Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதிலிருந்து கேரள மாநிலமெங்கும் கிறித்தவர்களும் முஸ்லீம்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவர்களது போராட்டத்தை ஆதரித்தும், இடதுசாரி கூட்டணி ஆட்சியை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. காங்கிரசின் மாணவர் சங்கங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை தெருவிலே போட்டுக் கொளுத்தி வருவதோடு, பொதுச் சொத்துக்களையும் நாசப்படுத்துகின்றன.

 தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவோ, அரசின் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகவோ அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. பின், எதற்காக இந்தப் போராட்டம்?


"இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கும் 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலை ரத்து செய்!'' என்பதே அவர்களது போராட்டத்தின் மைய முழக்கம். வகுப்புகள் புறக்கணிப்பு, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் கட்டுகட்டாக பறிக்கப்பட்டு தீயிட்டு எரிப்பு, சாலை மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு, கண்டனப் பேரணி என கேரளத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன. காங்கிரசு ஆதரவு ஆசிரியர் சங்கங்கள் இப்பாடப்புத்தகப்படி நாங்கள் பாடம் நடத்த மாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. ஜூலை மாதத்திற்குள் இப்பாடபுத்தகத்தை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய கிளர்ச்சி செய்யப் போவதாக முஸ்லிம் லீகும் 12 முஸ்லிம் அமைப்புகளும் அரசுக்குக் கெடு விதித்தன. கேரள அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ள 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலில் அப்படி என்னதான் ஆட்சேபகரமாக இருக்கிறது?


"ஜீவனுக்கு எந்த மதமுமில்லை'' என்ற தலைப்பிலான பாடம் இதோ:


"ஜீவனைப் பள்ளியில் சேர்ப்பதற்காக அவனது பெற்றோர்கள் அழைத்து வருகின்றனர். அப்பெற்றோர்கள் இருக்கையில் அமர, தலைமையாசிரியர் விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்குகிறார்.


"உங்கள் மகனின் பெயர் என்ன?'


"ஜீவன்'


"நல்ல பெயர்; தந்தையின் பெயர் என்ன?'


"அன்வர் ரஷீத்'


"தாயார் பெயர்?'


"இலட்சுமி தேவி'


தலைமையாசிரியர் தலையை உயர்த்தி பெற்றோரைப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்கிறார்.


"இச்சிறுவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன்? அதை நான் குறிப்பிட்டாக வேண்டுமே!'


"அவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்றே குறிப்பிடுங்கள்.'


"சாதி?'


"அதையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எந்தச் சாதியையும் சேர்ந்தவர்களில்லை.'


தலைமையாசிரியர் நாற்காலியில் சாய்ந்தபடி காட்டமாகக் கேட்கிறார்.


"உங்கள் மகன் பெரியவனாக வளர்ந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தால் என்ன செய்வது?'


"அப்படி அவன் உணர்கிறபோது எந்த மதத்தைத் தெரிவு செய்ய விரும்புகிறானோ அம்மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.'


இதுதான் அந்தப் பாடப்பகுதி. இது, இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கி விடுமாம். மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாம். நாத்திகக் கண்ணோட்டத்தில், கம்யூனிச சித்தாந்தத்தைத் திணிக்கிறதாம். சமூக அமைதியைச் சீர்குலைத்து பிளவையும் வெறுப்பையும் குழந்தைகளின் நெஞ்சில் ஊட்டுகிறதாம். பெற்றோரின் நல்லொழுக்கத்தையும் அறவியலையும் சீர்குலைக்கிறதாம். குழந்தைகளைத் தறுதலைத்தனமாக வளர்க்கத் தூண்டுகிறதாம். எனவேதான் சாதிமத வேறுபாடுகளைக் கடந்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராடுகிறார்களாம்.


இப்பாடப் பகுதி, ஏதோ ஆளும் "இடதுசாரி' கூட்டணி தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் உருவாக்கித் திணித்ததைப் போல மதவாத அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இப்பாடப் பகுதியானது, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழு (Nஇஉகீகூ) தயாரித்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேரள அரசின் பாடத்திட்டக் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில அரசும் கல்விமைச்சரும் விரிவாக விளக்கமளித்த போதிலும், பிற்போக்குவாதிகள் அதனை ஏற்கவில்லை. கேரளத்தின் வலுமிக்க இந்து சாதிய நிறுவனமான நாயர் சொசைட்டி, மற்றும் கிறித்துவ, இஸ்லாமிய நிறுவனங்களே பெரும்பாலான கல்விக் கூடங்களை கையில் வைத்திருப்பதால், அவை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், காங்கிரசு கூட்டணிக் கட்சிகள் இதனை தெருப்போராகத் தீவிரப்படுத்தி அரசியல் ஆதாயமடையத் துடிக்கின்றன.


ஏற்கெனவே ஆட்சி செய்த இந்துவெறி பாரதிய ஜனதா அரசு, வரலாற்றைத் திருத்தி எழுதி கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியில் இறங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. இன்றும் கூட நாடெங்கும் இந்துவெறி அமைப்புகள் நடத்திவரும் பள்ளிகளில் இந்துத்துவ கல்வி போதனையே தொடர்கிறது. அவையெல்லாம் பிஞ்சு மனங்களை நஞ்சாக்கும் செயலாக கிறித்துவ, இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தெரியவில்லை. சாதிமதமற்றவராக குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதுதான் அபாயகரமானதாம்!


இப்பாடப்பகுதியில் உள்ள கருத்துக்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இல்லை. மதத்தையோ மத நம்பிக்கைகளையோ சாடவுமில்லை. ஆனால், இப்பாடப் பகுதியில், எந்த மதத்தையும் சாதியையும் சாராதவர் என்று குறிப்பிடுவதே மத நம்பிக்கைக்கு எதிரானது என்று குதிக்கிறார்கள் பிற்போக்கு சாதிமதவாதிகள். இப்பிற்போக்குக் கும்பல்களின் போராட்டங்களைக் கண்டு அரண்டு போயுள்ள ஆளும் "இடதுசாரிகள்', அரசு சார்பில் விளக்கம் கலந்தாலோசனை கூட்டம், உயர்மட்டக் கல்வியாளர் குழுவை அமைத்து பரிசீலிப்பது என அரசு ரீதியான நடவடிக்கைகளை அறிவித்து சாந்தப்படுத்த முயற்சிக்கிறதே தவிர, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளைத் திரட்டி மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு பிற்போக்கு சாதிமத சக்திகளைத் தனிமைப்படுத்த முன்வரவில்லை.


மதச் சுதந்திரம் என்பது, ஒரு மதத்தைத் தெரிவு செய்யும் உரிமை மட்டுமல்ல; மதத்தை மறுக்கும் உரிமையும்தான். ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ வாழும் உரிமையும் மத உரிமைதான். இந்தக் கருத்துக்களே இப்பாடப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தில் வாழும் மனிதன் ஒரு மதத்தை, ஒரு சாதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது மனித உரிமைகளை மறுக்கும் மிகப் பெரிய வன்கொடுமை.


படித்தவர்கள் நிறைந்த மாநிலமாக நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் கேரளம், பிற்போக்கு சாதிமத சக்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாவிட்டால், அது இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.


· மனோகரன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது