Language Selection

சிறுவர் பாடல்கள்

“வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது

வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!

எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது

ஏனென்று கேட்டால் அது
சிரித்து மழுப்புது"

-- முத்தமிழ் மன்றம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/36.html

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்ல சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகுதுண்ணும் பழக்கம் சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
சுவையான பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழும் வழி சொல்லித்தா!

கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழிலில் பேச சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்கும் கலையை சொல்லித்தா!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/37.html

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல

மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்

புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்

மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.

பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.

பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.

அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.

பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.

எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/38.html

மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க,

முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையுங்க,

சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையுங்க.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/39.html

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளி குதிக்குது கன்னுக்குட்டி
அம்மா என்றழைக்குது கன்னுக்குட்டி
நாவால் நக்கி கொடுக்குது வெள்ளைப்பசு

 

பத்மா அர்விந்த்

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/40.html

பூனைக்குட்டி பூனைக்குட்டி
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே

பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே

கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே

பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!

***பாவண்ணன்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/41.html

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/42.html

எலியே எலியே கதை கேளாய்!
வீட்டெலியே கதை கேளாய்!!

பூனையொன்று சுத்துது!
பசியால் பதறிக் கத்துது!!

உன்னைக் கண்டால் கவ்வுமே!
கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!

ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!
பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!

வீட்டில் உணவைத் திண்ணாதே!
உனக்கு வைத்த விஷம்மதுதான்!!

எலிப் பொறிக்குள் போகாதே!
நீ சாகப்போகும் இடம்மதுதான்!!

கவனமாக இருந்து விடு!
பல்லாண்டு வாழ்ந்து விடு!!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/43.html

தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்

எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!

கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்

எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/44.html

மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது

கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது

இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது

மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே

கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்

ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே

ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே

நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/45.html

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது

அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது

பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது

அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது

டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/46.html

பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு

கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!

குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு

பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!

எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு

இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!

கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு

கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!

பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது

சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!

பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்

சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/47.html












ஆனை ஆனை
அழகர் ஆனை

அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை

கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை

காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை

குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்

பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!

http://siruvarpaadal.blogspot.com/

 சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !

உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !

ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !

நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!


வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!


உடலும் மனமும் வளர்வதற்கு
சின்ன பாப்பா -ஏற்
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!

நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்

http://siruvarpaadal.blogspot.com/