Language Selection

மு.மயூரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீண்டகாலமாக எழுத ஆசைப்பட்ட விடயம். என்னுடைய அறிவு மட்டுப்பாடு தொடர்பான குழப்பங்களோடு தள்ளிப்போட்டு வந்தேன், இப்போது எழுதவே வைத்துவிட்ட சுவனப்பிரியனுக்கு நன்றிகள்.

நிகழ்ந்தவண்ணமிருக்கும் தற்போதைய உலகப்போரில் இஸ்லாமியர்கள் தவிர்க்கமுடியாத தரப்பாக உருவெடுத்திருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக(!) அவர்களிடத்தில் மசகு எண்ணையும் மக்களை இலகுவாக கூடச்செய்கிற, மக்களை ஒழ்ங்குபடுத்தும் அதிகாரத்தை தருகிற மத அடிப்படையும் அமைந்துவிட்டது. அமரிக்க பேரரசு இவர்கள் மீது செய்யும் சுரண்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் இதுவே காரணமாகிவிட்டது.


ஈழப்போரிலும் முஸ்லிம்கள் மிக முக்கியமான வகிபாகத்தினை கொண்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதத்திற்கு தமிழர்களைக்காட்டிலும் முஸ்லிம்களே அருவருப்பூட்டும் எதிரி. தமிழர்களை ஆயுதமேந்தும்படி வரலாறு தள்ளியது. அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். முஸ்லிம் தேசம் எல்லாத்தரப்பாலும் சுரண்டப்படும் தரப்பாகிப்போய்விட்டது. தமிழர் பேரினவாதத்திற்கும், சிங்களப்பேரினவதத்திற்கும் ஒருங்கே முகம் கொடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

இப்படியாக உலக அளவிலும், ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம் மனிதர்களுக்கெதிராக எழுந்துவரும் மனநிலையும், சுரண்டலும், வல்லாதிக்கமும் அந்த மனிதர்கள் தமது அடையாளங்களை மேலும் மேலும் அழுத்திப்பிடிக்கவும், தம்மை தனித்துவமான மனிதக்கூட்டமாக அடையாளப்படுத்தவும் காரணமாகிவிடுகிறது.

என்னுடைய 20 வருட ஞாபகங்களினூடேயே அவர்களுள் நிகழும் இந்த வரலாற்று மாற்றத்தினை தெளிவாக அவதானிக்க முடிகிறது.

திருக்கோணமலையில் முன்பெல்லாம் முஸ்லிம் ஆண்களை, தமிழர் ஆண்களிடமிருந்து மொழியாலோ, உருவமைப்பாலோ பிரித்தறிவது ரொம்ப கஷ்டம். நண்பர்களோடு, அவர்கள் முஸ்லிம்கள் என்ற பிரக்ஞை இல்லாமலேயேதான் பழகிவந்தோம்.

இப்பொழுது அப்படி அல்ல. ரோட்டில் போகும் மனிதர்களுள் முஸ்லிம்களை மிக இலகுவாக தனிபிரித்து அறியலாம். பெண்களின் ஆடைகள், ஆண்களின் மீசை மழுக்கி, தாடிவைத்த முகம், தொப்பி, கால்களில் சற்றே தூக்கலாக மடித்துவிடப்பட்ட/தைக்கப்பட்ட நீளக்காற்சட்டை, நெற்றியில் தொழுகைவடு.

எல்லா முஸ்லிம்களும் பேச்சின் ஒரு கட்டத்துக்குப்பிறகு குர் ஆன் இறைவனால்தான் வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் பணியில் இறங்கிவிடுகிறார்கள். எந்த விவாதத்திலும், தேடலிலும் அவர்கள் குர் ஆனுக்கு அப்பால் செல்ல மறுக்கிறார்கள். தமது மத அடையாளத்தை மிகத்தீவிரமாக அழுத்திப்பிடிக்கிறார்கள். குர் ஆன் என்கிற புத்தகத்தை தாண்டி இந்த உலகத்தில் வேறு உண்மைகள் இருக்க முடியாது என்கிற கண்மூடித்தனமான அவர்களது நம்பிக்கையும் தீவிரமும் அவர்களுடனான உரையாடல்களை முறித்துவிடுகிறது. அவர்கள் தனித்தீவுகளாக, தனித்துவிடப்படுகிறார்கள். முஸ்லிம்கள் ஏதோ ஒருகட்டத்தில் முஸ்லிம்களோடேயே கூடியிருக்க வேண்டியதாகிறது.

முஸ்லிம் மனிதர்களிடம் மட்டுமே நான் சிறுவயது முதல் அவதானித்த ஏராளமான நல்ல இயல்புகள் இப்போதும் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. அப்பாவின் நண்பர்களில் ஏராளமானவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகவும் அன்பானவர்கள்.

தமக்கெதிரான அடக்குமுறைகளுக்கெதிராக அவர்கள் தமது மத அடையாளத்தினை முன்னிறுத்துகிறார்கள்.

உலகமே அடிப்பணிந்துபோய்க்கொண்டிருக்கும் அமரிக்க பேரரசின் ஏகாதிபத்திய போக்குக்கு எதிராக தமது சுய மரியாதைச்சின்னமாக இஸ்லாத்தை முன்னிறுத்தி உலகம் தழுவிய எதிர்ப்பினை அவர்கள் வீரத்துடன் முன்வைக்கிறார்கள். அங்கே மிக முற்போக்கான இடத்திலிருக்கும் அவர்களது மதம், ஒரே நேரத்தில் மிக பிற்போக்கான வழித்தடத்திலும் அவர்களை இட்டுச்செல்கிறது.

ஏகாதிபத்தியம், அந்த மதத்தின் பிற்போக்கான அம்சங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆணாதிக்கம் அந்த மதத்தின் பிற்போக்கான அம்சங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதிகாரவர்க்கமும் அவ்வாறே.

முஸ்லிம்கள் தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதில் அநேகமான அறிவுஜீவிகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவதும் அவர்களது மதம் தொடர்பான கண்ணோட்டம்தான்.

என்னுடைய நண்பர் ஒருவர் கடைசியாக நான் திருக்கோணமலை போயிருந்தபோது சொன்னார், "உலக அரசியலில் இடதுசாரிகள் முஸ்லிம்கள் விடயத்தில் தவறிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபதியத்துக்கு எதிராக இஸ்லாம் அடிப்படைவாதத்தின் போராட்டத்தை ஆதரிக்க தலைப்படுவதோடு, இஸ்லாம் அடிப்படை வாதத்தினை விமர்சிக்காமலும் விட்டுவிடுகிறார்கள். வரலாற்றின் இயங்கியலில் ஒப்பீட்டளவில் ஏகாதிபத்தியத்தை காட்டிலும் நிலவுடைமை இஸ்லாம் அடிப்படைவாதம் பிற்போக்கானது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரன மார்க்சீயர்கள் எப்படி இஸ்லாத்திற்கு எதிராக இல்லாமலிருக்க முடியும்?"


குர் ஆன் நம்பிக்கையாளர்களுக்கு பிற மதத்தினரைக்காட்டிலும், ஏகாதிபத்தியத்தை காட்டிலும், ஒடுக்குமுறையாளர்களைக்காட்டிலும் மார்க்சியவாதிகளே சகிக்க முடியாத எதிரிகளாக இருக்கின்றனர்.. சோவியத் யூனியனில் அமரிக்கா இதனை மிக நன்றாக பயன்படுத்திக்கொண்டது.

ஒசாமா பின் லாடன் என்கிற காரணி, கம்யூனிசத்துக்கெதிரான அமரிக்காவின் ஆயுதமாகவே உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.
முதலாளியம், தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக தன்னை விட பிற்போக்கான மத அடிப்படைவாதத்துடன் சமரசம் செய்துகொள்ளும் வரலாற்று உண்மைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

உலகமெங்கும் நிகழும் இஸ்லாமியர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மார்க்சிஸ்டுகள் வழங்கும் நிபந்தனையுடனான ஆதரவு என்பது பெரும்பாலும் ஒருவழிப்பாதையே.


ஆனாலும் இந்த போராட்டங்களினூடாக மிக முற்போக்காக சிந்திக்கத்தலைப்படும் இஸ்லாமிய அறிஞர்களையும் வரலாறு பிரசவித்தவண்ணமிருக்கிறது.


இந்த பின்னணியில் இங்கே வலைப்பதிவு சமுதாயத்தில் இஸ்லாத்தை விளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வலைப்பதிவாளர்களோடு அடுத்ததடுத்த பதிவுகளில் பேச முயல்கிறேன்.

 

மு.மயூரன்
21.05.06

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது