Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேபாள அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அந்நாட்டு நேபாளி காங்கிரசு, நேபாள ஐக்கியக் கம்யூனிச (மார்க்கியலெனினிய) கட்சி மற்றும் நேபாளத்தில் உள்ள தேசிய சிறுபான்மை இனமான மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகிய பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டு, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டன.


இச்சம்பவங்களை யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம் என்றோ, முன்னேறி வந்த நேபாளப் புரட்சிக்கு மிகப் பெரிய தோல்வி என்றோ கருத முடியாது. நேபாளப் புரட்சியின் நீண்ட பாதையில் செயல்தந்திர ரீதியிலான ஒரு பின்னடைவு என்று சொல்லலாம். புரட்சி என்பதே சமநீர்ப் பயணமோ, நெளிவு சுழிவுகளற்ற நேர்கோட்டுப் பாதையில் முன்னேறக் கூடியதோ அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மைக் கட்சியாக நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டுக் கட்சி வெற்றி பெற்றவுடன், ""உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் மேலும் பல சவால்களை எதிர் கொண்டு முறியடித்து நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது'' என்று எழுதினோம். நேபாளப் புரட்சிக்கு எதிராக இப்போது உள்ளேயிருந்து எழுந்துள்ள அரசியல் சவால்தான் இந்தப் பிற்போக்கு, சமரச மற்றும் இனவாதக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியும், அது அடைந்துள்ள அரசியல் வெற்றியும் ஆகும்.


கடந்த ஏப்ரலில் நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் தொகுதிவாரிப் பிரதிநிதி முறையில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி, வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநதிகள் நியமனத்துக்குப் பிறகு, அரசியல் நிர்ணய சபையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை; என்றபோதும் மொத்தம் 601 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த உரிமையில், தனது கட்சியின் பிரதிநிதியைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அமைக்கவும், மலை மக்கள், சமவெளி மக்கள், பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு பிரிவினரிடையே குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய நான்கு உயர்நிலை அரசியல் சட்ட அமைப்புப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளவுமான திட்டத்தை நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி முன் மொழிந்தது.


அக்கட்சியின் நியாயமான, ஜனநாயகப்பூர்வமான இம்முன்மொழிவை பிற அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்து, நேபாள அரசியலில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தின. மன்னரின் பாசிச சர்வாதிகாரத்தின் கீழும், பின்னர் இடைக்கால அரசிலுமாக நீண்டகாலம் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா என்ற ஆதிக்க சாதிக்காரன் மற்றும் கடைந்தெடுத்த மூத்த திருத்தல்வாதியான நேபாள ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவரான மாதவ் குமார் நேபாள் ஆகிய இருவரைத் தவிர, யாரை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராக ஏற்கத் தயார் என்று நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி முன் வந்தது. அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் படுதோல்வி அடையச் செய்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் பழம் பெருச்சாளிகளுமான இவ்விருவரில் யாரையாவது குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்பதில் நேபாளி காங்கிரசு மற்றும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் பிடிவாதமாக இருந்தன.


அரசியல் எதிரிகள் ஏற்படுத்தியிருக்கும் தேக்க நிலையை உடைப்பதற்காக, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஏற்கெனவே முன்மொழிந்தபடி, பெண் பிரதிநிதியாகிய சாந்தா சிரேஸ்தாவை குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் ராமராஜ் பிரசாத் சிங்கைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக அறிவித்தது. அவசரமாகவும் சதித்தனமாகவும் கூட்டுச் சேர்ந்த நேபாளி காங்கிரசு, மாதேசி மக்களதிகார அரங்கம், ஐக்கிய மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் முறையே ராம் பரன் யாதவ் என்பவரை குடியரசுத் தலைவராகவும், பரமானந்த் ஜா என்பவரைத் துணைத் தலைவராகவும், சுபாஷ் நேம்வாங் என்பவரை அரசியல் நிர்ணய சபைத் தலைவராகவும் போட்டியிடச் செய்து,அப்பதவிகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டன.


குடியரசுத் தலைவருக்கான தேர்தலின் முதல் சுற்றை நேபாள முன்னாள் மன்னரின் விசுவாச ராஷ்ட்ரிய பிரஜதந்திரா கட்சி, கூட்டாட்சிக்கு எதிரான ராஷ்ட்ரிய மக்கள் முன்னணி மற்றும் இன்னொரு போலி கம்யூனிஸ்ட் ஐக்கியக் கட்சி ஆகியன புறக்கணித்தன. இதனால் குடியரசுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச வாக்குகளை முதல் சுற்றில் யாரும் பெற முடியவில்லை. இரண்டாவது சுற் றில் மன்னராட்சியின் விசுவாசக் கட்சி ஆதரவோடு நேபாளி காங்கிரசின் ராம் பரன் யாதவ் குடியரசுத் தலைவரானார்.


அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தனிப் பெரும்பான்மைக் கட்சியாகத் தேர்ந்தெடுத்து, அக்கட்சியே நேபாளத்தை ஆளவேண்டும் என்ற நேபாள மக்களின் எண்ணத்தை சதித்தனமானசந்தர்ப்பவாதக் கூட்டமைத்து முறியடித்து, நேபாளப் புரட்சியைப் பின்னுக்கு இழுப்பதில் வெற்றி கண்ட பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள், மாவோயிசக் கட்சியின் தலைவரான பிரசந்தாவைப் பிரதமர் பதவியேற்கும்படி கோருகின்றனர். பிரசந்தாவைப் பிரதமராகவும் வேறு சில மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அமைச்சர்களாகவும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நேபாள மக்கள் ஆதரவைப் பெற்று தங்கள் விருப்பம்போல ஆட்சி நடத்த முடியும் என்று ஏற்கெனவே சந்தர்ப்பவாதக் கூட்டு அமைத்து அரசியல் சட்டப் பதவிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்ற பிற்போக்கு, சமரச, இனவாத கட்சிகள் எத்தணிக்கின்றன.


எனவே, பிரதமர் பதவியேற்க மறுத்த பிரசந்தா நேபாள அரசில் பங்கேற்பதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். தாங்கள் அரசமைத்தால் புதிய அரசியல் நிர்ணய சட்டம் வகுக்கப்படும் வரை இரண்டாண்டுகளுக்கு தாம் ஆட்சி பொறுப்பு வகிக்கும்படி அனுமதிக்கப்பட வேண்டும்; நேபாளி காங்கிரசு, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகியவற்றின் முக்கூட்டு கலைக்கப்படவேண்டும்; தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் அரசின் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இம்மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப்படாத நிலையில் தாம் ஆட்சியில் சேரப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சியாகவே செயல்படப் போவதாகவும் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.


200 ஆண்டுகளுக்கு மேலாக நேபாளத்தில் நீடித்திருந்த பாசிச மன்னராட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென்று நேபாளி காங்கிரசோ, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, தேசிய சிறுபான்மை இன உரிமைக்கான மாதேசி இனவாத அமைப்புகளோ ஒருபோதும் உறுதியாகப் போராடியதே இல்லை. குறிப்பாக, ஏதாவது ஒரு வகையில் பாசிச மன்னராட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், இந்தியா மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு ஆதரவாகவும் நேபாளி காங்கிரசு செயல்பட்டு வந்திருக்கிறது. நேபாள மன்னர் வீசியெறிந்த எலும்பு துண்டுகளைக் கவ்விக் கொண்டு, அது ஏற்படுத்திக் கொடுத்த போலியான ஜனநாயக அமைப்புகளை ஏற்று, பாசிச மன்னராட்சி நீடிப்பதற்காக மக்களிடையே நியாயவாதங்கள் புரிந்து வந்தது. போலிகளான ஐக்கிய மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ பாசிச மன்னராட்சி நீடித்திருக்கும் வகையிலான சட்டபூர்வ, சமரசப் பாதையில் அழுந்திக் கொண்டிருந்தது. இந்திய விரிவாக்கஆதிக்க சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, பாசிச மன்னராட்சிக்கு எதிரான நேபாள மக்களின் ஜனநாயகப் புரட்சியைச் சீர்குலைப்பதில் மாதேசி இனவாதக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன.


இத்தகைய துரோகத்துக்கும் சமரசத்துக்கும் மாறாகவும், எதிராகவும் பாசிச மன்னராட்சியையும், அதன் இராணுவத்தையும் எதிர்த்துப் பத்தாண்டுகளுக்கு மேலாக வீரமிகு மக்கள் போரை நடத்தி, பல ஆயிரம் புரட்சியாளர்களை தியாகம் செய்து, இறுதியில் மன்னராட்சியைத் தூக்கியெறிவதற்கான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்குத் தலைமையேற்றது, நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். பாசிச மன்னராட்சிக்கு எதிரான ஐக்கிய முன்னணி நீடித்திருப்பதற்காகப் பதவிகளை விட்டுக் கொடுத்தும், மன்னராட்சியின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தவும் தேசிய சிறுபான்மை இனத்தின் உரிமையை நிலைநாட்டவும் வேண்டி இடைக்கால அரசாங்கப் பதவிகளைத் துறந்து, அரசியல் நிர்ணயச் சபைத் தேர்தல்களுக்கு முன்பாகவே நேபாளத்தை மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கூட்டமைப்பாகப் பிரகடனப்படுத்தவும் போராடி வெற்றி பெற்றது. நேபாள ஜனநாயகப் புரட்சியையும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களையும் சீர்குலைப்பதற்காக இந்திய மற்றும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் சதிகளும் நாசவேலைகளும் படுகொலைகளும் புரிந்தபோதும், இத்தகைய அரசியல் சவால்களை வீரதீரத்துடனும் விவேகமாகவும் எதிர்கொண்டு முறியடித்தது.


நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கண்ட புரட்சிகர பணிகளை ஆற்றியிராவிட்டால், நேபாளத்தில் பாசிச மன்னராட்சி வீழ்த்தப்பட்டிருக்காது; மக்கள் ஜனநாயக உரிமைகளையும் தேசிய சிறுபான்மை இனத்தவர்களும், பழங்குடிகளும் சமத்துவ உரிமைகளையும் பெற்றிருக்க முடியாது.


ஆனால், இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, பிற்போக்கு, சமரச, இனவாத சக்திகள், நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சியைத் தனிமைப்படுத்தி, புரட்சியைப் பின்னுக்கிழுத்து, மாபெரும் பேரெழுச்சி மற்றும் அரசியல் நிர்ணயசபைத் தேர்தல்கள் மூலம் நேபாள மக்கள் நிலைநாட்டியுள்ள முடிவுகளை தலைகீழாகப் புரட்டிப் போட எத்தணிக்கின்றன. இவர்களின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை வீரமிக்க நேபாள மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். சமீபகால வரலாற்றில் நிரூபித்ததைப் போலவே, நேபாள மாவோயிச கம்யூனிசக் கட்சியின் தலைமையில் அணிதிரண்டு இந்த எதிர்ப்புரட்சி சதிகாரர்களை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிவார்கள்; முழுமையான மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவார்கள்.


· ஆர்.கே.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது