதிகாரவர்க்கம் தக்கவைக்கவிரும்பும் மாய முகத்தின் பகுதிகளே. இவர்கள் மக்கள் விடுதலைக்கான நேச சக்திகள் அல்லர்.

எந்த ஊடகங்கள் சினிமாச்செய்திகளைப்போல, கிரிக்கட் செய்திகளைப்போல போராட்டத்தையும், மக்கள் சாவுகளையும் படங்காட்டி கிளர்ச்சியூட்டி உங்களுக்கு அறிவிக்கின்றனவோ, அந்த ஊடகங்களை, வலைத்தளங்களை, தொலைக்காட்சிகளை, பத்திரிகைகளை சந்தேகப்படுங்கள்.

இவற்றுக்கும் மூன்றாந்தர சினிமாப்பத்திரிகைகளுக்கும் எந்த வேறுபாடுமில்லை.

இந்த ஊடகங்களின் மூலவர்கள் பாதுகாப்பான நாடுகளில் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு செய்திபெறுபவர்கள். அன்றாடம் சூடான செய்திகள் தேவைப்படும் இவர்களைப்போன்ற மற்றையவர்களுக்காக இவர்கள் விருந்துபடைப்பவர்கள்.

ஊடகங்கள் தமது நோக்கத்தில் நிமிர்வுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும். மக்களை நெறிப்படுத்தும் பணியை செய்யவேண்டும். வெறும் செய்தி ஊடகங்கள் கூட இதனை அழகாக செய்யலாம்.

பிரசாரங்களின், மாயைகளின் முகமூடிகளை கிழித்து மக்களுக்கு உண்மையை கூறலாம்.

நமது மக்களைப்பற்றியும் அவர்களது எதிர்காலத்தைப்ப்ற்றியும் உரையாடலாம். செயற்படலாம்.

"பிரசாரங்களுக்கூடாகவன்றி அவரவர் சார்ந்த நலன்களுக்கூடாகவே வரலாற்றை எடைபோடுவது அவசியம்."

- மு. திருநாவுக்கரசு - சமஷ்டியா தனிநாடா - அறிவு அமுது

இரயாகரனின் இந்த பதிவினை வாசிப்பிற்கு பரிந்துரைக்கிறேன். (இறுதித்தீர்வை அழுத்துவதன் மூலம் எதிரியை தனிமைப்படுத்தும் உத்தி தொடர்பான கருத்துக்களுக்காக)

http://mauran.blogspot.com/

மு.மயூரன்

 

மு.மயூரன்
17.05.06

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது