Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொல்கத்தா நகரைச் சேர்ந்த மின்சார ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக இருந்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 லாரிகளில் ஒரு கும்பல் வந்திறங்கியது. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கøக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. இரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் சிதறி ஓடியும், அவர்களைத் துரத்திக் கொலைவெறியுடன் தாக்கியது.

 இத்தாக்குதலில் ராம் பர்வேஸ்சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இப்படி ஈவிரக்கமின்றி ஒருவரை அடித்துக் கொன்றது ஏதோ ரவுடிக் கும்பல் அல்ல. தொழிலாளி வர்க்கத் தோழனாகத் தன்னைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் சி.ஐ.டி.யு.வின் குண்டர்கள்தான் அவர்கள்.


கொல்கத்தாவுக்கும், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ""கல்கத்தா மின் விநியோகக் கழகத்து''க்காக ஒப்பந்த அடிப்படையில் மின்கம்பிகள் பதிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இந்தத் தொழிலாளர்களை, அரசு மின்சார ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கியக் கோரிக்கை. உயர் அழுத்த மின்கம்பிகளை நிலத்தடியில் புதைக்க மண்ணைத் தோண்டும் இவர்கள் தவறுதலாக ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள மின்கம்பிகளைத் தொட்டுவிட நேரும்போது கருகிச் சாகும் அபாயம் மிக்க வேலையைச் செய்பவர்கள். இவர்களை மின்சாரத் தொழிலாளர்களாக அங்கீகரித்தால் மட்டுமே தினசரி ஊதியமாக ரூ. 225ம், பணிக்காலத்தில் உயிர் இழப்பின் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சமும் இவர்களுக்குக் கிடைக்கும். இதுவரை அவர்களை அரசு, கட்டுமானத் தொழிலாளர்களாக மட்டுமே அங்கீகரித்து வந்துள்ளதால், இப்போது கிடைக்கும் தினக்கூலி ரூ. 110 மட்டுமே. இழப்பீட்டுத் தொகையோ ரூ. 1.5 லட்சம்தான்.


இந்தத் தொழிலாளர்கள், "கல்கத்தா மின்விநியோகக் கழக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்' எனும் அமைப்பின் கீழ் திரண்டு இக்கோரிக்கையை வைத்துப் போராடியதற்காகத்தான் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யு.வில் சேராமல் சுயேச்சையான தொழிற்சங்கம் கட்டி, வேலைநிறுத்தம் செய்யத் துணிந்தமைக்காகத்தான் இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர், பாட்டாளி வர்க்கத்(!) தொழிற்சங்கத்தினர்.


சுயேச்சையான தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்கிக் கொலை செய்த குற்றத்துக்காக சி.ஐ.டி.யு. அமைப்பைச் சேர்ந்த கௌரங் தத்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


""இயல்பாகவே ஆலை அதிபர்களின் ஆதரவாளர்களாக அரசு இருப்பது வழக்கம். 30 வருடங்களாக முதலாளித்துவ அரசை நடத்தி வரும் சி.பி.எம். அரசில் சி.ஐ.டி.யு.வும் அரசின் நீட்சியாக மாறிவிட்டது. தொழிலாளர் போராட்டம் என்பதெல்லாம் சி.ஐ.டி.யு.வின் செயல் திட்டத்திலேயே இல்லை. தொழிலாளர் பிரச்சினை என்று வரும்போதெல்லாம், சி.ஐ.டி.யு. தொழில் அதிபர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பேரம் பேசி வருகிறது'' என்று சர்மிஸ்தா சவுத்ரி எனும் பெண் தொழிற்சங்கவாதி குற்றம் சாட்டுகிறார்.


""தொழிலாளர்களின் பாதுகாப்பு நன்றாகவே உள்ளது. நாங்கள் சி.ஐ.டி.யு. வுடன் நெருக்கமாக செயல்படுகிறோம்'' என்று ஒப்பந்தத்தின் பேரில் மின்கழகத்துக்கு ஆட்களை அமர்த்தும் முதலாளிகளில் ஒருவரான அபாஸ் சாட்டர்ஜி, சி.ஐ.டி.யு. செய்துவரும் கருங்காலி வேலைக்கு நற்சான்று வழங்குகிறார்.


ஒரு மாநிலத்தின் தலைநகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் மாற்றுத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை வெறிகொண்டு தாக்கிக் கொலை செய்யத் துணிந்த சி.பி.எம். கட்சியினர், ஊடகங்களே உட்புக முடியாத நந்திகிராமில் எவ்வளவு அட்டூழியங்களைச் செய்திருப்பார்கள்? இவர்கள் நந்திகிராமில் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை "இந்திய புரட்சிகர ஜனநாயக முன்னணி' எனும் மனித உரிமை அமைப்பு தனது அறிக்கையில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.


மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழ்நாட்டில் சி.ஐ.டி.யு. பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இதே கோரிக்கையை முன்வைத்துக் கொல்கத்தாவில் போராடும் தொழிலாளர்களைத் தாக்க சி.ஐ.டி.யு. குண்டர்களை ஏவுகிறது. கைதேர்ந்த பாசிஸ்டுகளுக்கே உரிய வகையில் செயல்பட்டு வரும் இந்தக் கருங்காலிகளைக் களத்தில் இறங்கி முறியடிக்காமல் தொழிலாளி வர்க்கம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாது என்பதையும், வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் இனி சி.ஐ.டி.யு.வில் இயங்க முடியாது என்பதையும் கொல்கத்தாவில் நடந்துள்ள கொலை நிரூபித்துக் காட்டிவிட்டது.


· செங்கதிர்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது