கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

தோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து " நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார்.

கிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.

மேலும் படிக்க …

தோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து " நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார்.


கிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.
பெண்களால் மட்டுமே ஆண், பெண் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் சமூகநீதியை எடுத்து செல்ல முடியும். ஒரு பெண்ணின் கண்ணீர் இந்த மானுடத்தை மீட்க்கும் ஆற்றல் பெற்றது. பெண் பேரன்பின் ஆதியூற்று.

 

மேலும் படிக்க …

1917-ல் நடைபெற்ற ரஸ்ய-அக்டோபர் புரட்சி, உலகின் அடக்கியொடுக்கப்பட்டமானிடத்தை எழுச்சியுற வைத்தது. நாம் வாழும் உலகை வரலாற்றுபொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்க்குமிடத்து, அக்டோபர் புரட்சிக்கு முந்திய சமுதாய மாற்றங்கள் அனைத்தும், அதிகார வர்க்கங்களின் தொடர்அடக்குமுறைக்கு உட்பட்ட (அடங்கலான-ஏற்றத்தாழ்வான) சமுதாயங்களுக்கூடாகவே அசைவியக்கம் பெற்றுவந்துள்ளன.  ஆனால் அக்டோபர் புரட்சிக்கூடாகவே அடக்கியொடுக்கப்பட்ட வர்க்கங்களும், மக்களும் தமதாட்சியைநிறுவமுடியுமென்ற  மாக்சிஸத் தத்துவக்கோட்பாடு  உயிரோட்டம்உள்ளதாக்கப்படுகின்றது.

மேலும் படிக்க …

"நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இன வெறியர்களால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்த போது, அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.

இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள். அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

மேலும் படிக்க …

அறியாமைக்குள் மூழ்கடிக்கின்ற
பண்டிகைகளும் தினங்களும்
வியாபார நிறுவனங்களின் காட்சிஅறைகளில்
விளம்பரப்படுத்துவதை காண்கின்றோம்,
கண்ணாடிக்கூண்டுக்குள் மின்னுகின்ற 
காட்சிப்பொருட்களை 
பார்க்கும் ஏழைக்குழந்தை
கைகளில் சுமக்கமுடியாப் பொருட்களை
தள்ளுவண்டில்களில் நிறைத்தவண்ணம் 
போகிறவர்களை பார்த்து பிரமித்துப்போகிறது!

மேலும் படிக்க …

1995 - 2009 வரையான காலத்தில் புலம்பெயர் பினாமி புலிகளும் , வன்னி , மற்றும் கொழும்பில் இயங்கிய  மறைமுக புலிகள் சார்பான ஊடகங்கள் , தனிமனிதர்கள், மனித உரிமை வாதிகள், மற்றும் இலங்கை சேர்ந்த சிங்கள  NGO நடத்துனர்களும் , தமிழ்-சிங்கள சுதந்திர பத்திரிகையாளர் எனத் தம்மை அழைத்து கொள்ளும் பலரும் அவர்களின் பத்திரிகையாளர் அமைப்புகளும், மனிதஉரிமை செயற்படாளர்கள் என கூறிகொண்ட பலரும் நோர்வே அரசின் பாரிய நிதி உதவியை பெற்றார்கள் .

மேலும் படிக்க …

வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்து,

நெஞ்சிருக்கும் பாரமெல்லாம் அஞ்சலிக்குள் அழுது வைத்து,

மயானத்தில் விறகிட்டுச் சிதை மூட்டிக் கொள்ளிவைத்து,

வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப, இடுகாட்டில் வாய்விட்டுக்

கதறிக் கண்ணீர்விட்டு, மனப்பாரம் இறக்கிவைத்து

வாழ்வதற்கு விடவில்லைத் துன்மதியர் துடிக்கவைத்தார்.

மேலும் படிக்க …

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று  நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதி முக்கியமான இடமாகும். அந்த இடப் பகுதிகளை முன்பு புலிகள் வெளியாரை நெருங்க விடாது காவல் புரிந்தனர். அந்த இடங்களை இன்று சிறிலங்கா இராணுவம் எவரையும் நெருங்கவிடாது காவல் செய்கின்றது. அப்படியாயின் அந்தப் பகுதிகளில் ஏதேதோ இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றது என்பதுதானே அர்த்தம். இதற்குள்ளேதான் இந்த மே 16-17-18.2009 என்ற நாட்களில் நடந்த மனிதப் பேரவலத்தின் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன.

மேலும் படிக்க …

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக

ஒளியில்லாத நிலவு கசிகிறது

முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன

வெள்ளிய மணல் கும்பங்களில்

கால்கள் புதைய நடக்கின்றேன்

மேலும் படிக்க …

1994 மேதினம்! அதிர்ச்சியில் உறைந்தது அன்றைய தினம் எமக்கு. நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் கார் பாவனை என்பது அரிதான ஒன்று. அதனால் முக்கிய புகையிரத நிலையங்கள் எமது "மனிதம்“ சஞ்சிகையின் விற்பனை இடமாக இருக்கும். இன்று பிரசுரத்துடன் நிற்கிறோம். ஒருவித பயம். முன்னெச்சரிக்கையாக பைகளில் மறைத்துவைத்தபடி மிளகாய்த் தூள், ஸ்பிறே போன்ற "ஆயுதங்களுடன்“ நின்று இப் பிரசுரங்களை விநியோகிக்கின்றோம். தமிழ்மொழியிலும், யேர்மன் மொழியிலுமான பிரசுரங்கள் அவை. பதட்டத்துடனும் கோபத்துடனும் அடுத்து எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்ற கேள்விகளுடனும் நாம் நின்றோம். ஆம், நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பிரசுரங்கள்தான் அவை.

மேலும் படிக்க …

மக்கள் நலன்களை நிராகரித்த புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: "ஒப்பரேசன் பவான்"

பலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரினதும் மரணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கும், இந்திய அமைதி காக்கும் படைக்கும் எதிரான போர்ப் பிரச்சாரமாக மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். குமரப்பா, புலேந்திரன் உட்பட இறந்த 12 பேரினது புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளுடனும், கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கிகளில் சோக இசையுடனும் அவர்களது மரணச் சடங்குகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் எதிரான "மக்கள் எழுச்சி" நாளாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

மேலும் படிக்க …

முன்னிலை சோஸலிசக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களான பிரேம்குமார் குணரத்தினம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டு தீவிர விசாணைகளின் பின்னர் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் மடடுமல்லாமல் அவர்கள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் கூட இலங்கையில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படடுக் கொண்டிருப்பதையே காணமுடிகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கையில் பூண்டோடு அழித்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி விட்டதாகக் கூறி தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான போர் வெற்றியை வருடா வருடம் பெரும் கொண்டாட்டங்களாக நிகழ்த்தி வருகிறது இலங்கை அரசு.

மேலும் படிக்க …

பலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம்

இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்த விவாதம் "தீப்பொறி" செயற்குழுவுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் தென்னிலங்கையிலும், வடக்கு-கிழக்குப் பகுதிகளிலும் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்தன. ராஜீவ் காந்தியினாலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவாலும் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருந்த இந்திய அரசு இந்திய அமைதிகாக்கும் படையின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியாக இந்திய இராணுவத்தினரை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்த வண்ணம் இருந்தது. பயங்கரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகள் என அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல வருடங்களாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கமைய பகுதி பகுதியாக விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க …

இந்த யூனிவசிற்றியிலே மிகவும் பிரமாண்டமான விழா என்பதாலும், இந்த வருடத்திலே  எல்லோருக்காகவும் நடக்கிற முதல் விழா என்பதால் மிக விமர்சையாகவே  ஒழுங்கு செய்யப்படடிருந்தது. வருசக் கடைசி மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியேறுவதன் காரணத்தினாலும் புதியவர்கள் பலபேர் வந்து சேர்ந்து கொள்வதன் காரணத்தினாலும் இந்த விழா இன்று மிகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றது.

மேலும் படிக்க …

எங்கள் தேசத்தில்
முட்கிரீடத்துடன் சிலுவை சுமந்தபடி
எந்த யேசுவும்
தெருவில் இழுத்துச்செல்லப்படுவதில்லை
பிலாத்துக்களும்
சவுக்கால் ஓங்கி அடிப்பவர்களும்
எவரையும்
ஆணி அறையப்பட்டு கல்வாரி மலையில்
தொங்கவிடுவதுமில்லை
கல்லறைகளில் புதைக்கப்படுவதுமில்லை
ஆனால் தினமும்
பெரியவெள்ளிகளாகவே
மக்கள் சோகத்தில் வீழ்த்தப்படுகிறார்கள்

மேலும் படிக்க …

இந்திய நலன் என்ற நோக்குநிலையிலிருந்து உருவாக்கப்பட்டு இந்திய அரசின் அழுத்தத்தினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கை மீதான இந்திய மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. இவ்வொப்பந்தம் இலங்கையின் இறையாண்மையை மீறியதொன்றாக ஜனதா விமுக்தி பெரமுன உட்பட சிங்கள அரசியல்வாதிகளாலும் சிங்கள மக்களாலும் இனம் காணப்பட்டிருந்தது. ஆயுத வழிமுறைகளில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த, ஜனநாயக அரசியலில் நம்பிக்கையற்ற அல்லது ஜனநாயக அரசியலை வெறுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் கூட "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" குறித்ததான அதிருப்தியைக் காணக் கூடியதாகவிருந்தது.

மேலும் படிக்க …

கம்யூனிஸ்ட்டுகளுக்கு தடை

அவதூறு செய் அழுத்தம் கொடு

ஆயுதம் மில்லா கம்யூனிஸ்ட்டுகளை

வேட்டையாடு கொல்லு

இப்படியும் ஒருதீர்ப்பு முறை

உங்களது ஜனநாயகத்தில்.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More