Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குற்றவாளியே நீதி வழங்கும் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும்? அந்தத் திருப்பணியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக நேர்த்தியாகச் செய்து வருகிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முசுலீம் படுகொலை கலவரத்தை விசாரிக்க, மோடி நானாவதி கமிசனை அமைத்தார். அப்படுகொலை நடந்து முடிந்து ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டபிறகும், அந்த கமிசன் விசாரணை என்ற பெயரில் மாவு அரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அக்கமிசனைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான கே.ஜி. ஷா என்பவர் சமீபத்தில் இறந்து போய்விட்டார்.


 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக வழக்குகளை நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கே.ஜி.ஷாவின் இடத்தில் வேறொருவரை நியமிக்க, ஐந்து நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைத்து, அவர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு குஜராத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அந்த ஐந்து நீதிபதிகளின் பெயரையும் புறக்கணித்துவிட்டு, ஓய்வு பெற்ற குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியான அக்சய் மேத்தா என்பவரை, நானாவதி கமிசன் நீதிபதிகளுள் ஒருவராக நியமித்திருக்கிறார்.
 நரேந்திர மோடி மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவிற்குப் பதிலாக, தனது கையாட்களுள் ஒருவரை நானாவதி கமிசன் "நீதிபதி'யாக நியமித்திருக்கலாம். ஏனென்றால், மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவின் பணிக்கால வரலாறு அப்படிப்பட்டது. குஜராத் முசுலீம் படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கில், முக்கிய, முதன்மைக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்குப் பிணை வழங்கியவர்தான் நீதிபதி அக்சய் மேத்தா. அவ்வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், மோடிக்கும் அக்சய் மேத்தாவுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.


 அந்தப் பின்னணியை நாம் விவரிப்பதைவிட, பாபு பஜ்ரங்கியின் வார்த்தைகளில் கேட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தெகல்கா ஆங்கில வார இதழ் குஜராத் முசுலீம் படுகொலை பற்றி நடத்திய இரகசிய விசாரணையில், பாபு பஜ்ரங்கி தனக்குப் பிணை கிடைப்பதற்காக நரேந்திர மோடி பட்ட பாட்டை பெருமிதத்தோடு விளக்கியிருக்கிறான். இதோடு, நரோடா பாட்டியா படுகொலை பற்றியும்; அப்படுகொலை வழக்கை ஊத்தி மூடிவிட குஜராத் போலீசு செய்திருக்கும் சதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


 அகமதாபாத் நகர போலீசின் தலைமை அலுவலகத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகுதிதான் நரோடா பாட்டியா. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் எரிந்து போன மறுநாளே, பாபு பஜ்ரங்கி தலைமை தாங்கி வந்த கும்பலால் நரோடா பாட்டியா தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 200 முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது பாபு பஜ்ரங்கியே தரும் கணக்கு. ஆனால், அரசோ 105 முசுலீம்கள்தான் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.


 அத்தாக்குதல் நடந்தபொழுது அகமதாபாத் நகர போலீசு கமிசனராக இருந்த பி.சி. பாண்டே, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே, அப்பகுதியில் கொல்லப்பட்ட பல முசுலீம்களின் உடல்களை போலீசு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய், நகரத்தின் பல பகுதிகளில் வீசியெறியச் செய்தார். இதற்குப் பரிசாக, பி.சி. பாண்டே குஜராத் போலீசு துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.


 உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட 41 முசுலீம்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டன. இதன் மூலம், அகமதாபாத் நகர போலீசே முக்கியமான தடயங்களை அழித்தது.


 நரோடா பாட்டியா வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான அசோக் சிந்தியின் கைபேசி படுகொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதன் மூலம், முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த உரையாடலை விசாரணை செய்யத் தொடங்கினார், கூடுதல் போலீசு கமிசனர் ஏ.கே. சுரோலியா. சட்டப்படி விசாரணை மேற்கொண்டதற்காக ஏ.கே. சுரோலியா இடம் மாற்றம் செய்யப்பட்டார். இப்படி பல்வேறு சாட்சியங்களை அழித்ததோடு, முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கியைப் பாதுகாக்கும் பொறுப்பையும் நரேந்திர மோடியே எடுத்துக் கொண்டார்.


 ""(படுகொலைக்குப் பிறகு) போலீசு கமிசனர் (எனக்கு எதிராக) உத்தரவுகள் பிறப்பித்தார். நான் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுமாறு கோரப்பட்டேன். நான் ஓடிப் போனேன். நரேந்திர பாய் என்னை மவுண்ட் அபுவில் உள்ள குஜராத் பவனில் நாலரை மாதங்கள் தங்க வைத்தார்.''


 ""நரேந்திரபாய் என்னைச் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். இதற்காக அவர் நீதிபதிகளை மாற்றிக் கொண்டேயிருந்தார். என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தார். இல்லையென்றால், நான் சிறைக்குள்ளேதான் அடைபட்டுக் கிடந்திருப்பேன். தோலாகியாஜி என்ற நீதிபதி, என்னை ஒருமுறையல்ல, நான்கு முறை தூக்கில் போட வேண்டும் எனக் கூறினார். அடுத்து வந்த நீதிபதியோ, என்னைத் தூக்கில் போட வேண்டும் எனக் கூறவில்லையே தவிர... மூன்றாவதாக வேறொரு நீதிபதி வந்தார்... இதற்குள் நாலரை மாதங்கள் சிறையில் கழித்துவிட்டேன்... பிறகு, நரேந்திரபாய் எனக்கொரு செய்தி அனுப்பினார்... எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிப்பேன் என்று... அடுத்ததாக, அக்சய் மேத்தா என்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டார். அவர் எனது வழக்கு சம்பந்தமான கோப்புகளையோ, வேறெதையோ கண்டு கொள்ளவேயில்லை... (பிணை) வழங்கப்படுகிறது என்று மட்டும்தான் அவர் சொன்னார்... நாங்கள் அனைவரும் வெளியே வந்து விட்டோம்...''  இது, தெகல்கா வார இதழ் நடத்திய இரகசிய விசாரணையில் பாபு பஜ்ரங்கியே அளித்திருக்கும் சாட்சியம். பொதுவாக, விசாரணை கமிசன் என்பதே கண்துடைப்பு நாடகம் என்றுதான் கூறப்படும். ஆனால், நரேந்திர மோடியோ, மிகவும் வெளிப்படையாக, நானாவதி கமிசன் என்பது தனது எடுபிடிகளின் கூடாரம் எனக் காட்டிவிட்டார்.


 குஜராத் படுகொலைகள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, குஜராத் முசுலீம் மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தியதையடுத்து, நரோடா பாட்டியா படுகொலைகள் உள்ளிட்ட 14 முக்கிய வழக்குகளை மீண்டும் விசாரணை செய்வதற்கு ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது, உச்சநீதி மன்றம். இக்குழுவில் நோயல் பார்மர், ஜெயேஷ் முலியானா என்ற இரு போலீசு அதிகாரிகளும் உறுப்பினர்களாகத் திணிக்கப்பட்டனர். இந்த இருவருமே முசுலீம்களுக்கு எதிராகச் செயல்பட்ட பின்னணி கொண்டவர்கள். குறிப்பாக, நோயல் பார்மர் முசுலீம் என்ற காரணத்தினாலேயே பல பேரை ""தடா''வின் கீழ் கைது செய்து, தனது முசுலீம் வெறுப்புணர்வை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டவர்.


 இந்த அதிகாரிகளின் நியமனம், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டதால், பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அந்த அதிகாரிகளை நீக்கக் கோரிப் போராடிய பிறகுதான், அந்த இருவரும் விசாரணைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட முசுலீம்கள் இப்பொழுது நீதிபதி அக்சய் குமாரை நீக்கக் கோரும் இன்னுமொரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராடாமல், காகிதச் சட்டத்தையும், அதிகாரிகளையும் நம்பிக் கொண்டிருந்தால், தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதை குஜராத் முசுலீம்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.


· அழகு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது