Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் பலர் கைகுலுக்கிப் பாராட்டித் தள்ளினார்கள். ""டைம்ஸ் நவ்'' ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ""சிங் இஸ் கிங்'' என்ற தலைப்புப் பாடலை ஆரவாரத்துடன் ஒளிபரப்பியது. சூழ்நிலையின் தாக்கத்தால், தானே ஒரு மிகப்பெரும் தலைவர் என்ற மாயை கூட மன்மோகன் சிங்கிற்குத் தோன்றியிருக்கலாம். ஆனாலும் அனல் பறக்கும் விவாதம் நடந்த இந்த நாடாளுமன்றக் கூத்துக்களுக்குப் பின்னால், அதன் முக்கியமான சூத்திரதாரிகள் இருவர் புன்னகைத்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங்கிற்கும், ஏன் எதிர்க்கட்சிகளுக்கும் கூடத் தெரியும்.

 

அவர்கள்தான் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்பானிகள்! அண்ணன் முகேஷ் அம்பானியும், தம்பி அனில் அம்பானியும்தான். செத்துப்போன பெரிய அம்பானியின் சுவடுகளில் அரசியலைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். திருபாய் அம்பானி சட்டங்களை ஏமாற்றித் தொழிலை விரிவு படுத்தினார். இந்திரா, ராஜீவ் முதலான தலைவர்களுக்குத் தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்து ஆதாயம் அடைந்தார். பத்திரிகைகள் மற்றும் அதிகார வர்க்கத்தை ஊழல்படுத்திக் காரியங்களைச் சாதித்துக் கொண்டார். அன்றாவது திருபாயின் மோச டிகளை ""மோசடிகள்'' என்று கூற முடிந்தது. இன்று அப்படி யாரும் அழைப்பதில்லை என்பதால், இளைய அம்பானிகளின் தொழில் துறை அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை.


இந்தியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு கொசு கடிப்பதைப் போல சில இடையூறுகள் ஏற்படுவதைக் கண்ட அமெரிக்க அரசும், பன்னாட்டு முதலாளிகளும் அதைத் தீர்த்து வைக்குமாறு அனில் அம்பானியிடம் கட்டளையிட்டனர். அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வரும்போது தனியாரும் அணுசக்தி துறையில் நுழையலாம் என்ற நிலை இருப்பதால், தானும் அதில் முதலீடு செய்யலாம் என்று அனில் அம்பானி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். இதனால் அமெரிக்க ஆண்டவர்கள் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்ற அனில் அம்பானி இறங்கினார். காங்கிரசுக் கட்சியுடன் எலியும் பூனையுமாய் இருந்த சமாஜ்வாதி கட்சியிடம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களைச் சரிக்கட்டினால் ஒப்பந்தம் நிறைவேறுவது உறுதி என்பதால், இக்கட்சியின் பொதுச்செயலரும் இந்திய அரசியலின் மாபெரும் தரகரும் அனில் அம்பானியின் நெருங்கிய நண்பருமான அமர்சிங், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். அமர்சிங்கிடமும் இந்த வேலையை நேரடியாக முடித்துத் தருமாறு அமெரிக்க அரசு கூறியிருந்தது.


இவையெல்லாம் கிசுகிசு செய்தியில்லை. இம்மாதம் டெல்லியில் அமெரிக்கத் தூதர் அளித்த விருந்தில் அமர்சிங் கலந்து கொண்டதும் அவரை தூதர் பாராட்டியதும் பத்திரிகையில் வெளிவந்த உண்மைச் செய்திகள். அனில் அம்பானியின் விருப்பத்திற்காக, ஒரு அரசியல் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக் கொள்ள முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மக்களிடம் அரசியல் பேசி, அணிதிரட்டி, வசூல் செய்து கட்சி நடத்துவது எல்லாம் அந்தக்காலம். இப்போது பெரும் நிறுவனங்கள் விளம்பரம் செய்து தமது முத்திரைப் பொருட்களை விற்பது போல, அரசியல் கட்சிகளும் ""கார்ப்பரேட்'' நிறுவனங்களைப் போலச் செயல்பட்டு அரசியலை விற்பனை செய்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் கட்டமைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்.


சாதி, உள்ளூர் ரீதியான செல்வாக்கிற்கு முலயம் சிங் யாதவ்; சினிமாக் கவர்ச்சியின் செல்வாக்கை அறுவடை செய்வதற்கு அமிதாப்பச்சன், ஜெய பிரதா, ராஜ் பப்பர்; பணத்தை அள்ளிக் கொடுத்துப் பதிலுக்கு தொழிற்துறை சலுகைகளைப் பெறுவதற்கு அனில் அம்பானி, சஹாரா நிறுவன முதலாளிகள்; இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மற்றவர்களிடம் பேசி அரசியல் முடிவெடுப்பதற்குத் தரகர் அமர் சிங் இவைதான் சமாஜ்வாதி கட்சியின் உள் கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்பில்தான் ஒரு சுப முகூர்த்தத்தில் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தையும் காங்கிரசுக் கூட்டணி அரசையும் ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார்கள். இதுநாள் வரை ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறியவர்கள் இப்படி திடீர் பல்டி அடித்தது குறித்து சி.பி.எம்.இன் பிரகாஷ் காரத் புலம்பி வருந்தினார். தேச நலனுக்காக இப்படி முடிவை மேற்கொண்டதாக தெரிவித்த அமர் சிங், இதுநாள் வரை அணுசக்தி ஒப்பந்தத்தை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். பிரகாஷ் காரத் சரியாக வகுப்பெடுக்கவில்லை போலும்.


பொதுவில் அமெரிக்க ஒப்பந்தத்தை முசுலீம் மக்கள் எதிர்ப்பதால், முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமைச் சந்தித்து அணு மின்சாரம் குறித்த அறிவை அரைமணி நேரத்தில் அமர் சிங் பெற்றார். வெளியில் ஒரு நல்ல முசுலீம் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதால், ஏனைய முசுலீம் மக்களும் ஆதரிப்பார்கள் என்றும் கூறினார். இப்படி வெளிவேஷம் பக்காவாகத் தயாரானதும், உண்மை வேடம் வெளிவந்தது.


இதன்படி, அனில் அம்பானிக்கான கோரிக்கைகள் அமர் சிங் வாய் வழியாக காங்கிரசு அரசுக்கு மிரட்டல் தொனியில் விடப்பட்டன. ஏற்கெனவே அம்பானி சகோதரர்கள் சொத்துப் பிரிப்பதில் அடித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவின் தேசிய உற்பத்தியில் ஐந்து சதவீதப் பங்களிக்கும் ரிலையன்சு நிறுவனத்தில் இப்படியெல்லாம் நடக்கலாமா என்று பத்திரிகைகள் அங்கலாய்த்தன. சகோதரர்கள் ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்த ஊழல் உண்மைகளை விசாரிக்க மாட்டோம் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார். அம்பானி என்றால் அத்தனை பயம்.


இது போக, பிரிந்ததற்குப் பிறகும் அண்ணன்தம்பி சண்டை முடியவில்லை. கோதாவரி படுகையில் முகேஷ் அம்பானி அபகரித்திருக்கும் இயற்கை எரிவாயு, அனில் அம்பானிக்குச் சரியான விலையில் கிடைக்கவில்லை. மேலும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என். நிறுவனத்தை வாங்குவதாக இருந்தது. இதற்கும் முகேஷ் அம்பானி இடையூறாக இருந்தார். அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் சாக்கில் அண்ணனுக்குப் பாடம் கற்பிக்க நினைத்த அனில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.


உலகில் எண்ணெய் விலை ஏறும்போதெல்லாம் உள்நாட்டில் எடுக்கும் எண்ணெய்க்கும் அதே விலை வைத்து ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் பார்க்கும் முகேசின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஏற்றுமதிச் சலுகையை ரத்து செய்யவேண்டும்; மேலும், அந்த நிறுவனத்தின் இலாபத்திற்கு உயர் வரி விதிக்க வேண்டும்; அம்பானி சகோதரர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை பிரதமர் தலையிட்டுத் தீர்க்கவேண்டும் என்றெல்லாம் அமர் சிங் பேசினார். இப்படி எதிர்மறைக் கோரிக்கைகள் மட்டுமல்ல; நேர்மறையில் அனில் அம்பானிக்குத் தேவையான சலுகைகளும் கோரப்பட்டன. அதில் முக்கியமானது, செல்பேசிக்கு அளிக்கப்படும் ரேடியோ அலை எனப்படும் ஸ்பெக்ட்ரமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது. இவற்றுக்கும் நாட்டின் நலனுக்கும், ஏன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.


ஆக, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததிற்கான அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் அம்பானிகளை மையம் கொண்டு இயங்கின. இதற்கெல்லாம் முகேஷ் அம்பானி ஒன்றும் அசந்து விடவில்லை. ஒருநாள் நிதானமாக பிரதமரைப் பார்த்துப் பிரச்சினைகளைப் பேசினார். தானும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகவும், தன் பங்கிற்கும் எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டுவதாகவும் இந்த முதலாளி பேசினார். குறிப்பாக, சிவசேனா உறுப்பினர்களை வாக்கெடுப்புக்கு ஆதரவாக மாற்றுவதாக வாக்களித்தார். பதிலுக்கு, அனில் அம்பானியின் கோரிக்கைகள் மறுக்கப்படவேண்டும் என்றும் கோரினார். வாக்கெடுப்பின் போது, தம்பியின் சார்பாக சமாஜ்வாதி கட்சியினரும் உதிரிக் கட்சியினரும் வாக்களித்தனர் என்றால், அண்ணன் சார்பாக பா.ஜ.க. கூட்டணியில் பத்து பேர் மாறி வாக்களித்தனர். இப்படி இருவரும் தங்கள் செல்வாக்கை இந்திய அரசியலில் மீண்டுமொருமுறை நிரூபித்தார்கள்.


இறுதியில், இந்திய அரசே இரண்டு அம்பானிகளுக்கும் சலுகைகளை வழங்கிச் சமாளித்தது. முக்கியமாக, அணுசக்தி ஒப்பந்தத்தை எல்லாத் தரகு முதலாளிகளும் ஆதரிக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே பிளவில்லை. அதனால், அம்பானிகளின் தனிப்பட்ட பிளவு அரசியல் பிளவாக மாறவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அரசு மட்டுமல்ல; அம்பானிகளும் வென்றார்கள்.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக இரண்டு முதலாளிகள் இப்படி விளையாடி அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் தங்களுக்குக் கீழ்ப்படிய வைக்க முடியுமெனும்போது, அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது அமெரிக்கா நம்நாட்டை என்னவெல்லாம் செய்யும்?


· இளம்பிறை

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது