Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 மனித குல விரோதி இட்லரையே விஞ்சும் வகையில், இரண்டாம் உலகப் போர் முடிந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த மிகக் கொடிய பயங்கரவாத மிருகம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம். முதலாளித்துவ வரலாற்றாளர்களால் மூடி மறைக்கப்பட்ட இந்த உண்மையை, தென்கொரியாவில் தோண்டத் தோண்ட வெளிவரும் படுகொலைக் குழிகளின் எலும்புக் கூடுகளே நிரூபித்துக் காட்டுகின்றன. 


 இரண்டாம் உலகப் போரில் பாசிச முகம் வீழ்த்தப்பட்டு, ஜப்பானிய ஏகாதிபத்தியம் தோல்வியுற்று சரணடைந்ததும், அதன் காலனியாக இருந்த தென்கிழக்காசிய நாடுகளைக் கைப்பற்றி தனது காலனியாதிக்கத்தை நிறுவ அமெரிக்க ஏகாதிபத்தியம் துடித்தது. அதற்கு முன் வியட்நாம், இந்தோனேசியா, மலேயா, கொரியா ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து, காலனியாதிக்கத்துக்கு எதிரான தேச விடுதலைப் போரில் முன்னேறி, புதிய சுதந்திர அரசுகளை நிறுவி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அவற்றுக்கெதிராக ஆங்கிலேய  அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் படுகொலை செய்து தமது பொம்மையாட்சிகளை நிறுவி புதிய காலனியாதிக்கத்தை நிலைநாட்டினர்.


 கொரியாவின் வடபகுதியில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப் பற்றாளர்களும் இணைந்து ஆயுதமேந்திப் போராடி ஜப்பானிய காலனியாதிக்கவாதிகளை விரட்டியடித்து, அப்பிராந்தியத்தை விடுதலை செய்திருந்தனர். தென்பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வந்திறங்குமுன்னர், கொரியாவின் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் கம்யூனிஸ்டுகளும் கூடி தேசவிடுதலை முன்னணியின் தலைவரான லியூவூன்கியாங் என்பவர் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களோ தென்கொரியாவைக் கைப்பற்றிக் கொண்டு, தேச விடுதலை முன்னணியை ஒடுக்கி, லியூவூன்கியாங்கையும் இதர தலைவர்களையும் படுகொலை செய்து, சைங்மான் ரீ என்ற சர்வாதிகாரி தலைமையில் அமெரிக்க ஆதரவு பொம்மையாட்சியை நிறுவினர்.


 ஏற்கெனவே கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்து சுதந்திர அரசை நிறுவியிருந்த கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும், தென்பகுதியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போர் தொடுத்து கொரியாவை ஐக்கியப்படுத்த முயன்றனர். கொரிய மக்களின் நீதியான இப்போரை அன்றைய சோவியத் ரஷ்யாவும் சீனாவும் ஆதரித்து ஆயுத உதவியோடு படைகளையும் அனுப்பின. மறுபுறம் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள், கொரியாவின் தென் பகுதியில் தமது பொம்மையாட்சியை நிறுவி, வடபகுதியின் மீது போர் தொடுத்தனர். 1950 ஜூன் 25ஆம் தேதியிலிருந்து 1953 ஜூன் 27ஆம் தேதி வரை நீடித்த இப்போர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடந்த மிகக் கொடிய போர் என்று சித்தரிக்கப்படுகிறது. அதன்பிறகு, சமாதான ஒப்பந்தம் உருவாகி கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடகொரியா, அமெரிக்கக் கைக்கூலிகளின் தலைமையிலான தென்கொரியா என கொரிய நாடு பிளவுபட்டது.


 மூன்றாண்டுகளுக்கு நீடித்த கொரியாவின் தேச விடுதலைப் போரின் போது, அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாதமும் படுகொலைகளும் பாசிச இட்லருக்கே பாடம் சொல்லித் தருவதாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் வடகொரியாவின் மீது போர் தொடுத்து பேரழிவுகளை நடத்தியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமது பொம்மையாட்சியின் கீழுள்ள தென்கொரியாவில் கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் தொழிற்சங்க  விவசாய இயக்கத்தினரையும் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தனர். கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலட்சக்கணக்கில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்து அவர்களைப் பெருங்குழிகளில் போட்டுப் புதைத்தனர். போரில் வடகொரியப் படைகள் பின்வாங்கியபோது, கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்களுக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள், அங்கிருந்த அப்பாவி மக்களை விசாரணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்று பெரும் குழிகளைத் தோண்டிப் புதைத்துள்ளன.


 சர்வாதிகாரி சைங்மான் ரீ தலைமையிலான அமெரிக்க பொம்மையாட்சி, கம்யூனிசத்தை ஆதரித்த 3 இலட்சம் விவசாயிகளை அரசின் ""தேசிய வழிகாட்டுதல் கூட்டமைப்பில்'' கட்டாயமாகச் சேர்த்து, அவர்களுக்கு கம்யூனிசத்துக்கு எதிரான கல்வி அளித்தது. பின்னர் அத்தனை பேரையும் சுட்டுக் கொன்று பெரிய குழிகளை வெட்டி ஆயிரக்கணக்கில் பிணங்களைப் போட்டுப் புதைத்தது. இதுதவிர பயனற்ற பல பழைய சுரங்கங்களிலும் பிணங்களைப் போட்டு மூடியது.


 ஒருவரல்ல; இருவரல்ல. இலட்சக்கணக்கான கொரிய மக்களை இனப்படுகொலை செய்த அமெரிக்க வெறியாட்டத்தைப் பற்றி ஆலன் வின்னிங்டன் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ""டெய்லி ஒர்க்கர்''இல் அப்போதே எழுதினார். ஆனால், இது கம்யூனிஸ்டுகளின் அவதூறு பிரச்சாரம் என்று அமெரிக்கா கூசாமல் புளுகியது. மறுபுறம், வடகொரியா மற்றும் சீனாவும் தான் அப்பாவி கொரிய மக்களைக் கொன்றதாக இன்று வரை பொய்ப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.


 கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சியைத் தோற்றுவிக்கும் இக்கோரமான படுகொலைகளில் தமது உற்றார்உறவினர்களை இழந்தவர்கள், 1990 வரை தென்கொரியாவில் நீடித்த அமெரிக்க ஆதரவு பெற்ற பாசிச சர்வாதிகார ஆட்சிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டனர். அவர்களது குழந்தைகள் கூட "இடதுசாரிகள்' என்று முத்திரைக் குத்தப்பட்டுப் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டனர். அவர்களைப் போலீசு எந்நேரமும் கண்காணித்ததோடு, விசாரணை என்ற பெயரில் அடிக்கடி கைது செய்த வதைத்தது இதனால் பயபீதியில் உறைந்து போன இவர்கள் இப்படுகொலைகள் பற்றி வாய் திறக்கவே முடியவில்லை.


 கடும் வேதனையைச் சுமந்து கொண்டு காலங்கள் உருண்டோடின. 2002ஆம் ஆண்டில் தென்கொரியாவில் வீசிய கடும் புயல்  பெருமழையால், பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று புதைத்த மிகப் பெரிய மரணக் குழி ஒன்றிலிருந்து எலும்புக் கூடுகள் வெளியே தெரியத் தொடங்கிய பின்னரே, அமெரிக்காவின் இனப்படுகொலை பற்றிய உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கின.


 இப்படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்கொரிய மக்கள் தொடர்ந்து போராடியதால், போராட்ட நிர்பந்தம் காரணமாக தென்கொரிய அரசு கடந்த 2006ஆம் ஆண்டில் ""அமைதி மற்றும் சமாதானத்துக்கான ஆணையம்'' அமைத்து விசாரணையைத் தொடங்கியது. அச்சத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டு ஏராளமான மக்கள் இந்த ஆணையத்திடம் சாட்சியமளித்தனர். அதனடிப்படையில் புதைகுழிகளைத் தோண்டத் தொடங்கியதும், குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் வெளிவரத் தொடங்கின. தென்கொரியாவின் வடக்கே, வடகொரியாவை ஒட்டிய எல் லைப்புற பகுதியில் மட்டும் 160க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற மரணக் குழிகள் கண்டறியப்பட்டன.


 டேஜியான் சிறைச்சாலையின் முன்னாள் சிறைக் காவலரான லீ ஜூன்யங், ""கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார்கள் என்ற ஒரே குற்றத்துக்காக அப்பாவி மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்'' என்றும், ""பெண்கள்  குழந்தைகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பல்லாயிரக்கணக்கில் தென்கொரிய பாசிச இராணுவத்தால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர்'' என்றும் இந்த ஆணையத்தில் சாட்சியமளித்துள்ளார். கிம்மான்சிக் என்ற முன்னாள் தென்கொரிய இராணுவ அதிகாரி, அரசியல் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கைகளை பின்புறமாக மடித்து இரும்புக் கம்பியால் அனைவரையும் பிணைத்து சுட்டுக் கொன்ற கொடூரத்தை, தற்போது மனசாட்சிக்குப் பயந்து சாட்சியம் கூறியிருக்கிறார்.


 அமெரிக்க இராணுவமும், அதன் தலைமையின் கீழ் கட்டியமைக்கப்பட்ட தென்கொரிய பாசிச இராணுவமும், வடகொரிய இராணுவத்தினரைப் போல உடையணிந்து கொண்டு கவச வண்டிகளில் செங்கொடியுடன் கிராமம் கிராமமாகச் செல்வார்கள்; செம்படையினர் வருவதாகக் கருதி வரவேற்க ஓடிவரும் மக்களை அங்கேயே சுட்டுக் கொல்வார்கள் என்று ஆணையத்தின் முன் பலர் சாட்சியமளித்துள்ளனர்.


 தென்கொரியாவை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கப் படைகளுக்கு அன்று தளபதியாக இருந்தவர், டக்ளஸ் மெக்ஆர்தர். கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் உழைக்கும் மக்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றொழிக்கும் அவரது இப்பயங்கரவாத உத்தியே மெக்கார்திசம் என்று குறிப்பிடப்படுகிறது. போரில் சிக்கி வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்கு அகதிகளாக ஓடி வந்தவர்களைக் கூட சுட்டுக் கொல்லும் அளவுக்கு மெக்கார்திசம் வெறியாட்டம் போட்டது.


 ""அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாக கொன்றொழிப்பதையே அமெரிக்கா தனது கொள்கையாகக் கொண்டுள்ளது'' என்று 1950களில் தென்கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர், அன்றைய அமெரிக்க வெளியுறவுச் செயலர் டேன்ரஸ்க்குக்கு எழுதியுள்ள கடிதமே இதனை நிரூபித்துக் காட்டுகிறது. இதுதவிர, அன்றைய அமெரிக்க சிப்பாய்களால் படம் பிடிக்கப்பட்ட போர்க்கள காட்சிகள் கடந்த ஆண்டில் சில அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாயின. கைகள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளுடை அணிவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் பெருங்குழிகளின் அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு குழிகளில் வீசப்படும் காட்சிப் படங்களும் அவற்றில் இருந்தன. மேலும் அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற உளவுத்துறை அதிகாரியான டொனால்டு நிக்கோலஸ், தனது நினைவுக் குறிப்பு நூலில் தென்கொரியாவின் சுவோன் பகுதியில் 1800 பேர் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.


 இவ்வாறு தென்கொரியாவின் பல பகுதிகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய இனப்படுகொலைகள் பற்றி இந்த ஆணையத்தில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


 தனது விசுவாச பொம்மையாட்சி நிறுவப்பட்டிருந்த போதிலும், தென்கொரிய மக்களை இலட்சக்கணக்கில் படுகொலை செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம், வடகொரியா மீது எத்தகைய அட்டூழியங்களை ஏவியிருக்கும்? வடகொரியா மீதான ஆக்கிரமிப்புப் போரில்தான் முதன்முதலாக ""நாபாம்'' வகை குண்டுகளைக் கொண்டு அமெரிக்கா தாக்கியது. நெருப்பு மழை பொழியும் இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு வடகொரியாவின் பல்லாயிரம் கிராமங்களும் நகரங்களும் புல்பூண்டு கூட இல்லாமல் தீக்கிரையாக்கப்பட்டன. வடகொரிய மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவீதத்தினர் படுகாயமடைந்ததோடு, உணவின்றிப் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். தென்கொரியா, வடகொரியாவைச் சேர்த்து ஏறத்தாழ 20 இலட்சம் கொரிய மக்கள் இந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரில் கொல்லப்பட்டனர்.


    மூன்றாண்டுகள் நீடித்த இந்த கொரிய ஆக்கிரமிப்புப் போர், பின்னாளில் அமெரிக்கா நடத்திய மிகப் பெரிய ஆக்கிரமிப்புப் போர்களுக்கெல்லாம் ஓர் ஒத்திகையாக அமைந்துள்ளது. வியட்நாம், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக்  என அமெரிக்க இராணுவம் எங்கெல்லாம் காலடி எடுத்து வைத்ததோ, அங்கெல்லாம் முதுகெலும்பையே சில்லிட வைக்கும் அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் நடத்தப்பட்டன; நடத்தப்படுகின்றன.


    அமெரிக்கப் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைகள் பற்றி விசாரணை, தென்கொரியாவில் தொடர்கிறது. அமெரிக்க விசுவாச தென்கொரிய அரசு இப்படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதற்கு அடிப்படையே இல்லை. ஆனால், தென்கொரிய மரணக் குழிகளில் புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பவே செய்யும். அனைத்துலக உழைக்கும் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டப் பெருநெருப்பு மூண்டு, அது உலக மக்களின் கொடிய எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சுட்டெரிக்கவே செய்யும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது