Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

04_2008.jpgஇந்திய நாடு மரபணுமாற்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது.


கத்தரிக்காய்; தமிழக மக்களின் உணவில் முக்கிய இடம்பெறும் காய். குண்டு கத்தரி. நீள கத்தரி, நாம கத்தரி, வெள்ளை கத்தரி என்று அதில் பல ரகமுண்டு. இப்போது புதிய ரகமாக பி.டி.கத்தரிக்காய் வரப்போகிறது. அதென்ன பி.டி.கத்தரிக்காய்?


இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய். காய்ப்புழுத் தாக்குதலை எதிர்க்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிச் செடியிலிருந்து காய்க்கும் புதிய வகை கத்தரிக்காய். பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல், செடியின் உள்ளே பொதிந்துள்ள மரபணுவை மாற்றி விடுவதன் மூலம் பூச்சிகள் செடிகளைத் தாக்குவதைத் தடுக்கும் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய கத்தரிச் செடியில் விளைவதுதான் பி.டி.கத்தரிக்காய்.


கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இப்புதியவகை கத்தரி விதைக்கப்பட்டு, செடிகள் வளர்ந்து காயும் பிஞ்சுமாக செழித்து நின்றன. அமெரிக்க விதைக் கம்பெனியான மான்சாண்டோவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் கூட்டுச் சேர்ந்து இரகசியமாக இப்புதிய ரக கத்தரியைப் பயிரிட்டு கள ஆய்வு செய்து வந்தன. இதையறிந்த தமிழக வேளாண் காப்புக் குழு, ஈரோடு இயற்கை விவசாயிகள் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் சிலர் பல்கலைக் கழக வளாகத்தில் கத்தரி தோட்டத்தின் அருகே திரண்டு விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் இந்த ஆராய்ச்சியை நிறுத்தக் கோரி கடந்த பிப்ரவரி 22ஆம் நாளன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், பல்கலைக் கழக நுழைவு வாயிலில் உள்ள பெயர்ப் பலகையில்,"" தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தற்போதைய உரிமையாளர் மான்சாண்டோ'' என்று எழுதி ஒட்டிவிட்டுக் கலைந்து சென்றனர்.


உடனே இப்பல்கலைக் கழக துணைவேந்தரும் பதிவாளரும், ""பட்டினிச் சாவுகளைத் தடுத்து பல லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு விவசாயமும் சமுதாயமும் பயனடைய வேண்டும் என்பதற்காக இப்பல்கலைக் கழகம் செயல்படுகிறது; அதனடிப்படையிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கள ஆய்வு செய்யப்படுகின்றன'' என்று நியாயவாதங்களை அடுக்கியதோடு, போராடியவர்கள் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் எதிரானவர்கள் என்று சாடி, போராடிய அமைப்புகள் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களும் உயிரி தொழில் நுட்பப் புரட்சியும் விவசாய உற்பத்தியைப் பெருக்குமா? மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களால் மனித இனத்துக்குப் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா? இவை குறித்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன?


மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களாலும் அவற்றின் பூக்கள், காய்கள், கிழங்குகள், விதைகளாலும் மனித இனத்துக்கு ஒவ்வாமையும் இனம் புரியாத பல்வேறு நோய்களும் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற மரபியல் விஞ்ஞானியான ப்ரென்னர் என்பவர், ""மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று கூற பெரும்பாலான விஞ்ஞானிகள் தயங்குகிறார்கள். ஏனென்றால், அவர்களின் ஆயுட்காலத்திலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆபத்தானவை'' என்று நிரூபிக்கப்பட்டுவிடும் என்கிறார்.


மனித இனம் மட்டுமின்றி, இப்பயிர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தாவரங்களுடன் ஒட்டுறவு கொண்டுள்ள பல்வேறு பூச்சிகள், நுண்ணுயிர்கள் மட்டுமின்றி நன்மை செய்யும் மண்புழுக்களும் இப்புதிய வகைப் பயிர்களால் அழிக்கப்படுகின்றன. மறுபுறம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மகரந்தங்கள் களைகளின் மகரந்தங்களுடன் சேர்ந்து, களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட புதியவகை "சூப்பர்' களைகளை உருவாக்கி விடுகின்றன. இவற்றை எந்த களைக் கொல்லி மருந்தாலும் கட்டுப்படுத்தவே முடியாது.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம், அது பயிரிடப்படும் பகுதிகளில் காலனியாதிக்கம் செய்யக்கூடியது. அதாவது, பிற தாவரங்களின் வளர்ச்சியை அழித்து, தான் மட்டும் செழித்து வளரும் தன்மை கொண்டது. மகரந்த சேர்க்கை மூலம் பாரம்பரிய விவசாயப் பயிர்களை அழித்து விடும் ஆற்றல் கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் பூக்களில் தேன் சுரக்குமா, அவற்றைத் தேனீக்கள் உறிஞ்சினால் என்ன பாதிப்பு ஏற்படும், அத்தேனை மனிதர்கள் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.


இவை ஒருபுறமிருக்க , மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திப் பயிர்களில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை; மாறாக, அப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003 முதல் 2006 வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம், மிசிசிபி மற்றும் அர்கன்சாஸ் மாநிலங்களில் நடத்திய ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. எனவேதான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்புக்குழு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் களச்சோதனை முறையில் பயிரிடுவதற்குக் கூட தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், இத்தொழில் நுட்பத்திற்கும், இதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால், ஏழை நாடான இந்தியாவில் 2002இல் மரபணு மாற்றப்பட்ட கடுகும், 2003இல் 8 விதமான பருத்தியும் அனுமதிக்கப்பட்டு நாடெங்கும் 30 இலட்சம் ஏக்கரில் களப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், ம.பி;மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட பருத்தியானது பாரம்பரிய பருத்தியைவிட 5 மடங்கு குறைவான விளைச்சலையே தந்து, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்தியுள்ளது. விரக்தியடைந்த விவசாயிகள் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த உண்மைகளை நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போதே அரசு ஒப்புக்கொண்டுள்ளது.


இருப்பினும், எவ்விதக் கட்டுப்பாடோ வரைமுறையோ இன்றி எல்வா வகையான உணவு தானியப் பயிர்களுக்கும் மரபணு மாற்ற ஆராய்ச்சிகளையும் களப்பரிசோதனைகளையும் இந்திய அரசு தாராளமாக அனுமதித்து வருகிறது. ஏழை நாடான இந்தியா இத்தொழில் நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச் சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது. பி.டி. பருத்தியிலிருந்து தொடங்கி கடுகு, கத்தரிக்காய், சோளம் என அனைத்து உணவுதானியங்களும் மட்டுமின்றி, இந்திய விவசாயத்தின் உயிர்நாடியான நெல் சாகுபடிக்கும் பேராபத்தாக பி.டி. நெல்லும் வந்துவிட்டது.


அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனமும் ஐதராபாத் பல்கலைக் கழகமும் கூட்டுச்சேர்ந்து வறட்சியைத் தாங்கும் நெல் ரகத்தை மரபணு மாற்றம் மூலம் உருவாக்க ஆராய்ச்சி செய்கின்றன. வைட்டமின்""ஏ'' சத்து நிறைந்த நெல் ரகத்தை உருவாக்க புதுதில்லி, ஐதராபாத், கோவை ஆகிய இடங்களிலுள்ள அரசின் வேளாண் ஆய்வு மையங்கள் சுவிட்சர்லாந்து ஏகபோகக் கம்பெனியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. ""தங்க அரிசி'' எனும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசியை உருவாக்க பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமும் கூட்டுச் சேர்ந்து ஆய்வுகள் நடத்துகின்றன.


கட்டுப்பாடற்ற இத்தகைய களப்பரிசோதனைகள் பயிர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய மக்களையும் சோதனைக்கூட எலிகளாக்கி பரிசோதிக்கும் கொடுமையும் இந்திய அரசின் துணையோடு நடந்து வருகிறது. ஏறத்தாழ 72 லட்சம் பேர் பயனடைவதாகக் கூறப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை இந்திய அரசு உலக வங்கி கடனைக் கொண்டு நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ""கேர்'' எனும் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனம் மூலம் மரபணு மாற்றப்பட்ட சோயாமாவையும் சோயா எண்ணெய்யையும் வழங்கி அத்தாய்மார்கள்குழந்தைகளிடம் அதன் விளைவுகளை 2002ஆம் ஆண்டில் சோதித்துப் பார்த்துள்ளனர். இந்த உணவின் தன்மை, விளைவுகள் பற்றிக் கண்டறிய எவ்வித பகுப்பாய்வு முறையும் இதுவரை இல்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை.


பி.டி.பருத்தி விதைகள் ஆந்திர, மகாராஷ்டிர பருத்தி விவசாயிகளைத் திவாலாக்கி, தற்கொலைக்குத் தள்ளிவிட்ட பின்னரும் இந்தக் கொலைகார தொழில்நுட்பத்தையும் சோதனைகளையும் முற்றாகத் தடைசெய்ய மறுத்து வருகிறது இந்திய அரசு. ஏனென்றால், இது உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவு!


இந்த அடிமைத் தனத்தையே இரண்டாவது பசுமைப் புரட்சி என்று ஆளும் காங்கிரசு கும்பல் கொண்டாடுகிறது. ஏற்கெனவே உரம், பூச்சி மருந்துகளுக்காக ஏகாதிபத்தியக் கம்பெனிகளிடம் அண்டி நிற்கும் இந்திய விவசாயிகளை, விதைக்காகவும் கையேந்த வைத்து, இந்திய விவசாயத்தின் சுய சார்புத் தன்மையை முற்றாக அழித்துவிட வேண்டும் என்பதுதான் இரண்டாவது பசுமைப் புரட்சியின் பின்னுள்ள சதித்திட்டம்.


தலைப்பாகைக்கு மட்டுமல்ல; தலைக்கே பேராபத்து வந்துவிட்ட நிலையில், இம்மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு விடுதலைப் போரைத் தொடுக்காமல் பேரழிவிலிருந்து மீளவும் முடியாது.

 

· சுடர்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது