Language Selection

சமர் - 23 : 07 -1998

கிழக்கும் மேற்கும் என்ற அனைத்துலகத் தமிழ்படைப்புகளின் தொகுப்பு என்ற பெயரில் ஒன்றை லன்டன் தமழர் நலன் புரிசங்கம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் பாரிஸ் வந்திருந்த சரிநிகர், மற்றும் மேர்ஐ நிறுவனத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர் வெளிப்படுத்திய சில கருத்துக்களை அறியக் கூடியதாக இருந்தது.

இந்தியாவின் பாரதயிஐனதா என்ற இராமனின் வானரங்கள் ஆட்சியேறி உள்ள நிலையில். தமிழ் ஈழதேசிய வடுதலைபோராட்ட அணிகளின் குழப்பத்துடன் கூடிய அரசியல் எதிர்பார்ப்பு, மேலும் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனைகின்றது.

சக்தி 4.3 இதழில் வெளியாகியிருந்த சில கருத்துகளை விமர்சனம் செய்ய வேண்டிய அளவிற்கு எதிர்புரட்சியை கோருவதாகும. இதை ஒத்த ஒரு விமர்சனம் சக்திக்கும் எழுதியிருந்தேன்.

சிங்கள பேரினவாத பாசிச ஆட்சியாளர்களின் பாத தூசு தட்டி மீளவும் ஒரு வரலாற்று துரோகத்தை முன்னைநாள் போராளி இயக்கங்களும் இன்றைய துரோகிகளும் அரங்கேற்றினர். 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்து போன இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் எந்த விதமான நியாயத்தையும் கூட வெற்றி பெறமுடியாத நிலையில் காலம் காலமாக இருந்து வரும் எந்த வித அதிகாரமும் அற்ற நிருவாக பிரிவுகளுக்காக ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் போட்டியிட்டு எலும்பு துண்டுக்காக நாய் சண்டையில் ஈடுபட்டனா.

இலண்டனில் இருந்து புலம் என்ற சஞ்சிகை ஒன்று வெளிவந்துள்ளது. இலணடன் ஐ.பி.சி தமிழ் வானொலிப் பிரிவால் நடத்தப்படும் இச்சஞ்சிகை தனது முதலாவது இதழிலேயே தன்னைத்தான் நிர்வாணமாக்கியுள்ளது.

1-07 ஐனவரி 1998 ஈழமுரசு இதழில் ' சின்ன விளக்கம் ஆனால்---நீண்டு போயிட்டுது " என தலைப்பிட்ட அலசல் ஒன்றை சடையர் செய்து இருந்தார். nஐர்மனியில் இருந்து ஈழமுரசுக்கு எழுதும் கருணாமூர்த்தி இனவாதத்தில் நின்று எழுதவேண்டாம் என கேட்;கப் போக புலிகளின் பினாமி பத்திரிகையான ஈழமுரசு முதல் முதலில் புலிகளின் வரலாற்றில் இனவாதத்தின் ஒட்டுமொத்த வடிவை வெளிகாட்டி இருந்தனர்.  அதை கொஞ்சம் பார்ப்போம்.

1988ம் ஆண்டு இலங்கைப் புரட்சிகர போராட்ட பாதையில் விமேலேஸ்வரன் என்ற மனிதனை இழந்த நிகழ்வு, வரலாற்றுப் பாதையில் மறக்க முடியாதவையாக நீடிக்கும். ஆம் மக்களுக்காக இறுதிவரை சமரசமின்றி போரடிய மாமனிதனை புலிகள் நடுவீதியில் வைத்து படுகொலை செய்தனர். அவன் கோரியது எல்லாம் மக்கள் எழுத, பேச, கூட்டம் கூடும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்குகள் என்பதுதான். தன் மாரணத்தை முன் கூட்டியே போராட்டப் பாதையில் தெளிவாக உணர்ந்து கொண்டதுடன், மாரணத்தைக் கண்டு அஞ்சாது தலைமறைவாக இருந்தபடி மக்களுக்காக போராடுவதில் தலைமை தாங்க என்றுமே பின் நிற்கவில்லை. அவன் மிகவும் பின்தங்கிய தாழ்தப்பட்ட கிராமங்களில் நீண்டநாள் தங்கி நின்று, அவர்களின் உடல் உழைப்பான விவசாயக் கூலிக்கு அவர்கள் உடன் சென்று, நடைமுறைப் புரட்சிக்காரனாக எந்தவிதமான பகட்டுமின்றி புகழுக்கும் ஆசைப்படாத போராட்ட மனிதனாக இருந்தான். இன்று புரட்சி சாவாடல் அடிப்பதும், தம்மைத் தாம் புகழ்ந்து கொள்ளும் இன்றைய சகதிகளில் இருந்து வேறுபட்ட இவனின் வரலாறு மக்களுக்காக எப்படி போராடவேண்டும் என்பதை நடைமுறையில் விட்டுச்சென்றுள்ளது.  இவன் ஒரு நாடகம் மற்றும்    பல்துறை எழுத்தாளனாக பலதுறைகளில் வளர்ந்த கலையனாக  மக்களின் தலைவனாக வளரும் வழியில் வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டான். இலங்கைப் புரட்சிகர போராட்டப் பாதையில் நினைவுக்கு உள்ளாக்க கூடிய புரட்சிகரப்போராட்ட பாரம்பரியங்களை மரணத்தினூடே  எமக்கு தந்து விட்டுச் சென்றுயுள்ளன்.

சரிநிகர் 132இல் தலித்தியக் குறிப்புகள் என்ற அருந்ததியின் கட்டுரை எப்படி மார்க்சியத்துக்கு எதிராக சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்க முன்வைக்கப்படுகிறது எனப்பார்ப்போம்

சரிநிகர் 126 இல் தங்கத்துரை கொலை தொடர்பாக நாசமறுப்பான் எழுதிய தொடர்ச்சியின் இறுதியில் 'தங்கத்தரை அவர்களது மரணம் துயர் தருவது. யார் செய்திருந்தாலும் அது கண்டனத்தக்குரியதே. அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் மக்களுக்கும் எமது அநுதாபங்கள்' எனக் குறிப்பிட்டு, கூட்டணி என்ற தரகு முதலாளித்துவ கட்சிக்கு அநுதாபம் தெரிவித்ததன் மூலம், தமது அரசியல் குத்துக்கரணங்களை இனம் காட்டியுள்ளனர்.

சரிநிகர் 139 இல் (ஐன 29-பெப் 11) "பெண்ணியத்தின் ஒழுக்கம் என்ன?" என கேள்வி எழுபிய சங்கமனின் ஒரு அலசல் வெளியாகியிருந்தது. பெண் விடுதலை தொடர்பாக டிஷ்கோவின் |கட்டற்ற சுதந்தரம்| எதுவோ அதை முன்வைத்து அதை நிறுவ தனது வச்சிரமான மார்க்சிய எதிர்ப்புடன் கூடிய கட்டுகதைகளையும் அவதூறுகளையும் பொழிந்து தன்னியுள்ள சங்கமன் இதை ஒரு அலசல் என போட்ட தன் மூலம் ஊரில் திண்ணையில் கூடி மற்றவர்கள் பற்றி இல்லாத பொல்லாததை இட்டுக் கட்டி அலசும் வம்பைத்தான் மீள ஒரு முறை செய்துள்ளார். இந்த அரசியல் வம்பளப்பு அலசல்களை பார்ப்போம்.

சரிநகர் 131 இல் காலம் பத்திரிகையில் இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பியின் 'மேலிருந்து திணிக்கப்படுகின்ற அரசு அதிகாரமே தமிழ் பிரக்ஞைக்கு ஓர் அரசியல் வடிவத்தைக் கொடுக்கின்றது ' என்று தலைப்பிட்டு வழங்கிய பேட்டியில் -

அம்மா 5இல் வெளியாகிய விமர்சனங்கள், கதை  மற்றும் அம்மா 4 இல் வெளியகிய விமர்சனம்  தொடர்பாக, அதன் உள்ளடக்கத்தை ஒட்டிய அரசியல் வர்க்க நிலைப்பாடுகளை ஆராய்வோம்.

"வளர்மதியும் ஒரு வாசிங்மெசினும்" என்ற இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய சிறு கதையை ஷோபாசக்தி அம்மா 4 இல் விமர்ச்சித்தார். இதைஓட்டி அம்மா 5இல் அழகலிங்கம் மேலும் மார்க்சியத்தின் பெயரால் பூசிமொழுகி உள்ளார். மற்றும் கதை அதற்க்கு வெளியில் இலக்கியம் தொடர்பான பல கருத்துகள் வெளியாகி உள்ளது.

கலை இலக்கியம் யார்ருக்காக எதற்க்காக படைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி, இன்று சமூகத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படாமல் உள்ளது. படைப்புகள் படைக்கப்பட்ட பின் அதன் கலை அம்சம் மட்டும், புகழுக்குரிய சிறந்த படைப்புகளாகி விடுகின்றன. படைப்பின் உள்ளடக்கம் அதை ஒட்டிய சமூகப் பார்வை என்பது விவாத்துக்குரியதாக பார்பது என்பது, கலை இலக்கியவாதிகள் மீதான சட்டாம்பித்தனமானது என சேறு அடிக்கும் நிலையில்,படைப்புகள் பற்றிய துல்லியமான ஒரு விவாதம் அவசியமாகின்றது.

அண்மையில் இறந்து போன கம்பூச்சியாவின் போர்க்குணம் கொண்ட வீரமிக்க மார்க்சியவாதியான பொல்போட், ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு துரத்தியடித்ததுடன், சொந்தப் பொருளாதாரத்ததை கட்டியமைக்கும் போராட்டத்தில், உள்நாட்டு எதிர்புரட்சியும் ஏகாதிபத்திய சதிகளும் சோவியத்ஆக்கிரமிப்பும் ஆக்கிரமிப்பாளன் விட்டுச் சென்ற அழிவுகளும் சேர்ந்து பாரிய நெருக்கடிகள் ஊடாக நாட்டை மீட்யெடுக்க போராடினர்.

இதன் தொடர்ச்சியில் வியட்நாம் ஆக்கிரமிப்பும் அதன் தொடர்ச்சியில் பின்வாங்கிச் சென்று தொடர்ந்தும்போராடினர். இருந்த போதும் போரட்டத்தில் விட்ட தவறுகள் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.

மறுபுறம் ஏகாதிபத்தியம், கம்பூச்சிய போராட்ட புதல்வார்கள் மீது தமது கடந்தகால தோல்விகள் மற்றும் தொடர்ச்சியான சுரண்டலை நடத்தும் கனவுகளுடன் சர்வதேச ரீதியாக அவதூறு பொழிந்து தள்ளுகின்றது.

அதைப் பொறுக்கி எடுக்கும் முற்போக்கு மூகமுடி போட்ட நயவஞ்சகர்கள்; மனிதாபிமான பெயரில் கடை விரிக்கின்றனர்.

வரலாறு கம்பூட்சிய புரட்சிகர வரலாற்றை தனக்கே உரிய வகையில் விமர்சனக் கண்கொண்டு மீளப்பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது.

சரிநிகர் 133 இல் (ஒக்-நவம்பர் 1997) சரிநிகரின் முக்கியமானவரும் சரிநிகரின் அரசியலைத் தீர்மானிப்பவருமான நாசமறுப்பான், 'முன்றும் முன்றும் முடிபும்" என்ற கட்டுரையில், இனவாதத்தை மூடி மறைத்து மீளவும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளமாக மாறிய விந்தையைப் பார்ப்போம் .

சுவடுகள் 78 இல் யமுனா ரா ஜேந்திரன் என்ற சுரண்டும் வர்க்க எழுத்தாளன் படைப்பாளி பற்றிய குறிப்பில் 'எல்லா அமைப்புக்களுக்கும், மாற்றுக்கருத்தை ஒடுக்கும் எல்லா அரசியல் அமைப்புக்களுக்கும் பொருந்துபவை. சர்வாதிகாரம், ஐனநாயகம், கம்யூனிசம் என நிலவிய எல்லா அமைப்புக்கும் பொருத்திப் பார்க்கிறார் ரோமன் போலன்ஷ்க்கி (போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தற்போது பாரிசில் வாழ்கிறார்) இடது சாரிகளின் மனித உரிமை ஒரு அரசியல் தந்திரோபாயமாகவே இருப்பதை விமர்சிக்கிறார் டோப்மேன். என யமுனா முதலாளித்துவ சுரண்டலுக்காக இழுத்து எடுத்து முன்வைத்து பிதற்றி உள்ளார்.

உலகப்பத்திரிகைகள், மக்கள் முன் டயானாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. இந்த வகையில் வீரகேசரி, ஈழநாடு, ஈழமுரசு, சரிநிகர், வெளி என அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே விதமான ஆறுதல் ஒப்பாரிகளை முன்வைத்தபோது தான், இந்தப் பத்திரிகைகளின் ஒரே அரசியல் நிலைப்பாடு அப்பட்டமாக நிர்வாணமாகத் தெரிந்தன. சரிநிகர் 130 இல் ரத்னா என்பவர் " பரந்துபட்ட உலகமக்கள் டயானாவின் மூலமாக ஒரு பழம் பெருமிதம் உடைபடுவதைக் கண்டார்கள். ---- அவர் இன்னொரு திரேசாவாக இயங்குவதை வரவேற்றார்கள். --- அன்று தொடக்கம் இன்றுவரை பெண் என்ற ஒரே காரணத்துக்காக சமூக, கலாசார ரீதியான துன்பங்களை அவள் எந்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த வகையிலும் சரி அநுபவித்தேயாக வேண்டும். ... ஒரு பெண் என்ற விதத்தில் தான் விரும்பியபடி வாழ்வதற்கு அவருக்கு இருந்த நெருக்கடிகள் வேறெந்தப் பெண்ணுக்குமிருந்த பொதுவான நெருக்கடி தான். .... இந்த வகையில் இரக்க சுபாவமும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்ட டயானா என்ற பெண்ணின் மரணத்தில் இரத்தக்கறை ஆணாதிக்க சமூகத்தின் கைகளில் படிந்திருப்பது மறுக்க முடியாததே ".

அமெரிக்க ஏகாதிபத்தியம் அண்மையில் புலிகளை தடை செய்து இருந்தனர். உலக பொலிஸ்காரனும் உலக அடாவடிக்காரனும் உலக வன்முறைக்கு தலைமை தாங்குபவனுமான அமெரிக்கா புலிகளை தடை செய்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய கோரிக்கையை ஒழித்துக்கட்டி விடமுடியும் என நம்புகிறது.