Language Selection

உயிரியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வேகத்துக்கு உதாரணமாக ஜெட் விமானத்தைச் சொல்வார்கள். ஆனால் ஜெட்டை விட வேகமான ஒரு பூச்சி சீனாவில் இருக்கிறது. இந்தப் பூச்சி பறப்பது இல்லை –நடக்கும். என்ன கிண்டலா என்று கேட்கிறீர்களா. உண்மைதான். இந்தப் பூச்சி நடக்கும், ஆனால் தரையில் அல்ல. 

 

என்ன புதிர் போடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. இந்தப் பூச்சி தண்ணீர் மீது நடக்கக் கூடியது. மந்திரவாதிகள்தான் நீரில் மிதப்பார்கள்- நடப்பார்கள். பூச்சியுமா.

 

ஆமாம். தட்டாம் பூச்சி போன்ற வடிவிலான இந்த நீர்ச் சறுக்குப் பூச்சி நீர்ப்பரப்பின் மீது ஸ்கேசட்டிங் செய்வது போல சறுக்கிக்கொண்டு செல்லக்கூடியது. இதன் வேகம் மணிக்கு 640 கி.மீ. அதாவது ஜெட் விமானம் பறக்கும் வேகத்தை விட இது பன்மடங்கு அதிகம். ஒல்லியான எடை லேசாக உள்ள இந்தப் பூச்சி கொஞ்சங்கூட சிரமப்படாமல் ஏரித்தண்ணீர் பரப்பின் மீது சறுக்கிக்கொண்டு செல்கிறது.

 

தண்ணீர் மீது நடந்தாலும் இந்தப் பூச்சியின் கால்களில் ஈரம் படிவதில்லை. கால் நனையாமல் நடக்கும் வல்லமை பெற்றது எப்படி என்று கேட்கிறீர்களா. இந்தப்பூச்சியின் கால்களின் பரப்பில் நுண்ணிய, நீர்புகாத்தன்மை உடைய காணப்படுகின்றன. மிகவும் சக்தி வாய்ந்த நுண்ணோக்கி கருவியில் வைத்துப் பார்க்கும் போது தான் இந்த மயிர்க்கால்கள் தெரியும். ஒவ்வொரு ரோமமும் சுமார் 50 மைகரோ மீட்டர் நீளமும்,3 மைக்ரோ மீட்டருக்குக் குறைவான விட்டமும் உடையவை. அதாவது மனிதனுடைய ரோமத்தை விட 300 மடங்கு சிறியது. இந்த நுண்ணிய ரோமங்கள் வரிசை வரிசையாக ஒரு பிரஷ்ஷில் இருப்பது போல அமைந்துள்ளன. இந்த நுண்ணிய மயிர் கால்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் காற்றினால் என்ற கூறுகிறார் சீன அறிவியல் அறிஞர் ஜியாங் லீ.

 

நீர்ச்சறுக்கு பூச்சசியின் கால்களுக்கும் தண்ணீரின் பரப்புக்கும் இடையில் இந்தக் காற்றுமெத்தை உருவெடுப்பதால் தட்டுத்தடமாறாமல் மிகவிரைவாக கரைபுரண்டோடும் வெள்ள நீர்ப்பரப்பின் மீது கூட இது சறுக்கிச் செல்ல முடிகிறது. இந்தப் பூச்சி சறுக்கும் போது இதனுடைய கால்கள் சுமார் 300 மடங்கு தண்ணீரை விலக்குகின்றன. இதனால் மிதக்க முடிகிறது. தண்ணீருக்குள் மூழ்கி விடுவதில்லை. மேலும் பூச்சியின் எடையை விட 15 மடங்கு அதிக உடம்பு எடையை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் இதன் கால்களுக்கு உண்டு என்று அறிவியல் அறிஞர்கள் ஜியாங் லி மற்றும் கோ ச்சுபெங் கண்டுபிடித்துள்ளனர். பூச்சி மூழ்காமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இந்த மிதமிஞ்சிய மிதப்பு ஆற்றலினால் நீர்ச் சறுக்கு பூச்சி ஒரு சிமென்ட் தரையில் ரப்பர் பந்து எகிறுவது போல குதித்துக்கொண்டே சறுக்கிக்கொண்டு செல்கிறது. இதனால் பலத்த மழை பெய்தாலும்கூட நீரில் மூழ்குவதில்லை.

 

ஆமாம், ஜெட் விமானத்தை விட படுவேகமாக சறுக்கிச்சென்று என்ன சாதிக்கப் போகிறது இந்தப் பூச்சி. எல்லாம் வயிற்றுப்பாடுதான். நீரில் உள்ள புழுபூச்சிகளை பிடித்துத் தின்பதற்குத்தான் இவ்வளவு அரும்பாடு. அந்த இரையை தொலைவில் இருந்தே கண்டுகொள்ள இந்தப்பூச்சியின் முகத்தில் இரண்டு தொலைஉணர் கருவிகள் ஆன்ட்டெனா போல உள்ளன. தவிரவும், இரண்டு குட்டைக் கால்கள் முற்பகுதியில் இருப்பதால் அவை இரையை இறுகப்பற்றி தின்ன உதவுகின்றன. உடம்பின் நடுவில் உள்ள இரண்டு கால்கள் துடுப்புக்களாகச் செயல்படுகின்றன. இரண்டு பின்னங்கால்கள் திசைமாற்றும் சுக்கானாக இயங்குகின்றன.

 

இந்த நீர்ச்சறுக்குப் பூச்சியின் உடலமைப்பை ஆராய்ந்து நீர்ப்புகாத்தன்மை உள்ள துணிகளைக் கண்டுபிடிப்பதிலும் , குறைவான இழுவை சக்தியுடன் விரைவான உந்துவிசை உள்ள புதுமையான நுண்ணிய நீர்ச்சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் சீன அறிவியல் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது