Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 இந்திய பாதுகாப்புத் துறை, கடந்த மே7ஆம் தேதியன்று அக்னி3 என்ற ஏவுகணையை விண்ணில் ஏவிப் பரிசோதனை நடத்திய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, அக்னி3 ஏவுகணை அடுத்த ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ள அக்னி1 மற்றும் அக்னி2 ஏவுகணைகளைவிட, அக்னி3 ஏவுகணை அதிகத் தொலைவு ஏறத்தாழ 3,500 கி.மீ.சுற்றளவில் உள்ள இலக்குகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த மூன்று வகையான ஏவுகணைகளுமே அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. முதலிரண்டு ஏவுகணைகளைக் கொண்டு பாகிஸ்தானின் உள்பகுதிகளைக் கூடத் தாக்க முடியுமென்றால், அக்னி3 ஏவுகணையோ சீனாவைக் குறி வைக்கிறது.


 இந்தியப் பாதுகாப்புத்துறை இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஊடாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அக்னி5 என்ற ஏவுகணையையும்; ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ""ஹைபர் சோனிக்'' ஏவுகணையையும்; விண்ணில் இருந்து செலுத்தக்கூடிய ""அஸ்த்ரா'' ஏவுகணையையும் பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இத்தகைய ஏவுகணைகள், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகளைச் சுமந்து கொண்டு சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கக்கூடிய திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.


 இதுவொருபுறமிருக்க, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணை; பூமியில் இருந்து விண்ணுக்குச் சென்று, அங்குள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை; நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே15 சாகரிகா ஏவுகணை எனப் பல்வேறு விதமான பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்தியப் பாதுகாப்புத் துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.


 இந்தியா இப்படி முண்டா தட்டிக் கொண்டு நிற்பதற்கு எதிர்வினைகள் இல்லாமல் போகுமா? இந்தியா அக்னி3 ஏவுகணையைப் பரிசோதனை செய்த அதே சமயத்தில், பாகிஸ்தான், இந்தியாவின் உட்பகுதிகளைக் கூடத் தாக்கக் கூடிய திறன் கொண்ட ""ஷஹீன்2'' என்ற ஏவுகணையை, இரண்டு முறை ஏவிப் பரிசோதனை நடத்தியது. சீனாவோ, ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுண்டுகளை ஏந்திக் கொண்டு, 8,000 கி.மீ சுற்றளவில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும்; ஒரேயொரு அணுகுண்டை ஏந்திக் கொண்டு 12,000 கி.மீ முதல் 14,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் தனது இராணுவத்தில் சேர்க்கப் போவதாக அறிவித்த்திருக்கிறது.


 இந்தியாவும்பாகிஸ்தானும்; இந்தியாவும்சீனாவும் அமைதிப் பேச்சுவார்த்தை, பொருளாதார ஒத்துழைப்பு என ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இந்த ஆயுதப் போட்டியும், ஆயுதக் குவிப்பும் அந்த நல்லுறவுகளைச் சிதைத்துவிடாதா எனச் சிலர் கேட்கலாம்; ஆனால், இந்த நாடுகளோ, ""அணு ஆயுதம் இருந்தால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்'' எனக்கூறி,இந்த ஆயுதக் குவிப்பை நியாயப்படுத்துகின்றன.


 இந்தியா அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்திய பொழுது, அதனை நியாயப்படுத்த ""இதன் மூலம் இந்தியாபாக். இடையே போர் மூளும் அபாயத்தைக் குறைத்துவிட முடியும்; அணு ஆயுதம் கையிலிருந்தால், மரபு வழி ஆயுதங்களை பெருமளவு வாங்க வேண்டிய அவசியம் எழாது; இதன் மூலம், இராணுவச் செலவைக் குறைத்துவிட முடியும்'' என வாதிட்டது. ஆனால், இந்தியாபாக். இடையே கனன்று கொண்டேயிருக்கும் முறுகல்மோதல் நிலை, இந்த வாதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டது.


 1998ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்து அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்திய பிறகுதான், அவற்றுக்கிடையே இரண்டு முறை முழு அளவிலான போர் வெடிப்பதற்கான அபாயம் எழுந்தது. 1999இல் நடந்த கார்கில் சண்டையின் பொழுது, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவர் மீது மற்றொருவர் அணுகுண்டைப் போடப்போவதாக, 13 முறை மிரட்டிக் கொண்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


 2001இல் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, இரு நாடுகளும் போர் தொடுப்பதற்காக எல்லைப் புறத்தில் எதிரும் புதிருமாக படைகளையும், ஆயுதங்களையும் நிறுத்தின. எந்த நேரமும் போர் வெடித்து விடலாம் என்ற நிலையில், அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயி, பாக்.மீது அணு ஆயுதங்களைப் போடவும் இந்தியா தயங்காது எனச் சூசகமாக அறிக்கை விடுத்தார். அப்பொழுது பாக். இராணுவத்தின் தளபதியாக இருந்த மிர்ஸா அஸ்லம் பேக், நாங்கள் ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, மூன்று முறை கூட அணு ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவைத் தாக்குவோம் என்றார். இந்தப் போர்வெறி பிடித்த பேச்சுகள் வெற்று மிரட்டலாகவே முடிந்து போனாலும், அவை, இந்தியபாக். மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை. இந்தச் சம்பவங்கள் அணு ஆயுதம் மட்டுமே ஒரு நாட்டின் தற்காப்பை உத்தரவாதப்படுத்தி விடாது என்பதையும் நிரூபித்தன.


 இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்திய இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. துணை இராணுவப் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளையும் சேர்த்ததால் இராணுவத்திற்கு  ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஏறத்தாழ ரூ.1,40,000 கோடி. இது பத்தாண்டுகளுக்கு முன்பு, போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பொழுது, இராணுவத்திற்கு செலவிடப்பட்ட தொகையை விட, மூன்று மடங்கு அதிகம்; மைய அரசு, இந்திய நாட்டு மக்களின் கல்விக்காக ஒதுக்கும் தொகையைவிட இராணுவச் செலவு 3.6 மடங்கு அதிகம்; 100 கோடி மக்களின் நலவாழ்வுக்காக ஒதுக்கப்படும் தொகையைவிட 5.6 மடங்கு அதிகம்.


 இராணுவத்திற்குச் செலவு செய்வதைக் கணக்குப் பார்த்தால், உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாது என்ற வாதம் மூலம், இராணுவ ஒதுக்கீடு நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், இராணுவச் செலவை ஆராய நியமிக்கப்பட்ட அருண்சிங் கமிட்டியால் கூட, இப்பூதாகரமான செலவை நியாயப்படுத்த முடியவில்லை. இராணுவச் செலவில் 15 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என அக்கமிட்டி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.


 காயலாங்கடைக்குப் போக வேண்டிய அமெரிக்காவின் ட்ரென்டன் என்ற போர்க் கப்பலை, பல நூறு கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்யும் அளவிற்கு இராணுவத்தில் ஊதாரித்தனம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகளும்ஆயுதத் தரகர்களும் சேர்ந்து கொண்டு கமிசன் அடிப்பதற்காகவே தரம் குறைந்த போர்த் தளவாடங்கள் போஃபர்ஸ் பீரங்கி, இசுரேலின் பாராக் ஏவுகணை போன்றவை வாங்கப்படுகின்றன. இந்த ஊதாரித்தனமும், ஊழலும் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது.


 இந்திய அரசு பிப்ரவரி 1994இல் அக்னி ஏவுகணையைப் பரிசோதிக்கத் தொடங்கிய பொழுது, இந்தியா, தனது அனைத்து ஏவுகணைப் பரிசோதனைகளையும் உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கண்டித்தது. அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவ், அமெரிக்காவைச் சமாதானப்படுத்த அந்நாட்டுக்கு ஓடினார். ஆனால் இப்பொழுதோ, அக்னி3 ஏவுகணைப் பரிசோதனை பற்றி அமெரிக்கா வாய் திறக்க மறுக்கிறது.


 அமெரிக்காவின் இந்த மாற்றம், இந்தியா ""வல்லரசாகி<<<<'' விட்டதைக் குறிக்கவில்லை. மாறாக அமெரிக்கா, ஆசிய கண்டத்தில் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜப்பான், இசுரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு இந்தியாவையும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் போட்டு வருகிறது. 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய உலக ஒழுங்கமைவு என்ற அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டம், ஆசியாவில், சீனாவை அமெரிக்காவின் போட்டியாளராகக் குறிப்பிடுகிறது. சீனாவைக் கண்காணிக்க, உருட்டி மிரட்ட இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு.


 இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான், இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்; இந்திய  அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் ஆகியவை போடப்பட்டுள்ளன. 3,500 கி.மீ., 5,000 கி.மீ தாண்டிச் செல்லும் ஏவுகணைகளை இந்தியா தயாரிப்பதை, அமெரிக்கா கண்டுகொள்ளõமல் இருப்பதை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.


 தனது தற்காப்புக்கு அணு குண்டுகளையும் ஏவுகணைகளையும் தயாரித்துக் கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டென்றால், மற்ற ஏழை நாடுகளுக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், இந்தியாவோ, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு, ஏழை நாடுகள் அணுசக்தி என வாயைத் திறப்பதற்குக் கூடத் தடை போடுகிறது. சர்வதேச அணுசக்தி முகமையில், ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்த நாட்டாமைக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.


 அமெரிக்காவுக்கு அடியாள் வேலை செய்வதன் மூலம், தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயலுகிறது, இந்தியா. இந்த அமெரிக்க அடிமைத்தனத்தையும், பேட்டை ரௌடித்தனத்தையும் மூடி மறைப்பதற்காகவே, இந்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பாக்சீன அச்சுறுத்தல்கள், வல்லரசுக் கனவு போன்றவற்றை ஊதிப்பெருக்கி வருகிறது.


 விவசாய உற்பத்தி வீழ்ச்சியாலும், விலைவாசி உயர்வாலும் இந்திய நாட்டின் உணவுப் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிட்டது. கல்வி தனியார்மயமானதால், அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை கல்வி கிடைப்பது கூட உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது; கடன் வாங்கி படித்து முடித்தாலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பெரும்பாலான இந்திய மக்களுக்கு உணவு, உடை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதுவுமே கிடைக்காமல், அவர்கள் உத்தரவாதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும்பொழுது, தேச பாதுகாப்பு என்பதன் பொருள் என்ன? நாடு என்பது நான்கு புறமும் உள்ள எல்லைக் கோடுகள்தானா? அந்த எல்லைக்குள் வாழும் மக்களின் நலன் இல்லையா? பெரும்பாலான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தலா? இல்லை, இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளா?


· பாலன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது