Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தல்களில் பாரதிய ஜனதா அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனாலும், பா.ஜ.க., காங்கிரசின் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிபெற்ற ஆறு உறுப்பினர்களின் ஆதரவோடு தென்மாநிலங்களில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்து விட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் பார்ப்பன இந்து மதவெறி, கன்னட இனவெறி, லிங்காயத் மற்றும் வொக்கலிகா ஆகிய ஆதிக்க சாதிவெறி அடிப்படையிலான வலுவான மத, இன மற்றும் சாதி அரசியல் அமைப்பை அக்கட்சி கட்டி வளர்த்திருப்பதுதான். இத்தகைய அரசியல் அமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற இந்து மதவெறி அமைப்புகளாகும்.

 பிற்பட்டவை என்று கூறிக் கொள்ளும் லிங்காயத் மற்றும் வொக்கலிகா சாதிகளும், கன்னட இன உணர்வும் ""எழுச்சியுற்ற போது'', அவை தம்மைப் பார்ப்பன இந்துத்துவத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டன. அதனால்தான் கர்நாடகாவில் அதன் அண்டை மாநிலங்களில் காணாத அளவு இசுலாமியர் எதிர்ப்பு மதவெறிப் படுகொலைகளை நடத்தி, ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் தொடர்ந்து வளர்ந்து, இப்போது ஆட்சியைப் பிடிக்கவும் முடிந்துள்ளது.
 பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதிகளின் கூட்டு அடிப்படையிலான சாதிவெறி, அந்தந்த மாநிலத்துக்கேற்ப இனவெறி மற்றும் பாசிச இந்து மதவெறி ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்த அரசியல் போதைதான் மோடித்துவா என்றழைக்கப்படுகிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சித்தாந்தமாகிய இந்துத்துவா எடுத்துள்ள புதிய அவதாரம். மோடி தலைமையிலான முசுலீம் படுகொலை வெறியாட்டத்துக்கு எதிரான அரசியல் எதிர்ப்புகளையெல்லாம் குஜராத்தி மக்களை அவமானப்படுத்துவது என்று முத்திரை குத்தி இனவெறியைத் தூண்டி, அரசியல் ஆதாயம் அடைந்தார், மோடி. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்குக் கை கொடுத்தது இந்த மோடித்துவா சித்தாந்தம்தான். விலைவாசி உயர்வு எதிர்ப்பு, தகவல் தொழில்நுட்ப நகரமாகிய பெங்களூரு உட்பட நகர்ப்புறங்களில் கட்டுமான வசதிக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பொதுப் பிரச்சாரங்களோடு, தேவே கவுடா  குமாரசாமி குடும்பம்  துரோகமிழைத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கலைத்ததைக் காட்டி நிலையான ஆட்சி முழக்கத்தை பா.ஜ.க. முன்வைத்தது. ஆனால், இவற்றை விட முக்கியமாக, சமீபத்தில் நடந்த ஹுப்ளி குண்டு வெடிப்பு, ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் பெல்காமில் ""முசுலீம் தீவிரவாதி'' என்பதாக ஒருவரைக் கைது செய்தது, மற்றும் கர்நாடகா பயங்கரவாதப் புகலிடமாக மாறிவிட்டது என்ற வதந்தி ஆகியவற்றைக் காட்டி பா.ஜ.க. மேற்கொண்ட இசுலாமிய, பயங்கரவாத எதிர்ப்பு பொய்ப்பிரச்சாரம்; காவிரி  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராக எடியூரப்பாவே நேரில் சென்று கிளப்பிய கன்னட இனவெறி; லிங்காயத் சாதித் தலைவராகவும், கர்நாடகாவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராகவும் எடியூரப்பாவை முன்னிறுத்தி, அச்சாதியினர் பெரும்பான்மையாக வாழும் பகுதியைக் குறிவைத்து தேர்தல் பணியாற்றியது  இவையெல்லாம் கர்நாடகாவுக்குப் பொருத்தமான வகையில் மோடித்துவாவை அமலாக்கி பா.ஜ.க. வெற்றி அடைந்ததைக் குறிக்கின்றன.


 கர்நாடகாவில் தமது கட்சி அடைந்துள்ள வெற்றி பூகோள ரீதியிலும் சமூக ரீதியிலும் தமது ஆதரவு விரிவடைந்து வருவதைக் குறிப்பதாகவும்  அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதகமாக அமையும் என்பதைக் காட்டுவதாகவும் பா.ஜ.க. தலைவர்கள் குதூகலிக்கின்றனர். பா.ஜ.க. ஆதரவு செய்தி ஊடகங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளில் நடந்த மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களில் பீகார், பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலை தொடருமானால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்து மதவெறி பாசிசத்துக்கெதிரான உறுதியான போராட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கு மாறாக, அதனுடன் சமரசப் போக்கையும்; மக்கள் விரோத, தனியார்மயம்  தாராளமயம்  உலகமயமாக்கம் என்ற ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும் காங்கிரசு மற்றும் இடது கூட்டணி ஆகிய போலி மதச்சார்பற்ற சக்திகள் கடைப்பிடிப்பதும் இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கூட்டணி மீண்டும் தலைதூக்குவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது