July1983_66 121-2199_IMG 120-2065_IMG 122-2210_IMG 122-2232_IMG July1983_60 119-1942_IMG 122-2235_IMG 122-2219_IMG 121-2167_IMG

முன்பக்கம்
முன்னைய தளம்
Banner

களஞ்சியம்

உலாவுவோர்

 15 guests 


உலாவியோர்

: 94922

தேர்ந்தெடுக்கப்பட்டவை :- புதிய கலாச்சாரம்

இன்றைய பக்கங்கள்

 

தேர்ந்தெடுக்கப்பட்டவை :- பி.இரயாகரன்


சிறப்பு வெளியீடு : 25ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும் PDF Print E-mail
ஒளிப்பேழைகள் - 1983 யூலை இனப் படுகொலை 25ம் ஆண்டு 2008
Written by தமிழரங்கம்   
Tuesday, 22 July 2008 20:12

மனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.

இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.

 

ஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.

 

தொகுத்த திகதி ( Wednesday, 23 July 2008 07:04 )
 
கருப்பு ஜுலை 23 PDF Print E-mail
கட்டுரைகள் - ப.வி.ஸ்ரீரங்கன்
Written by ப.வி.ஸ்ரீரங்கன்   
Wednesday, 23 July 2008 22:21

''என்ன கொடுமையடா!
அன்றைய ஜுலையை நினைவு கூரும்
நானோ
இன்றும் பல ஜுலையை எனது தேசமெங்கும் விதைத்தபடி
புலம் பெயர்ந்து எண்ணிக்
கொள்வதில்
விமோசனமும் உண்டோ?"

 
விடுதலையின் சாத்தியங்களைத் தேடும் பயணம்: சி.சிவசேகரத்தின் "கல்லெறி தூரம்" கவிதைத் தொகுதியை முன்னிறுத்தி PDF Print E-mail
கட்டுரைகள் - ஏகலைவா
Written by விருந்தினர்   
Monday, 21 July 2008 13:44

"எனது கவிதைகளின் உள்ளடக்கம் இன்றைய ஈழத் தமிழ்ச் சமூகத்தின் இருப்பையும் தவிப்பையும் அதன் விடுதலைக்கான தேவையையும் பாதையையுமே கவனத்திற்குட்படுத்துகிறது."

என்ற கவிஞர் சி.சிவசேகரத்தின் முன்னுரை வரிகளோடு வெளிவருகின்ற "கல்லெறி தூரம்" கவிதைத் தொகுதி ஈழத்துக் கவிதையுலகின் தரத்தையும் செழுமையையும் இனங்காட்டி நிற்கின்ற புதிய வரவு.

ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சி. சிவசேகரம் அவர்களது புதிய கவிதைத் தொகுதி "கல்லெறி தூரம்". இது இவரது எட்டாவது கவிதைத் தொகுதி. ஈழத்து கவிதை உலகின் தவிர்க்கவியலாத அம்சங்களில் ஒன்றாக இவரது கவிதைகள் இருக்கின்றன. உண்மைகளை நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து சொல்லக் கூடியவர் கவிஞர் சிவசேகரம். இவரது கவிதைகளும் அப்படியே. இவரது "கல்லெறி தூரம்" என்ற புதிய கவிதைத் தொகுதியில் மொத்தமாக 27 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.

தொகுத்த திகதி ( Monday, 21 July 2008 13:53 )
 
புலம்பெயர் இலக்கியத்தில் மக்கள் நலன் மறுப்பும் இதற்கெதிரான போராட்டமும் PDF Print E-mail
பி.இரயாகரன் - 2008
Written by பி.இரயாகரன்   
Monday, 07 July 2008 07:36

புலியின் பாசிசத்தை எதிர்க்கின்ற வலதுசாரியத்தின் பின்னால் தான், இடதுசாரி மக்கள் போராட்டம் மறுபடியும் மறுப்புக்குள்ளானது. இதை நான், நாங்கள் இனம் கண்டு போராட முற்பட்ட காலகட்டத்தில், இதை அம்பலப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை. இடதுசாரிய வேஷம் கலைந்து போகாத சூழல்.

 

ஆனால் அவர்கள் மார்க்கியசத்தை எதிர்த்தும், திரித்தும் வந்தனர். இந்தத் தளத்தில் தான், நான் நாங்கள் முதல் எதிர்தாக்குதலை தொடங்கினோம். கிட்டத்தட்ட தனித்து, நான் மட்டும் இதை எதிர்கொண்டேன்.

தொகுத்த திகதி ( Sunday, 20 July 2008 07:26 )
 
"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!! PDF Print E-mail
கட்டுரைகள் - ஏகலைவன்
Written by விருந்தினர்   
Sunday, 20 July 2008 07:04

சிபிஎம் / சிபிஐ என்ற இரு போலி கம்யூனிசக் கட்சிகளின் சார்பில் சென்னை அமைந்தகரையில் சென்ற 16/07/08 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நானும் சில தோழர்களும் சென்றிருந்தோம். மேடைக்கு பின்புறம் இருந்த ஒரு டீகடையில் நின்றிருந்த சில மூத்த தோழர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

 

கடந்த நாற்பது வருடங்களாக சிபிஎம் கட்சியில் தாங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சென்னையை அடுத்த பெரியபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்) பகுதியிலிருந்து மேற்கண்ட கூட்டத்திற்காக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
 
சமாதிகளுக்கு இனியும் இடம் உண்டா? PDF Print E-mail
கட்டுரைகள் - ப.வி.ஸ்ரீரங்கன்
Written by ப.வி.ஸ்ரீரங்கன்   
Saturday, 19 July 2008 19:52

சமாதிகளுக்கு
இனியும் இடம் உண்டா?

உண்மை
உருக்குலைந்த புயற் பொழுதொன்றில்
உப்புச் சட்டிக்குள் வெள்ளம்
உளிகொண்டு
உப்பகற்றும் என் முனைப்புக்கு
இருட்டுப்பட்ட திசையொன்றில்
வெளிச்சம்

 
இயக்கத்திடம் ஜனநாயகத்தைக் கோரிய மக்கள் போராட்டம் PDF Print E-mail
பி.இரயாகரன் - 2008
Written by பி.இரயாகரன்   
Monday, 07 July 2008 07:34

ஏதோ இதை புலியிடம் மட்டும் கோரியதாக கூட சிலர் (திடீர் ஜனநாயகவாதிகள்) திரிக்கின்றனர். யாரெல்லாம் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை தீர்க்க முனையவில்லையோ, அதாவது இதை யார் பாதுகாத்து நின்றனரோ, அவர்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டமும் நடந்தது.

 

பலரும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்ற, பல நூற்றுக்கணக்கானவர்களின் தியாகம் செய்த போராட்டம் இதற்காக நடந்துள்ளது. முதல் பலி இவர்கள் தான். யாரும் அஞ்சலி செலுத்தாத தியாகமாகவே எம்முன் உள்ளது. இதை மக்களுக்கான ஒரு தியாகமாக இன்று வரை மதிக்காத தேசியம் பாசிசமாகவும் மறுபக்கத்தில் ஜனநாயகம் கூலிக்கு மாரடிக்கும் அரச எடுபிடியாகவும் உள்ளது. இதையே தமது போராட்டம் என்கின்றனர்.

தொகுத்த திகதி ( Saturday, 19 July 2008 06:40 )
 
எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்! PDF Print E-mail
புதிய கலாச்சாரம் - 2008
Written by புதிய கலாச்சாரம்   
Tuesday, 15 July 2008 21:10

 மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, ""குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது'' என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

தொகுத்த திகதி ( Friday, 18 July 2008 06:28 )
 
காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம் என்னாயிற்று???? CPI என்கிற போலிகம்யூனிச கட்சியின் தேசியச் செயலாளர் டி,ராஜா கேள்வி!!!!!! PDF Print E-mail
கட்டுரைகள் - ஏகலைவன்
Written by விருந்தினர்   
Thursday, 17 July 2008 17:29

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசு கட்சியை, வெளையர்கள் உறுப்பினராக இருந்த அக்கட்சியை ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்’ மிக்க கட்சி என்று போலிகள் சொல்வது ஏன்? அதுவும் காங்கிரசை எதிர்த்து நடந்த பொதுக்கூட்டத்திலேயே இப்படிப்பட்ட காங்கிரசு ஆதரவுக் கருத்துக்களைப் பேசுவதற்குக் காரணம் என்ன?

தொகுத்த திகதி ( Thursday, 17 July 2008 19:32 )
 
சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம் PDF Print E-mail
புதிய ஜனநாயகம் - 2008
Written by புதிய ஜனநாயகம்   
Wednesday, 02 July 2008 21:26

 சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான். 

தொகுத்த திகதி ( Tuesday, 22 July 2008 06:59 )
 
பணம் அலுக்கவில்லை பகட்டு அலுத்துவிட்டது - குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம் PDF Print E-mail
புதிய கலாச்சாரம் - 2008
Written by புதிய கலாச்சாரம்   
Tuesday, 15 July 2008 21:15

 வரலாறு காணாத அளவில் உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. கேமரூன், எகிப்து,  இந்தோனேசியா, செனகல், ஹைதி உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலகங்கள் வெடிக்கின்றன. உணவுப் பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல், தங்களது பிள்ளைகளுக்குச் சோறிட வழியில்லாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். ஹைதி நாட்டில், மக்கள் களிமண்ணால் ரொட்டிகள் செய்து தின்று பசியாறுகிறார்கள். இந்தியாவில் பணவீக்கம் இரண்டு இலக்கங்களை தொட்டிருக்கிறது. உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோலிக், மேலும் 33 நாடுகளில் கலகங்களும் கொந்தளிப்புகளும் வெடிக்கும் எனக் கவலை தெரிவிக்கிறார்.

தொகுத்த திகதி ( Monday, 21 July 2008 06:18 )
 
பாரதியின் முரண்பாடுகள் அருவருக்கத்தக்கவை - மருதையன் PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Sunday, 20 July 2008 10:08
சமூக விழிப்புணர்வு இதழ் சார்பாக மே 16, 2008 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடத்தப்பட்ட ‘வே.மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் சிறைப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கிய கழத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கப்பட்ட வடிவம் இங்கு தரப்பட்டுள்ளது.

 அனைவருக்கும் வணக்கம்,

மதிமாறனைப் பற்றி நாங்கள் அறிய வந்ததெல்லாம் பாரதிய ஜனதா பார்ட்டி நூல் வழியாகத்தான். அந்த நூலுக்கு முன்பு அவரை யாரென்றே தெரியாது. சொல்லப் போனால் அது வெளிவந்த பின்பு பல பத்திரிகைகள் விமர்சனம் என்ற பெயரிலே மண்ணை வாரித்தூற்றின. அதற்குப் பிறகும் மதிமாறன் யாரென்று தெரியாத நிலையிலேயே இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக பாரதி குறித்து எழுதத் துணிந்தோம். அது மதிமாறனுக்கு வக்காலத்து வாங்க §Åண்டும் என்பதற்காக அல்ல. மாறாக மதிமாறன் நூல் மீதான விமர்சனம் மார்க்சியப் பார்வையில் செய்யப்பட்டது என்ற முகாந்திரத்தில்.
 
உலக கொலைகாரன் அமெரிக்கா PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Saturday, 19 July 2008 20:01

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வான்வெளி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறது அமெரிக்கா. உலகத்தையே தீவிரவாதத்தின் பிடியிலிருந்து இரட்சிக்கப் போவதாக சின்னவர் (!) ஜார்ஜ் புஸ் கொக்கரித்து கிழம்பியது முதல் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இந்த கொலைப்பட்டியல் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என நீளுகிறது.

தொகுத்த திகதி ( Saturday, 19 July 2008 20:10 )
 
கொம்பனித் தெரு சம்பவம் : புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர், மக்களின் வாழ்விடங்களையும் கூட அன்னியனுக்காக தரை மட்டமாக்குகின்றனர். PDF Print E-mail
பி.இரயாகரன் - 2008
Written by பி.இரயாகரன்   
Saturday, 19 July 2008 11:34

இலங்கையில் நடப்பது இதுதான். 'பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் பணம் சம்பாதிப்பது ஒருபுறமாயும் நாட்டின் தேசியவளத்தையும் மக்களின் அடிப்படை வாழ்வையும் விற்பது மறுபுறமாயும் அரங்கேறுகின்றது. 'புலிப்பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து சம்பூர் பிரதேசம் இந்திய வல்லாதிக்கத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதே போல் கொம்பனித் தெருவில் வசித்த 600 குடும்பங்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டு, அவர்கள் 'பயங்கரவாத ஒழிப்பு" இராணுவத்தால் நிர்க்கதியாக அடித்துத் துரத்தப்படுகின்றனர். இவை எல்லாம் யாருக்காக? யாருடைய நலனுக்காக? மக்களின் நலனுக்காகவா எனின், நிச்சயமாக அதுவல்ல. மாறாக பணம் கொழுத்தவன் மேலும் கொழுப்பதற்காகத் தான்.

 
டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்:(3) : மனிதக் கணம்"கவிதை"ஆகிறது. PDF Print E-mail
கட்டுரைகள் - ப.வி.ஸ்ரீரங்கன்
Written by ப.வி.ஸ்ரீரங்கன்   
Friday, 18 July 2008 21:56

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.

"இன்றைய பொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாத் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்

 

ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிக எளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை."

 
நேபாளத்தின் வெற்றியும் இலங்கையின் தோல்வியும் - அமைதிப் பேச்சுக்கள் பற்றிய ஒரு பாடம் PDF Print E-mail
கட்டுரைகள் - ஏகலைவா
Written by விருந்தினர்   
Thursday, 17 July 2008 20:52

நேபாளத்தில் மாவோவாதிகள் நிகழ்த்திக் காட்டியுள்ள புரட்சிகர அரசியல் மாற்றமானது தெற்காசியாவிற்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே ஒரு புதிய வழிமுறையாக புரட்சிகர செயற்பாடாக இருக்கின்றது. 10 ஆண்டு கால நீண்ட போராட்டத்தின் பின்னர் ஜனநாயக வழிமுறையின் மூலம் நேபாளத்தில் நிகழ்ந்தேறியுள்ள புரட்சியானது, 21ம் நூற்றாண்டின் புரட்சிகர போராடும் இனங்களுக்கான போராட்ட இயக்கங்களுக்கான ஒரு புதிய பாதையாகக் கைக்கொள்ள முடியுமா என்ற கேள்விகளும் எழுகிறது. 25 வருடங்களுக்கும் மேலாக தீர்வுக்கான எந்தவொரு வழிமுறையையும் எட்டாமல் முடிவுகளற்றுத் தொடரும் இலங்கை இனப் பிரச்சினையின் தீர்வுக்கான வழிமுறைகளை, பாதைகளை வேண்டி நிற்கும் மக்களுக்கு நேபாளத்தில் மாவோவாதிகளின் சாதனைகள் நல்ல படிப்பினைகளைத் தரமுடியும்.

தொகுத்த திகதி ( Monday, 21 July 2008 14:07 )
 
இன்னும் பல கட்டுரைகள்...