Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பா கண்டத்தின் பால்கன் பிராந்தியத்திலுள்ள சின்னஞ்சிறு நாடான செர்பியாவிலிருந்து, அதன் தெற்கு மாநிலமான கொசாவோ கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் வரவேற்று, கொசாவோ நாட்டை அங்கீகரித்துள்ளன. அதேநேரத்தில் ரஷ்யாவும் செர்பியாவும் கொசாவோவின் தனிநாடு பிரகடனத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அத்தனி நாட்டை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இதேபோல, சிங்கள இனவெறி பிடித்த இலங்கை பாசிச

 அரசும் கொசாவோ விடுதலைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கொசாவோவை அங்கீகரிக்கத் தயக்கம் காட்டுகின்றன. மறுபுறம், சில தமிழினவாதிகள் கொசாவோவின் விடுதலையையும், தனிநாடு பிரகடனத்தையும் வரவேற்று ஆதரிக்கின்றனர்.


செர்பியாவின் இனவெறி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வந்த கொசாவோவின் விடுதலையைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிப்பதா, அதன் தனி நாடு பிரகடனத்தை வரவேற்பதா என்ற விவாதத்துக்குள் நுழையும் முன், கொசாவோ பற்றிய எதார்த்த நிலைமைகளை வரலாற்றுப் பின்னணிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் ஒன்றிணைந்து போராடி, அளப்பரிய தியாகத்துடன் நாட்டு விடுதலையைச் சாதித்து, புதிய முற்போக்கான அரசுகளை நிறுவினர். இவற்றில் செக்கோஸ்லாவாக்கியா நாடானது செக், ஸ்லாவாக் எனுமிரு தேசங்களைக் கொண்ட அரசாக இருந்தது. யூகோஸ்லாவிய நாடானது. செர்பியா, குரேஷியா, ஸ்லோவேனியா, மாசிடோனியா, மாண்டி நிக்ரோ, போஸ்னியா ஹெர்சகோவினா, கொசாவோ ஆகிய தேசிய இனங்களைக் கொண்ட நாடாக உருவானது.


1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளால் பல தேசிய அரசுகளாகப் பிளவுபட்டுச் சிதைந்தது. அதன் தொடர்ச்சியாக செக்கோஸ்லாவாக்கியா நாடானது, செக், ஸ்லோவாக் எனுமிரு நாடுகளாக உடைந்தது. பல தேசிய இனங்களின் கூட்டரசாக உருவான யூகோஸ்லாவி யாவில் செர்பிய ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்ததாலும், பெயரளவிலான சோசலிச நாடுகள் கூட நீடிக்கக் கூடாது என்ற ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளுக்கேற்ப தேசிய இனவெறி தூண்டிவிடப்பட்டதாலும், ஐக்கியப்பட்ட அந்நாடு பல கூறுகளாகச் சிதைந்து இன்று உலக வரைபடத்தில் யூகோஸ்லாவியா என்ற நாடே காணாமல் போய்விட்டது.


1991ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய இரு தேசிய இனங்கள் பிரிந்து தனி அரசுகளாயின. 1992இல் போஸ்னியா ஹெர்சகோவினா பிரிந்தது. அதைத் தொடர்ந்து, 2007இல் மாண்டிநிக்ரோ தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. எஞ்சிய பகுதிகள் செர்பியா என்றழைக்கப்பட்டு வந்தது. தற்போது செர்பியாவிலிருந்து பிரிந்து, கொசாவோ தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.


பல தேசிய இனங்களின் ஐக்கியப்பட்ட ஒன்றியமாக யூகோஸ்லாவியா விளங்கிய காலத்திலேயே தமது மேலாதிக்கத்தைத் திணித்து வந்த செர்பியர்கள், இதர தேசிய இனங்கள் பிரிந்து செல்லத் தொடங்கியதும் அப்பட்டமான கிறித்துவ மதவெறியையும் செர்பிய பெருந்தேசிய இன வெறியையும் கட்டவிழ்த்து விட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீது போர் தொடுத்து ஒடுக்கினர். ""அகண்ட செர்பியா'' எனும் தேசிய இனவெறியோடு செர்பியர்கள் நடத்திய காட்டுமிராண்டிதனத்தால் யூகோஸ்லாவியா இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. செர்பியாவின் ஒரு மாகாணமாக இருந்த கொசாவோவில், செர்பிய இனவெறி ஒடுக்குமுறையை எதிர்த்து அம்மக்கள் ஆயுதமேந்திப் போராடி வந்தனர்.


கொசாவோவின் எல்லையிலுள்ள அல்பேனிய மக்களே கொசாவோவில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் இனத்தால் அல்பேனியர்கள்; மதத்தால் இஸ்லாமியர்கள். எனவே, செர்பிய இனவெறி ஒடுக்குமுறையிலிருந்து மீள, அல்பேனிய நாட்டுடன் கொசாவோ மாகாணத்தை இணைக்கக் கோரி போராடி வந்தனர். பால்கன் பிராந்தியத்தில் காலூன்றி தனது மேலாதிக்கத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்க வல்லரசு, கொசாவோ மக்களின் போராட்டத்தை ஆதரித்து ஊக்குவித்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் முஸ்லீம் மக்களை அன்றாடம் கொன்று குவித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், கொசாவோவில் அல்பேனிய இன முஸ்லீம்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தனர்.


கொசாவோ மக்களைக் காப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய கூட்டமைப்பின் (நேட்டோ) படைகள் குவிக்கப்பட்டன. மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி செர்பியா மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திப் போர் தொடுத்தன. கொசாவோவிலிருந்து செர்பியப் படைகள் வெளியேற்றப்பட்டு, ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வை திணிக்கப்பட்டது. கொசாவோ விடுதலைப் படை, அமெரிக்க விசுவாசக் கூலிப் படையாகச் சீரழிக்கப்பட்டது. கொசாவோவில் அமெரிக்க இராணுவத் தளம் நிறுவப்பட்டது. அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் போர்த் தாக்குதலில் செர்பியா மீண்டெழ முடியாதபடி நிலைகுலைந்து போனது.


இதன் தொடர்ச்சியாகவே கொசாவோ விடுதலைப் படையின் தலைவரான ஆசிம்தாசி, கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று கொசாவோவின் தலைநகர் பிரிஸ்தினாவில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், கொசாவோவைத் தனியொரு நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை அமெரிக்காவும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி முதலான ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அவற்றின் நோக்கம், கொசாவோ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதல்ல; மாறாக, தமது மேலாதிக்கத்தை நிறுவுவதேயாகும்.


இதற்கேற்ப கொசாவோ நாடாளுமன்றத்துக்குப் பெயரளவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவைதான் முடிவு செய்யும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2000 பேர் கொண்ட படையை அனுப்பி கொசாவோவைப் "பாதுகாத்து கண்காணிக்கும்'. இதுதவிர, 16,000க்கும் மேற்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியப் படைகள் (நேட்டோ) கொசாவோவில் நிலைகொண்டு அந்நாட்டைப் "பாதுகாக்கும்!'


கொசாவோ தனிநாடாக அறிவிக்கப்பட்டதும், அம்மாகாணத்தின் வடபகுதியிலுள்ள செர்பிய இனத்தினர் இதனை ஏற்க மறுத்து, தாங்கள் செர்பியாவுடன் இணையப் போவதாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனை ஆதரிக்கும் செர்பியாவுக்கு ரஷ்ய ஏகாதிபத்தியம் துணையாக நிற்கிறது. செர்பியா, தனது இழந்த மாகாணமாகிய கொசாவோவை மீட்கப் போர் தொடுக்க முனையும். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் துணையோடு கொசாவோ தனது தனிநாடு நிலையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும். ஆக, மீண்டும் பால்கன் பிராந்தியத்தில் இரத்த ஆறு ஓடப் போவது நிச்சயமாகி விட்டது.


அல்பேனியாவுடன் இணைய வேண்டும் என்பதுதான் கொசாவோ மக்களின் விருப்பமாகவும் போராட்டமாகவும் இருந்தது. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு இது ஏற்புடையதாக இல்லாததால், கொசாவோவை தனிநாடாக்கியுள்ளது அமெரிக்கா. மேலும் கொசாவோ மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த கொடியைக்கூட ஐரோப்பிய ஒன்றியம் மாற்றியமைத்துள்ளது. ஆக, கொசாவோ ஒரு சுதந்திர நாடல்ல; அது ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கான களம்; அவற்றின் மேலாதிக்க ஆட்டத்துக்கான பகடைக்காய் என்பது தெளிவாகி விட்டது.


இருப்பினும், இது கொசாவோ தேசிய இனத்தின் விடுதலை என்று ""சமூகநீதித் தமிழ்த் தேசம்'' எனும் தமிழினவாத பத்திரிகை குதியாட்டம் போடுகிறது. ""எப்படியோ, செர்பியர்களின் கொடுமைகளிலிருந்து கொசாவோ முஸ்லீம்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே ஆறுதல்'' என்று இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொசாவோ தனிநாடாகியுள்ளதை வரவேற்கிறார்கள். இப்படித்தான் அமெரிக்க ஏற்பாட்டின்படி, இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு திமோர் தனிநாடாக "விடுதலை' அடைந்ததையும் இனவாதிகள் வரவேற்று ஆதரித்தனர்.


ஆனால், இவையெல்லாம் தேசிய இன விடுதலையோ, சுயநிர்ணய உரிமையோ அல்ல. மாறாக, இத்தகைய "சுதந்திரம்', "விடுதலை'களால் அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் சீவி சிங்காரிக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டுள்ளன; அவற்றின் மேலாதிக்கத்துக்கு உதவுபவையாக அமைந்துள்ளன. ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக் கூடிய, அதன் மேலாதிக்கத்துக்கு புறக்காவல் அரண்களாக அமைந்துள்ள இத்தகைய "விடுதலை'களை ஆதரிப்பதானது, தேசிய இன விடுதலைக்கே எதிரான ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். தேசிய இனங்களின் உரிமையையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் சைவப்புலியாக ஏகாதிபத்தியம் மாறிவிட்டதாகக் காட்டி ஏய்க்கும் துரோகத்தனமாகும்.


மேலும் தனது பெருந்தேசிய இனவெறி நலன்களுக்கு எதிரானது என்பதாலேயே கொசாவோ விடுதலையை சிறீலங்கா அரசு எதிர்க்கிறது. சிங்கள இனவெறி பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்பது என்ற பெயரால், கொசாவோவின் "விடுதலை'யை ஆதரிப்பது முற்போக்கானதாகி விட்டது.


பொன் விலங்கைப் பூட்டிக் கொண்டாலென்ன, எப்படியோ இரும்பு விலங்கு போனால் போதும் என்று நியாயவாதம் பேசி ஏகாதிபத்திய வலையில் சிக்கிக் கொள்வது தேசிய இன விடுதலையாகாது; ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று போராடாமல், எந்தவொரு தேசிய இன விடுதலையையும் சாதிக்கவும் முடியாது. இந்த அரிய படிப்பினைகளை உலகிற்கு உணர்த்திவிட்டு, அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கண்காணிப்புப் பிடியில் சிக்கித் தவிக்கிறது, கொசாவோவின் "தேசிய இன விடுதலை'!


· குமார்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது