Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவின் சிறப்பே அதன் ஏரிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் அந்நிய தரகு முதலாளிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த நகரை மொய்க்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்த ஏரிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்குச் சுருங்கி விட்டது.


ஏரிகளை ஆக்கிரமித்து, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிகவளாகங்கள், ""கோல்ப்'' மைதானங்கள், மேட்டுக்குடி குடியிருப்புகள் போன்றவை ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டு, பெரும்பாலான ஏரிகள் காணாமல் போய்விட்டன. எஞ்சிய ஏரிகளோ தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி குப்பைக் கூளங்களாய்க் கிடக்கின்றன. இவை கர்நாடக அரசின் கண்களை உறுத்தியவுடன், அவற்றைச் சுத்தம் செய்து பராமரிக்கத் தன்னால் முடியாது என நொண்டிச்சாக்கு சொல்லி, தற்போது அவற்றைத் தனியாருக்கு விற்க ஆரம்பத்துள்ளது.


இவ்வாறு விற்கப்பட்ட ஏரிகளில் ஒன்றுதான் நாகவரா ஏரி. பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி தற்போது ""லும்பனி கார்டன்'' என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏரி தங்கள் வசம் வந்தவுடன் அந்நிறுவனத்தினர் ஏரியைச் சுற்றித் தடுப்புச்சுவர் எழுப்பி யாரும் ஏரிக்குள் நுழையா வண்ணம் தடுத்துவிட் டதோடு, ஏரிக்குள் நுழைய 30 ரூபாய் நுழைவுக்கட்டணமும் வசூலிக்க ஆரம்பத்துள்ளனர். அது மட்டுமன்றி, ஏரிக்குள் வெளிநாடுகளில் உள்ளதைப்போல நீர் மேல் ஓடும் ஸ்கூட்டர்கள், அதிவேகப் படகுகள், ""காபி டே'' போன்ற நட்சத்திர உணவகங்கள், மிதக்கும் உணவகங்கள், நவீன சிறுவர் விளையாட்டுக்கள் எனப் பல அம்சங்கள், அவற்றிற்கெனத் தனித்தனியே கட்டணங்கள் என்று மக்களின் பொதுப் பயன்பாட்டிலிருந்த அந்த ஏரி முழுவதையும் லாபம் தரும் பொழுது போக்குப் பூங்காவாக (""தீம் பார்க்'') மாற்றிவிட்டனர்.


இந்த ஒரு ஏரி மட்டுமன்றி, பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளான அகாரா, ஹெப்பல், வெங்கயநாகரே உள்ளிட்ட இன்னும் மூன்று ஏரிகளையும் தனியார் நிறுவனங்களுக்கு 15 வருட ஒப்பந்தத்தினடிப்படையில் குத்தகைக்கு விட்டுள்ளனர். இவ்வாறு ஏரியைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் நேச்சுரல் சிஸ்டம்ஸ், ஈஸ்ட் இந்தியா ஓட்டல்ஸ், பார்சி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும் தான்.


ஒப்பந்தத்தின்படி தனியார் நிறுவனங்கள், ஏரியைத் தூர்வாருவது, கழிவுநீரை வெளியேற்றுவது மற்றும் ஏரியைப் பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்தால் மட்டும் போதும். ஆனால் அதற்கு ஈடாக அவர்கள் ஏரியைச் சுற்றிலும், ஏன் ஏரிக்குள்ளும் கடைகள் அமைக்கலாம்; நீர் விளையாட்டுக்கள், பூங்காக்கள், உணவகங்கள் என எது வேண்டுமானாலும் திறந்து மக்களிடம் காசைக் கறக்கலாம்; பொதுச்சொத்தான இந்த ஏரியைச் சுற்றி சுவர் எழுப்ப அவர்கள் விரும்பும் தொகையை மக்களிடமிருந்து நுழைவுக் கட்டணமாக வசூலிக்கலாம் என்று தாராள சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.


முதல் கட்டமாக நான்கு ஏரிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், அடுத்தகட்டமாக மேலும் 25 ஏரிகளிலும், படிப்படியாக 50 ஏரிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு ஏரிகளைத் தனியார்மயமாக்குவதற்கென்றே ""ஏரிகள் வளர்ச்சிக் குழுமம்'' என்ற நிறுவனமொன்றை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது.


150 ஏக்கர் பரப்பளவில் அதாவது சுமார் 67.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்த ஒரு ஏரிக்கு, அதுவும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இடத்திற்கு தனியார் நிறுவனங்கள் தர வேண்டிய குத்தகைத் தொகை வருடத்திற்கு வெறும் 72 லட்ச ருபாய் மட்டுமே. இவ்வளவு மலிவான விலையில் நகரின் முக்கியப் பகுதியில் இடம் கிடைப்பதால் அனைத்து ரியல் எஸ்டேட் கொள்ளையர்களும் நாக்கைத்தொங்கப் போட்டுக் கொண்டு ஏரிகள் பாதுகாப்புக் குழுமத்தை மொய்க்கத் தொடங்கியுள்ளனர்.


ஏரிகள் தனியாருக்கு விற்கப்படுவதால் உடனடியாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள், ஏரிகளையே நம்பி வாழ்ந்துவரும் மீனவர்கள்தான். இதுவரை இவர்கள் வனத்துறையிடம் உரிமம் பெற்று ஏரிகளில் மீன்பிடித்து வந்துள்ளனர். ஆனால், தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பிறகு அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோய்விட்டது.


இவர்களோடு இந்த ஏரிகளை நம்பித் தொழில் நடத்திவரும் நூற்றுக்கணக்காண சலவைத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் வரை, ஏரிகள் பொதுப் பயன்பாட்டிலிருந்ததால் அவற்றில் துணிகளைத் துவைத்துத் தங்களது பிழைப்பை நடத்தி வந்த இவர்கள், தற்போது தங்களது தொழிலை நடத்த வழிதெரியாமல் தவிக்கின்றனர்.


மீன் பிடிப்பதும், துணிகளைத் துவைப்பதும் ஏரிகளை மாசுபடுத்துவதாகக் கூறும் ஏரிகள் வளர்ச்சிக் குழுமத்திற்கு, நீர் விளையாட்டுக் கருவிகளிலிருந்து வெளியேறும் எண்ணெய்க் கழிவுகளும், "காபி டே'' உணவகங்களின் உணவுக் கழிவுகளும் ஏரியை மாசுபடுத்துவது தெரிவதில்லை.


இது பற்றி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டது. அவ்வழக்கில் கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து ஏரிகளையும் பறவைகள் சரணாலயமாகவோ அல்லது உயிரியல் பூங்காவாகவோ அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களின் நலனை மனதில் கொண்டு, இனிமேல் தூர்வாரப்பட்டு, அழகுபடுத்தப்படும் ஏரிகள் அனைத்தும், பொதுமக்களுக்கும் இயற்கைக்குமான உறவை பாதுகாக்கும் வகையில் அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


மேலும் இந்த அறிக்கை, ஏரிகளை அழகுபடுத்தும் பொருட்டு உணவகங்கள், நீர் விளையாட்டுகள், மற்றும் இதர கட்டுமானங்கள் ஏரிக்குள்ளும் ஏரிக்கருகிலும் கட்டப்படக்கூடாது எனவும், ஏரியைச் சுற்றி பிரம்மாண்டமான மின்விளக்குகள் அமைக்கக் கூடாது எனவும் வலியுறுத்துகிறது.


இந்த அறிக்கையைத் தொடர்ந்து, பெங்களூரு நகரக் குடிநீர் வடிகால் வாரியம் நாகவரா ஏரியையும், வெங்கயநாகரே ஏரியையும் நகருக்குக் குடிநீர் வழங்க ஏற்ற ஏரியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்காக அந்த ஏரியில் படகு சவாரி தடைசெய்யப்படுவதுடன், ஏரிக்கரையில் அமைந்துள்ள உணவகங்களும் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏரி மாசடைவதைத் தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.


ஆனால், இவை யாவும் ஏரிகள் வளர்ச்சிக் குழுமத்தின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. அது அடுத்தகட்டமாக ஏரிகளை குத்தகைக்குவிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


கடந்த 2002ஆம் ஆண்டில், தொழில் வளர்ச்சி என்ற பெயரில், பெல்லந்தார் ஏரிக்கருகிலிருந்த விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்த தொழில் வளர்ச்சிக் குழுமம், பின்னர் அவற்றை இன்போஸிஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கியது. தற்போது ஏரிப் பராமரிப்பு எனும் பெயரில் முழு ஏரியும் தனியாருக்குக் கொடுக்கப்படுகிறது.


தனியார்மயம் என்ற பெயரில் ஏற்கெனவே ஆற்றுத் தண்ணீரையும், ஆற்றுப்படுகைகளையும் கொக்கொ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டனர்; "நீரா'' என்ற ஆற்றையே தனியாருக்கு விற்பனை செய்தனர்; தற்போது அடுத்த கட்டமாக ஏரிகள் அனைத்தையும் தனியாருக்கு விற்க ஆரம்பித்துள்ளனர். இப்படியே போனால் நமது நீர் ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் தனியாருக்கு விற்பனை செய்து, நீருக்காக நாம் அவர்களிடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்திவிடுவார்கள், இந்தத் தனியார்மய தாசர்கள்.


· அழகு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது