Language Selection

புதிய ஜனநாயகம் 2008

PJ_2008_1.jpg

திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்ற இளம் பெண், அமெரிக்காவில் வரதட்சிணைக் கொடுமையால் வதைபட்டு, குற்றுயிராகத் திரும்பிய நிகழ்ச்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

திருச்சியைச் சேர்ந்த ஜெனிதாவின் பெற்றோர், திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான கிறிஸ்டி டேனியல் என்ற அமெரிக்காவில் வேலை செய்யும் கணினிப் பொறியாளருக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் ஜெனிதாவை

PJ_2008_1.jpg

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி தி.மு.க அரசு அறிவித்த ""பந்த்''ஐத் தடை செய்யவும், நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

PJ_2008_1.jpg

"ஈரான் ஒரு ரவுடி நாடு அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் இரகசியமாக ஈடுபட்டு வருகிறது; மூன்றாம் உலகப் போர் உருவாகுமானால், அதற்கு ஈரான்தான் காரணமாக இருக்க முடியும்'' இவையெல்லாம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரான் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள். இதனைக் காரணமாகச் சொல்லியே, ஈரான் மீது ஒரு அதிரடி ஆக்கிரமிப்புத் தாக்குதலை நடத்துவதற்கும் அமெரிக்கா திட்டமிட்டு வந்தது.

PJ_2008_1.jpg

"இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின் தண்ணீரை விற்க அம்மாநில அரசு கிளம்பியது; பிறகு, ஆற்றுப் படுகைகளோடு நீரை விற்கப் புறப்பட்டது; இப்போது ஆறு மற்றும் அதனால் பயன்பெறும் பாசனப் பகுதிகள் அனைத்தையும் சேர்த்து விற்கத் தயாராகி விட்டது.

PJ_2008_1.jpg

இன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி எழப்போகிறார்கள் போலும்! அதைப் பார்க்காமல் விட்டுவிட்டால் நாளைய வரலாறு நம்மைப் பழித்துவிடுமே எனும் அச்சத்தில்"இன உணர்வைத் தட்டி எழுப்பும்' டிசம்பர் 2ஆம் தேதியன்று பெரியார் திடலுக்குள் எட்டிப் பார்த்தோம்.

PJ_2008_1.jpg

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், மலைச்சாமி. தாழ்த்தப்பட்டவரான இம்முதியவர் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று இரவு 7.30 மணியளவில் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் செல்லும் பி.எல்.எஸ். எனும் தனியார் பேருந்தில் பெரியகோட்டை செல்வதற்காக ஏறி அமர்ந்துள்ளார். அதே பேருந்தில் எறும்புக்குடியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான பாண்டி என்பவரும் அவரது தம்பி ஜெயராமனும் கூட்ட நெரிசல் காரணமாக நின்று கொண்டு பயணித்தனர். இவர்கள் சேர்வை சாதியைச் சேர்ந்தவர்கள். கந்துவட்டி கட்டப் பஞ்சாயத்து நடத்திவரும் சாதி வெறியர்கள்.

PJ_2008_1.jpg

மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களைக் கறந்து கல்வி வியாபாரம் நடத்தும் ஜேப்பியார், எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதலாளி பச்சைமுத்து, ஓம்சக்தி டிராவல்ஸ் முதலாளி சரவணன் ஆகியோரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இவர்களது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் வாகன ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தி வரும் இம்முதலாளிகள்,

PJ_2008_1.jpgஆந்திரப் பிரதேச மாநிலத்தில், விசாகப்பட்டினம் நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாகப்பள்ளி, கோண்ட் பழங்குடியினர் வசித்து வரும் மலைக் கிராமம். நேற்றுவரை வெளியுலகம் அறிந்திராத சாதாரண கிராமமாக இருந்த வாகப்பள்ளி, இன்று ஆந்திரப் போலீசாரின் ரவுடித்தனத்தையும், பொறுக்கித்தனத்தையும் எதிர்த்து நிற்கும் போராட்ட மையமாக மாறியிருக்கிறது.

PJ_2008_1.jpg

தஞ்சாவூரில், மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து மானோஜிப்பட்டி, ஈஸ்வரி நகருக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகிக் கிடக்கின்றன. அடித்தள உழைக்கும் மக்கள் வாழும் இப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்வோர், வியாபாரத்துக்குச் செல்வோர்,

PJ_2008_1.jpg

விசாரணைக்காக கோவையிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பட்ட அகிலாண்டேஸ்வரி என்ற பெண், போலீசு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனின் பாலியல் பலாத்காரம் சித்திரவதையால் கொல்லப்பட்டு, ஓட்டல் அறையில் பிணமாகத் தூக்கில் தொங்கிய சம்பவம், கடந்த நவம்பர் மாதத்தில் தஞ்சை நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

PJ_2008_1.jpg "பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்; வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.'' இவையெல்லாம், கடுமையான மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நெசவாலை முதலாளிகளிடம் தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள். உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய 1960களில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ""வாரத்துக்கு ஒருநாள் பட்டினி கிடப்பீர்'' என்று நாட்டு மக்களுக்குச் செய்த உபதேசத்துக்குச் சற்றும் குறையாத பொறுப்பற்ற யோசனைகளே இவை.

PJ_2008_1.jpg

கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு, அவற்றின் ஆதரவு விலைகளை நிர்ணயிப்பதில் வேறுபாடு காட்டப்படுவது தொடங்கி, இன்று இந்த விலை வேறுபாடு ரூ. 255/ ஆக அதிகரித்து விட்டது.

PJ_2008_1.jpg

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

PJ_2008_1.jpg

டயர் உற்பத்தியில் கடந்த 43 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இயங்கி வந்த, சென்னையிலுள்ள எம்.ஆர்.எஃப் கம்பெனி கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதலாக சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும் மேலும் 5 கிளைகளின் உருவாக்கத்திற்கும் அயராது பாடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோ இன்று வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.

PJ_2008_1.jpg கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.

PJ_2008_1.jpg

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. மற்றும் பிற இந்துத்துவ பாசிச சக்திகள், இந்து மதவெறியனும் காட்டுமிராண்டியுமான நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டன. குஜராத்தைக் கவ்விய பாசிச இருள் தன் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது. 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதன் பிறகு நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய முசுலீம்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை பாசிச வக்கிரங்களோடும்