Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

put_oct-2007.jpg

அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. நமது அணு மின்நிலையங்களையும் ÷தாரியத்தைப் பயன்படுத்தி சுயசார்பாக நம் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் அணு தொழில்நுட்பத்தையும் முடக்கவும் திருடவும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழிசெய்து கொடுத்திருக்கிறது.

 

இது வெறும் அணுசக்தி ஒப்பந்தமல்ல; ஜூலை 2005இல் இந்திய அரசு அமெரிக்காவுடன் இரகசியமாகச் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஓர் அங்கம். அதன்படி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இந்திய இராணுவத்தை ஒரு காலாட்படையாக அனுப்பி வைக்க மன்மோகன் அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில்தான் ஈரானைத் தாக்குவதற்காக அனுப்பப்பட்ட நிமிட்ஸ் கப்பல் சென்னை துறைமுகத்தினுள் அனுமதிக்கப்பட்டது.


அமைச்சரவைக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, இனி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நிராகரித்தாலும் இதனை ரத்து செய்ய முடியாது என்று திமிராகப் பேசுகிறார், பிரதமர். இப்படித்தான் மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய ""காட்'' ஒப்பந்தமும் 1994இல் இதேபோல திருட்டுத்தனமாக நம்மீது திணிக்கப்பட்டது. அந்த மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தின் உச்சகட்டம்தான் இந்த அடிமை ஒப்பந்தங்கள்.

 

இந்த உண்மைகளை விளக்கியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகமெங்கும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. இவ்வமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கிலான துண்டுப் பிரசுரங்களும், ""அடிமைஅடியாள்அணுசக்தி!'' எனும் சிறுவெளியீடும் உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்று, இப்பிரச்சார இயக்கத்துக்கு வலுவூட்டின. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு, 29ஆம் தேதியன்று தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகளில் இத்துரோக ஒப்பந்தத்திற்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

 

செங்கொடிகள் உயர்ந்தோங்க, விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை, கோவை, ஓசூர், திருப்பத்தூர், சிவகங்கை, தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தின் காரைக்கால் ஆகிய நகரங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநா யக உணர்வும் கொண்ட பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், தொழில்நுட்பவாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டு இவ்வ மைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் இவ்வமைப்புகள் இப்பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

 

பு.ஜ. செய்தியாளர்கள்.