Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜயா, நான் நலமாயுள்ளேன். நீங்களும் புலிகளின் வெடி குண்டுகளுக்கு இடையில் அகப்படாமல் இருக்க, ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன்.

 

இலண்டனுக்கு புலி எதிர்ப்பு சாதி மாநாட்டுற்கு சேர்த்து வந்திருக்கிறியள் போல இருக்கு. சென்றமுறை அதை வாழ்த்தி வாழ்த்துப்பா பாடி அனுப்பினார்கள். எனக்குத் தெரியும் நீங்கள் இப்பிடியான சம்பவங்கள் என்றால் விடமாட்டியள், முன்னுக்கு நிற்பியள். தப்பித் தவறி மாநாட்டுற்கு போய் பேச வெளிக்கிட்டால், கவனமாகப் பேசுங்கோ.

 

இது இலக்கியச் சந்திப்பில்லை. கண்டபடி பேசுறத்துக்கு. நான் சொல்லுற மாதிரி பேசுங்கோ. இலங்கையின் தற்போதைய பிரதான பிரச்சினை தலித்-வெள்ளாளர் பிரச்சினையே. தலித்துக்களின் பிரதான எதிரி உயர்-இந்து மேட்டுக்குடி வேளாளர் என்ற கருத்தியல் தன்மை கொண்டதாக பேசாமல், யாழ்ப்பாணத்தில் என்ன இலங்கையில் இருக்கின்ற முழு வெள்ளாளச் சாதியள் மட்டும்தான், தலித்துக்களின் பிரதான எதிரி என்று சொல்லுங்கோ. கையோடு பெரியார் சொன்னார் பார்ப்பனனைக் கண்டால் பாம்படிப்பது போல் அடியுங்கள் என்றார். நான் சொல்கின்றேன் வெள்ளாளனைக் கண்டால் முயல் அடிப்பது போல் அடியுங்கள் என்று சொல்லுங்கோ.

 

இப்படிப் பேசினால், உங்களுக்கு இம்மாநாட்டில் ஏதாவது பட்டம் தந்தாலும் தருவார்கள். டானியலுக்கு ஈழத்தின் தந்தை பெரியார் என பட்டம் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு ஈழத்து அம்பேத்கார் என்ற பட்டம் தந்தாலும் தருவார்கள். லண்டனில் தானே உங்கள் தனிப்பெரும் தலைவர் அடங்காத் தமிழன் ஈழத்துக்காந்தி எலலோரும் பட்டம் பெற்றவர்கள். அந்த வகையில் உங்களுக்கும் ஒரு பட்டம் தந்தால், எங்களுக்கும் பெருமைதானே.

 

உங்களுக்கு ஏதோ எழுத வந்து ஏதோ எழுதி விட்டேன் போல இருக்கு, பரவாயில்லை.

 

ஐயா இலண்டணுக்கு வந்தவுடனேயே உங்கள் பிரதான வேலையான புலியெதிர்ப்பு அறிக்கையையே வெளியிட்டு விட்டீர்கள். அதில் இந்தியா சென்ற சமயம் உங்கள் இந்திய எசமானர்களுக்கு என்னென்ன சொன்னீர்கள் என்றெல்லாம் வரிசையாக சொல்லியுள்ளீர்கள். புலிகள் விடுதலை இயக்கமல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம். இவர்களை விட்டுவைத்தால் இந்தியாவில் ஒரு யாழ்ப்பாணமே உருவாகிவிடும் என்று, கே.எல்.நாராயணனுக்கும் அடிச்சு சொல்லிப்போட்டியள். இதோடை இன்னொன்றையும் சொல்லிறியள்.

 

புலிகளை ஒழிக்க இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவவேண்டுமென்று. யூனஸ்கோ அகிம்சைக்கும் சகிப்புத் தன்மைக்குமாக பணப் பரிசு உங்களுக்கு கொடுத்தே உறுத்தியது. சரி நீங்கள் பரவாயில்லை. இங்கே புலம்பெயர் நாடுகளில் உங்களைப் போல ஜனநாயகம் பேசும், புலி ஒழிப்பு ஆக்களும் இருக்கினம். அவையளுக்கு என்று இலண்டனிலை ஒரு றேடியோவும் இருக்கு. ஒவ்வொரு வியாழக்கிழமையும் புலிகளை எப்படி ஒழிப்பது என்ற தொனியில், ஒரு தலைப்பெடுத்து ஒரே வாதாட்டம். இதற்கு ஒரு அரசியல் ஆய்வாளராம். அவர் தலைமையில் புடுங்குப்பாடு நடைபெறும். கடைசியில் ஒரு முடிவுக்கு வருவினம். சுடலையிக்கை நிக்கிற பேய் பிசாசுகளுடன் சேர்ந்தாவது புலிகளை ஒழிப்போம் என்று.

 

மறந்து போச்சு, இப்பதான் ஞபாகம் வருது. நீங்களும் இந்த வானொலியில் இதைபற்றி கதைத்தது.

 

ஐயா நான் தெரியாமல்தான் கேட்கிறன், உங்கடை ஆட்கள் பேய் பிசாசுகளுடன் சேர்ந்து புலிகளை ஒழித்தால், நாடு சுடுகாடாகி பேயாட்சிதானே நடக்கும். இப்பவே உங்கடை எசமான் மகிந்தா பேயாட்சிதானே செய்கின்றார். அதோட நீங்கள் சொல்லுற இந்தியப் பேய் அல்லது உங்களுடைய ஐரோப்பிய புலியெதிர்ப்புக் கூட்டாளிகள் சொல்லுற அமெரிக்கப் பிசாசு அல்லது வேறு எந்தப் பிசாசு வந்து புலிகளை ஒழித்தாலும், பிறகு எங்கள் நாடு பேய்களின் சுடுகாடாகத்தானே இருக்கும்.

 

இது எப்படி இருக்கென்றால், ஐயா உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுறன் கேளுங்கோ. ஈராக்கிலை சதாம் குசைன் என்ற ஒருத்தன் இருந்தான். புலிகள் எப்படி யாழ்ப்பாணத்திலை முஸ்லீம் மக்களை அடித்துக் கலைத்தார்களோ, கிழக்குமாகாணத்திலை எப்படி கொலை கொள்ளை போன்ற மக்கள் விரோத சர்வாதிகார நடவடிக்கைகளைச் செய்து துன்புறுத்தினார்களோ, அதே பாணியில் அப்படியே அவனும் குர்திஸ் இன மக்களுக்கும் செய்தான். அங்கேயும் அந்த நேரம் உங்களைப்போல ஆட்கள் இருந்தவை. அவையளும் சதாம் குசைன் பயங்கரவாதி என்று சொல்லி, அமெரிக்கப் பிசாசைக் கொண்டு வந்தார்கள். இப்ப ஈராக்கிலை என்ன நடக்குது, உங்கள் விரும்பம் போல் பேயாட்சிதானே நடக்குது.

 

இதோட உங்களிட்டை இன்னொன்று கேட்க விரும்புகின்றேன். புலிகள் மக்கள் விரோத ஐனநாயக விரோத பயங்கரவாத இயக்கமாக மாறியதற்கு, உங்களுக்கும் உங்கடை த.வி.கூட்டணிக்கு கொஞ்சமும் பங்கு இல்லையோ! உங்களை புலிசார்பு கூட்டணியை விட்டு வெளியேற்றாது விட்டிருந்தால், உங்களோடை புலியளைப் பற்றி எதிராக கதைச்சு தப்பேலாது. எதிராய் கதைக்கிற ஆக்கள் எல்லாரையும், துரோகிகள் ஆக்கிப்போடுவியள். இப்படி தானே கொஞ்சக் காலத்துக்கு முன்னம் செய்தனியள்.

 

திடீரென்று இப்ப புலிகள் உங்களுக்கு பயங்கரவாதிகள். புலிகளுக்கு நீங்கள் துரோகி. நீங்களோ புலிகளை அழிக்க சர்வதேச ஏகாதிபத்தியப் பிசாசுகளை தேடித் திரிகின்றீர்கள். அடிப்படையில் நீங்களும் பயங்கரவாதிதான், ஏன் ஏகாதிபத்திய கைக்கூலிதான்.

 

நீங்கள் ஊட்டி வளர்த்த இளைஞர் இயக்கங்கள் எப்படி பயங்கரவாத இயக்கங்களாகின? நீங்கள் பாராளுமன்ற நாற்காலிகளை பிடிப்பதற்கு தமிழீழக் கோhரிக்கையை முன்வைத்தீர்கள். இளைஞர்களை உசுப்பி உணர்ச்சிவசப்படுத்தினீர்கள். ஏன் அடுத்த தேர்தல் தமிழ் ஈழத்தில் தான் என்றீர்கள். எமக்கு எதிரானவர்கள், தமிழ் ஈழத்திற்கு எதிரானவர்கள் என்றீர்கள். இதனால் அவர்களை துரோகிகள் என்றீர்கள்.

 

உங்கள் சொல் கேட்டு எதிரி யார் நண்பன் யார் என்று தெரியாமல், தம்பி துரையப்பாவில் துவங்கினார். அவரின் தம்பிமார் நிண்டவன் போனவன் எல்லோரையும் எதிரியாக்கி சுட்டுத்தள்ளினார்கள். இதுதான் தமிழீழத்துக்கான சரியான பாதை என உற்சாகப்படுத்தினீர்கள். ஏன் சந்தோசப்பட்டீர்கள், மட்டில்லா மகிழ்ச்சியில் மூழ்கினீர்கள்.

 

இதனால் தம்பிமார் மேலும் உற்சாகப்பட்டார்கள். உங்களைப் போல் அடுத்த கட்டத்துக்கு இறங்கினார்கள். இதற்கு ஆள் திரட்டும் புதுக்கோட்பாட்டை கண்டுபிடித்தார்கள். இராணுவத்தை தாக்கினால் இராணுவம் மக்களைத் தாக்கும், மக்கள் ஆத்திரமடைந்து போராட புறப்படுவார்கள் என்றொரு குருட்டு நம்பிக்கையுடன் தாக்கினர். விளைவு இனக் கலவரங்களாக மாறியது. இனக்கலவரங்களால் மக்கள் அல்லல்பட, துன்ப துயரங்களை அனுபவிக்க, மக்களைத் தவிக்கவிட்டு நாட்டைவிட்டே ஓடினீர்கள். தளபதி அமிர்தலிங்கம் மாறுவேடத்தில் நாட்டை விட்டே ஓடினார்.

 

உங்களில் ஆத்திரமடைந்த விரக்தியுற்ற இளைஞர்கள் தமிழீழம் காண தனிவழி சென்றார்கள். விடுதலைப் பாதை எங்கோ இருக்க, பாதை மாறி எங்கேயோ போனார்கள். பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது என்பார்கள். இதுவே தமிழ்ஈழத்திற்கு நடந்தது.

 

தொடங்கிய போர் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை கணக்கிலெடுக்காது தேசிய சர்வதேசிய நிலைமைகளைக் கணக்கிலெடுக்காது, மூல உபாயம் தந்திரோபாயம் தெரியாது மக்களை - மக்களின் புரட்சிகரப்போராட்டங்கள் பற்றி தெரியாது, சுத்த இராணுவ போதையில் மூழ்கியது. மொத்தில் கொலை வெறிப்பித்தில் மிதந்ததன் விளைவு - அதன் அதி உச்சக்கட்டமே மக்கள் விரோத பயங்கரவாதமாகியது.

 

ஜயா, புலிகளுக்கு உள்ளது போல் உங்களுக்கும் புலிகளை பழிவாங்கும் வெறியுணர்வு மேலோங்கியுள்ளது. அதற்கு ஏனய்யா நாடு நாடாய் அலைகின்றீர்கள். ஏகாதிபத்தியங்களை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றீர்கள். இதன் விளைவு சட்டிக்குள் இருந்து, நெருப்புக்குள் விழுந்த வினையாகிவிடும்.

 

வரலாற்றையும், தலைவர்களையும் உருவாக்குபவர்கள் மக்களே. தமிழ்மக்கள் தமது சொந்த வரலாற்றில் உங்களைப் போன்ற - புலிகளைப் போன்ற பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டுவர்.

அகிலன்
18.02.2008

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது