Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கடந்த மே மாத மத்தியில், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள ஓசூர் பகுதியில் நடந்துள்ள விஷச் சாராயச் சாவுகள் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 18.5.08 அன்று பின்னமங்கலம் கிராமத்தில் மட்டும் 9 பேர் மாண்டு போயுள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள பல கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் சாராயச் சாவுகள் அதிகரித்து மொத்தத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த குழந்தைகள், மகனை இழந்த தாய் என இவ்வட்டாரம் மாளாத் துயரத்தில் விம்மிக் கொண்டிருக்கிறது. ஓசூரை அடுத்த கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் விஷச் சாராயத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 170ஐத் தாண்டி விட்டது.


 மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை தமிழகத்துக்குக் கடத்தி வரவும், எல்லையோரக் கிராமங்களில் விற்பனை செய்யவும் அனுமதித்து, சாராயக் கும்பலுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழகப் போலீசு, தற்போதைய சாராயச் சாவுகள் மூலம் தமது கிரிமினல் குற்றங்கள் வெளிவரத் தொடங்கியதும் அவற்றை மூடி மறைக்க பல தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது. கர்நாடகாவுக்கு வேலைக்குச் சென்றவர்கள் அங்கு விற்ற விஷச் சாராயத்தைக் குடித்து மாண்டதாகவும், தமிழகத்தில் கள்ளச் சாராயமே கிடையாது என்றும் புளுகி வருகிறது. மேலும், இறந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், பிரேதப் பரிசோதனையால் மாண்டவரின் உடல் விகாரமாகி விடும்; வழக்கு  வாய்தா என்று கோர்ட்டுக்கு அலைய நேரிடும் என்று பீதியூட்டி உடனடியாகப் புதைக்கச் செய்து, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது.


 சாராய கிரிமினல் கும்பலிடம் வாங்கி, உள்ளூரில் சாராயத்தை விற்று கைது செய்யப்பட்டுள்ள பலரில் பின்னமங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரும் ஒருவர். இவரும் இவருக்குச் சாராய சப்ளை செய்த மாதப்பாவும் நேற்றுவரை சி.பி.எம். கட்சி ஆதரவாளர்களாக இருந்து, அண்மையில் தளி எம்.எல்.ஏ. இராமச்சந்திரன் ஆசியுடன் வலது கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர். சாராய கும்பலுடன் போலீசும் அதிகார வர்க்கமும் மட்டுமின்றி, புரட்சி பேசும் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கூட்டுச் சேர்ந்து சீரழிந்து கிடக்கிறது.


 சாராயம் காய்ச்சி விற்பது என்பது நம் நாட்டில் காலங்காலமாக நடந்து வந்த தொழில்தான். ஆனால், பெரும் சீமைச் சாராய ஆலைகள் வைத்து நடத்தும் தொழிலதிபர்கள் உருவானதும், சாராய உற்பத்தி, விற்பனைக்கு விதிக்கப்படும் கலால் வரியானது அரசு வருவாய்க்கு முக்கிய மூலாதாரமாகியது. அதன் பின்னர்தான், இந்த ஏற்பாட்டுக்கு வெளியே சாராயம் காய்ச்சி விற்பது குற்றத் தொழிலாக  சட்டவிரோதத் தொழிலாக்கப்பட்டது. இருப்பினும் வறுமை காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் சாராயம் காய்ச்சி விற்பது தொடரத்தான் செய்கிறது.
 ஆனால், கள்ளச் சாராயத் தொழிலில் புகுந்துள்ள கிரிமினல் குற்றக் கும்பல்கள் வேறு வகையினர். இவர்கள் சாராய ஊறல், அடுப்பு, பானை என்று தொழில் செய்வதில்லை. அதைவிட மலிவான, காட்டமான போதை தரும் சாராயத்தை மெத்தனால், எரிசாராயம் மற்றும் பிற இரசாயனக் கலவைகளைக் கொண்டு தயாரித்து குறுகிய காலத்திலேயே கோடிகளை அள்ளுகின்றனர்.


 உள்ளூர் ஓட்டுக்கட்சித் தலைவர்கள்  போலீசு அதிகாரிகளின் கூட்டாளியாகவோ பினாமியாகவோ உள்ள இச்சாராய கிரிமினல்களில் சிலர் அரசியல் தலைவர்களாகவும், இன்னும் சிலர் வீட்டுமனைத் தொழில் முதலானவற்றில் இறங்கி புதிய தொழிலபதிபர்களாகவும், சுயநிதிக் கல்லூரி நடத்தும் கல்வித் தந்தையாகவும் பரிணமிக்கின்றனர். இச்சாராய கிரிமினல் கும்பல்கள்தான் கூலிப் படையைக் கட்டியமைத்துக் கொண்டு தேர்தல் சமயங்களில் கள்ள ஓட்டு, வெடிகுண்டு வீச்சு, வாக்குச் சாவடிகளைச் சூறையாடி குறிப்பிட்ட வேட்பாளரை வெற்றி பெற வைப்பது என எல்லா வகை வன்முறை வெறியாட்டங்களையும் முன்னின்று நடத்துகின்றன. இதே மாதிரியான சட்டவிரோத  சமூக விரோத வேலைகளை சீமைச்சாராய ஆலை அதிபர்கள் மேல் மட்டத்தில் செய்கின்றனர். இவர்கள் வாரியிறைக்கும் கள்ளப் பணத்தில்தான் தேர்தல் திருவிழா தடபுடலாக நடக்கிறது. அமைச்சர்களைத் தெரிவு செய்வது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது வரை இவர்களது ஆதிக்கமும் செல்வாக்கும் கொடி கட்டிப் பறக்கிறது.


    இன்று நாடெங்கும் இப்படிப்பட்ட சீமைச் சாராய மன்னர்களும் உள்ளூர் கள்ளச் சாராய தளபதிகளும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள ஓட்டுக் கட்சித் தலைவர்கள்  அதிகாரிகள்  போலீசு கும்பலும் கொண்ட சாராய சாம்ராஜ்ஜியம்தான் கோலோச்சுகிறது. இவர்கள்தான் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பறிப்பவர்கள். உற்றார் உறவினர்களை விஷச் சாராயத்துக்குப் பலி கொடுத்துவிட்டு உழைப்பாளி பெண்களும் குழந்தைகளும் அனாதரவாக நிற்கக் காரணமானவர்களும் இவர்கள்தான். ஆனால், இவர்களையெல்லாம் பாதுகாத்துக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக மெத்தனால் சாராயம் விற்றவர்களை மட்டுமே குற்றவாளிகளாகக் காட்டுகிறது அரசு. மறுபுறம் இது கர்நாடக விஷச் சாராயம்; தமிழகத்தில் உற்பத்தியாகவில்லை என்று கூறி நழுவிக் கொள்கிறது. இக்கள்ளச் சாராய விற்பனை தமிழக போலீசின் ஆதரவோடுதான் நடந்துள்ளது என்றாலும், போலீசு கும்பலைக் கைது செய்து தண்டிப்பதற்குப் பதில், மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி. திலகவதியை பணிமாற்றம் செய்தும் தளி போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசாரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதைப் போல காட்டிக் கொள்கிறது, தமிழக அரசு.


 தற்போதைய ஓசூர் விஷச் சாராய சாவுகள் விவகாரத்தில் மட்டுமல்ல; இதற்கு முன் 1998இல் ஓசூரை அடுத்த சூளகிரியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் பலியானபோதும், 2001இல் சென்னை  செங்குன்றத்தில் 50க்கும் மேலானோர் கொல்லப்பட்ட போதும் எந்தவொரு போலீசுக்காரனோ, அதிகாரியோ தண்டிக்கப்படவில்லை. இதுதான் சாராயத்தால் செழிக்கும் ஓட்டுக் கட்சி ஜனநாயகத்தின் யோக்கியதை! இக்கேடு கெட்ட கொலைகார சாராய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்காமல் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது. சமூக விரோத கள்ளச் சாராய கிரிமினல் கும்பலைப் பிடித்து உழைக்கும் மக்களே தண்டிக்காதவரை, தொடரும் சாராயச் சாவுகளைத் தடுத்து விடவும் முடியாது.


 பு.ஜ. செய்தியாளர்கள்,  ஓசூர்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது