Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை.  அவர்கள் மட்டுமல்ல,  பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.

 குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக, ஏற்கெனவே தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவுவது போதாதென்று, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்குக் கட்டுப்பாட்டு முறையைக் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 அரபிக் கடலின் மேற்கே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உச்சியிலுள்ள ஏடன் வளைகுடாவின் செங்கடலில் இதமாக அலைவீசிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் நாளன்று ஏடன் வளைகுடா வழியாக உக்ரேனிய நாட்டின் ""எம்.வி.ஃபைனா'' என்ற ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் செங்கடலில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென அதிநவீன ஆயுதங்களுடன் விசைப்படகுகளில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கப்பலை வழிமறித்து,

"நல்ல காலம் முடிந்தது''  இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.

 "வளர்ச்சியடைந்த நாடுகள் நேர்மையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்...''


 "தற்போதைய சூழலில் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஐ.எம்.எஃப். ஆகியன சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம். வளரும் நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கியில் எடுபடும் அளவுக்கு சீரமைப்புகள் இருக்க வேண்டும்...''

 ஓசூர் சிப்காட்ஐஐ தொழிற்பேட்டையிலுள்ள "வி.பி. மெடிகேர் லிமிடெட்'' எனும் நிறுவனம், மருத்துவ இரசாயனத் தொழிற்சாலையாகும். இது, சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு உள்ளிட்டு மூட்டுவலி மருந்து தயாரிப்பு  ஆராய்ச்சிக்கூடம் கொண்ட ஆலையாகும். இவ்வாலையில் 160 பேர் ஆராய்ச்சிக்கூட ஊழியர்கள்  கண்காணிப்பாளர்களாகவும், 75 பேர் தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாகவும், 130 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

 நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.

 "இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.''
—   ஜார்ஜ்  டபிள்யூ. புஷ்.

 மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.

 கரூர் தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் பாண்டியம்மாள், மாணவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திப் பழிவாங்கும் "ஆண்டையம்மாள்'' என்று பேர் பெற்றவர். மாணவர்களை வாடா, போடா என ஒருமையில் ஏசுவது, கிராமப்புற மாணவர்களின் உருவ தோற்றத்தைக் கூறி அவமானப்படுத்துவது, ரெக்கார்டு நோட்டில் கையெழுத்து வாங்கச் செல்லும் மாணவர்களை மணிக்கணக்கில் நிற்க வைத்து அலட்சியப்படுத்துவது முதலான வக்கிரக் குணங்களைக் கொண்ட அவர்,

 "ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்'', "கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?''  விண்ணதி ரும் முழக்கங்களை எழுப்பி, செங்கொடிகளையும், கண்டன முழக்கத் தட்டிகளையும் ஏந்தியபடி கடந்த 8.10.08 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையை மறித்து, நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கைதாயினர், ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள்.

 "கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை (123 ஒப்பந்தம்) நிறைவேற்றுவதற்கான இறுதிக் கட்ட பேரங்கள் நடந்து வருகின்றன. சர்வதேச அணுசக்திக் கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இந்திய அணு உலைகளைக் கண்காணிப்பது தொடர்பான ஒப்பந்தமும்; யுரேனியம் உள்ளிட்ட அணு மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக, அணுமூலப் பொருட்கள் வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒப்பந்தமும் நிறைவேறியுள்ள நிலையில், 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் சடங்கு மட்டுமே எஞ்சியிருக்கிறது.

 

அடுத்த தேர்தலில் யாருடன் இலட்சியக் கூட்டணி கட்டுவது என்ற பெரும்பிரச்சினையை சி.பி.எம் கட்சி ஒருவழியாகத் தீர்த்துவிட்டது.  அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான என்.வரதராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாக "அப்பாயின்ட்மெண்ட்'' வாங்கி, இரவு 9 மணிவரை காத்திருந்து "புரட்சிக்கலைஞர்' விஜயகாந்தை சந்தித்துக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார். விஜயகாந்தும் "முதலிலேயே சொல்லி இருந்தால் விருந்து வைத்திருப்பேனே' எனச் சொல்லி தோழர் மனதைக் குளிரவைத்ததோடு, தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரிகள் "அரசியலில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தூய உள்ளத்தோடு செயல்படுபவர்கள்' என்று இவர்களுக்குச் சான்றிதழும் கொடுத்து விட்டார்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்துள்ள சுண்டகாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி என்ற இளம்பெண். கூலி விவசாயி நடராஜ் என்பவரின் மகளான இவர் ஓசூர் வட்டம் பாகலூரை அடுத்துள்ள பெலத்தூர் பிரிமியர் மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக வேலையில் சேர்க்கப்பட்டார். தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கி, கிருஷ்ணவேணியை 3 மணிநேரம் கூடத் தூங்க விடாமல், அவசர வேலை என்று மிரட்டி ஆலை நிர்வாகம் அவரைக் கசக்கிப் பிழிந்துள்ளது.

 

உள்நாட்டுப் போரில் நிலைகுலைந்து, வறுமையும் பட்டினியும் பீடித்து, தீராத அவலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, காங்கோ. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அந்நாட்டின் வடமேற்கே மாசிசி நகரிலுள்ள நிவாரண முகாம்களில் பஞ்சைப் பாராரிகளான கருப்பின மக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். வாகனங்கள் அணி வகுத்து சீறிக்கொண்டு வந்தன.

 

தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்க்கும் அல்லது அத்துறையில் படித்து வரும் இந்திய இளைஞர்களின் கனவு, அமெரிக்காவுக்குப் போய் எப்படியாவது பச்சை அட்டை (எணூஞுஞுண இச்ணூஞீ) வாங்கி, அமெரிக்காவிலேயே "செட்டிலாகி'' விட வேண்டும் என்பதுதான். இயற்கையின் பிழையால், இந்திய நாட்டில் பிறக்க நேர்ந்து விட்ட அமெரிக்க மோகிகளின் மனசாட்சியை, இந்தக் கதை உலுக்க முடிந்தால், அது நமது "அதிருஷ்டம்'தான்!

 

தொழிலாளர்களின் உழைப்பால் திரண்ட 56 ஆண்டுகால சேமநலநிதி (பிராவிடண்ட் ஃபண்ட்)யான ரூ. 2.5 இலட்சம் கோடியை மட்டுமல்ல; அத்தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வையும் சேர்த்து  ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரு முதலாளிகளின் இலாபவெறிக்கு, இரையாக்கியிருக்கும் மன்மோகன்  சிதம்பரம் கும்பலின் உலக வங்கிக் கைக்கூலித்தனத்துக்கு எதிராக ""கொள்ளை போகிறது தொழிலாளர் உழைப்பு! அள்ளிக் கொடுப்பதோ காங்கிரசுக் கும்பல்! சுருட்டப் போவதோ பன்னாட்டுஇந்நாட்டுக் கம்பெனிகள்'' எனும் முழக்கத்தோடு தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து தொடர் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. நடத்தி வருகிறது.

 

சென்னையில், கிண்டி தொழிற்பேட்டை, அம்பாள் நகர் பேருந்து நிலையம், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் கடைவீதி, பல்லாவரம் என தொடர் தெருமுனைக் கூட்டங்களையும், ஓசூரில், கடந்த 12.09.08 அன்று மாலை 5.00 மணியளவில் மூக்கொண்டபள்ளி பகுதியில் திரளான மக்கள் பங்கேற்புடன், ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியோடு பொதுக் கூட்டத்தையும், திருச்சியில், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆ.ஓ.பா.ச., அத.வி.பா.ச மற்றும் பெ.வி.மு. ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, "பெல்' ஆலையின் பிரதான நுழைவாயில் முன்பும், அதனை ஒட்டி சிறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் தொடர் தெருமுனைக் கூட்டங்களையும் பு.ஜ.தொ.மு. நடத்தியது.

 

     உடுமலையில், இதே மறுகாலனியத் தாக்குதலின் மற்றுமொரு வெளிப்பாடான, விலையேற்றம், மின்வெட்டுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை உடுமலை தேவனூர் புதூர் மையப் பேருந்து நிலையம் எதிரில் 13.09.08 அன்று மாலை நடத்தியது.

 

     தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் மாநிலமெங்கும் தொடர்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

புதுச்சேரி மாநிலத்தின் வடமங்கலம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம், புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் இந்துஸ்தான் யுனிலீவர் என்ற பெயர் மாற்றத்துடன் சோப்பு, பற்பசை, முகப்பவுடர் முதலான அன்றாடப் பயன்பாட்டுக்கான நுகர்பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறது. 

 

நேர்மையே இதன் வாக்குறுதி என்று ஹமாம் சோப்பை விளம்பரப்படுத்தும் இந்நிறுவனம், இந்தியச் சட்டங்களை மயிரளவும் மதிக்காமல், தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடினால், "நேர்மையா? கிலோ என்ன விலை?' என்று கேட்டு அடக்குமுறையை ஏவி வருகிறது.

 

இந்நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும், அவர்களுக்குப் பணிநிரந்தர ஆணை கொடுக்கப்பட்டுள்ள போதிலும் தினக்கூலி தொழிலாளர்கள் (Daily Rated workman) என்ற பெயரிலேயே பணிபுரிகின்றனர். இப்பெயர் மோசடி மூலம் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மட்டுமல்லாது, மாதச் சம்பளத்திலும் மருத்துவ ஈட்டுறுதித் தொகை பிடித்தம் செய்வதிலும் சட்டவிரோதமாக பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது, நிர்வாகம். 

 

இவற்றைத் தட்டிக் கேட்கும் தொழிலாளர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் பணியிடை நீக்கம் செய்வது, ஊதிய உயர்வை மறுப்பது, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அடக்குமுறைகளை ஏவுவது என கேள்விமுறையின்றி கொட்டமடிக்கிறது.

 

குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து, இந்நிறுவனத்தில் கிளைச் சங்கத்தைக் கட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம்  ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் தொழிலாளர்களை அணிதிரட்டி அமைப்பாக்கினர். இதைக் கண்டு பீதியடைந்த நிர்வாகம், உணவகத்தில் கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டதைத் தட்டிக் கேட்ட முத்துகிருஷ்ணன் என்ற தொழிற்சங்க முன்னணியாளரைப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியது.

 

கொதித்தெழுந்த தொழிலாளர்கள், யுனிலீவரின் சட்டவிரோதப் பழிவாங்கலை எதிர்த்து கடந்த 15.9.2008 அன்று வடமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொழிலாளர் நிறைந்த இப்பகுதியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டு, பகுதிவாழ் உழைக்கும் மக்களின் உணர்வுபூர்வமான பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், பணபலமும் அதிகாரபலமும் அடியாள் பலமும் கொண்ட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் சட்ட விரோத அடாவடித்தனத்தை, கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் நிச்சயம் முறியடிக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. யுனிலீவர் தொழிலாளர்கள் இதர ஆலைத் தொழிலாளர்களுடன் இணைந்து அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

—  இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன், 

புதுச்சேரி.

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல்  நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது.  ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான்.